search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானத்தை மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா ஏற்பாடு செய்தார்.
    • திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு அன்னதானம் வாங்கி சென்றனர்.

    திருப்பரங்குன்றம்

    அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது படங்களுக்கு இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமையிலும், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தொடர்ந்து மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு அன்னதானம் வாங்கி சென்றனர்.

    16 கால் மண்டபம் மற்றும் சன்னதி தெரு பஸ் நிறுத்த பகுதியில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் ஓம்.கே.சந்திரன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கவிஞர் மோகன் தாஸ், ஒன்றிய செயலாளர்கள் குலோத்துங்கன், பொன்.ராஜேந்திரன், கார் சேரி கணேசன், வாசு, இளைஞரணி மாநில துணை செயலாளர் பாரி, ஒன்றிய குழு உறுப்பினர் மாயி,பகுதி செயலாளர் செந்தில், சரவணன்,முருகேசன், துணைச் செயலாளர் செல்வகுமார், நிர்வாகிகள் பாண்டுரங்கன், நாகரத்தினம், பொன்.முருகன், எம்.ஆர்.குமார், பாலா, வேல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அவனியாபுரம்

    அ.தி.மு.க.51-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அவனியாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மதுரை புறநகர் தெற்கு மாவட்ட ஓ.பி.எஸ். அணியினர் மாவட்ட செயலாளர் ஜி.ராமமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.

    இதில் ஸ்ரீராம் ரங்கராஜ், ராஜாமணி, ரவி, காளிதாஸ், மார்க்கெட் ராமமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் சக்திவேல், மாரியப்பன், ஆட்டோ கருப்பையா, கொம்பையா, அருண்குமார், முனிபாலன், தனபாண்டி, ஜெயபாண்டி, சுந்தர், குமார், குபேந்திரன், முத்தையா, பிரபு, கண்ணன், அருண்பாண்டி, சாத்தன உடையார், பத்ரி முருகன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

    • கொள்ளிடம் ஆற்றில் நேற்று காலை முதல் 85,000 கனஅடி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
    • கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மழை, வெள்ளத்தால் ஏற்படும் சேதம் தொடர்பான புகார் அளிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வ ரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது.

    அணையில் இருந்து உபரிநீர் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் நேற்று காலை முதல் 85,000 கன அடி வரை திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 1.10 லட்சம் கன அடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், கால்நடைகளை பாதுகாப் பாக வைத்திருக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.

    மேலும், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் (24 x 7) இயங்கி வரும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை இலவச அழைப்பு எண் 1077 மற்றும் தொலைபேசி எண்கள் 04362-264114, 04362 264115 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு மழை, வெள்ளத்தால் ஏற்படும் சேதம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவித்திடலாம். இவ்வாறு அவர் அதில் கூறப்பட்டுள்ளது.

    • மண்டலம் 1-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 18-ந் தேதி நடக்கிறது.
    • 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயா், ஆணையாளா் தலைமையில் நடைபெறும்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளரிடமும், அந்தந்த மண்டல அலுவலகங்களில் உதவி ஆணையாளா்களிடமும் நேரடியாக மனுக்களாக கொடுத்து பயன்பெற்று வருகின்றனா்.

    மாநகராட்சியின் அழைப்பு மையம், வாட்ஸ்அப், முகநூல் ஆகிய தகவல் தொழில்நுட்ப முறையிலும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் நிவா்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    அதன்படி வருகிற 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆனையூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல 1-ம் எண் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயா், ஆணையாளா் தலைமையில் நடைபெற உள்ளது.

    இதில் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட ஆனையூர், பார்க்டவுண், நாகனாகுளம், அய்யா் பங்களா, திருப்பாலை, கண்ணனேந்தல், உத்தங்குடி, கற்பக நகா், பரசுராம்பட்டி, லூர்து நகா், ஆத்திக்குளம், புதூர், வள்ளுவா் காலனி, எஸ்.ஆலங்குளம், அலமேலு நகா், கூடல்நகா், மேலமடை, பாண்டிகோவில், சவுராஷ்டிராபுரம், தாசில்தார் நகா், வண்டியூர் ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வாி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

    • தாரமங்கலத்தில் கடந்த பல வருடங்களாக அன்றாட சேகரிக்கும் குப்பை கழிவுகளை சேகரித்து அதனை 25-வது வார்டு சின்னாகவுண்டம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கொட்டி மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது.
    • இதுபற்றி தகவல் அறிந்த கிழக்குபாவடி பகுதியை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பணியை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலத்தில் கடந்த பல வருடங்களாக அன்றாட சேகரிக்கும் குப்பை கழிவுகளை சேகரித்து அதனை 25-வது வார்டு சின்னாகவுண்டம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கொட்டி மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. அங்கு இந்த குப்பைகள் மலைப்போல் தேங்கி சுகாதார விளைவுகளை ஏற்படுத்தி வந்ததால் அந்த பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும், சமூக ஆர்வலர்கள் பசுமை தீர்பாய நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் வந்த நிலையில் நீதிமன்றம் குப்பை கிடங்கை உடனடியாக நகராட்சி நிர்வாகம் வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

    நீதிமன்றம் தீர்ப்பின் படி கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு பல இடங்களை ஆய்வு செய்து வந்த நிலையில் தற்போது 20-வது வார்டு கிழக்கு பாவடி தெரு பகுதியில் கிடங்கு அமைப்பது என்று உறுதி செய்யப்பட்டு கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.

    இதையரிந்த 10,20-வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி ஆணையாளர், மாவட்ட ஆட்சியர், மாசுகட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பியும், போராட்டம் நடத்தியும் வந்த நிலையில் ஒப்பந்ததாரர் அருள்லட்சுமி நிறுவனத்தினர் பணியை தொடக்க பூமி பூஜை நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த கிழக்குபாவடி பகுதியை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பணியை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    நகராட்சிக்கு உட்பட்ட 10,20-வது வார்டு கிழக்குப்பாவடி பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கைத்தறி, விசைத்தறி ஜவுளி தொழில் செய்து வருகிறோம்.இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். மேலும் அரசு ஆரம்ப துணை சுகாதார மருத்துவ மையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,இதனை ஒட்டி விவசாய மற்றும் வேளாண் தோட்டக்கலை அலுவலகமும், தனியார் ஜவுளி நிறுவனத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பணி புரிந்தும் வருகின்றனர்.

    இதற்கும் மேலாக இந்த குப்பை கிடங்கு அமையவுள்ள இடத்தை ஒட்டி எங்கள் பகுதியின் குடிநீர் ஆதாரமாக விளங்க கூடிய குறுக்குபட்டி ஏரி அமைந்துள்ளது.இந்த இடத்தில் கிடங்கு அமைவதால் ஏரி நீர்நிலை, கிணற்று நீர், ஆழ்துளை நீர் மாசுபாடு ஏற்பட்டு பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால் இந்த திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய அதிகாரிகள் பரிசிலனை செய்ய வேண்டும் இல்லை யேல் அடுத்தகட்ட போராட் டம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அதனை தொடந்து அனைத்து பொதுமக்களும் நகராட்சி அலுவலகம் சென்று தங்களது கோரிக் கையை அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் எதிர்ப்பை மீறி குப்பை கிடங்கு அமைக்கபடுவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • கல் குவாரியில் அதிக அளவில் விதிமீறல்கள் உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
    • பொதுமக்கள் துங்காவி பகுதிக்கு வந்து உடுமலை-தாராபுரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    உடுமலை :

    மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் பல கல் குவாரிகளில் விதி மீறல்கள் இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் மடத்துக்குளத்தையடுத்த துங்காவி மலையாண்டிபட்டினம் பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் அதிக அளவில் விதிமீறல்கள் உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை கல்குவாரிக்கு சென்ற 2 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனால் சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் துங்காவி பகுதிக்கு வந்து உடுமலை-தாராபுரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கல் குவாரியில் கற்களை உடைக்க, விதிகளை மீறி அதிக சக்தி வாய்ந்த வெடி வைக்கப்படுகிறது.மேலும் அனுமதியற்ற பகுதிகளிலும் தொடர்ச்சியாக அதிக ஆழத்தில் கற்கள் எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் இரவு பகலாக கனரக வாகனங்கள் தொடர்ந்து அதிக வேகத்தில் இயக்கப்படுகிறது.குறிப்பாக இரவு நேரத்தில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.இதனால் ரோடு முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி விட்டது. மேலும் லாரிகளில் அதிக அளவில் கற்கள் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படுகிறது.மேடு பள்ளங்களில் லாரி ஏறி இறங்கும்போது கற்கள் ரோட்டில் விழுகிறது.

    இதனால் ரோட்டில் செல்லும் பொதுமக்களுக்கு உயிருக்கு உத்தரவாதமற்ற சூழல் நிலவுகிறது.இதுவரை கற்கள் விழுந்து பலர் காயமடைந்துள்ளனர்.தோள்பட்டையில் கல் விழுந்து பலத்த காயமடைந்தவரைப் பற்றி நிர்வாகத்தினரிடம் கூறிய போது,தோளில் தானே விழுந்தது.தலையில் விழவில்லையே என்று அலட்சியமாக பதில் சொல்கின்றனர். விதிமீறல்கள் குறித்து தாசில்தார்,ஆர்டிஓ, கலெக்டர், கனிமவளத்துறை என அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது தண்ணீர் லாரியை ஓட்டி வந்த டிரைவர்,பிரேக் பிடிக்கலை என்று கூச்சலிட்டு எதிரே வருபவர்களை விலகச் சொல்லியபடியே வந்திருக்கிறார். அப்போது எதிரில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஒருவர் முட்புதருக்குள் வண்டியை விட்டதால் உயிர் தப்பினார்.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆனால் பல மணி நேரம் காத்திருந்தும் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வரவில்லை.எனவே வேறு வழியில்லாமல் சாலை மறியலில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே கல் குவாரியில் ஆய்வு செய்து விதி மீறல்களைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழுதடைந்த ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும்.கல் குவாரிக்கு இயக்கப்படும் வாகனங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.பொதுமக்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்க வேண்டும்'என்று பொதுமக்கள் கூறினர்.சம்பவ இடத்துக்கு தாசில்தார் உட்பட உயர் அதிகாரிகள் யாரும் வராத நிலையில் வருவாய் ஆய்வாளர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • திருப்புவனம் அருகே, நாளை மக்கள் தொடா்பு முகாம் நடக்கிறது.
    • சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொிவித்துள்ளார்..

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கொந்தகை உள்வட்டம், பொட்டபாளையம் கிராம பஞ்சாயத்து அலுவலக அருகில் நாளை (12-ந் தேதி) காலை 10 மணியளவில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற உள்ளது.

    இதில் அரசுத்துறை அலுவலா்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்்ந்த முதன்மை அலுவலா்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே நோக்கம் ஆகும்.

    பொட்டபாளையம் கிராமத்தை சோ்ந்த பொதுமக்கள் இந்த மக்கள் தொடா்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு, பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொிவித்துள்ளார்.

    • தனியார் நிறுவன வங்கியில் 7 ஆயிரம் மக்காச்சோள மூட்டைகளை இருப்பு வைத்துள்ளனர்.
    • வீடுகளில் உள்ள அரிசி, பருப்பு, சமைத்த உணவுப்பொருட்கள் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து கரூர் செல்லும் சாலையில் உள்ளது கொளத்துப்பாளையம். இந்த பேரூராட்சிக்கு உட்பட்டது ஆலம்பாளையம், சாவடித்தோட்டம் உள்ளிட்ட கிராமங்கள். இந்த பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.இந்நிலையில் சாவடித் தோட்டத்தில் சென்னாக்கல் வலசை சேர்ந்த ஒய்வு பெற்ற வங்கி ஊழியர் நடராஜ் என்பவருக்கு சொந்தமாக உள்ள குடோன்களை வாடகைக்கு் எடுத்து தனியார் நிறுவனம் ஒன்று மக்காச்சோள வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த தனியார் நிறுவன வங்கியில் 7 ஆயிரம் மக்காச்சோள மூட்டைகளை இருப்பு வைத்துள்ளனர்.

    ஆனால் இருப்பு வைக்கப்பட்டுள்ள மக்கா ச்சோளத்தை எந்தவித பராமரிப்பு இன்றியும் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது இருப்பு வைக்கப்படும் மக்காச்சோளத்திற்கு பூச்சி மருந்து அல்லது பூச்சிகளை ஒழிக்கும் மாத்திரைகளை வைத்து தார்பாய் போட்டு மூடி வைப்பது வழக்கம். ஆனால் இந்த கிடங்கில் அதுபோன்று எதுவும் கடைபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மக்காச்சோள மூட்டைகளில் இருந்து உருவான கோடிக்கணக்காக வண்டுகள் இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்குள் படையெடுக்கின்றன. வீடுகளில் உள்ள அரிசி, பருப்பு, சமைத்த உணவுப்பொருட்கள் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    கடந்த ஆறு மாதங்களாக இந்த பகுதி கிராம மக்களை தூங்கவிடாமல் கடித்து துன்புறுத்தி வருகிறது. இதனால் பெண்களுக்கு கை கால் அலர்ஜி ஏற்படுவது உடன் மாதவிடாய் பிரச்சனை, வயிற்று கோளாறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும். அதேபோன்று ஆண்களை இந்த பூச்சி வண்டு கடித்ததனால் நாக்கில் வறட்டு தன்மை ஏற்படுவது உடன் கை கால்கள் சிவந்து தோள்கள் மந்தமாகி அரிப்பு தன்மை ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் திடிரென்று வண்டுகள் பதுங்கியிருக்கும் குடோனை 70க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இதனைத் தொடர்ந்து மூலனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து குடோனில் வைக்கப்பட்டுள்ள அனைத்து மக்காச்சோளம் மூட்டைகளும் வேறு இடத்திற்கு மாற்று இடத்துக்கு எடுத்து செல்வதாகவும் இதுபோன்று பிரச்சனைகள் இனிமேல் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர் மக்காசோள விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

    • தூத்துக்குடி மடத்தூர் ரெயில்வே மேம்பாலம் அருகே 2 வாலிபர்கள் மது போதையில் அவ்வழியாக செல்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி வருவதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மடத்தூர் ரெயில்வே மேம்பாலம் அருகே 2 வாலிபர்கள் மது போதையில் அவ்வழியாக செல்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி வருவதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மடத்தூர் பி அன்ட் டி காலனி பகுதியில் 2 வாலிபர்கள் மது போதையில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி சென்றனர்.

    இதில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி ஆசிரியர் காலனியை சேர்ந்த செல்லையா என்ற திருமணி சிங் (வயது22) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தப்பி ஓடியவர் பி அன்ட் டி காலனியை சேர்ந்த குட்டி (22) என்பதும் தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர். 

    • கணபதிபாளையம் பகுதியில் தொடர் மோதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
    • மாவட்ட எஸ்.பி., சசாங் சாய் நேரில் வந்து ஆய்வு செய்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைபுதுார், கணபதிபாளையம் ஊராட்சிகளில் விசைத்தறி, விவசாயம், சாய ஆலைகள், பனியன் நிறுவனங்கள் நிறைந்துள்ளன இப்பகுதியில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சமீப நாட்களாக, கணபதிபாளையம் பகுதியில் தொடர் மோதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகனங்கள் இடையே வழி விடுவதில் ஏற்பட்ட தகராறு அடிதடியாக மாறியது. இதையடுத்து, சாலை மறியல், கைகலப்பு என இரு தரப்பினர் இடையே பெரும் பிரச்னை ஏற்பட்டது. மாவட்ட எஸ்.பி., சசாங் சாய் நேரில் வந்து ஆய்வு செய்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதேபோல், கடந்த 2 நாட்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த சிலர், சினிமா காட்சிகளில் வருவதுபோல், அரிவாள், பட்டா கத்தியுடன் வீதியில் உலா வந்தனர். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தொழிலாளர்கள் நிறைந்த கரைப்புதுார், கணபதிபாளையம் பகுதிகளில் போதை ப்பொருள் விற்பனையும் அதிகரித்துள்ளதாகவும், திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிகம் நடப்பதாகவும் ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது. இச்சூழலில், தொடர்ந்து நடந்து வரும் மோதல் சம்பவங்கள், பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.எனவே போலீசார் கடும் நடவடிக்கை குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தந்தால் மட்டுமே குற்ற சம்பவங்கள் குறையும். ஏனோ போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்கி வருகின்றனர்.இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • திருப்பூரில் இருந்து கோவைக்கு நேற்ற மாலை ஒரு தனியார் பஸ் புறப்பட்டது.
    • பெண் பஸ்சை விட்டு இறங்க மறுத்து தெக்கலூரில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    அவினாசி :

    திருப்பூரில் இருந்து கோவைக்கு நேற்ற மாலை ஒரு தனியார் பஸ் புறப்பட்டது. அதில் ஏறிய ஒரு பெண் தெக்கலூருக்கு டிக்கட் கேட்டுள்ளார். அதற்கு நடத்துனர் தெக்கலூரில் பஸ் நிற்காது என்று கூறியதாகவும் இதனால் அந்த பெண்ணுக்கும் கன்டக்டருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அந்த பெண் டிக்கெட் எடுப்பதற்காக கொடுத்த பணத்தை தூக்கிவீசியதாக கூறப்படுகிறது.

    எனவே அப்பெண் பஸ்சை விட்டு இறங்க மறுத்து தெக்கலூரில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்த பொதுமக்கள் ஒன்றுகூடி தெக்கலூர்பைபாஸ் ரோட்டில் நின்று அந்த பஸ்சை நிறுத்தி சிறைபிடித்தனர். அப்போது டிரைவர் மற்றும் கன்டக்டர் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பின் பஸ் விடுவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 2 வாலிபர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு தகராறில் ஈடுபடுவதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கத்தியுடன் தகராறு செய்து கொண்டிருந்த வாலிபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் சிங்கனூர் பிரிவில் 2 வாலிபர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு தகராறில் ஈடுபடுவதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பல்லடம் போலீசார் சென்ற போது அங்கு கையில் கத்தியுடன் தகராறு செய்து கொண்டிருந்த கரைப்புதூர் ஊராட்சி கெம்பே நகர் ஹரிதாஸ் மகன் மாமலைவாசன்(26) மற்றும் பல்லடம் மாணிக்கபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா(32) ஆகியோரை கைது செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து விழிப்புணர்வு நடத்தினர்.
    • சாதனை படைத்த குமரவேலுக்கு நகராட்சி சார்பில் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அடுத்த அத்திவெட்டி பிச்சினிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேலு (48).

    கால்பந்து வீரரான இவர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று காலையில் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியிலிருந்து அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வரை சென்றுவர சுமார் 300 மீட்டர் தூரம் கால்பந்தை கீழே விழாமல் தலை மற்றும் கால்களால் தட்டிச் சென்று சாதனை படைத்தார்.

    பட்டுக்கோட்டை நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியா நிகழ்ச்சியை கொடியசைத்து துவங்கி வைக்க, ஆணையர் சௌந்தரராஜன் கால்பந்தை சாதனையாளர் குமாரவேலுவிடம் வழங்கினார். முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மணிக்கூண்டு பகுதியில் சாலைகளில் ஸ்கேட்டிங் செய்து கொண்டே மாணவர்களும் மற்றும் நகராட்சித் தலைவர், ஆணையர், நகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் படைசூழ சாதனையாளர் குமரவேலு கால்பந்தை கீழேவிழாமல் தலை மற்றும் கால்களால் தட்டிக் கொண்டே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வரை சென்று மீண்டும் அங்கிருந்து மணிக்கூண்டு வரை 300 மீட்டர் தூரம் வந்தடைந்தார்.

    அதனைத் தொடர்ந்து சாதனை படைத்த குமரவேலுக்கு நகராட்சி சார்பில் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டதுடன் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

    ×