search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "publiic meeting"

    • பொதுக்கூட்டத்திற்கு கோவை மாநகராட்சி 74-வதுவார்டு கவுன்சிலர் ஏ.எஸ்.சங்கர் தலைமை தாங்குகிறார்.
    • 2 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்குகிறார்.

    கோவை 

    கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ராகுல்காந்தி நடை பயண விளக்க பொதுக்கூட்டம் இன்று மாலை கோவை பூசாரி பாளையத்தில் நடக்கிறது. பொதுக்கூட்டத்திற்கு கோவை மாநகராட்சி 74-வதுவார்டு கவுன்சிலர் ஏ.எஸ்.சங்கர் தலைமை தாங்குகிறார்.தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்குகிறார்.


    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்க உள்ளார்.இதில் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் வக்கீல் கருப்பசாமி, மாவட்ட தலைவர்(எஸ்.சி துறை) சங்கனூர் ஸ்ரீதர், சர்க்கிள் தலைவர் கணேசன், 74-வது வார்டின் டிவிசன் தலைவர் முனுசாமி, பொது செயலாளர் சண்முகராஜன், மாநில சிறப்பு பேச்சாளர் குமரி மகாதேவன், மாநில பொதுசெயலாளர் கணபதி சிவக்குமார், முன்னாள் பொதுசெயலாளர் வீனஸ்மணி மற்றும் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, இருகூர் சுப்பிரமணியம், உமாபதி, கோவை போஸ், ராமநாகராஜ், எச்.எம்.எஸ் ராஜாமணி, தமிழ்செல்வன், குருசாமி, சரளா வசந்த் மற்றும் 74-வது வார்டு காங்கிரஸ் நிர்வாகிகள் துரை, காந்திதாசன், கண்ணன், ரங்கராஜ், பிரபு, ஜெய்கணேஷ், நந்தகோபால், வசந்தி, விஜயன், ஈஸ்வரன், செல்வராஜ், சேகர், ராஜசேகர், ஜெயபிரகாஷ், குப்புராஜ், சுப்பிரமணி, ராஜேந்திரன், பிரவீன், கொரண்டிராஜன், பிரபு, தியாகு, சற்குணம், கணேசன், மகளிர் அமைப்பு நிர்வாகிகள் பூவை ஜோதிமணி, மகேஸ்வரி, சத்யா, சரண்யா, கற்பகம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    ×