என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » puducherry murder
நீங்கள் தேடியது "puducherry murder"
விடுதலை சிறுத்தை பிரமுகர் கொலைக்கு ஆயுதம் சப்ளை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே கரையான்பேட் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது25), விடுதலை சிறுத்தை பிரமுகர். இவர் கடந்த 14-ந்தேதி மாலை மோட்டார் சைக்கிளில் கணுவாய்ப்பேட்டை வழியாக வீடு திரும்பிய போது பின்தொடர்ந்து வந்த கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்குபதிவு செய்து கொலையாளிகளான கணுவாய்ப்பேட்டை புதுநகரை சேர்ந்த அய்யனார் (22) உள்பட 6 பேரை கைது செய்தனர்.
இதற்கிடையே விடுதலைசிறுத்தை பிரமுகர் இளவரசனை கொல்ல கொலையாளிகளுக்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன் (23) என்பவர் சப்ளை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து ராஜேந்திரனை போலீசார் தேடிவந்தனர்
இந்த நிலையில் நேற்று இரவு கோட்டைமேடு பகுதியில் கத்தியுடன் பதுங்கி இருந்த ராஜேந்திரனை வில்லியனூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைது செய்யப்பட்ட ராஜேந்திரன் மீது ஏற்கனவே கொலை வழக்கு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தகக்து.
வில்லியனூர் அருகே கரையான்பேட் பகுதியை சேர்ந்தவர் இளவரசன் (வயது25), விடுதலை சிறுத்தை பிரமுகர். இவர் கடந்த 14-ந்தேதி மாலை மோட்டார் சைக்கிளில் கணுவாய்ப்பேட்டை வழியாக வீடு திரும்பிய போது பின்தொடர்ந்து வந்த கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்குபதிவு செய்து கொலையாளிகளான கணுவாய்ப்பேட்டை புதுநகரை சேர்ந்த அய்யனார் (22) உள்பட 6 பேரை கைது செய்தனர்.
இதற்கிடையே விடுதலைசிறுத்தை பிரமுகர் இளவரசனை கொல்ல கொலையாளிகளுக்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன் (23) என்பவர் சப்ளை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து ராஜேந்திரனை போலீசார் தேடிவந்தனர்
இந்த நிலையில் நேற்று இரவு கோட்டைமேடு பகுதியில் கத்தியுடன் பதுங்கி இருந்த ராஜேந்திரனை வில்லியனூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைது செய்யப்பட்ட ராஜேந்திரன் மீது ஏற்கனவே கொலை வழக்கு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தகக்து.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X