என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway gate"

    • திண்டுக்கல் அருகே அய்ய லூரில் புத்தூர் செல்லும் சாலையில் வனச்சரக அலுவலகம் அருகே ரெயில்வே கேட் உள்ளது
    • இந்த ரெயில்வே கேட் இன்று காலை திடீரென உடைந்து சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது வாகனங்கள் செல்லாததால் உயிர்பலி ஏற்படவில்லை.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே அய்ய லூரில் புத்தூர் செல்லும் சாலையில் வனச்சரக அலுவலகம் அருகே ரெயில்வே கேட் உள்ளது. இந்த சாலை வழியாக பஞ்சந்தாங்கி, தபால்புள்ளி, கிணற்றுப்பட்டி, குருந்தம்பட்டி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு விவசாயிகள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

    மேலும் வடமதுரையிலிருந்து நத்தத்திற்கு செல்ல இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரெயில்வே கேட் இன்று காலை திடீரென உடைந்து சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது வாகனங்கள் செல்லாததால் உயிர்பலி ஏற்படவில்லை.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இப்பகுதியில் உள்ள ரெயில்வேகேட் ஏற்கனவே 2 முறை உடைந்து விழுந்து ள்ளது. தற்போது மீண்டும் சாலையில் உடைந்துள்ளது. பயணிகள் செல்லாததால் சேதம் ஏற்படவில்லை.

    இதுகுறித்து பலமுறை புகார் அளித்துள்ளோம். மேலும் முறையாக பராமரிக்காத தால் மழை காலத்தில் கேட் உடைந்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு விசயத்தில் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். எனவே இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும் என ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
    • தென்காசி-நெல்லை சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் ரெயில்வே கேட், தண்ட வாளம், கடவுப்பாதை பராமரிப்புப் பணிகளுக்காக நேற்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும் என ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி காலை 8 மணிக்கு ரெயில்வே கேட் மூடப்பட்டு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதனால் தென்காசி-நெல்லை சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. தென்காசி யில் இருந்து நெல்லை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் கடபோகத்தி, குபேர பட்டணம், சடையப்பபுரம், பாவூர்சத்திரம் வழியாகவும், நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் வாகனங்கள் பாவூர்சத்திரம்- கடையம் சாலை, மலையராமபுரம், கல்லூரணி, செல்வ விநாயகபுரம் வழியாக தென்காசி சாலையில் வந்தடைந்து வழக்கமான சாலையில் சென்றது. இதனால் வாக னத்தில் செல்வோர் சிரமத்திற்குள்ளானார்கள்.

    • மதுரை அழகப்பன் நகர் ரெயில்வே கேட் இன்று முதல் மூடப்பட்டது.
    • இரட்டை ரெயில் பாதை திட்டத்தில் மதுரை-திருமங்கலம் இடையே தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    மதுரை

    மதுரை-தூத்துக்குடி இரட்டை ரெயில் பாதை திட்டத்தில் தற்போது மதுரை-திருமங்கலம் இடையே தண்டவாளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக பழங்காநத்தம் - பசுமலையை இணைக்கும் அழகப்பன் நகர் ரெயில்வே கேட்டில் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைத்து தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடக்கிறது.

    எனவே அழகப்பன் நகர் ரெயில்வே கேட் இன்று (15-ந் தேதி) முதல் வருகிற 18-ந் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என்று மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • பாவூர்சத்திரத்தில் ரெயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (18-ந்தேதி) நடைபெற உள்ளது.
    • பராமரிப்பு பணிகளுக்காக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கும்.

    தென்காசி:

    நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி பாவூர்சத்திரத்தில் ரெயில்வே கேட்டில் மேம்பால பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அங்குள்ள ரெயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (18-ந்தேதி) நடைபெற உள்ளது. அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதால் அன்று ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கும்.

    எனவே வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையில் செல்லுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை தென்காசி செய்தி மக்கள் தொ டர்பு அலுவலகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்ப ட்டுள்ளது.

    • உடுமலை வழியாக விரைவு ரயில்கள் செல்லும் பொழுது இந்த கேட் மூடப்படுகின்றது.
    • இந்த பகுதியில் ரோடு போதிய பராமரிப்பு இல்லாமல் குண்டு குழியுமாக காணப்பட்டது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் அருகில் உள்ள ராமசாமி நகர் செல்லும் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. உடுமலை வழியாக விரைவு ரயில்கள் செல்லும் பொழுது இந்த கேட் மூடப்படுகின்றது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இந்த பகுதியில் ரோடு போதிய பராமரிப்பு இல்லாமல் குண்டு குழியுமாக காணப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ரயில்வே நிர்வாகம் சார்பில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றதால் சுமார் இரண்டு மணி நேரம் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டு வாகனங்கள் மாற்று பாதையில் சென்றன.

    • இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி தண்டவாள பகுதியில் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
    • பள்ளி மாணவிகள் இந்த பகுதியை கடக்க சிரமப்படுகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி - நெல்லை சாலையில் உள்ள பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளங்களுக்கு இடையே சாலையில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சிலாப்புகள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு பராமரிப்புக்காக அகற்றப்பட்டன. பணிகள் முடிந்த பிறகும் சாலையில் பதிக்கப்பட்ட சிமெண்ட் சிலாப்புகள் சரி செய்யப்படாமல் இருந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவ்வழியே வாகனங்களை இயக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

    இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி தண்டவாள பகுதியில் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

    ஏற்கனவே இந்தப் பகுதியில் நான்கு வழிச்சாலை மேம்பால பணிகள் நடந்து வருவதால் அரசு, தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள், ஆட்டோக்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள், சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட இந்த பகுதியை கடப்பதற்கு மிகுந்து சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சிமெண்ட் சிலாப்புகளை சீராக அமைத்து தார்ச்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பண்ருட்டி-சென்னை சாலையில் ெரயில்வே கேட்டை மூட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    கடலூர்:

    பண்ருட்டியிலிருந்து சென்னை செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலம் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை சாலையில் உள்ள ரயில்வே கேட் மற்றும் கேட் லாட்சை நிரந்தரமாக மூடரயில்வே நிர்வாகத்தினர் முடிவு செய்து உள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து இன்று காலை பராமரிப்பு பணியினால் தற்காலிகமாக ரயில்வே நிர்வாகத்தினர் ரயில்வே கேட்டை மூடினார். இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், பாதசாரதிகள் சிரமத்திற்கு உள்ளாயினர்.

    இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் ரயில்வே போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • அருண் வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
    • கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ரெயில்வே கேட்டில் பயங்கரமாக மோதியது.

    பணகுடி:

    வள்ளியூர் அருகே உள்ள தெற்கு வள்ளியூர் அம்மச்சி கோவில் மேலத் தெருவை சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் அருண் (வயது 34). இவர் நேற்றிரவு வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    ரெயில்வேகேட்

    அவர் வள்ளியூர் அருகே ரெயில்வே கேட் பகுதியில் சென்ற போது வேகத்தடையில் ஏறாமல் இருப்பதற்காக சாலையின் ஓரமாக மண் தடத்தில் சென்றுள்ளார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரெயில்வேகேட் மீது பயங்கரமாக மோதியது. இதில் அருண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    போலீசார் விசாரணை

    இது குறித்து தகவல் அறிந்த பணகுடி போலீசார் அங்கு விரைந்து சென்று அருண் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அஜிகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • தொடர்ந்து அடுத்தடுத்து ரெயில்கள் வந்ததால் நீண்ட நேரம் கேட் மூடி இருந்தது.
    • ரெயில்வே கேட்டின் இருபக்கம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ரெயில் நிலையம் அருகே மேம்பால பணி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மீஞ்சூரில் இருந்து காட்டூர், தந்தை மஞ்சி, உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கேட்டை பயன்படுத்தி வருகிறார்கள்.

    ரெயில்கள் வரும்போது கேட் மூடப்படும் நேரத்தில் வாகன ஓட்டிகள் கடும் நெரிசலில் சிக்கி தவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று இரவு 8 மணிஅளவில் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்ததை தொடர்ந்து ரெயில்வே கேட் மூடப்பட்டது. மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து ரெயில்கள் வந்ததால் நீண்ட நேரம் கேட் மூடி இருந்தது. இதனால் ரெயில்வே கேட்டின் இருபக்கம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சிறிது நேரத்தில் ரெயில்வே கேட் திறந்தாலும் இருபக்கமும் இருந்த வாகனங்கள் கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்தனர்.

    இதற்கிடையே வாகனங்கள் அனைத்தும் ரெயில்வே கேட்டை கடந்து செல்வதற்கு முன்பே சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் மின்சார ரெயில் வந்தது. ஆனால் கடும் வாகன நெரிசல் காரணமாக ரெயில்வே கேட்டை மூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ரெயிலுக்கு சிக்னல் வழங்கப்படவில்லை.

    இதைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரெயில் நந்தியம் பாக்கத்திலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைநோக்கி சென்ற மின்சார ரெயில் மீஞ்சூர் ரெயில் நிலையத்திலும் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    சுமார் ½மணிநேரத்துக்கும் மேலாக மின்சார ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் ரெயில்சேவை பாதிக்கப்பட்டது.

    பின்னர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து இருபக்கமும் நின்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி ஒவ்வொன்றாக கடந்து செல்ல செய்தனர். இதன் பின்னரே ரெயில்வே கேட்டை ஊழியர்களால் மூட முடிந்தது. இதைத்தொ டர்ந்து இரவு 8.45 மணியளவில் ரெயில் சேவை சீரானது.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, ரெயில்வே மேம்பால பணி மந்தமாக நடந்து வருகிறது. இதனை விரைந்து முடித்தால்தான் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். வரும் நாட்களில் பள்ளிகள் திறந்ததும் மேலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் என்றனர்.

    • தெற்கு வள்ளியூரில் ரெயில்வே கிராசிங் வழியாக பல்வேறு ரெயில்கள் சென்று வருகின்றன.
    • சிக்னல் பழுதால் சுமார் ஒரு மணி நேரமாக ரெயில்வே கேட் திறக்கப்படவில்லை.

    நெல்லை:

    வள்ளியூர் அருகே உள்ள தெற்கு வள்ளியூரில் ரெயில்வே கிராசிங் உள்ளது. இந்த வழியாக நாகர்கோவிலில் இருந்து வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா உள்ளிட்ட பல்வேறு ரெயில்கள் சென்று வருகின்றன. இங்கு அமைக்கப்பட்டுள்ள சிக்னல் நேற்று மாலை திடீரென பழுதடைந்தது.

    இதனால் அந்த நேரத்தில் வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் ஆகியவை தங்களது வேகத்தை குறைத்து வள்ளியூர் ரெயில் கிராசிங்கை மெதுவாக கடந்து சென்றன. சிக்னல் பழுதடைந்ததினால் சுமார் ஒரு மணி நேரமாக ரெயில்வே கேட் திறக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து காத்து நின்றன. அதன்பின்னர் உடனடியாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தொழில் நுட்ப வல்லுநர்கள் அங்கு சென்று சிக்னல் கோளாறை சரி செய்தனர்.

    • சோழவந்தானில் ெரயில்வே கேட் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.
    • வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் ெரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது.

    இதனால் சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டி பகுதிகளுக்கு செல்வதற்காக ெரயில்வே கேட்டை தாண்டி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் சோழவந்தான் ெரயில்வே கேட் போதிய பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி பழுதடைந்து விடுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத் திற்கு உள்ளாகின்றனர்

    தண்டவாள பகுதியில் ஆட்டோ மற்றும் வாகனங்கள் வரும்போது ெரயில்வே கேட்டை திறக்க முடியாததால் எந்த நேரமும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

    ஆகையால் ெரயில்வே துறை அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு ெரயில்வே கேட் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பிச்சைக்கண்ணு நண்பருடன் வந்து கேட் கீப்பர் அறைக்கு தீ வைக்க முயற்சி செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    • போலீசார் சாதுர்யமாக செயல்பட்டு பிச்சைக் கண்ணுவை கைது செய்தனர்.

    களக்காடு:

    நெல்லை-நாகர்கோவில் ரெயில்வே வழித்தடத்தில் நாங்குநேரி அருகே நெடுங்குளத்தில் ரெயில்வே கேட் உள்ளது.

    இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் கேட் கீப்பர் விஷ்ணு பணியில் இருக்கும் போது அங்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, திடீர் என கேட் கீப்பர் அறைக்குள் புகுந்து, 2 தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடி, அறைக்கும் பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தனர்.

    இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே மூன்றடைப்பு போலீஸ் நிலையத்திற்கு இளைஞர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு தீ வைக்க முயற்சி செய்தது நான் தான், வழக்கு போட்டாச்சா? என்று துணிச்சலுடன் கேட்டுள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ந்த போலீசார் அவர் யார் என்று விசாரித்ததில் அவர் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்த பிச்சைக்கண்ணு (25) என்பதும், அவர் கடந்த 19-ந் தேதி இரவில் ஒரு பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் நெடுங்குளம் ரெயில்வே கேட் வழியாக வந்ததும் தெரிய வந்தது.

    அப்போது ரெயில் வந்ததால் கேட் மூடப்பட்டதும், பிச்சைக்கண்னு கேட்டை திறக்க கோரி ரகளையில் ஈடுபட்டதும், எனினும் ரெயில் சென்ற பிறகே கேட் திறக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பிச்சைக்கண்ணு நண்பருடன் வந்து கேட் கீப்பர் அறைக்கு தீ வைக்க முயற்சி செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    மேலும் பிச்சைக்கண்ணு நேற்று மூலைக்கரைப்பட்டி அருகே விரளபெருந்செல்வி கிராமத்தை சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுபற்றி வழக்கு பதிவு செய்த மூலைக்கரைப்பட்டி போலீசார் கருங்குளத்தில் தலைமறைவாக இருந்த, பிச்சைக்கண்னுவை சுற்றி வளைத்து பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது அவர் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி நடராஜனை தாக்கினார். எனினும் போலீசார் சாதுர்யமாக செயல்பட்டு பிச்சைக் கண்ணுவை கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை, ஏற்படுத்தி உள்ளது.

    ×