என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "railway police"

    • உன்னாவோவின் ஹசன்கஞ்சில் வசிப்பவர் ரஞ்சித் சௌராசியா.
    • வீடியோ வைரலானதால் ரெயில்வே போலீசின் கவனத்தையும் ஈர்த்தது.

    இன்ஸ்டாகிராம் ரீலிஸ் எடுப்பது சிலருக்கு வெறியாக மாறி வருகிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ்வில் ஒரு நபர் ரெயில் தண்டவாளத்தில் படுத்து ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

    உன்னாவோவின் ஹசன்கஞ்சில் வசிக்கும் ரஞ்சித் சௌராசியா தனது ரீலிஸ்-இல், ரெயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்துக் கொள்கிறார். அவர் படுத்திருக்க, ரெயில் அவரை கடந்து செல்கிறது. சற்று பிசகியிருந்தாலும் அவர் ரெயிலில் மாட்டி இழுபட்டு அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

    இந்த வீடியோ வைரலானதால் ரெயில்வே போலீசின் கவனத்தையும் ஈர்த்தது. இது ரஞ்சித் சௌராசியா கைதுக்கு வழிவகுத்தது.

    • சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லிக்குப்பம் போலீசார் இறந்து கிடந்தவர் குறித்து விசாரித்தனர்.
    • இறந்தவரின் உடல் ரெயில்வே பாதையில் இருந்து 3 மீட்டருக்கு அப்பால் கிடந்தது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பி.என். பாளையம் பகுதியில் ரெயில்வே பாதை உள்ளது. இதன் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனைக் கண்ட அவ்வழியே சென்றவர்கள் இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நெல்லிக்குப்பம் போலீசார் கடலூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லிக்குப்பம் போலீசார் இறந்து கிடந்தவர் குறித்து விசாரித்தனர். இதில் அவர் அதே ஊரைச் சேர்ந்த வடிவேல் (வயது 42). கூலித் தொழிலாளி என்பது தெரிவந்தது.

    தொடர்ந்து அங்கு வந்த ரெயில்வே போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இறந்தவரின் உடல் ரெயில்வே பாதையில் இருந்து 3 மீட்டருக்கு அப்பால் கிடந்தது. எனவே, இது குறித்து வழக்கு பதிவு செய்து எங்களால் விசாரிக்க முடியாது. நெல்லிக்குப்பம் போலீசார்தான் விசாரிக்க வேண்டுமென கூறினர். அதன்படி, இறந்து கிடந்த வடிவேலுவின் உடலை கைப்பற்றிய நெல்லிக்குப்பம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்து போன வடிவேலு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இவரை யாரேனும் கொலை செய்து ரெயில்வே பாதை அருகில் வீசி சென்றனரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ெரயில் தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் அடிபட்டு இறந்துகிடந்தார்.
    • வாலிபர் நீல கலர் ஜீன்ஸ் பேண்ட், ரோஸ் கலர் முழுக்கை சட்டை அணிந்து இருந்தார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா அமையாகரம் அருகே உள்ள ெரயில் தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் அடிபட்டு இறந்துகிடந்தார்.இது குறித்து தகவல் அறிந்த சேலம் ெரயில்வே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ஜெயபால், தலைமை காவலர்கள் பால கிருஷ்ணன், விக்னேஷ், மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரெயில் மோதி இறந்த வாலிபர் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அந்த வாலிபர் சேலத்திலிருந்து விருத்தாசலம் செல்லும் ெரயிலில் அடிபட்டு இருக்கலாம் எனரெயில்வே போலீசார் தெரிவித்தனர். ரெயில் மோதி இறந்த வாலிபர் நீல கலர் ஜீன்ஸ் பேண்ட், ரோஸ் கலர் முழுக்கை சட்டை அணிந்து இருந்தார் எனவும், இடது மற்றும் வலது மார்பு அடியில் இரு பக்கமும் மச்சம் உள்ளதாகவும் தெரிவித்தனர். இது குறித்து சேலம் ெரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தடையை மீறி சுற்றுலா பயணிகள் நீர் வீழ்ச்சியை காண சென்று கொண்டிருக்கிறார்கள்.
    • தடையை மீறிய சுற்றுலா பயணிகளிடம் கையை முன்பக்கம் நீட்டி கொண்டு உட்கார்ந்து எழும்பும் தண்டனை கொடுத்துள்ளனர்.

    கோவா- கர்நாடகா எல்லையில் உள்ள துத்சாகர் பகுதியில் மழைக்காலங்களில் தற்காலிக நீர்வீழ்ச்சிகள் உருவாவது வழக்கம். இதை காண சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவதோடு மலை ஏற்றத்திலும் ஈடுபடுவார்கள். இது சில நேரங்களில் ஆபத்தாக முடியும் என்பதால் கோவா அரசு மலை ஏற்றத்திற்கு தடை விதித்துள்ளது. ஆனாலும் தடையை மீறி சுற்றுலா பயணிகள் நீர் வீழ்ச்சியை காண சென்று கொண்டிருக்கிறார்கள். துத்சாகர் ரெயில் நிலையத்தில் அதிக ரெயில்கள் நிற்காது என்பதால் சுற்றுலா பயணிகள் தெற்கு கோவாவில் உள்ள காலேல் ரெயில் நிலையத்தில் இறங்கி தண்டவாளம் வழியாக நடந்தே துத்சாகருக்கு செல்வது வழக்கம். தற்போது தடை விதிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் சிலர் அதனை மீறி தண்டவாளம் வழியாக நடந்து சென்றுள்ளனர்.

    இதை பார்த்த ரெயில்வே போலீசாரும், வனத்துறையினரும், தடையை மீறிய சுற்றுலா பயணிகளுக்கு நூதன தண்டனை கொடுத்த காட்சிகள் இனையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தடையை மீறிய சுற்றுலா பயணிகளிடம் கையை முன்பக்கம் நீட்டி கொண்டு உட்கார்ந்து எழும்பும் தண்டனை கொடுத்துள்ளனர். இதனை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அது வைரலாகி வருகிறது.

    • போலீஸ்காரர் சேத்தன்சிங்சவுத்ரி பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
    • உத்தரவை மும்பை சென்ட்ரல் ஆர்.பி.எப். மூத்த பிரிவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்துள்ளார்.

    மும்பை:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை சென்ற சென்ட்ரல் அதிவிரைவு ரெயிலில் கடந்த 31-ந்தேதியன்று ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த போலீஸ்காரர் சேத்தன்சிங் சவுத்ரி என்பவர் தன்னுடன் பயணம் செய்த போலீஸ் அதிகாரி திகாரம் மீனா மற்றும் 3 பயணிகள் என 4 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி னர். அவருக்கு மனநல மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. இந்நிலையில் போலீஸ்காரர் சேத்தன்சிங்சவுத்ரி பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

    இதற்கான உத்தரவை மும்பை சென்ட்ரல் ஆர்.பி.எப். மூத்த பிரிவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்துள்ளார். 

    • ரெயிலின் மீது கற்கள் எரிதல் மற்றும் ரெயில் பாதையில் கல் வைக்கக் கூடாது.
    • கால்நடைகள் விபத்தில் சிக்கினால் அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரெயிலின் மீது கற்கள் எரிதல் மற்றும் ரெயில் பாதையில் கல் வைக்கக் கூடாது. இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும். ரெயில் பாதை அருகில் கால்நடைகளை மேய்க்ககூடாது.

    அவ்வாறு மேய்க்கும் போது கால்நடைகள் விபத்தில் சிக்கினால் அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். நின்று கொண்டிருக்கும் ரெயில் மற்றும் சென்று கொண்டிருக்கும் ரெயில்கள் முன்பு செல்பி எடுக்க கூடாது.

    ரெயில் பாதைக்கு அருகில் குப்பைகளை கொட்டுவது மற்றும் தீயிட்டு கொளு த்துபவர்களை கண்ட றிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கர்த்தனாதபுரம் ெரயில் பாதையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.
    • மன்னை எக்ஸ்பிரஸ் ெரயிலில் அடிபட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது.

    திருவாரூர்:

    மன்னார்குடி அருகே உள்ள கர்த்தனாதபுரம் ெரயில் பாதையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தஞ்சை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சோழங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் என்பதும், அவர் கடந்த இரண்டு நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளதும், நேற்று முன்தினம் இரவு மன்னார்குடியில் இருந்து சென்னை சென்ற மன்னை எக்ஸ்பிரஸ் ெரயிலில் அடிபட்டு உயிரிழந்ததும் ெதரியவந்தது. இதையடுத்து தஞ்சை ெரயில்வே போலீசார், ஆனந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடியில் உள்ள அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
    • மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்களை ரெயில்வே போலீசார் அடையாளம் கண்டு உள்ளனர்.

    அம்பத்தூர்:

    சென்னையில் பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வருகிறது.

    அவர்கள் பஸ், ரெயில் நிலையங்களில் கோஷ்டிகளாக மோதிக்கொள்ளும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. ரூட்டு தல பிரச்சினையே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

    மோதலில் ஈடுபடும் மாணவர்களை போலீசார் கைது செய்தும், எச்சரித்தும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் மாணவர்களிடையேயான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இன்று காலையும் மின்சார ரெயிலில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி இன்று காலை மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தது. காலை நேரம் என்பதால் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரியில் படிக்கும் திருத்தணி, திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயணம் செய்தனர்.

    பட்டரைவாக்கம் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தபோது ஒரு பெட்டியில் இருந்த பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் இடையே திடீரெ மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். இதனை கண்டு ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதற்குள் பட்டரைவாக்கம் ரெயில் நிலையத்தை அடைந்ததும் மின்சார ரெயில் நின்றது. உடனே ரெயிலில் இருந்து இறங்கிய பச்சயைப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர்.

    மேலும் கல், சோடா பாட்டில், பீர் பாட்டில்களை ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்கினர். உருட்டுகட்டையாலும் தாக்கிக்கொண்டனர். இதில் சில மாணவர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. மாணவர்களின் மோதலை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்து வேறு ரெயில் பெட்டியில் ஏறினர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே மாணவர்கள் மோதல் பற்றி அறிந்ததும் பெரம்பூர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர். உடனே மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களில் 3 மாணவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்களை ரெயில்வே போலீசார் அடையாளம் கண்டு உள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் மாணவர்களை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரிக்கு ரெயில்வே போலீசார் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே டி.எஸ்.பி. ரமேஷ் கூறும் போது, பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இன்று காலையும் பட்டரைவாக்கத்தில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    பயணிகளுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படும் வகையில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மாணவர்களை நிரந்தரமாக கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் என்று பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரிக்கு கடிதம் வழங்கி உள்ளோம். மேலும் பஸ், ரெயிலில் பயணம் செய்யும் மாணவர்களின் விபரத்தையும் கேட்டு உள்ளோம் என்றார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் இதேபோல் கல்லூரி மாணவர்கள் கல், பாட்டில்களை வீசி மோதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அங்கு நின்றிருந்த முகமது பர்கானை கான்ஸ்டபிள்கள் இருவரும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
    • பர்கான் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் கண்டனங்களைக் குவித்து வருகிறது.

    பீகாரில் ரயில்வே போலீஸ் சரமாரியாக அடித்ததில் பயணியின் குடலே வெளியில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் வியாழக்கிழமை பீகாரில் உள்ள சீதாமாரி மாவட்டத்தில் உள்ள  பூப்ரி ரெயில் நிலையத்தில் மும்பைக்கு செல்லும் கர்மபூமி விரைவு ரெயிலில் உறவினரை ஏற்றி விடுதற்காக முகமது பர்கான் என்ற 25 வயது இளைஞர் வந்துள்ளார்.

    நடைமேடையில் ரெயில் வந்து நின்றதும் முன்பதிவில்லாத பெட்டிகளில் ஏறி சீட் பிடிப்பதற்கு அங்கு கூடிருந்த பயணிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்த அங்கு வந்த ரெயில்வே போலீஸ் [GRP] கான்ஸ்டபிள்கள் இருவர் பயணிகள் மீது தடியடி நடத்தத்தொடங்கினர். அப்போது அங்கு நின்றிருந்த முகமது பர்கானை கான்ஸ்டபிள்கள் இருவரும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

    பார்கானின் வயிற்றில் பலமுறை அவர்கள் அடித்த நிலையில், அவரது குடல் வெளியே வந்தது. சில நாட்களுக்கு முன்பே பர்கானுக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை நடந்துள்ளதால் காவலர்கள் அடித்ததில் அவரது குடல் தையல் வழியாக வெளியே வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பர்கான் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே எஸ்.பி உட்பட இரண்டு கான்ஸ்டபிள்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இந்த பர்கான் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் கண்டனங்களைக் குவித்து வருகிறது.

    • பெண் பிளாட்பாரத்தில் ஏற முயன்றபோது, போலீஸ்காரர் வேகமாக அவரை நோக்கி ஓடிவருகிறார்.
    • போலீஸ்காரர் வேகமாக ஓடிவந்து அந்த பெண்ணை பிளாட்பாரத்திற்கு இழுத்து காப்பாற்றினார்.

    மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீஸ்காரர் (RPF) ரெயில் வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்ணை காப்பாற்றினார். அந்த பெண்ணை அவர் காப்பாற்றிய வீடியோ பிளாட்பார்மில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

    ஜல்கான் ரெயில் நிலையத்தில் ரெயில் நடைமேடை வர இருந்தபோது, ஒரு பெண் கையில் பையுடன் தண்டவாளத்தை கடந்து பிளாட்பாரத்தில் ஏற இருப்பதை போலீஸ்காரர் சாங்கோ பாட்டீல் பார்க்கிறார்.

    அந்த பெண் பிளாட்பாரத்தில் ஏற முயன்றபோது, போலீஸ்காரர் வேகமாக அவரை நோக்கி ஓடிவருகிறார். அதற்குள் ரெயில் வேகமாக வந்துவிட்டது. அந்த பெண் ரெயிலுக்கும் பிளாட்பாரத்துக்கு இடையில் சிக்கிக் கொண்டார். ரெயில் அந்த பெண்ணை சில மீட்டர்கள் இழுத்துச் சென்றது.

    உடனே துரிதமாக செயல்பட்ட போலீஸ்காரர் வேகமாக ஓடிவந்து அந்த பெண்ணை பிளாட்பாரத்திற்கு இழுத்து காப்பாற்றினார். பின்னர் போலீசார் அந்த பெண்ணை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனது 1 வயது குழந்தையை சுமந்தவாறு ரயில்வே போலீஸ் ரீனா பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளார்.
    • பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா செல்ல புறப்பட்ட மக்கள் நேற்று முன் தினம் (சனிக்கிழமை) இரவு டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்டநெரிசலில் சிக்கினர்.

    இதில் 3 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து டெல்லி ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கூட்டநெரிசலுக்கு பின்னர், மகா கும்பமேளா செல்லும் வழித்தடத்தில் கூடுதலாக 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.

    இந்நிலையில் டெல்லி ரெயில் நிலையத்தில் தனது 1 வயது குழந்தையை சுமந்தவாறு ரீனா என்ற ரெயில்வே போலீஸ் (RPF) கான்டபிள் தனது கடமையை செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

    18 பேர் உயிரிழந்த ரெயில் நிலையத்தின் 16 ஆவது நடைமேடையில் ரீனா தனது குழந்தையை சுமந்தவாறு பயணிகளை ஒழுங்குபடுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

    பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அவரது அர்ப்பணிப்பைக் கண்டு, பல பயணிகள் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வணக்கம் செலுத்தி செல்கின்றனர்.  

     

    • சமநிலையை இழந்து ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிக் கொண்டார்.
    • ஓடி வந்து வெளியே இழுத்து அவரை காப்பாற்றினார்.

    ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்றபோது தவறி விழுந்த பெண் பயணியை ரெயில்வே காவலர் ஒருவர் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சமீபத்தில் மும்பையில் உள்ள போரிவலி ரெயில் நிலையத்தில் அந்தப் பெண் நகரும் ரெயிலில் இருந்து இறங்க முயன்றபோது சமநிலையை இழந்து ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிக் கொண்டார்.

    நடைமேடையில் நின்று கொண்டிருந்த ரெயில்வே காவலர் விரைவாக அப்பெண்ணை நோக்கி ஓடி வந்து வெளியே இழுத்து அவரை காப்பாற்றினார். இது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

    இதை இன்று தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தலத்தில் பகிர்ந்துள்ள ரெயில்வே அமைச்சகம் நகரும் ரெயிலில் ஏறவோ, இறங்கவோ கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. 

    ×