என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rains"

    • கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
    • கோடை மழை காரணமாக வெயிலின் வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது

    கரூர்:

    கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரகூர், மேட்டுப்பட்டி, வேங்காம்பட்டி, புதுப்பட்டி, பாலப்பட்டி ஆகிய இடங்களில் நேற்று மிதமான மழை பெய்தது. இந்த மழையால் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு, சோளம், வாழை ஆகிய பயிர்களுக்கு மழை நீர் கிடைத்து வருகிறது. மேலும் கோடை மழை காரணமாக வெயிலின் வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • மதுரையில் மழை பெய்தால் சகதிக்காடாகும் மாநகர சாலைகளால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
    • பாதசாரிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்



    செல்லூர் 60 அடி ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.

    மதுரை

    மதுரையில் கடந்த 2 வார காலமாக கோடை மழை பெய்து வருகிறது. கடந்த 11-ந்தேதி நகரில் சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்தது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். ஏற்கனவே மதுரை நகரில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ள நிலையில் தற்போது தொடர் மழை காரணமாக மேலும் சாலைகள் மோசமாகி தண்ணீர் தேங்கியும், சகதிகளாக மாறியும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.

    இதனால் சாலைகளில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் செல்கின்றனர். மதுரையில் சாலைகளில் திடீர் திடீரென உருவாகியுள்ள புதிய பள்ளங்களால் விபத்துகளும் ஏற்படுகிறது. பெண்கள், குடும்பத்துடன் செல்வோர் அடிக்கடி சாலைகளில் பள்ளத்தில் விழுந்து சிக்குவதை காண முடிகிறது. மதுரை நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் சாலை வசதி சரியாக இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

    சிறிது நேரம் கனமழை பெய்தாலே மதுரையின் மையப் பகுதிகளான பெரியார் பஸ் நிலையம், மாசி வீதிகள், மீனாட்சி அம்மன் கோவில் சுற்றியுள்ள பகுதிகள். மேல வெளி வீதி, விளக்குத்தூண், வில்லாபுரம் ஹவுசிங்போர்டு, அவனியாபுரம், காமராஜர் சாலை, மாட்டுத்தாவணி- ஆரப்பாளையம் பஸ் நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி விடுகிறது. இந்த தண்ணீர் மறுநாள் காலை வரை வடியாமல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    அண்மையில் தான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாசி வீதிகள், விளக்குத்தூண் உள்ளிட்ட பகுதிகளில் புதிய சாலைகள் போடப்பட்டன. ஆனால் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் அவசரகதியில் பணிகள் நடைபெற்றதால் தற்போது மழை நீர் வடியாமல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறு மழை பெய்தால் கூட முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்குகிறது.

    தொடர்மழை காரணமாக குலமங்கம் ரோடு, செல்லூர் 60 அடி ரோடு, காளவாசல்-தேனி பிரதானசாலை, புதுராமநாதபுரம் ரோடு, மேலமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்கள் சேறும், சகதியுமாக காணப்படுகிறது.

    அந்த வழிகளில் செல்லும் பாதசாரிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பயந்தபடியே வாகனத்தில் தட்டுத்தடுமாறி செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது. மழைநீர் வடியாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. மழைக்காலங்களில் சரியாக குப்பைகள் அள்ளப்படாததாலும் பல இடங்களில் துர்நாற்றம் வீசியபடி இருக்கிறது. இதனால் தண்ணீர் தேங்காத வகையில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கனமழை பெய்ததால் வீடுகளில் வெள்ளம் புகுந்தது
    • இமாச்சல பிரதேசத்தில் கனமழை காரணமாக 231 பேர் உயிரிழந்துள்னர்

    இமாச்சல பிரதேசத்தில கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு சிர்மாயுர் மாவட்டத்தில் உள்ள போயன்ட்டா பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய்மழை பெய்தது. இதனால் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    மலாகி கிராமத்தில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் வசித்த ஐந்து பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இமாச்சல பிரதேசத்தில் இன்று முதல் ஞாயிறு வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இமாச்சல பிரதேசத்தில் இதுவரை கனமழை தொடர்பான விபத்தில் 231 பேர் உயிரிழந்துள்ளனர். 6731 கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் 190 சாலைகள் மூடப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக ஆறுகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் நிலச்சரிவு, மண்சரிவு போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

    • கடந்த 8 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கனமழை
    • வீடுகளில் முதல் தளங்கள் வெள்ளத்தால் மூழ்கியதால் மக்கள் தத்தளிப்பு

    மியான்மரில் பருவமழைக் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு ஐந்து பேர் பலியான நிலையில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    மியான்மரில் ஒவ்வொரு வருடமும் பருவமழை காலத்தில் அதிக மழை பெய்வது வழக்கமானதுதான். இருந்தாலும், தற்போதைய அதிதீவிர வானிலை நிகழ்வுகள் பருவநிலை மாற்றத்தால் மோசமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    யங்கோனின் வடகிழக்கு பகுதியான பாகோவில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் முன்னெச்சரிக்கை காரணமாக பலர் வெளியேறிய நிலையில், வெள்ளத்தில் அளவு அதிகரிக்க மீட்புப்படையினர் வீட்டில் இருந்த மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றினர்.

    இரண்டு மாடி கொண்டு கட்டிடங்களில் முதல் தளம் வெள்ளத்தால் மூழ்கின. இதனால் மக்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்குள்ள மடங்களில் தஞ்சம் அடைந்தனர். அவர்களுக்கு துறவிகள் உணவு அளித்தனர்.

    கடந்த ஏழு எட்டு ஆண்டுகளில் பகோ பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக கனமழை பெய்துள்ளதாக அங்கு வசிக்கும் 66 வயது முதியவர் தெரிவித்துள்ளார்.

    • தேனி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
    • பருவமழை ஏமாற்றியதால் அணையின் நீர்மட்டம் உயராமல் இருந்த நிலையில் தற்போது பெய்துவரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் அமை ந்துள்ள குமுளி, தேக்கடி பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 118.70 அடியாக உள்ளது. வரத்து 725 கனஅடி, திறப்பு 300 கனஅடி, இருப்பு 2394 மி.கனஅடி.

    கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர்மட்டம் 136.40 அடியாக இருந்தது. நீர்வரத்து 1406 கனஅடியாகவும், நீர் இருப்பு 6219 மிகனஅடியாகவும் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பருவமழை ஏமாற்றியதால் அணையின் நீர்மட்டம் உயராமல் இருந்த நிலையில் தற்போது பெய்துவரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.17 அடியாக உள்ளது. வரத்து 7 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 1640 மி.கனஅடி.

    பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 49.80 அடியாக உள்ளது. இதன் மொத்த உயரம் 57 அடியாகும். மழை மேலும் நீடிக்கும் என்பதால் விரைவில் முழுகொள்ள ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அணைக்கு 41 கனஅடி நீர் வருகிறது. இதேபோல் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.85 அடியாக உள்ளது. வரத்து 8 கனஅடி, திறப்பு 3 கனஅடி, இருப்பு 37.67 மி.கனஅடி.

    • கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
    • திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்கள் (நேற்று மற்றும் இன்று) மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் வேலூரில் நேற்று இரவில் இருந்து விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக, அம்மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேவேளையில் 6-ம் வகுப்பில் இருந்து பள்ளிகள் வழக்கும்போல் இயங்கும் என்றும், கல்லூரிகளும் வழக்கம்போல் இயங்கும் என்றார்.

    இதற்கிடையே இன்று கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, திருச்சி, தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிவித்துள்ளார்.

    சென்னையில் இன்று காலை சில இடங்களில் மழை பெய்தது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் காலை 10 மணி வர இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

    • பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • நீர்வரத்து அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அலுவ லர்கள் தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடந்த சில நாட்களாக தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. சாத்தனூர்அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கி யதால் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீ ரின் அளவும் அதிகரிக்க ப்பட்டது.

    அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் பிரதான மதகுகள் வழியாக திறந்துவி டப்பட்டு ள்ளதால் பண்ருட்டி அருகே உள்ள கண்டரக் கோட்டை தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகா ப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொது ப்பணி த்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், பொது ப்பணித்து றை, வருவாய்த்து றையினர் மற்றும் காவல்து றையினர் மூலம் கண்காணி ப்பு பணிகளும் தீவிரப்ப டுத்தப்பட்டு ள்ளது. தொட ர்ந்து பெய்யும் மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என பொது ப்பணித்துறை அலுவ லர்கள் தெரிவித்தனர்.

    • தொலை தொடர்பு சிக்னல் கிடைக்காததால் மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியாமல் 3 மணி நேரமாக ஆற்றின் அக்கரையில் காத்திருந்தனர்.
    • தகவல் அறிந்து வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து அனைவரும் பத்திரமாக கரை திரும்ப தீயணைப்பு வீரர்கள் உதவினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. இதனால் மலைப்பகுதிகளில் ஓடும் சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த தண்ணீர் தாழ்வான பகுதியை நோக்கி பாய்ந்து வந்தது.

    இதனால் பல இடங்களில் திடீர் வெள்ளம் உருவானது. பாறைகளும், மரங்களும் கரை புரண்டு வந்தன. இதையடுத்து ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது. நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு குலதெய்வ கோவிலுக்கு சென்ற பலர் இந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

    அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அத்தி கோவில் ஆற்றின் கரையில் பிரசித்தி பெற்ற தர்கா ஒன்று உள்ளது. இந்த தர்காவுக்கு மதுரை, வருச நாடு, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வந்து வழிபட்டு செல்வார்கள்.

    குறிப்பாக மதுரை மாவட்டம் கூடல்நகர் பகுதியை சேர்ந்த சாஜூக் (வயது 48) என்பவர் தனது பேரனுக்கு மொட்டை எடுப்பதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் 70 பேருடன் நேற்று காலையிலேயே வந்தனர். தர்காவில் வழி பாட்டை முடித்த பின்னர் அவர்கள் அங்கிருந்து திரும்பியபோது திடீரென மலைப்பகுதியில் பெய்த கன மழையால் அத்தி கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்தனர். அப்பகுதியில் தொலை தொடர்பு சிக்னல் கிடைக்காததால் மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியாமல் 3 மணி நேரமாக ஆற்றின் அக்கரையில் காத்திருந்தனர்.

    மழையின் வேகம் குறைந் ததையடுத்து ஆற்றிலும் நீர்வரத்து சற்று குறைந்தது. பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த கயிற்றின் மூலம் ஆற்றை கடந்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து அனைவரும் பத்திரமாக கரை திரும்ப தீயணைப்பு வீரர்கள் உதவினர்.

    அவர்களிடம் வத்திராயிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் விசாரணை நடத்தினார். யாருக்கும் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்ததும், அனைவரும் அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதேபோல் ராஜபாளை யம் மேற்கில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றிலும் நேற்று மாலை கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சனிக்கிழமைகளில் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். ஆனால் இந்த திடீர் காட்டாற்று வெள்ளத்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 

    • தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை
    • மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

    வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று தமிழகத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்தது. மேலும், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து விட்டுவிட்டு கனமழை பெய்து வந்தது.

    ஆனால், இன்று காலை முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளது.

    சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • வயலில் பெண் ஒருவரின் இடுப்பு சேலையில் சொருகி வைத்திருந்த செல்போன் வெடித்தது
    • ராணுவ வீரர் வயலில் வேலை பார்த்தபோது மின்னல் தாக்கி உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலரட் விட்டிருந்தது. அதன்படி நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலையில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

    இதனால் சென்னை, மதுரை, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இடி மின்னல் தாக்கி ஐந்து பேர் பலியான நிலையில், செல்போன் வெடித்து ஒருவர் படுகாயம் அடைந்தார்.

    மதுரை மாவட்டம் கீரனூரை சேர்ந்த பெண் ஒருவர் காலமானர். அவரது இறுதிச் சடங்கு மயானத்தில் நடைபெற்று கொண்டிருக்கும்போது, திடீரென் இடி தாக்கியதில் 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் மாட்டு கொட்டகையில் மாடுகளை கட்டிக் கொண்டிருக்கும்போது, திடீரென இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    திண்டுக்கல் மாவட்டம் கீரண்கோட்டை பகுதியைச் சேர்ந்த திருமணமான விஜயலட்சுமி என்ற பெண், வீட்டின் முன் வைத்திருந்த பொருட்களை எடுக்க சென்றபோது இடி தாக்கி பரிதாபமாக உயிரழந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேவிப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் ராணுவத்தில் வேலை பார்த்து வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்த அவர், வயலில் வேலைப்பார்த்தபோது மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.

    திருச்சி மாவட்டம் மணப்பாறை, மருங்காபுரி அருகே 3 பெண்கள் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். அதில் ஒரு பெண் தனது இடுப்பு சேலையில் செல்போனை சொருகி வைத்திருந்தார். அப்போது பயங்கர சத்தத்துடன் இடி தாக்கியதில், சேலையில் சொருகி வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது. இதில் அந்த பெண் படுகாயம் அடைந்தார். இதை அருகில் இருந்து பார்த்த இருவர் அதிர்ச்சியில் மயக்கம் அடைந்தனர். காயம் அடைந்த பெண் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை.
    • நாகை, மதுரை, சிவகங்கை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, மதுரை, சிவகங்கை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, பெரம்பலூர், கடலூர், தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இன்று மதியத்திற்கு மேல் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளது.

    நாளை 13 மாவட்டங்களில் கனழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • தொடர் கனமழையால் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் தேனி, திருப்பூர் மாவட்டங்களிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை, குந்தா, கோத்தகிரி ஆகிய நான்கு தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று காலை 8.30 மணி வரை அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

    மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களின் ஒன்றிரண்டு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்திருந்தது.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    ×