search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramanavami ceremony"

      குனியமுத்தூர்,

      கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பகுதியில் இந்து முன்னணி, பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஸ்வகர்மா இளைஞர்கள் இணைந்து நடத்தும் ராம நவமி விழாவில் விஸ்வ பிரம்மா ஜெகத்குரு ஸ்ரீல ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் பங்கேற்றார். அவருக்கு மங்கலம் பேட்டை விஸ்வகர்மா சமுதாய சங்கத்தின் சார்பாக பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது.

      தமிழ்நாடு, பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக சங்கங்கள் கூட்டமைப்பின் வடக்கு மாநில பொறுப்பாளர் மணிகண்டன் ஆச்சாரியார், மாணிக்க முருகன்குருஜி விக்கி ஆச்சாரியார், பாலு ஆச்சாரியார் ராஜேந்திரஆச்சாரியார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஜெகத்குரு ஸ்ரீ பாபுஜி சாமி, ராமநவமி குறித்து சொல்லும் மனித உருவில் இந்த பூவுலகில் மகாவிஷ்ணு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாக அவதாரம் செய்து தர்மத்தின் படி வாழ்ந்து சத்தியத்தின் வழி நடந்தார். சத்தியமே ஜெயதே என்றும், வாய்மையே வெல்லும் என்று ஜகத்குரு ஸ்ரீ பாபுஜி சாமிகள் மக்களுக்கு அருளாசி வழங்கினார்.

      ×