என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rape"

    • 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.
    • 2018-ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம், அறக்கட்டளைகள் உள்ளன.

    சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. 2013-ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.

    இதற்கிடையே, மருத்துவ காரணங்களுக்காக தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என ஆசாராம் பாபு காந்திநகர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்த மனுவை காந்தி நகர் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

    ஆசாராம் ஜாமின் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அவருக்கு மார்ச் 31 வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

    இந்நிலையில், இடைக்கால ஜாமினை மேலும் 3 மாதம் நீட்டிக்க வேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜூன் 30-ம் தேதி வரை அவரது இடைக்கால ஜாமீனை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.

    • உத்தரபிரதேசத்தில் 11 வயது சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்தியதாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
    • சிறுமி அணிந்திருந்த பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்து அவர்கள் அவிழ்த்துள்ளனர்.

    பெண்ணின் மார்பகத்தை பிடித்து அழுத்துவது பாலியல் வன்கொடுமைக்கான முயற்சியின் கீழ் வராது என்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரபிரதேசத்தில் 11 வயது மதிக்கத்தக்க சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்தியதாக பவன் மற்றும் ஆகாஷ் ஆகிய இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றவாளிகளில் ஒருவரான ஆகாஷ் அந்த சிறுமி அணிந்திருந்த பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்து ஒரு கால்வாயில் அருகே இழுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே வந்த சிலர் இவர்களை பார்த்ததும் அந்த சிறுமியை விட்டுவிட்டு அவர்கள் தப்பி ஒட்டியுள்ளனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவர் மீதும் ஐ.பி.சி. பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் போஸ்கோ சட்டத்தின் பிரிவு 18-ன் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

    விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, "சிறுமியின் மார்பகங்களை பிடித்து அழுத்துவதும் அவரின் பைஜாமா கயிற்றை அவிழ்த்து அவரை இழுப்பதும் பாலியல் வன்கொடுமை குற்றத்தின் கீழ் வராது என்று தெரிவித்து அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கின் பிரிவுகளை மாற்றியமைத்தார்.

    அதாவது குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுகளை ஐபிசி பிரிவு 354-பி (ஆடையைப் பிடித்து தாக்குதல்) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 9/10 (பாலியல் வன்கொடுமை) ஆகியவற்றின் கீழ் மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.

    • நாகராஜ் சிறுமி குளிப்பதை அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்தார்.
    • சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பண்ருட்டி, அக்.28-

    பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு பல்லவ ராயநத்தம் முருக ன்கோயி ல்தெருவைச்சேர்ந்தவர் நாகராஜ் (வயது 24), கூலி தொழிலாளி திருமணமா காதவர். அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி வீட்டில் தனியாக குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகராஜ் சிறுமி குளிப்பதை அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்தார். இதனையடுத்து இந்த வீடியோவை சிறுமியிடம் காட்டி அவரை மிரட்டி பலமுறை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி உடல் பாதிக்கப்பட்டார்.

    இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து சிறுமியை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து சிறுமியின் பெற்றோர் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் பண்ருட்டி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நந்தகுமார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நாகராஜனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • போக்சோவில் தொழிலாளி கைது
    • சிறையில் அடைத்தனர்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம் பாடியை அடுத்த உதயேந்திரம் பகு தியை சேர்ந்தவர் ராஜா (வயது 44). கூலித்தொழிலாளி. இவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மனந லம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய் ததாக கூறப்படுகிறது. உடனடியாக சிறுமியை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு ராஜாவின் வீட் டிற்கு சென்றனர்.

    அப்போது அங்குராஜா இல்லாத தால், ராஜாவின் மனைவியை வெளியே அனுப்பிவிட்டு, அப்பகுதி மக்கள் ராஜாவின் வீட் டுக்கு பூட்டு போட்டனர்.

    பின்னர் சம்பவம் குறித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார். அளித்துள்ளனர். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார், தலைமறைவான ராஜாவை பிடித்து போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் கடந்த 2021-ம் ஆண்டு தன் சொந்த மகளையே பாலியல் துன்புறுத்தல் செய்து போக்சோ சட்டத் தின் கீழ் கைது செய்து சிறையில்அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • கடத்தி சென்று பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    மதுரை

    திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டியை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் சத்திரப்பட்டி தேவாலயத்தில் வழிபாடு செய்வதற்காக மதுரை அரண்மணலியாங்காடு பகுதிக்கு வந்தார். அப்போது அவரை ஒரு காரில் வந்த 2 பேர் வழி மறித்தனர். அவர்கள் அந்த பெண்ணை காரில் கடத்திச் சென்றனர். அந்த கார் அங்குள்ள ஒரு தோப்புக்குள் சென்றது. அங்கு கடத்தி சென்ற பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    மேலும் அந்த மர்ம நபர்கள் கடத்தப்பட்ட பெண்ணிடம் இருந்து 2 பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்து சென்று விட்டனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் சத்திரப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் பெண்ணை காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் அதே பகுதியில் வசிக்கும் ரவுத்திரப் பாண்டி மற்றும் ஒருவர் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஜெயராமன் திருமணம் செய்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
    • செவிலியரை கடலூருக்கு அழைத்து வந்த ஜெயராமன் திடீரென்று பிடிக்கவில்லை என்று கூறினார்.

    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ஜெயராமன் (வயது 22). என்ஜினியர். இவரும் 23 வயது செவிலியரும் கடந்த சில ஆண்டுகளாக பழகி வந்தனர். அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து ஜெயராமன் திருமணம் செய்து கொள்வதாக செவிலியர் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த 1 மாதத்திற்கு முன்பு பரங்கிப்பேட்டை புதுப்பேட்டை பகுதிக்கு அழைத்து சென்று ஜெயராமன் திருமணம் செய்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று செவிலியரை கடலூருக்கு அழைத்து வந்த ஜெயராமன் திடீரென்று பிடிக்கவில்லை என்று கூறினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த செவிலியர்பெண் கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், ஜெயராமன் தன்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு உடந்தையாக அவரது தந்தை சுந்தரமூர்த்தி, தாய் ராஜேஸ்வரி, மகள் ஜெய ஸ்ரீ ஆகியோர் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன் பேரில் 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் பெண் செவிலியரை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தஞ்சை புதிய நீதிமன்றம் அருகே மர்மமான முறையில் சகாயமேரி இறந்து கிடந்தார்.
    • சகாயமேரியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் கற்பழித்து சகாயமேரி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாகோட்டையை சேர்ந்தவர் மைக்கேல். இவரது மகள் சகாயமேரி (வயது 61 ). திருமணமாகவில்லை. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    அதன் பின் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சகாயத்தை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தஞ்சை புதிய நீதிமன்றம் அருகே மர்மமான முறையில் சகாயமேரி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த தஞ்சை தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை பார்வையிட்டனர். அதில் சகாயமேரியின் தலையில் ரத்த காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதை அடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சகாயமேரியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் கற்பழித்து சகாயமேரி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சந்தேகம் மரணம் என்பதை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர். பல்வேறு கோணங்களில் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.அதில் தஞ்சை சேவப்பநாயக்கன்வாரி தென்கரையை சேர்ந்த சாஸ்திரி (30) என்பவர் சம்பவத்தன்று புதிய நீதிமன்றம் அருகே நின்று கொண்டிருந்த சகாய மேரியை கற்பழித்து கீழே தள்ளி விட்டுள்ளார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சகாயமேரி சம்பவ இடத்தில் இறந்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து சாஸ்திரியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது. ‌

    • திருப்பூரை சேர்ந்த, 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
    • பனியன் தொழிலாளியான ரியாஸ் அகமது என்பவர் ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூரை சேர்ந்த, 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். மாநகராட்சி பள்ளியில்,பிளஸ் 2 படித்து வருகிறார். இவரிடம் முதலிபாளையத்தை சேர்ந்த பனியன் தொழிலாளியானரியாஸ் அகமது(வயது 23) என்பவர் ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார்.

    இந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது ரியாஸ் அகமது, சிறுமியை மேட்டுப்பாளையத்துக்குஅழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது. சிறுமியை மீட்ட போலீசார்,ரியாஸ் அகமதுவை 'போக்சோ' வழக்கில் கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில், சிறையில் அடைத்தனர்.

    • தம்பியுடன் நடந்து சென்ற சிறுமியை தூக்கி சென்று பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    • சிறுமி கத்தியதால் சிறுமியை அப்படியே விட்டு ஓடியுள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே காட்டாண்டிகுப்பம் வீரன் கோவில் பக்கத்தில் உள்ள ஆவாரங்காடுஅருகே தனது தம்பியுடன் நடந்து வந்த 9 வயது சிறுமியை காட்டனாண்டிகுப்பத்தை சேர்ந்த கூலி தொழிலாளி தனுஷ் சிறுமியின் தம்பியிடம் ரூ. 10 கொடுத்து வீட்டிற்கு போக கூறினார். அதன்பின்னர் அந்த சிறுமியை தூக்கி சென்றுஆவாரம்காட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

    சிறுமி கத்தியதால் சிறுமியை அப்படியே விட்டு ஓடியுள்ளார். இது பற்றிசிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.சிறுமியின் பெற்றோர் பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.பண்ருட்டி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வள்ளி இதுகுறித்து போக்சோசட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்து கூலி தொழிலாளி தனுஷை கைது செய்தனர்.

    • காட்டுமன்னார்கோயில் தாத்தா வட்டம் பகுதியை சேர்ந்த செங்கதிர் (வயது 32) என்பவரும் அதே வீட்டிற்கு சென்று தங்கினார்.
    • இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சடைந்து பாட்டியிடம் தெரிவித்தனர்.

    கடலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம் பெண் தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேல்மூங்கிலடி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கினார். அப்போது இந்தப் பெண்ணின் மாமா முறையான சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோயில் தாத்தா வட்டம் பகுதியை சேர்ந்த செங்கதிர் (வயது 32) என்பவரும் அதே வீட்டிற்கு சென்று தங்கினார். இந்நிலையில் வீட்டில் பாட்டி இல்லாத நேரத்தில் தனியாக அந்தப் பெண் இருந்ததே நோட்டமிட்ட செங்கதிர் அந்த பெண்ணிடம் சென்று ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சடைந்து பாட்டியிடம் தெரிவித்தனர். இது குறித்து பாட்டி சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து செங்கதிரை கைது செய்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவமணி பலமுறை இளமை பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • 16 வயதில் கர்ப்பமானதால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் இதுகுறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது இளம்பெண். அதே பகுதியை சேர்ந்த சிவமணி (வயது 24) கூலித்தொழிலாளி. இவர் இளம் பெண்ணிடம் சென்று ஆசை வார்த்தை கூறி அவரை ஏமாற்றி கடந்த மார்ச் 16-ம் தேதி பண்ருட்டி திருவதிகை கோவிலில் சிவமணி இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

    இதன் பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த இளம் பெண்ணை சிவமணி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து சிவமணி அந்த பெண்ணை சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிவமணி பலமுறை இளமை பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண்ணை சிவமணி சிகிச்சைக்காக சென்னையிலிருந்து கடலூருக்கு அனுப்பி வைத்துள்ளார். சிவமணி வராததால் சந்தேகம் அடைந்த இளம்பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். மேலும் ஆஸ்பத்திரியில் 16 வயது இளம்பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தனர்.

    மேலும் 16 வயதில் கர்ப்பமானதால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் இதுகுறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வள்ளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் குழந்தை திருமண தடை சட்டம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த சிவமணியை வலை வீசி தேடி வருகின்றனர். 

    • லிதுவேனியா நாட்டை சேர்ந்த பெண் சிகிச்சை மையத்தில் இருந்து வெளியே சென்றபின் காணவில்லை.
    • கோவளம் கடற்கரையை அடுத்த மாங்குரோவ் காட்டு பகுதியில் அழுகிய நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் கடற்கரையில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் லிதுவேனியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

    அந்த பெண் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 14-ந் தேதி சிகிச்சை மையத்தில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவரை காணவில்லை. ஒரு மாதத்திற்கு மேல் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து அந்த பெண்ணின் சகோதரி கேரள போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து லிதுவேனிய பெண்ணை தேடிவந்தனர். இந்த நிலையில் அவரது உடல் கோவளம் கடற்கரையை அடுத்த மாங்குரோவ் காட்டு பகுதியில் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலை வெளிநாட்டு பெண்ணின் சகோதரி அடையாளம் காட்டினார்.

    பின்னர் போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து வெளிநாட்டு பெண்ணை கடத்தி கற்பழித்து கொலை செய்தது யார்? என விசாரணை நடத்தினர்.இதில் அந்த பகுதியை சேர்ந்த உதயன் (வயது 27), உமேஷ் (31) ஆகியோரை பிடித்தனர்.

    இவர்களில் ஒருவர் சுற்றுலா வழிகாட்டியாக உள்ளார். இன்னொருவர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இருவரும் வெளிநாட்டு பெண்ணை சம்பவ தினத்தன்று மாங்குரோவ் காட்டுக்கு கடத்தி சென்று போதை மருந்து கொடுத்துள்ளனர். பின்னர் அவரை வலுகட்டாயமாக கற்பழித்து உள்ளனர். அப்போது நடந்த தகராறில் இருவரும் அந்த பெண்ணை அடித்து கொன்றுவிட்டு உடலை மரத்தில் தொங்க விட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் மீதான வழக்கு திருவனந்தபுரம் முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் கைதான உதயன், உமேஷ் இருவரையும் குற்றவாளிகள் என கோர்ட்டு அறிவித்தது. அவர்களுக்கான தண்டனை விபரத்தை இன்று அறிவிப்பதாக கூறி இருந்தது. அதன்படி இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பு கூறினார்.

    மேலும் இருவரும் தலா ரூ.ஒரு லட்சத்து 65 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் அதனை பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பெண்ணின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    வெளிநாட்டு பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம் கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையை கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரி லிதுவேனியாவில் இருந்து ஆன்லைன் மூலம் பார்த்தார். இதற்காக லிதுவேனியா தூதரகம் விடுத்த கோரிக்கையை ஏற்று திருவனந்தபுரம் கோர்ட்டில் நடந்த விசாரணையை ஆன்லைன் மூலம் பார்க்க கோர்ட்டு அனுமதி வழங்கி இருந்தது. வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இந்தியாவில் நடக்கும் விசாரணையை ஆன்லைன் மூலம் பார்க்க அனுமதித்திருப்பது இதுவே முதல் முறை எனக்கூறப்படுகிறது.

    ×