என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "release"

    • பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பசும்பொன்னிற்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
    • வாகன மேற்கூரையில் பயணம் செய்ததாக உசிலம்பட்டியில் கைது செய்யப்பட்ட 18 பேர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    உசிலம்பட்டி

    பசும்பொன் முத்துரா மலிங்க தேவரின் 115-வது குரு பூஜை விழா நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தென் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு கட்டுப்பாடு களுடன் பசும்பொன்னிற்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் தேனியில் இருந்து உசிலம்பட்டி வழியாக பசும்பொன்னிற்கு செல்வ தற்காக டெம்போ வேனின் மேல் பகுதியில் நின்றவாறு வாகனத்தில் வந்தவர்களை உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நிறுத்தி வேனின் மேற்கூரையில் பயணிக்கக்கூடாது என அறிவுறுத்தினர். அப்போது அவர்கள் கீழே இறங்க முடியாது என்று கூறியதுடன், போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் தேனியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி, அருண்குமார், அஜித்குமார், பிரேம், ராஜேஷ் உள்ளிட்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை நீதிபதி சத்தியராஜ் சொந்த ஜாமீனில் விடுவித்தார்.

    • தமிழக விசை படகை, அரசுடமையாக்கி இலங்கை நீதிபதி உத்தரவு.
    • விடுதலை செய்யப்பட்ட 14 மீனவர்களும் விரைவில் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள்.

    கொழும்பு:

    நாகை, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த 15ந் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து செல்வமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நெடுந்தீவு அருகே கடந்த 17-ந் தேதி இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, விசைப்படகுடன் அவர்களை கைது செய்தனர்.

    பின்னர் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபின் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்வதுடன், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

    இந்த நிலையில், யாழ்ப்பாணம் சிறையில் இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 14 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களது படகை அரசுடமையாக்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்ட 14 மீனவர்களும் விரைவில் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிரதிநிதிகள் முன்பாக மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட உள்ளது.
    • திருவையாறு மற்றும் பூதலூர் வட்ட அலுவலகங்களில் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்து ஆய்வு.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், சமூக சீர்திருத்தத்துறை அரசு செயலாளருமான ஆபிரகாம் தலைமை தாங்கினார். கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.

    பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் அரசு செயலாளர் ஆபிரகாம் பேசும்போது,

    தஞ்சை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை (வியாழக்கிழமை) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பாக மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட உள்ளது.

    நாளை முதல் இந்த ஆண்டு முழுவதும் நடைபெற உள்ள தொடர் திருத்த முறையில் 18 வயது நிறைவடைய உள்ளவர்கள் அடுத்து வரும் 4 காலாண்டுகளின் மைய தகுதி நாளில் அதாவது ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 தொடர்புடைய காலாண்டின் தகுதி நாளில் 18 வயது நிறைவடையும் இளம் வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அந்தந்த வட்டாட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் தேர்தல் துணை வட்டாட்சியரிடம் படிவங்கள் வழங்கலாம்.

    அல்லது NVSP Portal என்ற இணையதளம் மற்றும் Voters helpline என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவர், வல்லம், திருவையாறு மற்றும் பூதலூர் வட்ட அலுவலகங்களில் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

    கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, வருவாய் கோட்டாட்சியர்கள் ரஞ்சித் (தஞ்சை), பிரபாகரன் (பட்டுக்கோட்டை), பூர்ணிமா (கும்பகோணம்) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தக்காளியின் பண்ணை விலை கிலோ ரூ.24 முதல் ரூ.27 வரை இருக்கும் என ஆய்வு முடிவின்படி அறியப்பட்டு உள்ளது.
    • கோடை காலம் என்பதால் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவை,

    கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் தக்காளி, கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் உற்பத்தி பயன்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் 3-வது முன் கூட்டிய மதிப்பீட்டின்படி 2021-22ல் தமிழகத்தில் தக்காளி சுமார் 0.54லட்சம் எக்டர் பரப்பில் பயிரிடப்பட்டு 16.18 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல் மற்றும் திருவண்ணாமலை ஆகியவை தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாக உள்ளது.

    தற்போது கோவை மொத்த விலை சந்தைக்கு தக்காளி ராயகோட்டை, கிருஷ்ணகிரி, கோவை சுற்றுவட்டார கிராமங்களான பெரியநாயக்கன்பாளையம், சாவடி, உடுமலை, தாராபுரம் மற்றும் கர்நாட மாநிலம் மைசூர் பகுதிகளில் இருந்து வருகிறது.

    மேலும் வேளாண்மை மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் 3-வது முன் கூட்டிய மதிப்பீட்டின் படி (2021-22) கத்திரி 0.24 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 3.13 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நாமக்கல், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் உற்பத்ததி செய்யப்பட்டுகிறது. வர்த்தக மூலங்களின்படி கோவை சந்தைக்கு தற்போதைய வரத்து மாதம்பட்டி, ஆலந்துறை, நாச்சிபாளையம், குப்பனூர், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வருகின்றது.

    இதேபோல வேளாண்மை மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் 3-வது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி (2021-22) வெண்டைக்காய் 0.25 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்ப்டு 24 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் தர்மபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், கோவை, மதுரை, வேலூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    வர்த்தக மூலங்களின்படி தற்போது கோவை சந்தைக்கு வெண்டைக்காய மாதம்பட்டி, ஆலந்துறை, நாச்சிபாளையம், குப்பனூர், தொண்டாமுத்தூர், மற்றும் பூலுவப்பட்டி பகுதிகளில் இருந்து வருகின்றது.

    இந்த நிலையில் விலை முன்னறிவிப்பு திட்டக்குழு ஒட்டன்சத்திரம் மற்றும் கோவை சந்தையில் கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்தரி மற்றும் வெண்டைக்காய் விலையில் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

    பொருளாதார ஆய்வு முடிவின்படி அறுவடையின் போது (மே 2023) தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோ ரூ.24 முதல் ரூ.27 வரையும், நல்ல தரமான கத்தரியின் விலை ரூ.22 முதல் ரூ.27 ஆகவும், வெண்டைக்காயின் விலை ரூ.26 முதல் ரூ.28 வரை இருக்கும் என அறியப்பட்டு உள்ளது. மேலும் கோடை காலம் என்பதால் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விவசாயிகள் அதற்கேற்ப சந்தை முடிவுகளை எடுக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • 47 துணை ேபாலீஸ் சூப்பிரண்டு பணிகள் காலியாக உள்ளது.
    • மூப்பு அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பெயர் பட்டியல் வெளியீடப்படுகிறது.

    விருதுநகர்

    தமிழகத்தில் 47 துணை போலீஸ் சூப்பிரண்டு நிலை-1 பணி காலியிடங்கள் உள்ளன. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பட்டியலை தமிழக உள்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 47 காலிபணியிடங்களுக்கு வயது மூப்பு அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பெயர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதனை அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒட்ட வேண்டும் என உள்துறை அறிவுத்துள்ளது.

    • வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.
    • மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் 1354 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் 346 வாக்குச்சாவடிகள், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 334 வாக்குச் சாவடிகள், சிவகங்கை தொகுதியில் 351 வாக்குச் சாவடிகள், மானாமதுரை (தனி) சட்டமன்றத் தொகுதி யில் 323 வாக்குச்சாவடிகள் ஆக மொத்தம் 1354 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    இதற்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அனைத்து அங்கீக ரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் வெளியிட்டார்.

    இதைத்தொடர்ந்து, வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சிவகங்கை மற்றும் தேவகோட்டை, சிவகங்கை மாவட்ட அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வட்டாட்சியர்கள் வாக்குச்சாவடி சீரமைப்பு தொடர்பாக பரிந்து ரைகளை தெரிவித்தனர்.

    மேலும் வாக்குச்சாவடி திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் ஆட்சே பனைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்குப்பதிவு அலுவலருக்கு எழுத்துப் பூர்வமாக மனு அளிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    மறுசீரமைப்பு செய்யும் முன் வாக்குச்சாவடி மையங்களை தணிக்கை செய்து வருகிற 29-ந் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்குமாறு அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வட்டாட்சி யர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச் சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பாதேவி, வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), சோ.பால்துரை (தேவகோட்டை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூரில் ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கிய புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது
    • தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன் தலைமையில் வெளியிடப்பட்டது

     பெரம்பலூர்,

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் எமெர்ஜிங் இன்னோவேடிவ் ரிசெர்ச் இன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரைகளை உள்ளடக்கிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன் தலைமை தாங்கினார். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன் முன்னிலை வகித்தார். இந்த புத்தக வெளியீட்டு விழாவி ல் வேந்தர் பேசியதாவது:- எமெர்ஜிங் இன்னோவேடிவ் ரிசெர்ச் இன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த புத்தகத்தை வெளி யிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி யும் பெருமையும் அடைகி றேன். நமது கல்லூரி அதிவேகமாக மாறிவரும் நவீன உலகத்தில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் திறன்களை வளர்த்து, அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது. பல புதிய படைப்புகளை உலகுக்கு அறிமுகப்படுத்தும், உயர்ந்த நோக்கில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது உருவாகியுள்ள இந்த புத்தகம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுக்கு மிக சிறந்த சான்றாகும்.

    இந்த புத்தகமானது அறிவியல்,பொறியியல், தொழில்நுட்பம், மற்றும் மேலாண்மை துறைகளின் ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பாகும். இந்தத் தொகுப்பில் உண்மையிலேயே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், இந்த பங்களிப்புகள் அனைத்தும் நம்முடைய தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழும குடும்பத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள். நம்முடைய ஆசிரியர்கள் கல்வியாளர்களாக மட்டுமல்லாமல், அந்தந்த துறைகளில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தி புதிய படைப்புகளை உருவாக்குவதில், அவர்களுக்கு உள்ள அசைக்க முடியாத ஈடுபாட்டை, இந்த புத்தகம் பிரதிபலிக்கிறது.

    இந்நூலில் உள்ள ஆய்வுக் கட்டுரைகளை தொகுத்த தலைமை பதிப்பாசிரியர்கள் இளங்கோவன், சிவராமன், இணை பதிப்பாசிரியர்கள் அன்பு, கார்த்திகேயன், விசாலாட்சி மற்றும் தொழில்நுட்ப பதிப்பாசிரியர்கள் அருண் பிரசாத், சுரேஷ்குமார், நிரஞ்சனி ஆகியோரை மனதார பாராட்டுகிறேன். இந்த புத்தகத்தை சிறந்த முறையில் பிரசுரித்த ட்ருலைன் பப்ளிஷர் நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் கல்லூரியின் முதல்வர் இளங்கோவன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். திறன் மேம்பாட்டு அதிகாரி சஷீதா, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வேல்முருகன், புலமுதல்வர் (அகாடெமிக்) அன்பரசன், புலமுதல்வர் (ஆராய்ச்சி) சிவராமன், புலமுதல்வர் (பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு) சண்முகசுந்தரம், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • அரியலூர் வாக்காளர் பட்டியலில் 5.07 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்
    • பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றத்திற்கென சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது

    அரியலூர்,

    அரியலூர்மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், ஒருங்கிணை ந்த வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

    அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் 1,27,477 ஆண் வாக்காளர்களும், 1,27,345 பெண் வாக்காளர்களும், 04 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,54,826 வாக்காளர்கள் உள்ளனர்.

    ஜெயங்கொண்டம் சட்டமன்றத்தொகுதியில் 1,26,057 ஆண் வாக்காளர்களும், 1,26,535 பெண் வாக்காளர்களும், 07 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,52,599 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,07,425 ஆகும்.

    மாவட்ட கலெக்டர் ஆனி மேரி சொர்ணா இது குறித்து கூறும்போது:-

    18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்க ப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் 27.10.2023 முதல் 09.12.2023 வரை படிவங்களை பெற்று, அப்படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிடலாம்.

    மேலும், சேர்த்தல், நீக்கல், பிழைதிருத்தம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றிக்கான விண்ணப்பிக்க அனைத்து வாக்கு ச்சாவடி மையங்க ளில் 04.11.2023, 05.11.2023, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் (அரியலூர்), பரிமளம் (உடையார்பாளையம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை மற்றும் அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட படகு இலங்கை நாட்டுடமை ஆக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து கடந்த 22-ந்தேதி 480 விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். 23-ந்தேதி அதிகாலை அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர். இதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜசக் (வயது 47), ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் (43) ஆகியோருக்கு சொந்த மான இரண்டு விசைப்படகுகளை சிறைபிடித்தனர். படலில் இருந்து ஐசக் (47), சிசேரியன் (43), சமாதான பாபு (38), ஈஸ்டர் ஆரோக்கியதாஸ் (34), நிஷாந்தன் (34), முருகேசன் ஆகிய 6 மீனவர்களையும் கைது செய்தனர்.

    அவர்கள் அங்குள்ள ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். எல்லை தாண்டியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் ராமேசுவரம் மீனவர்களின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து இன்று அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மீனவர்கள் 6 பேரையும் விடுதலை செய்ய நீதிபதி கஜநிதி பாலன் உத்தரவிட்டார். மேலும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகு இலங்கை நாட்டுடமை ஆக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து விரைவில் விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவல் சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • குலுக்கல் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணத்தை செலுத்தி டிக்கெட் பெறலாம்.
    • ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்து வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளுக்காக பிப்ரவரி 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடுகிறது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை பெறும் கட்டண சேவா டிக்கெட்டுகளுக்கான மே மாத டிக்கெட்கள் இன்று காலை வெளியிடப்பட்டன.

    இதில் சுப்ரபாதம், அர்ச்சனை உள்ளிட்ட சேவை டிக்கெட்டுகளை மின்னணு குலுக்கலுக்கு ஆன்லைன் பதிவு 21-ந் தேதி காலை 10 மணி வரை செய்யலாம்.

    அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு குலுக்கல் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பணத்தை செலுத்தி டிக்கெட் பெறலாம். கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ரதிப அலங்கர சேவைகளுக்கான டிக்கெட்டுகள் பிப்ரவரி 22-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

    இதே சேவைகளுக்கு நேரடியாக பங்கேற்காமல் சாமி தரிசனத்திற்கு மட்டும் மே மாத டிக்கெட்கள் வருகிற 22-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

    மே மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்து வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளுக்காக பிப்ரவரி 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடுகிறது.

    மே மாதத்திற்கான. அங்கப்பிரதட்சணம் இலவச டோக்கன்கள் 23-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது.

    மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மே மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் வருகிற 23-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.

    மே மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடுகிறது.

    • இந்த படம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது.
    • ஆரி அர்ஜுனுக்கு ஜோடியாக தீப்ஷிகா நடிக்கிறார்.

    மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரிக்க, இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது. ரிலீஸ் என தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது.

    சென்னையின் மையப்பகுதி ஒன்றில், நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில், இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருப்பதாக இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி தெரிவித்துள்ளார்.

     


    இந்த படத்தில் ஆரி அர்ஜுனுக்கு ஜோடியாக தீப்ஷிகா நடிக்கிறார். இவர்களுடன் ஆராத்யா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஜெ லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்கிறார்.

    இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    • இந்த காதல் கதையை பார்த்து இளைஞர்கள் காதல் வயப்படுகின்றனர்
    • OTT தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பிரேமலுவின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ளது

    ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான மலையாள மொழிப்படம் 'பிரேமலு'. காதல்,காமெடி நிறைந்த இப்படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் இயக்கி உள்ளார். இதில் மமிதா பைஜு, நஸ்லேன் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.

    இந்த படம் கடந்த பிப்ரவரி 9- ந் தேதி வெளியானது. கேரளாவில் பெரும் வெற்றி பெற்ற இந்த படம் பிப்.15- ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 8 -மகளிர் தினத்தில் தெலுங்கில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.

    தமிழில் மொழிபெயர்ப்பு செய்து இன்று வெளியாகியுள்ளது பிரேமலு படம். இந்நிலையில் உலக அளவில் இந்த படம் 'பாக்ஸ் ஆபீஸ்' வசூல் ரூ.100 கோடிக்கும் மேல் தாண்டியது. மலையாளத்தில் குறும்படமாக வெளியான 'யூத்புல் லவ் ஸ்டோரி,' தற்போது தெலுங்கிலும் 'டப்' செய்யப்பட்டு மக்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. 




     

    இந்த காதல் கதையை பார்த்து இளைஞர்கள் காதல் வயப்படுகின்றனர். இதன் மூலம் பிரேமலு படம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வசூல் செய்து வருகிறது. நாயகி மமிதா பைஜு தற்போது பேசும் பொருளாகி விட்டார். 

    இத்தனை அம்சங்களுடன் 'பிரேமலு' படம் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கிற்கு தயாராக உள்ளது. பிரபல OTT தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பிரேமலுவின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ளது. மார்ச் 29-ந் தேதி முதல் OTT-யில்  இப்படம் வெளியீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

     

    ×