என் மலர்
நீங்கள் தேடியது "Resignation"
- டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி விலகினார்
- காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் உள்ளிட்டோரும் பாஜகவில் இணைந்தனர்
புதுடெல்லி:
டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை கடந்த மாதம் 28 ஆம் தேதி ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் தீபக் பதரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்களை கட்சியில் இருந்து நீக்கக்கோரி தொடர்ந்து அழுத்தம் வருவதால் டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என அர்விந்தர் சிங் லவ்லி தெரிவித்தார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியோடு காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்ததற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, நான் வேறு எந்தக் கட்சியிலும் சேரப்போவது இல்லை. காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்வேன். கட்சி தொண்டர்களுடன் தொடர்பில் இருப்பேன். கட்சியின் கொள்கைகளை நிலைநாட்டவே இந்த முடிவை எடுத்துள்ளேன். பாராளுமன்ற தேர்தலில் சீட் ஒதுக்குவதில் உள்ள பிரச்சனை காரணம் இல்லை என அர்விந்தர் சிங் லவ்லி தெரிவித்தார்.
இந்நிலையில், காங்கிரசில் இருந்து விலகிய அர்விந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பாஜக மூத்த தலைவர் வினோத் தாவ்டே முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்
அப்போது காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் உள்ளிட்டோரும் பாஜகவில் இணைந்தனர்
இவர் பாஜகவில் இணைவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். மீண்டும் 2018 ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய சூழல் உள்ளதால் ராகுல் இறுதியாக ரேபரேலியை தேர்ந்தெடுத்து வயநாட்டை விட்டுக்கொடுத்துள்ளார்.
- வயநாடு எம்.பி பதவியிலிருந்து தான் விலகுவதாக ராகுல் காந்தி ராஜினாமா கடிதம் அளித்தார்.
இந்தியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்த நிலையில் காங்கிரசின் இந்தியா கூட்டணி 235 இடங்களில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளிலும் தனது வெற்றியை பதிவு செய்தார்.

வழக்கமாக அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் இந்த முறை தாய் சோனியா காந்தியின் நட்சத்திரத் தொகுதியான ரேபரேலியில் முதல் முறையாக நின்ற நிலையில் தாய் சோனியா கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் வென்ற இரண்டு தொகுதிகளில் ஏதெனும் ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே நீடிக்க முடியும் என்ற சூழலில் ராகுல் வயநாட்டை தேர்ந்தெடுப்பாரா அல்லது ரேபரேலியைத் தேர்தெடுப்பாரா என்ற கேள்வி எழுந்தது.

வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய சூழல் உள்ளதால் ராகுல் இறுதியாக ரேபரேலியை தேர்ந்தெடுத்து வயநாட்டை விட்டுக்கொடுத்துள்ளார். அதன்படி வயநாடு எம்.பி பதவியிலிருந்து தான் விலகுவதாக ராகுல் காந்தி, அளித்த ராஜினாமா கடிதம் ஜூன் 18 அதிகாரபூர்வமாக ஏற்கப்பட்டுள்ளது என்று மக்களவைச் செயலகம் தனது செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது. இதற்கிடையில் வயநாடு தொகுதியில் நடக்கும் மறுதேர்தலில் ராகுலின் தங்கையும் காங்கிரஸ் முக்கியத் தலைவருமான பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- ஆளுங்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே கமிஷனரிடம் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மான கடிதத்தை வழங்கினர்.
- மேயர், கவுன்சிலர்கள் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் 51 பேரும், அ.தி.மு.க கவுன்சிலர்கள் 4 பேரும் இருக்கின்றனர்.
மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்த சரவணன் இருந்து வருகிறார். அவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து அவருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதனால் பலமுறை மாநகராட்சி கூட்டங்கள் உள்ளிட்டவற்றை கவுன்சிலர்கள் புறக்கணித்ததால் மக்கள் திட்ட பணிகள் நடைபெறாமல் முடங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
மேலும் ஆளுங்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே கமிஷனரிடம் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மான கடிதத்தை வழங்கினர். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கட்சியின் மூத்த அமைச்சர்கள் மாநகராட்சிக்கு நேரில் வந்து அனைவரையும் சமாதானப்படுத்தி சென்றனர்.
ஆனால் அதன் பின்னரும் தொடர்ந்து மேயர், கவுன்சிலர்கள் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாநகராட்சி கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் மொத்தம் 10 கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மீதமுள்ள கவுன்சிலர்கள் மேயர் சரவணனை கண்டித்து புறக்கணித்தனர்.
இந்நிலையில் தி.மு.க தலைமையகத்தில் இருந்து மேயர் சரவணனுக்கு அழைப்பு வந்ததன் பேரில் அவர் கடந்த 2 நாட்களாக சென்னையில் முகாமிட்டு உள்ளார்.
அவரை அமைச்சர் கே.என். நேரு நேரில் அழைத்து மாநகராட்சி பிரச்சனை குறித்த விவரங்களை கேட்டு அறிந்தார். இந்நிலையில் தற்போது மேயர் சரவணன் தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமையிடம் வழங்கி விட்டதாக பரவலான தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கட்சி தலைமையால் விரைவில் அறிவிக்கப்படும் எனவும், புதிய மேயரையும் கட்சியே அறிவிக்கும் என்றும் தகவல்கள் பரவலாக இருந்து வருகிறது.
- மேயர் கல்பனா ராஜினாமா செய்தது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஒட்டுமொத்தத்தில் கோவை மாவட்ட அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.
கோவை:
தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை மாநகராட்சி. இந்த மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் 97 பேர் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள்.
கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த கல்பனா ஆனந்த குமார் பதவி வகித்து வந்தார். இவர் மாநகராட்சி 19-வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர். இவரது கணவர் ஆனந்தகுமார் தி.மு.க.வில் பொறுப்புக்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
மேயர் கல்பனா, பொறுப்பேற்றது முதலே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தது. இதற்கு அவரது கணவர் ஆனந்தகுமாரின் அரசியல் தலையீடு காரணமாக கூறப்பட்டது. மேலும் தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டத்திலும், நிர்வாகிகள் மத்தியிலும் இவர் பெரிய அளவில் நம்பிக்கையை பெறவில்லை. இதனால் தி.மு.க. கவுன்சிலர்களே அவ்வப்போது தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர்.
இந்தநிலையில் மேயர் கல்பனா, தனது மேயர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், இதுதொடர்பான கடிதத்தை அவர் தி.மு.க. மேலிடத்துக்கு அனுப்பிவிட்டதாகவும் கோவை அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இதற்காக கல்பனா தற்போது சென்னையிலேயே முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கோவை அரசியல் கட்சியினர் மத்தியிலும், தி.மு.க.வினர் மத்தியிலும் இதுவே பேச்சாக உள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் மாநகராட்சியில் நேற்று நடைபெற இருந்த குறைதீர் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார். மேயர் வழங்கிய ராஜினாமா கடிதத்தை ஆணையர் ஏற்றுக் கொண்டார். மேயர் கல்பனா ராஜினாமா செய்தது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணனும் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை நெல்லை ஆணையருக்கு சரவணன் அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து மேயர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில் தி.மு.க. மூத்த தலைவர்கள் பலரை இப்போதே தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். இதற்காக பலர் சென்னைக்கு படையெடுத்துச் சென்றுள்ளனர். ஒட்டுமொத்தத்தில் கோவை மாவட்ட அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.
- ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனை சந்தித்து வழங்கியுள்ளார்.
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவருமான ஹேமந்த் சோரனை சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஜனவரி 31-ந்தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இத்தொடர்ந்து அவர் தனது முதலவர் பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மீது ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் தாமதம் செய்த நிலையில் அவர் உச்சநீதிமன்றம் சென்றார்.
ஆனால் அதுவும் பலனளிக்காமல் போனது. அதுமட்டுமின்றி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது பிரச்சாரம் செய்வதற்காக அவர் ஜாமீன் கேட்ட நிலையில் அதையும் நீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில் ஜாமீனுக்காக ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரனையில் ஹேமந்த் சோரனை, குற்றவாளி என்பதற்கு போதிய காரணங்கள் இல்லை எனக்கூறி உயர் நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது. இதனையடுத்து 5 மாதங்களுக்கு பிறகு சிறையிலிருந்து ஹேமந்த் சோரன் வெளியில் வந்தார்.
இந்நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று ராஞ்சி திரும்பியதும் தற்போதைய முதலமைச்சர் சாம்பை சோரன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாகவும் அதன் பின்னர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் தகவல் பரவியது.
இந்நிலையில், ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் ராஜினாமா செய்துள்ளார். அதன்படி, சம்பாய் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனை சந்தித்து வழங்கியுள்ளார்.
மேலும், ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரன் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனை சந்தித்து உரிமை கோரினார்.
- மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் சர்ச்சை கருத்து.
- மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் ஆகியோர் ராஜினாமா.
மாலே:
இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவின் அதிபர் முகமுது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். சீன ஆதரவாளரான அவர் மாலத்தீவில் இருந்த இந்திய ராணுவத்தை வெளியேற உத்தரவிட்டார்.
மேலும் இந்திய பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் சர்ச்சை கருத்தை தெரிவித்தனர்.
இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியர்கள் பலர் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்தனர். இதனால் மாலத்தீவில் சுற்றுலாத்துறை, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன்பின் பிரதமர் மோடியை விமர்சித்த மந்திரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
தற்போது இந்தியாவுடன் மாலத்தீவு அரசு இணக்கமான அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக கடந்த ஜனவரி மாதம் சஸ்பெண்டு செய்யப்பட்ட மந்திரிகள் மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
மாலத்தீவு அதிபர் முகமுது முய்சு, விரைவில் இந்தியாவுக்கு அரசு முறை பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மந்திரிகள் 2 பேர் பதவி விலகியுள்ளனர்.
இதுகுறித்து அதிபர் அலுவலகத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஹீனா வலீத் கூறும்போது, அதிபர் முகமுது முய்சு மிக விரைவில் இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ளார். பயணத்திற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இரு தரப்பினரும் ஒரு தேதியை விவாதித்து வருகிறோம் என்றார்.
- 70 இடங்களில் 67 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
- 2013 டிசம்பரில் முதல்வரான கெஜ்ரிவால் 2014 பிப்ரவரியில் பதவியை ராஜினாமா செய்தார்
?எம்.எல்.ஏ கெஜ்ரிவால்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 6 மாத திகார் சிறைவாசத்தின் பின் ஜாமீனில் வெளிவந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அம்மாநில கல்வி அமைச்சர் அதிஷி முதலமைச்சர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளார். இதன்படி கெஜ்ரிவால் தனத்துக்கு எதிரான ஊழல் வழக்கை முதல்வராக அன்றி ஆம் ஆத்மி எம்.எல்.ஏவாக எதிர்கொள்ள உள்ளார்.
தலைநகரும் அரசியல் சதுரங்கமும்
தலைநகர் டெல்லிக்கு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அதை முன்கூட்டியே வரும் நவம்பர் மாதம் மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலுடன் நடந்த வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். அன்னா ஹசாரேவுடன் ஊழலுக்கு எதிரான போராட்டங்களுக்குப் பிறகு 2012 ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்கிய கெஜ்ரிவால் சுமார் 10 வருட காலமாக டெல்லியில் பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகளில் நாற்காலி கனவை கனவாகவே நிருத்தி வைத்துள்ளார்.
கெஜ்ரிவால் ராஜினாமா மூலம் அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்துவது இது முதல் முறை அல்ல. ஒரு புதிய கட்சியாக பழம்பெரும் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி தேசத்தின் தலைநகரில் ஆட்சியைப் பிடிப்பதை அரவிந்த் கெஜ்ரிவால் தனது அரசியல் நகர்வுகள் மூலம் சாத்தியமாகிக் காட்டினார்.

கெஜ்ரிவாலின் அரசியல் கணக்கு
6 மாத காலமாகச் சிறைக்குள் இருந்தபோது அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக தொடராமல் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. ஆனால் அப்போதெல்லாம் அன்றி தற்போது ஜாமீனில் வெளி வந்த 2 நாட்களுக்கு உள்ளாகவே ராஜினாமா செய்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளதற்குப் பின்னால் அரசியல் இல்லாமலில்லை.
ஜனாதிபதி ஆட்சி, ஊழல் முதல்வர் என பாஜக பயன்படுத்தி வந்த அத்தனை கார்டுகளையும் மக்கள் தீர்ப்பளிக்காமல் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமரப்போவதில்லை என்று சூளுரைத்து ராஜினாமா என்ற ஒரே கார்டில் தவிடுபொடி ஆக்கியுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
2013 இல் முதல்முறையாக பாஜகவின் டெல்லி கனவுக்கு நடுவே கெஜ்ரிவால் முட்டுக்கட்டையாக வந்தார். 15 வருட காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு ஆட்சி அமைக்க காத்திருந்த பாஜகவின் கனவு 70 தொகுதிகள் கொண்ட டெல்லியில் ஆம் ஆத்மி 28 தொகுதிகளைக் கைப்பற்றித் தொங்கு சட்டசட்ட சபை அமைத்ததன் மூலம் தகர்ந்தது. ஆளுநர் அழைப்பு விடுத்தும் ஸ்திரத்தன்மை இல்லாததால் ஆட்சி அமைக்க பாஜக பயந்தது.
காங்கிரசின் 7 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் சேர்ந்து டெல்லியில் முதல்முறையாக ஆட்சியமைத்து முதல்வர் ஆனார் கெஜ்ரிவால். ஆனால் அந்த அரசு 49 நாட்கள் மட்டுமே நீடித்தது. டிசம்பர் 30 2013 இல் முதல்வரான கெஜ்ரிவால் பிப்ரவரி 2014 இல் பதவியை ராஜினாமா செய்தார். ஊழல் எதிர்ப்பு கொள்கைகளை ஆம் ஆத்மி வலியுறுத்தியதால் பாஜக மற்றும் காங்கிரஸ் தங்களை எதிர்ப்பதாக தனது ராஜினாமா உரையில் கெஜ்ரிவால் தெரிவித்தார். இதன்பின் டெல்லி தற்காலிகமாக மத்திய காட்டுப்பாட்டின்கீழ் வந்தது.
மீண்டும் தேர்தல்
இதன்பின் மீண்டும் தேர்தல் நடந்த வேண்டும் என்ற அழுத்தம் தொடர்ந்து வந்தது. எனவே சரியாக ஒரு வருடம் கழித்து 2015 ஆம் ஆண்டு மீண்டும் வந்தது தேர்தல். இதில் டெல்லி கெஜ்ரிவாலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளித்தது. அதுவும் 70 இடங்களில் 67 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதற்கு கெஜ்ரிவால் பாஜகவுக்கு பதவியை பொருட்படுத்தாமல் ராஜினாமா செய்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றதே காரணம் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் பாஜகவின் கனவு மீண்டும் சிதறியது. தொடர்ந்து 2020 இல் நடந்த தேர்தலில் 70 இடங்களில் 62 இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தார் கெஜ்ரிவால்.

மீண்டும் ராஜினாமா
இந்த நிலையில்தான் மதுபான கொள்கை முறைகேடு ஊழல் வழக்கு ஆம் ஆத்மி மீது விடிந்தது. மணீஷ் சிசோடியா முதலில் சிறை சென்றார்.தொடர்ந்து கடந்த மார்ச் 21 அன்று கெஜ்ரிவாலும் கைதானார் இந்நிலையில் மீண்டும் ராஜினாமா அஸ்திரத்தை கெஜ்ரிவால் கையில் எடுத்துள்ளதால் அவரை முன்னிறுத்தி ராஜினாமா செய்யாத ஊழல் முதல்வர் என வர இருக்கும் தேர்தலில் பாஜக முத்திரை குத்த வழி இல்லாமல் ஆகியுள்ளது. அதற்கு பதிலாக ஆக்ஸ்போர்டில் படித்த நிர்வாகத் திறன் வாய்ந்த முதல்வர் என்ற அதிஷியின் பிம்பம் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு கை கொடுக்கும். மேலும் ஊழல்வாதி என்ற பிம்பத்தில் இருந்து குறிவைக்கப்பட்டவர் என்ற பிம்பத்துக்கு கெஜ்ரிவால் டிரான்சிஷன் ஆவதும் குறிப்பிடத்தக்கது.
- இன்று காலை நடந்த ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிஷி டெல்லி முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்
- அதிஷி மற்றும் மணீஷ் சிசோடியா உடன் ஆளுநர் மாளிகைக்கு சென்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான சி.பி.ஐ. வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஜூன் 26-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவ்வழக்கில் கடந்த 13-ந்தேதி உச்சநீதிமன்றம் அவரை ஜாமினில் விடுதலை செய்தது. அதே நாளில் அவர் திகார் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.
கடந்த 15-ந்தேதி, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் 48 மணி நேரத்துக்குள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். மக்கள் தீர்ப்பளிக்காமல் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமரப்போவதில்லை என்று சூளுரைத்த கெஜ்ரிவால் சட்டமன்றத் தேர்தலை வரும் நவம்பர் மாதமே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு, ஒரு மூத்த தலைவர் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில் இன்று டெல்லி துணை நிலை ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார் கெஜ்ரிவால். இன்று மதியம் அதிஷி மற்றும் மணீஷ் சிசோடியா உடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் வி.கே சக்சேனாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.
- உண்ணாவிரதத்தின்போது ஜுனியர் டாக்டர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவமும் நிகழ்ந்தது
- கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் இருந்து 60 மருத்துவர்கள் ராஜினாமா செய்தனர்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி .கர் மருத்துவக்கல்லூரியில் பயிற்சி பெண் டாகடர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர். உச்சநீதிமன்ற தலையீட்டை அடுத்து மற்ற பகுதிகளில் போராட்டங்கள் படிப்படியாகக் குறைந்தாலும், கொல்கத்தாவில் இன்னும் தீவிரத்துடன் மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
மேற்கு வங்க மம்தா அரசுக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைக்கும் அவர்கள் விரைந்த நீதி கிடைக்க வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்த உண்ணாவிரதத்தின்போது ஜுனியர் டாக்டர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவமும் நிகழ்ந்தது. இந்நிலையில் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் இருந்து சுமார் 50 மூத்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் பணிகளில் இருந்து ராஜினாமா செய்தனர்.

தொடர்ந்து கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் இருந்து கிட்டத்தட்ட 60 மருத்துவர்கள் ராஜினாமா செய்தனர். கூண்டோடு நடந்த இந்த ராஜினாமாக்களால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணி தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் மருத்துவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று மம்தா தலைமையிலான மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய மேற்கு வங்க அரசின் தலைமை ஆலோசகர் ஆல்பன் பந்தோபாத்யாய், மருத்துவர்கள் கூட்டாக ராஜினாமா செய்வது சட்டப்படி செல்லாது.
பணியாளர் விதிகளின்படி ராஜினாமா என்பது பணியாளருக்கும் பணி வழங்குபவருக்கும் இடையிலான தனிப்பட்ட விஷயம். எனவே இந்த கூட்டு ராஜினாமா கடிதங்கள் செல்லாது. ஒவ்வொருவரும் தனித்தனியாக ராஜினாமா கடிதம் அளித்தால் மட்டுமே அது செல்லுபடியாகும் என்று தெரிவித்தார்.
- இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் பெயர் பிரதமர் பதவிக்கு அடிபடுகிறது.
- இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.யான ஜார்ஜ் சாகல், பிரதமர் பதவி போட்டியில் உள்ளார்.
கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். மேலும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
அவரது பொருளாதார நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் சொந்த கட்சியிலேயே எதிர்ப்பை சந்தித்தார். அவருக்கு எதிராக பெரும்பாலான எம்.பி.க்கள் உள்ளனர். இதையடுத்து பதவி விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கனடாவின் புதிய பிரதமராக யார் தேர்வு செய்யப்பட உள்ளார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. பிரதமர் பதவி போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உள்பட 8 பேர் உள்ளனர்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் தற்போதைய போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சருமான இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் பெயர் பிரதமர் பதவிக்கு அடிபடுகிறது. இவரது தந்தை ஆனந்த் தமிழ்நாட்டையும், தாய் சரோஜ் பஞ்சாப் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் டாக்டர்கள்.
அனிதா ஆனந்த் 2019 முதல் 2021-ம் ஆண்டு வரை பொதுச் சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக இருந்தார். கொரோனா காலத்தில் கோவிட்-19 தொற்றுநோயின் உச்சத்தில் மருத்துவ உபகரணங்களைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்காற்றினார்.

அதேபோல் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.யான ஜார்ஜ் சாகல், பிரதமர் பதவி போட்டியில் உள்ளார். இவர் இயற்கை வளங்களுக்கான நிலைக்குழுவின் தலைவராகவும், சீக்கிய காக்கசின் தலைவராகவும் உள்ளார்.
மேலும் சில நாட்களுக்கு முன்பு துணைப் பிரதமர் பதவியில் இருந்து விலகிய கிறிஸ்டியா பிரீலேண்ட், முன்னாள் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, மூத்த அமைச்சர் டொமினிக் லெப்லாங்க், முன்னாள் பேங்க் ஆப் கனடா மற்றும் பேங்க் ஆப் இங்கிலாந்து கவர்னர் மார்க் கார்னி மற்றும் பிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின், கிறிஸ்டி கிளார்க் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.
இப்போட்டியில் அனிதா ஆனந்த் முன்னணியில் உள்ளார். 57 வயதாகும் அனிதா ஆனந்த் 2010-ம் ஆண்டில் இருந்து அரசியலில் இருக்கிறார். குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆய்வு, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டவியல், டல்ஹௌசி பல்கலைக்கழகத்தில் சட்டம், தொடர்ந்து டொராண்டோ பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டம் பயின்ற அவர் நோவாஸ்கோர்சியாவில் பிறந்தவர்.
- கும்பமேளாவில் குளிக்க செல்ல முயன்றபோது 39 பக்தர்கள் பலியான கோர சம்பவம் நடந்துள்ளது.
- மக்கள் பலியானதற்கு ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
டெல்லி ரெயில் நிலையத்தில் கும்பமேளாவுக்கு செல்ல முற்பட்ட பயணிகளிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்திருக்கிறது.
ஏற்கனவே கும்பமேளாவில் குளிக்க செல்ல முயன்றபோது 39 பக்தர்கள் பலியான கோர சம்பவம் நடந்துள்ளது.
கும்பமேளாவில் 30, 40 கோடி பேர் குளித்தார்கள் என்று சாதனையாக கூறுகிற பா.ஜ.க. அரசு எத்தனை பேர் கும்பமேளாவில் இறந்தார்கள் என்ற முழு விவரத்தை இன்று வரை வெளியிடத் தயாராக இல்லை.
இன்னும் பலர் காணாமல் போன விவரமும் தெரியாத நிலை உள்ளது. இதற்கெல்லாம் உத்தரபிரதேச பா.ஜ.க. அரசு பொறுப்பேற்க வேண்டும்.
குறிப்பாக கும்பமேளாவில் நீராட சென்றவர்கள் பலியானதற்கு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், தலைநகர் டெல்லியில் ரெயில் நிலையத்தில் மக்கள் பலியானதற்கு ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு காரணமான இவர்கள் பொறுப்பை ஏற்று பதவி விலகுவார்களா?
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் அநாகரீகமான முறையில் அழைத்து வரப்பட்டதை தடுக்கத் தவறிய பிரதமர் நரேந்திர மோடியை வன்மையாக கண்டிக்கிறேன்.
மேலும், பல இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற செய்தி அனை வரையும் மன வேதனையில் ஆழ்த்தி வருகிறது. இத்தகைய அவலநிலைக்கு நரேந்திர மோடி என்ன தீர்வு காணப் போகிறார் என்பதை நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் தனஞ்சே முண்டேயின் ஆதரவாளர் வால்மிக் கராட் கைது செய்யப்பட்டார்.
- குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உள்ள சந்தோஷ் தேஷ்முக் மீது சிறுநீர் கழிப்பதும் பதிவாகியுள்ளது.
கொலை
மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள மசோஜோக் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் (சார்பாஞ்ச்) ஆக இருந்தவர் சந்தோஷ் தேஷ்முக். இவர் கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி ஆறு பேரால் காரில் கடத்தப்பட்டு, அன்று இரவே கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த படுகொலையில் தொடர்புடைய உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் தனஞ்சே முண்டேயின் ஆதரவாளர் வால்மிக் கராட் கைது செய்யப்பட்டார்.

தனஞ்சே முண்டே
பின்னணி
மசோஜோக் கிரமத்தைச் சுற்றி அமைந்த காற்றாலை கம்பெனிகளை மிரட்டி வால்மிக் கராட், கோடிக்கணக்கில் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதை அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் என்ற முறையில் சந்தோஷ் தேஷ்முக் எதிர்த்து வந்தார்.
இதன் பின்னணியிலேயே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. வால்மிக் கராட் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் தனஞ்சே முண்டே பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வந்தன.
ஆளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசில் முக்கிய தலைவராக இருப்பவர் தனஞ்சே முண்டே. எனவே அஜித் பவார் அவருக்கு ஆதரவு அளித்து வந்தார். முதல்வர் தேவேந்திர பட்நாவிஸும் பொறுமை காத்தார்.
குற்றப்பத்திரிகை
ஆனால் சந்தோஷ் தேஷ்முக் கொலை தொடர்பான 15 வீடியோக்கள் மற்றும் 8 புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. போலீஸ் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட வீடியோ ஒன்றில், அரை நிர்வாணமாக இருக்கும் சந்தோஷ் தேஷ்முக்கை குற்றம்சாட்டப்பட்டவர்கள் கியாஸ் குழாய், மரக்கட்டைகள், கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்குவது பதிவாகியுள்ளது.
மற்றொரு வீடியோவில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உள்ள சந்தோஷ் தேஷ்முக் மீது சிறுநீர் கழிப்பதும் பதிவாகியுள்ளது. குற்றப்பத்திரிகை வெளியான நிலையில் இந்த கொலை மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தனஞ்சே முண்டே பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது.


பதவி விலகல்
எனவே இவ்விவகாரம் குறித்து முடிவு செய்ய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உயர் மட்ட கூட்டத்தைக் கூட்டினார். இதில் அஜித்பவார், சுனில் தட்கரே, தனஞ்சே முண்டே ஆகியோர் கலந்து கொண்டனர். நிலைமை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து அமைச்சர் பதவியிலிருந்து விலகும்படி தனஞ்சே முண்டேயிடம் பட்நாவிஸ் கேட்டுக்கொண்டார். இதையடுத்து முண்டே தனது அமைச்சர் பதவியை இன்று (மார்ச் 04) ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
பதவி விலகல் குறித்து தனஞ்சே முண்டே வெளியிட்டுள்ள அறிக்கை "நான் மிகவும் நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன், மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.