என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Resolution"

    • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 434 தனிநபர் கழிப்பிடங்கள் அமைக்க மானிய நிதி அளிக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
    • மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு சொத்து வரி விதிப்பில் முன்னேற்றம் காண்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில இன்று நடைபெற்றது. கமிஷனர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.

    தீர்மானங்கள்

    கூட்டத்தில் சிவந்தாகுளத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுதல், முத்தம்மாள் காலனியில் புதிய ரேஷன் கடை கட்டுதல், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 434 தனிநபர் கழிப்பிடங்கள் அமைக்க மான்ய நிதி அளிக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    உள்ளாட்சி அமைப்பு திட்டப் பணிகளுக்கு மானியம் பெறுவதற்கு மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு சொத்து வரி விதிப்பில் முன்னேற்றம் காண்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

    எனவே சொத்துவரி, காலிமனை வரி சீராய்வு செய்வதற்கு மாநகராட்சி பகுதிகளில் கட்டப்படும் குடியிருப்பு பகுதிகளுக்கு அவற்றின் அமைவிடம், கட்டுமானத்தின் தன்மை அடிப்படையில் பரப்பளவிற்கு ஏற்றவாறு 4 வகைகளாக பிரித்து சொத்து வரி சீராய்வு செய்ய வேண்டும்.

    அதன்அடிப்படையில் கடந்த ஏப்ரல் 12-ந் தேதி தீர்மானத்தின்படி, தூத்துக்குடி மாநகராட்சியில் 1-4-2022 முதல் காலிமனை வரி உயர்வு செய்து பொது சீராய்வு மேற்கொள்ள மண்டலங்கள் வாரியாக புதிய வரியும், பொது சீராய்வு மேற்கொள்ள அனுமதி கோருதல்,

    உள்ளாட்சி அமைப்பு களில் நிர்வாகத்தை வலுப்ப டுத்தவும், பொதுமக்களின் பங்கேற்பு வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தவும் மாநகராட்சி சட்டப்பிரிவுகளின்படி வார்டு குழு மற்றும் பகுதிசபா அமைக்கவும் அதற்கு வார்டு கவுன்சிலர் தலைவராகவும் வாக்குரிமை பெற்ற பகுதி வாசிகள் பகுதிசபா குழு உறுப்பினர்களாகவும் மாநகராட்சி அனுமதி பெற்று நியமித்திடவும் இந்தக் குழு மூன்று மாதத்திற்கு ஒருமுறை கூட்டப்படவும் அதற்கான அஜெண்டா தயாரிக்கவும் கவுன்சிலர் கூட்டம் நடத்த தவறினால் ஆணையாளர் கூட்டத்தை நடத்தவும் அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    எனவே வார்டு குழு மற்றும் பகுதிசபா 60 வார்டுகளிலும் அமைக்க அரசாணை மற்றும் அரசிதழ் அறிக்கையினை மாமன்றத்தில் சமர்ப்பித்தல் உட்பட பல தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது,

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், குழு தலைவர்கள் ராமகிரு ஷ்ணன், கீதாமுருகேசன், சுரே ஷ்குமார், அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கசாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி, மந்திரமூர்த்தி உட்பட அனைத்து கவுன்சிலர்களும், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் ரூபன்சுரேஷ், பொன்னையா, சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


    • நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.4.½ கோடி ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
    • வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு பணிக்கு அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும்

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அவசர கூட்டம் மாநகராட்சி அலுவலக ராஜாஜி மண்டபத்தில் இன்று நடை பெற்றது.

    மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் சரவணன் பேசியதாவது:-

    நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.4.½ கோடி ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மாநகராட்சி விரிவாக்க பகுதிகளுக்கு ரூ.38.62 லட்சம் மதிப்பீட்டில் மின் விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ரூ.5 கோடி மதிப்பில் மாநகர பகுதிக்கு புதிதாக 1050 மின் கம்பங்கள், மின் விளக்குகள் அமைக்க நகராட்சி நிர்வாக துறைக்கு ஒப்புதல் கோரி மனு அனுப்பப்பட்டுள்ளது.

    பருவமழை

    வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு பணிக்கு அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும்.இதில் சுழற்சி முறை யில் பணியாளர்கள் ஈடுபடு வார்கள். மேலும் 1800 420 420 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை கண்டறிய மாநகராட்சி பகுதியில் விரைவில் புதிதாக கணக்கெடுப்பு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் கவுன்சிலர் கள் தச்சை சுப்பிரமணியன், சுதா மூர்த்தி, கிட்டு, பவுல்ராஜ், சந்திரசேகர், முத்துலெட்சுமி, ஜெகநாதன் என்ற கணேசன், ரவீந்தர், கருப்பசாமி கோட்டையப்பன், உலகநாதன் உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை தேவைகள் குறித்தும், புகார்கள் குறித்தும் பேசினர். பெரும்பாலானவர்கள் சாலைகளில் மாடுகள், நாய் உள்ளிட்டவைகளால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் உள்ளதாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

    தொடர்ந்து சீரான குடிநீர் வழங்க கோரியும், அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் புதிதாக வீடுகளுக்கு பொருத்தப்படும் மீட்டர்களில் முறைகேடுகள் நடப்பதாகவும், அதனை கண்காணிக்க வேண்டும் எனவும் புகார் தெரிவித்தனர்.

    பின்னர் மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கைக்கு எதிராக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

    • இறுதியில், இடைநின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளி வருவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
    • கல்லூரியில் சேர்வதை கண்காணிக்கும் பொறுப்பு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

     திருப்பூர்,அக்.30-

    மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. திருப்பூரில் நடந்த கூட்டத்தில் பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியபடி பள்ளி மேலாண்மை குழு தலைவர், பெற்றோர் செயலியில் (TNSED Parent App) வருகை பதிவு, பள்ளிகளில் திட்டமிடுதல் சார்ந்த விவரங்களை பதிவேற்றினர்.

    இதன்மூலமே பள்ளி வளர்ச்சிக்கு விவாதிக்கப்பட்ட பொருள், தீர்மானங்கள் பெற்றோர்களுக்கு பகிரப்பட்டன. மேலும் பெற்றோர்களிடம் காலாண்டு தேர்வு தேர்ச்சி விவரங்களை பகிர்ந்து கற்றல் அடைவு சார்ந்த கலந்தாலோசனை நடைபெற்றது.

    கற்றலில் பின்தங்கிய மாணவர்களைக் கண்டறிந்து சிறப்பு கவனம் செலுத்த ஆலோசிக்கப்பட்டது. இறுதியில், இடைநின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளி வருவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு உதவ வேண்டும். கிராம சபை கூட்டத்தில் பள்ளியின் சார்பில் தலைமை ஆசிரியர் பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்று, பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி, கற்றல் கற்பித்தல் போன்றவை தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து, அதற்கான தீர்மானங்களையும் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதனிடையே பிளஸ் 2 முடித்து இதுவரை கல்லூரியில் சேராத மாணவர்களில் உயர்கல்வி முகாமில் பங்கேற்ற 47 பேர் உயர்கல்வி சேர முன்வந்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் அரசு பள்ளியில் பிளஸ் 2 முடித்தவர்கள் உயர்கல்வி சேர்ந்துள்ளார்களா, என்று பள்ளி கல்வித்துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அவ்வகையில் திருப்பூரில் பிளஸ் 2 முடித்த மாணவர்களில் 150 பேர் வறுமை, குடும்ப சூழல், நிதி பற்றாக்குறை, உயர் படிப்பில் சேர ஆர்வமின்மை, தொழில் செய்தல், அருகாமை கல்லூரி இல்லாமை போன்ற காரணங்களால் உயர் கல்வியை தொடரவில்லை.

    இவர்கள் உயர் கல்வியை தொடர உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த வழிகாட்டி முகாம் கலெக்டர் தலைமையில் நடந்தது. இதில் பங்கேற்ற மாணவர்களில், 47 பேர் உயர்கல்வி சேர்வதற்கான வாய்ப்புகளை கேட்டறிந்தனர். இதில் 8 பேர் ஐ.டி.ஐ., தொழிற்கல்வியில் சேரவும், 3 பேர் கலை அறிவியல் கல்லூரியில் சேர்க்கை நீட்டிப்பு செய்தால், விண்ணப்பிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.பலர் நீட், வேளாண் படிப்பு கலந்தாய்வு முடிவுக்கு காத்திருப்பதாகவும், நிச்சயம் உயர்கல்வி தொடர்வதாக உறுதியளித்தனர். இவ்வாறு மொத்தம் 47 பேர் உயர்கல்வி தொடர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    தேர்ச்சியடையாத மாணவர்கள் பலர் பியூட்டிஷியன், டெய்லரிங், கம்ப்யூட்டர் உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர ஆர்வம் தெரிவித்துள்ளனர். 2 கல்விக்கடன் பெறுவதற்கான வழிமுறைகளை கேட்டறிந்தனர்.கல்லூரியில் சேர்வதை கண்காணிக்கும் பொறுப்பு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வி முகாமில் பங்கேற்க தவறியவர்கள் வெள்ளிக்கிழமை நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பங்கேற்று தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுள்ளனர்.

    • வீட்டு வரி குடிநீர் வரி மற்றும் இதர வரி வகைகளை அனைவரும் செலுத்த வேண்டும்.
    • வேளாண்மை திட்ட பணிகளை பற்றி எடுத்து கூறி பயனாளிகளின் பட்டியலை கிராம சபை பார்வைக்கு வைத்தனர்.

    கபிஸ்தலம்:

    ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு கபிஸ்தலம் பகுதியில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தன

    கபிஸ்தலம் பகுதியில் கபிஸ்தலம், மேல கபிஸ்தலம், சருக்கை, உம்பளப்பாடி, ராமானுஜபுரம், சத்திய–மங்கலம், உமையாள்புரம், தியாக சமுத்திரம், அலவந்திபுரம், ஓலைப்பாடி, கொந்தகை, ஆதனூர், திருவைகாவூர், துரும்பூர், கூனஞ்சேரி, திருமண்டங்குடி, உள்ளிட்ட ஊராட்சிகளில் ஊராட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமை வகித்தனர். மேல கபிஸ்தலம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தஞ்சாவூர் வேளாண்மை பயிற்சி நிலைய துணை இயக்குனர் பால சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வேளாண்மை திட்டப் பணிகளை பற்றி எடுத்துக் கூறி பயணாளிகளின பட்டியலை கிராம சபை பார்வைக்கு வைத்தனர்.

    கபிஸ்தலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் தலைமை வகித்தார்.

    ஒன்றிய கவுன்சிலர்கள் சுரேஷ், சரவண பாபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமார், ஆனந்தராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    முன்னதாக அனைவரையும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலட்சுமி பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் 2022 -23 ஆம் ஆண்டுக்கான வீட்டு வரி குடிநீர் வரி மற்றும் இதர வரி வகைகளை அனைவரும் செலுத்த வேண்டும் எனவும் உள்ளாட்சி தினத்தில் கிராம சபை நடத்த அனுமதி அளித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி செயலாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

    • தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது
    • நவம்பர் 1 -ந்தேதியை உள்ளாட்சி தினமாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.

    கூட்டுடன்காடு ஊராட்சி இந்திராநகரில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் ஹரி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மறவன்மடத்தில் ஊராட்சி தலைவர் லில்லிமலர் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    குளியன்கரிசலில் கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் முக்கனி தலைமை தாங்கினார். சேவைக்காரன் மடத்தில் ஊராட்சி தலைவர் ஜெபக்கனி ஞானசேகர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அல்லி குளத்தில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் ஆனந்தி மாரிமுத்து தலைமை தாங்கினார்.

    கீழத்தட்டப்பாறையில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பத்மா பொன்னுச்சாமி தலைமை தாங்கினார். கோரம்பள்ளத்தில் ஊராட்சி தலைவர் செல்வபிரபா அதிசயராஜ் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    கட்டாலங்குளத்தில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சங்கரேஸ்வரி தலைமை தாங்கினார். முடிவைத்தானேந்தல் ஊராட்சியில் தலைவர் ரம்யா தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. முள்ளக்காடு ஊராட்சி தலைவர் கோபிநாத் நிர்மல் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நவம்பர் 1 -ந்தேதியை உள்ளாட்சி தினமாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    மேலும் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப் பட்டது. குமாரகிரி ஊராட்சி தலைவர் ஜாக்சன் துரைமணி தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் கூட்டாம்புளியில் நடைபெற்றது. இதில் குமாரகிரி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த கேட்டுக் கொள்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • ஏர்வாடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் தலைமையில் நடந்தது.
    • பிளாஸ்டிக் இல்லாத நகராக மாற்றுவோம் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் பிச்சை மூப்பன்வலசை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் தலைமையில் நடந்தது.

    இதில் ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.ஏர்வாடி ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

    ஏர்வாடியை பிளாஸ்டிக் இல்லாத நகரமாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும், ஏர்வாடி பகுதியில் சிறந்த சேவை செய்த மகளிர் சுயஉதவிக்குழுவினரை பாராட்டுவது, பேரிடர் காலத்தில் விழிப்பு ணர்வுடன் செயல்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஊராட்சி செயலாளர ஜெயராம கிருஷ்ணன் நன்றி கூறினர். ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் கூறுகையில், ஏர்வாடி ஊராட்சியில் 15 கிராமங்கள் உள்ளதால், தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறையால் தூய்மை பணி செய்வதில் மிகுந்த சிரமத்துடன் செய்து வருகிறோம்.

    துப்புரவு பணிக்கு டிராக்டர் வாங்க அனுமதி அளிக்க வேண்டும். ஏர்வாடியை பேரூராட்சியாக்க வேண்டும் என முதலமைச்சர் மற்றும் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். பள்ளி அருகில் அமைந்துள்ள மதுக்கடையையும், மனநல காப்பகம் அருகில் அமைந்த மதுக்கடையையும் மூடிவிட்டு நகருக்கு வெளிப்புறத்தில் அமைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
    • மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து ஏராள–மானோர் கலந்து கொள்வது.

    சீர்காழி:

    சீர்காழியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார்.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிங்காரவேல், மோகன், குமார், சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி நகர செயலாளர் ரஞ்சித் குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரமேஷ் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசினார்.

    மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசை வலியுறுத்துவது, வருகிற 27ஆம் தேதி தஞ்சையில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல். ஏ. தலைமையில் நடைபெறும் மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து ஏராளமானோர் கலந்துக் கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் ஒன்றிய செயலா–ளர்கள் செல்வகுமார், வேலுமணி மற்றும் நிர்வா–கிகள் ஆகாஷ், சக்திவேல், மணிவண்ணன், ராஜதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றார்.

    முடிவில் நகர இளைஞரணி தலைவர் சந்தோஷ்குமார் நன்றி கூறினார்.

    • அரசு பள்ளிகளில் காது கேளாதோருக்கு சைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட வேண்டும்.
    • சைகை மொழி பயிற்சிக்கென தனி பயிற்சி மையம் அமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற சங்க தொடக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வேளாங்கண்ணி குடும்ப சமுதாய கூடத்தில் நடைபெ ற்றது. கூட்டத்திற்கு சங்க த்தின் தலைவர் சுகுமாறன் தலைமை வகித்தார்.

    வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, துணைத் தலைவர் தாமஸ் ஆல்வாஎடிசன், தி.மு.க. செயலாளர் மரிய சார்லஸ், தமிழ்நாடு காதுகேளாளர் கூட்டமைப்புதலைவர் ரமேஷ்பாபு, பொதுச்செய லாளர் மோகன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பாலாஜி, பொதுச் செயலாளர் பொன்னுசாமி, துணைத் தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு காது கேளாதோர் மகளிர் சங்கம் தலைவர் ரிஸ்கில்லா, பொதுச் செயலாளர் தேவ்தா சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சியினை தமிழ்நாடு கலை பண்பாட்டு காது கேளாதோர் சங்க சைகை மொழி பெயர்ப்பாளர் கேசவன் தொகுத்து வழங்கினார்.

    இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான காது கேளாதோர் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அரசு பள்ளிகளில் காது கேளாதோருக்கு சைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட வேண்டும், சைகை மொழி பயிற்சிக்கென தனி பயிற்சி மையம் தமிழக அரசு தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் நாகை மாவட்ட காதுகே ளாதோர் முன்னேற்ற சங்க தலைவராகசுகுமாரன், செயலாளராக ராஜேஷ், பொருளாளராக வைரமூ ர்த்தி, துணைத் தலைவராக லட்சுமணன், துணைச் செயலாளராக ஜெகன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு மாநில நிர்வாகிகள் பதவி யேற்பு செய்து வைத்தனர்.

    • மன்னை ரெயில் நிலைய சாலையை திருவாரூர் செல்லும் சாலையுடன் இணைக்க வேண்டும்.
    • மயிலாடுதுறைக்கு செல்லும் ரயிலை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் ரெயில் பயணிகளுக்கு தேவையான கோரிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. அரசு தொடர்பு பிரிவு தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் ராஜகோபால் முன்னிலை வகித்தார்.

    நேசக்கரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், தேசிய மேல்நிலைப்பள்ளி தாளாளர் சேதுராமன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

    இதில் மன்னார்குடி ரெயில்வே நிலையத்தில் அடிப்படை கட்டமைப்புகளை சரி செய்வது, மேலும் அங்குள்ள பொது கழிப்பிடத்தை சுத்தமாக பயன்படுத்துவது, ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள அரசு மதுபான கடையை அப்புறப்படுத்த வேண்டும்.

    மன்னார்குடியில் இருந்து டெல்லிக்கு வாரந்தோறும் சிறப்பு ரயிலும், மன்னார்குடியில் இருந்து மானாமதுரை வரை செல்லும் டெமு ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிப்பது, செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் தினந்தோறும் அதன் உரிய வழித்தடத்தில் இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    மன்னார்குடியில் இருந்து காலையில் மயிலாடுதுறைக்கு செல்லும் ரயிலை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும்.

    மன்னை ரெயில் நிலைய சாலையை திருவாரூர் செல்லும் சாலையுடன் இணைக்க வேண்டும். மன்னை- பட்டுக்கோட்டை ரெயில் வழித்தட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதையடுத்து மன்னார்குடி ரயில்வே நிலையத்துக்கு தேவையான கோரிக்கைகள் குறித்து அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் அனைத்து சேவை சங்க பிரதிநிதிகளுடன் சென்று ரயில்வே நிலைக்குழு உறுப்பினர் டி.ஆர்.பாலுவை சந்தித்து மனு அளிப்பது, திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளரை சந்தித்து மனு அளிப்பது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது.

    ஆலோசனைக் கூட்டத்தில் மன்னார்குடி சேவை சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், நுகர்வோர் அமைப்பின் தலைவர் பத்மநாபன், எஸ்.பி.ஏ.மெட்ரிக் பள்ளி தாளாளர் ரமேஷ், மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் டி.ரெங்கையன், நேசசக்கரம் அமைப்பின் நிர்வாகி சேதுராமன்ஆகியோர் பங்கேற்றனர்.

    ஒருங்கிணைப்பாளர் பாரதி நன்றி கூறினார்.

    • 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும் என விவசாய சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது.
    • 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி சட்டக் கூலி ரூபாய் 281 வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலூர்

    அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க கிழக்கு ஒன்றிய 10-வது மாநாடு மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள நரசிங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றியத்தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். மாநாட்டை தொடங்கி வைத்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் உமாமகேஸ்வரன் பேசினார். ஒன்றிய செயலாளர் மச்சராஜா வேலை அறிக்கை சமர்ப்பித்தார். ஒன்றிய பொருளாளர் கார்த்திகைசாமி வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு தாலுகா செயலாளர் கலைச்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தனசேகரன், சி.ஐ.டி.யு. ஒன்றியச் செயலாளர் மனோகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாண்டியன் நிறைவுரையாற்றினார்.

    இக்கூட்டத்தில்100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்ற வேண்டும், இதற்கு கூலியாக ரூபாய் 600 வழங்க வேண்டும், தற்போதுள்ள 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி சட்டக் கூலி ரூபாய் 281 வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஒன்றியத்தலைவர் சோனை, ஒன்றியச் செயலாளராக அழகர்சாமி, ஒன்றியப் பொருளாளராக கார்த்திகைசாமி, உட்பட துணைச் செயலாளர் மச்சராஜா, துணைத் தலைவர் அம்பிகா, ஆகியோர் தேர்வு செய்ப்பட்டனர்.

    • 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும் என்று விவசாய சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கூட்டத்தில் ஒன்றியத்தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார்.

    மேலூர்

    அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க கிழக்கு ஒன்றிய 10-வது மாநாடு மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள நரசிங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றியத்தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். மாநாட்டை தொடங்கி வைத்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் உமாமகேஸ்வரன் பேசினார். ஒன்றிய செயலாளர் மச்சராஜா வேலை அறிக்கை சமர்ப்பித்தார். ஒன்றிய பொருளாளர் கார்த்திகைசாமி வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு தாலுகா செயலாளர் கலைச்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தனசேகரன், சி.ஐ.டி.யு. ஒன்றியச் செயலாளர் மனோகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாண்டியன் நிறைவுரையாற்றினார்.

    இக்கூட்டத்தில்100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக மாற்ற வேண்டும், இதற்கு கூலியாக ரூபாய் 600 வழங்க வேண்டும், தற்போதுள்ள 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி சட்டக் கூலி ரூபாய் 281 வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஒன்றியத்தலைவர் சோனை, ஒன்றியச் செயலாளராக அழகர்சாமி, ஒன்றியப் பொருளாளராக கார்த்திகைசாமி, உட்பட துணைச் செயலாளர் மச்சராஜா, துணைத் தலைவர் அம்பிகா, ஆகியோர் தேர்வு செய்ப்பட்டனர்.

    • கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது
    • 11 வார்டுகளில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் உட்பட 48 பணிகள் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

    உடன்குடி:

    உடன்குடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் கூட்ட அரங்கத்தில் நடந்தது. யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார்.

    துணை சேர்மன் மீராசிரா சுதீன், ஆணையாளர்கள் ஜான்சிராணி, பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் முருங்கை மகாராஜா, செல்வின், லோ போரின், செந்தில், முருகேஸ்வரி ராஜதுரை, ஜெயகமலா, ராமலெட்சுமி, மெல்சி ஷாலினி, தங்க லெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் யூனியனுக்கு உட்பட்ட 11 வார்டுகளில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், சிமெண்ட் சாலை, சின்டெக்ஸ் தொட்டி, கால்நடை குடிநீர் தொட்டி உட்பட 48 பணிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்காக ரூ.79 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்கிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பின்னர் சேர்மன் பாலசிங் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவு திட்டப் பணிகள் உடன்குடி யூனியனில் தான் நடந்து வருகிறது. தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன்குடி பகுதி வளர்ச்சி திட்டப் பணியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

    தற்போது தேர்வு செய்யப்பட்ட பணிகள் அனைத்தும் கவுன்சிலர்கள் கோரிக்கையாக கொடுத்த பணிகள்தான். இதில் அத்தியாவசிய பணிகள் மட்டும் தேர்வு செய்யப் பட்டுள்ளது. இனி பணிகள் தேர்வு செய்யும் போது சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களை அழைத்து அவர்களிடம் ஆலோசனை கேட்டு பணிகள் தேர்வு செய்யப்படும் என்றார்.

    ×