என் மலர்
நீங்கள் தேடியது "respect"
- நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றினார்.
- காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 81 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 81 பயனாளி களுக்கு ரூ.90,89,347/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து காவல்துறை, வருவாய்த்துறை, மாவட்ட வளர்ச்சி முகமை, சிறப்பாக சுகாதாரத்துறை, செய்தித்துறை மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊரக துறைகளில் நற்சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் செல்வராஜ் எம்பிஅதிகாரிகள் பிரிதிவிராஜ் பானோத் ம்ருகேந்தர்லால்மாவட்ட வருவாய் அலுவலர் சஷிலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
திருவாரூர்:
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் சமாதான புறாக்களை பறக்க விட்டார்.
அதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
முன்னாள் படை வீரர்கள் நலத்துறை சார்பில் ஏழு பேருக்கும், மாற்றுத்திறனாளிகள் இரண்டு பேருக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 47 பேருக்கும், சமூக நலத்துறையின் சார்பில் 616 பேருக்கும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஐந்து பேருக்கும் என பல்வேறு துறைகளில் சார்பில் 705 பேருக்கு ரூ 2,06,09,915 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.
மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்கள், ஆசிரி யர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணி ப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
- மயிலாடுதுறை மாவட்டத்தில் 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் லலிதா தேசியக்கொடியை ஏற்றினார்.
- கலெக்டர் திறந்தவெளி ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம், சாய் விளையாட்டு அரங்கத்தில் (ராஜன் தோட்டம்) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் லலிதா இன்று (26.01.2023) காலை 08.05 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி வைத்து பல்வேறு துறைகளின் சார்பில் 398 பயனாளிகளுக்கு ரூ.9,31,24,416 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இதனை தொடர்ந்து கலெக்டர் திறந்தவெளி ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
74-வது குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னால் படைவீரர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.50,000 மதிப்பில் கல்வி உதவித்தொகை மற்றும் வருடாந்திர பராமரிப்பு தொகையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு தலா ரூ.18,000 மதிப்பில் மாற்றுத்திறனாளி உதவித்தொகையும், வருவாய்த்துறையின் சார்பில் 40 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் முதியோர் உதவித்தொகையும், 40,பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் விதவை உதவித்தொகையும்,10 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகையும், 36 பயனாளிகளுக்கு தலா ரூ.8 ஆயிரம் மதிப்பில் ஆண்களுக்கு திருமண உதவித்தொகையும், 36 பயனாளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்பில் பெண்களுக்கு திருமண உதவித்தொகையும்,27 பயனாளிகளுக்கு தலா ரூ,2500 மதிப்பில் இறப்பு உதவித்தொகையும், 1 பயனாளிக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பில் இறப்பு உதவித்தொகையும், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் 173 பயனாளிகளுக்கு தலா ரூ. 8 இலட்சம் மதிப்பில்;-
காப்பீடு உதவித்தொகையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சம் மதிப்பில் மானியத்தொகையும், 1 பயனாளிக்கு ரூ. 4480 மதிப்பில் விசை தெளிப்பானும், 1 பயனாளிக்கு ரூ. 3 ஆயிரம் மதிப்பில் பண்ணை வேளாண் கருவிகளும், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் எனமொத்தம் 398 பயனாளிகளுக்கு ரூ.9,31,24,416 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவி களுக்கு மாவட்ட கலெக்டர் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
விழாவில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குநர்ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர்அர்ச்சணா, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.வ.யுரேகா, இணை இயக்குநர்(வேளாண்மை) சேகர், மாவட்ட ஆட்சித்த லைவர் அவர்களின் நேர்முக உதவியாளர்(பொது) பாலாஜி, மாவட்ட ஆட்சித்த லைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபால், முதன்மை கல்வி அலுவலர்ரேணுகா ,உதவி ஆணையர் (கலால்) நரேந்திரன் அவர்கள், மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல்;-
கண்காணிப்பாளர்த ங்க வேல், மயிலாடுதுறை ஒன்றிய குழுத்தலைவர்காமாட்சி மூர்த்தி, காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் அவர்கள், மயிலாடுதுறை வட்டாட்சியர்.மகேந்திரன், மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்தார்.
- ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தஞ்சாவூர்:
நாட்டின் குடியரசு தினவிழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியேற்றி மரியாதை செய்தார். பின்னர் மூவர்ண கலரில் பலூன்களை பறக்க விட்டார்.
தொடர்ந்து திறந்தவெளி ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கைத்தறி ஆடை அணிவித்து கவுரவித்தார்.
தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல்துறையை சேர்ந்த 69 பேருக்கு முதல்வர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தினர், மருத்துவக்கல்லூரி மருத்துவம னையை சேர்ந்தவர்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாநகராட்சி தஞ்சாவூர், கும்பகோணம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை சேர்ந்தவர்கள், முன்னாள் படைவீரர் நல துறையை சேர்ந்தவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மாவட்ட வளர்ச்சி பிரிவு, வேளாண்மை மற்றும் உளவுத் துறையை சேர்ந்தவர்கள் என சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
தொடர்ந்து முன்னாள் படைவீரர் நலத்துறையை சேர்ந்த பயனாளிகள் 17 பேர், தாட்கோ மூலம் பயன்பெறும் பயனாளிகள் 17 பேர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 11 பேர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என 672 பயனாளிகளுக்கு 5008965 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கரகாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், சரக டி.ஐ.ஜி.ஜெயச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணைத்த லைவர் முத்துச்செல்வன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் நமச்சிவாயம், தாசில்தார சக்திவேல், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பொறியாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உண்மையுடன் பணியாற்றுவது எனது கடமையாகும்.
- மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
தஞ்சாவூர்:
மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அதன்படி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் என அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அப்போது இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்ப டைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையு டனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மூன்னதாக மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதேபோல் தொழுநோய் ஒழிப்பு குறித்தும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், சுகாதாரத்துறை துணை இயக்குனர் நமச்சிவாயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அமைதி ஊர்வலமாக புறப்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு வந்தனர்.
- பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தஞ்சாவூா்:
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா 54-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு தஞ்சை மத்திய மாவட்டம் மாநகர தி.மு.க. சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் ஏராளமானோர் கீழவாசல் காமராஜர் சிலை அருகில் இருந்து அமைதி ஊர்வலமாக புறப்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு வந்தனர்.
பின்னர் அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் அருகே உள்ள பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் உபயதுல்லா, டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, செல்வம், மாவட்ட அவை தலைவர் இறைவன், மாநகர செயலாளரும் மேயருமான சண். ராமநாதன், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஜித்து, மருத்துவர் அணி துணை செயலாளரும் துணை மேயருமான அஞ்சுகம் பூபதி, மாவட்ட துணை செயலாளர்கள் மணிமாறன், கனகவள்ளி பாலாஜி, மாவட்ட பொருளாளர் அண்ணா, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், புண்ணியமூர்த்தி, தர்மராசன், பகுதி செயலாளர்கள் மேத்தா,சதா சிவம், கார்த்திகேயன், நீலகண்டன், ஒன்றிய செயலாளர்கள் முரசொலி, செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மேலூர் அருகே அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி மரியாதை செலுத்தினர்.
- இதில் மாவட்ட துணைச் செயலாளர் பூமிநாதன், பேரூர் செயலாளர் கார்த்திகேயன், தொகுதி செயலாளர் மொண்டி, துணைச் செயலாளர் சின்ன கருப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது திருவாதவூரில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அங்குள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியின் மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மேலூர் ஒன்றிய செயலாளர் கேசிராஜன், ராகவன், பிரேம்குமார், நகர் செயலாளர் தங்கச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் ஜீவ சன்மார்க்கம், பாரதி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அட்டப்பட்டி பாலமுருகன், மாவட்ட துணைச் செயலாளர் பூமிநாதன், பேரூர் செயலாளர் கார்த்திகேயன், தொகுதி செயலாளர் மொண்டி, துணைச் செயலாளர் சின்ன கருப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்து பேசினார்.
- மோடி பிரதமர் ஆன பிறகு உலக நாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் மத்திய அரசு பட்ஜெட் குறித்த தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட மகளிர் அணி தலைவி ராஜலெட்சுமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் சுதா, மாநில செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி, மாவட்ட பொருளாளர் அமுதா உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய பட்ஜெட் குறித்து கூட்டத்தில் பேசினர்.
மேலும் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம், மோடி பிரதமர் ஆன பிறகு உலக நாடுகளில் இந்தியாவின் மதிப்பு பன்மடங்காக உயர்ந்துள்ளதாகவும், தொலைநோக்கு பார்வையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் பேசினர்.
இந்நிகழ்ச்சியில் சீர்காழி நகர செயலாளர் சங்கர், மாவட்ட செயலாளர் வெற்றிலை முருகன், கொள்ளிடம் கிழக்கு ஒன்றியம் செல்வ முத்து, இளைஞர் அணி தலைவர் ஹரி, அருள்அழகன், உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளராக கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தஞ்சாவூர்:
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி தஞ்சை மேம்பாலம் அரசினர் காது கேளாதோர் பள்ளியில் அ.ம.மு.க சார்பில் துணை பொது செயலாளர் எம்.ரெங்கசாமி தலைமையில் தஞ்சாவூர் மாநகர் மாவட்ட செயலாளர் ப.ராஜேஸ்வரன் முன்னிலையில் காலை உணவு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, கல்லுக்குளம் ஓசோனம் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. பின்னர், நாஞ்சிக்கோட்டை ஈ.பி.காலனியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ரெயிலடியில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் மாவட்ட அவை தலைவர் விருதாச்சலம், அம்மா பேரவை செயலாளர் ராமதாஸ், வர்த்தக அணி முரளி, பொதுக்குழு உறுப்பினர் அய்யாவு (எ) வேலாயுதம், செயற்குழு உறுப்பினர் கீதா சேகர், வக்கீல் செந்தில், பூக்கடை பகுதி செயலாளர் செந்தில், ஒன்றிய செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாநகர மாவட்ட அ.ம.மு.க.வினர் செய்திருந்தினர்.
- விழாவுக்கு திருப்பூர் ஒன்றிய செயலாளர் கே.என். விஜயகுமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
- முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மூர்த்தி, மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பெருமாநல்லூர்:
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா திருப்பூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக பெருமாநல்லூர் நால்ரோடு சந்திப்பில் நடைபெற்றது. விழாவுக்கு திருப்பூர் ஒன்றிய செயலாளர் கே.என். விஜயகுமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பின்னர் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் ஒன்றிய தலைவர் சொர்ணாம்பாள், எஸ்.எம்.பி, மாநகர இணைசெயலாளர் சங்கீதா சந்திரசேகர், மாவட்ட கவுன்சிலர் சாமிநாதன், பேரவை செயலாளர் எஸ்.எம்.பழனிசாமி, சொசைட்டி தலைவர் பொன்னுலிங்கம், முன்னாள் தலைவர் தங்கராஜ், பாசறை செயலாளர் சந்திரசேகர், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவசாமி, யூனியன் கவுன்சிலர் ஐஸ்வர்ய மஹராஜ், முன்னாள், ஒன்றிய பாசறை செயலாளர் சந்திரசேகர், ஊராட்சி செயலாளர்கள் உத்தமேஸ்வரன், ராக்கியன்னன், செல்வராஜ், குமாரசாமி, தங்கராஜ், முருகேஷ்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மூர்த்தி, மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- சர்தார் வேதரத்தினம் தலைமையில் ராஜாஜி உப்பு அள்ளினார்.
- திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சர்தார் எனும் பட்டமளித்து மரியாதை.
வேதாரண்யம்:
இந்திய சுதந்திரப் போராட்டத்தில்உப்பு சத்தியா கிரக போராட்டம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. வடக்கில் தண்டியிலும், தெற்கில் வேதாரண்யத்திலும் உப்பு சத்தியாகிரகம் போராட்டம் நடைபெற்றது.
வேதாரண்யத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு சர்தார் வேதரத்தினம் தலைமையில் ராஜாஜி உப்பு அள்ளினார்.
சுதந்திரப் போராட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய உப்பு சத்தியாகிரக போ ராட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அகஸ்தியன் பள்ளியில் நினைவு ஸ்தூபியும், ராஜாஜி சிறை வைக்கப்பட்ட இடமும் இன்றும் நினைவிடமாகவும் மேலும் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகநினைவு கட்டிடமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இவரின் அளப்பரிய பங்கை பாராட்டி, 1931-ஆம் ஆண்டில், திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சர்தார் எனும் பட்டமளித்து மரியாதை செய்யப்பட்டார்.
இவரது தியாகத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக இந்திய அரசு கடந்த 1998-ம் ஆண்டு இரண்டு ரூபாய் நினைவு அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் உறை வெளியிட்டு பெருமைப்படுத்தியது
சுதந்திர போராட்டத்திற்காக அயராது பாடுபட்ட சர்தார் வேதரத்தினம் பிள்ளைக்கு வேதாரண்யத்தில் அரசு மணிமண்டபம் அமைத்து அவரது நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் விழாக்களை அரசே நடத்த வேண்டும் என அப்பகுதிமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
- மலேசிய தமிழர்களை பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய நிலை இல்லை.
- கடந்த 2004-ம் ஆண்டு முதல் கலாச்சார பயணம் மேற்கொண்டு வருகிறோம்.
சீர்காழி:
மலேசிய தமிழ்ச் சங்கத்தினர் மற்றும் மலேசியா எழுத்தாளர் சங்கத்தினர் சார்பாக மலேசிய வாழ் தமிழர்கள் 50 க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பாரம்பரிய மிக்க கலாச்சார சின்னங்களை பார்வையிடுவதற்காக வந்திருந்தனர்.
அவர்களை சீர்காழி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் மார்கோனி தலைமையிலான நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்து வரவேற்றனர்.
அப்போது பேசிய மலேசிய தமிழ்ச்சங்க நிர்வாகிகள் சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபம், சட்டநாதர் கோவில் மற்றும் தமிழரின் வாழ்வியல் கலாச்சாரத்தை போற்றும் பூம்புகார் கலைக்கூடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு தமிழர்களின் தொன்மையான வாழ்வியல் கலாச்சாரத்தை அறிந்து கொள்வதற்காக தாங்கள் வந்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் இலங்கையில் ஏற்பட்டது போல் மலேசிய தமிழர்களுக்கும் நெருக்கடி ஏற்படலாம் என்ற தகவல் பரவி வருவதை மறுத்த தமிழ் சங்கத்தினர் எக்காலத்திலும் மலேசியத் தமிழர்களுக்கு அந்த நிலை ஏற்படாது எனவும் தெரிவித்தனர்.
மற்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழந்து தமிழர் என்ற பெயரை மட்டுமே கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் மலேசிய தமிழர்கள் மட்டுமே தமிழர்களின், பாரம்பரியம் இசை, கல்வி கலாச்சாரம் பண்பாடு, உணவு என அனைத்தையும் இன்றளவும் பாதுகாத்து வருகின்றோம்.
இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தாலும் தமிழ் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் நாங்கள் கடைபிடிப்போம் என்ற நிலையை எங்கள் முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளனர்.ஆகவே மலேசிய தமிழர்களைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய நிலை இல்லை.
அதே நேரம் உலகத் தமிழர்கள் அனைவரும் மலேசிய தமிழர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனை முன்னெடுக்கும் விதமாகத்தான் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்த கலாச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறோம் இதன் மூலம் மலேசிய தமிழ் சொந்தங்கள் தமிழ கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை முழுமையாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது.
எங்களை தங்களது தொப்புள் கொடி உறவாக நினைத்து வரவேற்று மரியாதை செய்த சீர்காழி தமிழ்ச் சங்கத்தினருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.
அப்போது சீர்காழி தமிழ் சங்கத்தை சேர்ந்த கோவி.நடராஜன, சுப்பு. சொர்ணபால் உடனிருந்தனர்.