search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "retired teacher missing"

    மேலகிருஷ்ணன்புதூரில் வீட்டில் இருந்து கோவிலுக்கு சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியை மாயமானது குறித்து போலீசில் செய்யப்பட்டுள்ளது. போலீசார் ஆசிரியை தேடி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை அடுத்த மேலகிருஷ்ணன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பால்துரை. இவரது மனைவி கிருஷ்ணம்மாள் (வயது 70). ஓய்வு பெற்ற ஆசிரியை. கடந்த 29-ந் தேதி வீட்டில் இருந்து கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. 

    இதையடுத்து அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவர் இல்லாததால் இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான கிருஷ்ணம்மாளை தேடி வருகின்றனர். 
    ×