என் மலர்
நீங்கள் தேடியது "riots"
- ஜிதேந்திர யாதவ் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகள் போலீசாரை தடுக்க முயன்றதால் கலவரமாக சூழல் ஏற்பட்டது.
- சம்பவத்தில் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் உட்பட 3 அதிகாரிகள் காயமடைந்தனர்.
பீகாரில் வர தட்சணை வழக்கில் குற்றவாளியை கைது செய்ய சென்ற போலீசாரை தடுத்து உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள லஹேரியசராய் பகுதியில் உள்ள அபண்டா கிராமத்தில் வசிக்கும் ஜிதேந்திர யாதவை நீதிமன்ற பிடிவாரண்ட் படி கைது செய்ய நேற்று போலீஸ் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது.
அப்போது ஜிதேந்திர யாதவ் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகள் போலீசாரை தடுக்க முயன்றதால் கலவரமாக சூழல் ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றில், ஒரு பெரிய கும்பல் காவல்துறை அதிகாரிகள் மீது கற்களை வீசி துப்பாக்கிகளை பறிக்க முயற்சிக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்ட ஜிதேந்திர யாதவ் வீட்டிற்கு போலீசார் வருவதைத் தடுக்க, அவர்கள் பிரதான சாலையில் டயர்களை எரித்து மறிக்க முயன்றனர்.
In Bihar's Darbhanga, a team of police was attacked by the local people on Saturday when it went to arrest a man named Jitendra Kumar in a case related to woman atrocities. Four cops got injured while the condition of one is critical. pic.twitter.com/ftPcRZN8jv
— Waquar Hasan (@WaqarHasan1231) January 5, 2025
சம்பவத்தில் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் உட்பட 3 அதிகாரிகள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
போலீசாரின் கூற்றுப்படி, தாக்குதலை நிறுத்தவும் கூட்டத்தை கலைக்கவும் கூடுதல் பாதுகாப்பு படையினர் குழு அனுப்பப்பட்டது.
இதுகுறித்து பேசிய தர்பங்கா துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி (SDPO) அமித் குமார், உள்ளூர் மக்கள் கூட்டத்தில் குழந்தைகள் இருந்தனர்.
அதனால் நாங்கள் அவர்களை நோக்கி அதிகம் சுடவில்லை. அவர்கள் பாதுகாப்புப் பணியாளர்கள் மீது கற்களை வீசினர். இருப்பினும், லேசான சக்தியைப் பயன்படுத்தி நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று கூறினார்.
இதற்கிடையே கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட ஜிதேந்திர யாதவ் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நாடோடி இனமான வடார் இனத்தைச் சேர்ந்த சூர்யவன்ஷி சட்டக்கல்லூரியில் படித்து வந்தார்
- இது ஒரு 100 சதவீத லாக் அப் மரணம். காவல்துறை அவரை கொன்றுவிட்டது.
மகாராஷ்டிர மாநிலம் பர்பானி [Parbhani] நகரில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி ரெயில்வே நிலையத்துக்கு அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அரசியலமைப்பு பிரதியை எரிதத்தை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது.
பகுஜன் அகாடி (VBA) கட்சியினர் உட்பட பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் டிசம்பர் 11 ஆம் தேதி இரவு கலவரத்தில் ஈடுபட்டு சொத்துகளை சேதப்படுத்தியதாக [vandalism] 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 35 வயதான பகுஜன் அகாடி (VBA) தலித் செயல்பாட்டாளர் சோம்நாத் வெங்கட் சூர்யவன்ஷி என்பவர் டிசம்பர் 15 காலையில் அவர் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்தார்.
நெஞ்சுவலி காரணமாக சூர்யவன்ஷி உயிரிழந்ததாக போலீஸ் தெரிவித்தது. ஆனால் போராட்டத்தின்பின் பின் வீடியோ பதிவுடன் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் சூர்யவன்ஷியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததும், அந்த காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவர் உயிர் பிரிந்துள்ளது என்றும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். எனவே போலீஸ் கஸ்டடியில் சித்திரவதை செய்யப்பட்டு அவர் உயிரிழந்தது உறுதியானது.
நாடோடி இனமான வடார் இனத்தைச் சேர்ந்த சூர்யவன்ஷி, படிப்பு செலவுக்காக சிறு சிறு வேலைகளைச் செய்து வந்தவர். இவரது சகோதரரும் தாயும் புனேவில் உள்ள சாக்கனில் கூலி வேலை செய்து வந்தனர்.
பகுஜன் அகாடி கட்சியுடன் இணைந்து உள்ளூர் செயல்பாட்டாளராக சூர்யவன்ஷி இருந்துள்ளார்.
சூரியவனாக்ஷியின் குடும்பத்தினர் முதலில் மாவட்டத்துக்குள் நுழைய விடாமல் போலீசால் தடுக்கப்பட்டனர். அவரது உடலை பர்பானிக்கு கொண்டு வர போலீஸ் அனுமதிக்கவில்லை. ஆனால் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர், மற்றும் போராட்டக்காரர்களின் எதிர்பால் போலீஸ் பின்வாங்கியது.
காவல்துறை வேண்டுமென்றே தலித் குடிசைகளுக்குள் நுழைந்து சொத்துக்களை அழிப்பதை உள்ளூர் வாசிகளால் பதிவுசெய்யப்பட்ட பல வீடியோக்கள் காட்டுகிறது.
பர்பானிக்கு மாவட்டத்தில் தலித்-பகுஜன் அம்பேத்கரிய இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் அளவை சூர்யவன்ஷியின் மரணம் எடுத்துக்காட்டுவதாகவும் இந்த விவகாரத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முற்றிலும் தோற்றுப் போயுள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இன்னும் பர்பானியில் கொந்தளிப்பான சூழல் நிலவி வரும் நிலையில் காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, போலீஸ் சித்திரவதையில் உயிரிழந்த சோம்நாத் வெங்கட் சூர்யவன்ஷியின் குடும்பத்தினரை நேற்று [திங்கள்கிழமை] நேரில் சென்று சந்தித்துள்ளார்.
மேலும் கலவரத்தால் பாதிக்கப்பட்டோரைச் சந்தித்த பின் பேசிய ராகுல் காந்தி, தலித் என்ற காரணத்திற்காகவும், அரசியல் சாசனத்தைக் காத்ததற்காகவும் இளைஞன் கொல்லப்பட்டான்.இது ஒரு 100 சதவீத லாக் அப் மரணம். காவல்துறை அவரை கொன்றுவிட்டது.
காவல்துறையை பாதுகாக்க சட்டசபையில் முதல்வர் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார். அரசியல் சாசனத்தை துடைத்தெறிவதே ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் நோக்கம் துடைத்து என்று ராகுல் தெரிவித்தார்.
मैं परभणी में हिंसा पी़ड़ित परिवार से मिला हूं, इसके साथ ही मैं उनसे भी मिला हूं, जिन्हें मारा-पीटा गया है। मुझे पोस्टमॉर्टम रिपोर्ट, फोटोग्राफ और वीडियो दिखाया गया। ये पूरी तरह से #Custodialdeath है। पुलिस ने युवक की हत्या की है।ये मर्डर है। #RahulGandhi pic.twitter.com/11hRYyfthv
— Hayat Abbas naqvii?? (@hayatabbas110) December 23, 2024
இதற்கிடையே புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ராகுல் காந்தி அரசியல் காரணங்களுக்காக மட்டுமே இங்கு வந்தார். மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துவதே அவரது வேலை. கலவரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரித்து வருகிறோம். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்று தெரிவித்தார்.
- சம்பல் பகுதிக்குள் டிசம்பர் 10 வரை வெளியாட்கள் நுழைய மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
- போலீசுடன் தான் தனியாக சம்பல் செல்லவும் தயார் என்று அவர் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச சம்பல் மாவட்டத்தில் 'ஷாஹி ஜமா' மசூதிக்குள் இந்து கோவில் இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் மசூதியை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த நவம்பர் 24 ஆம் தேதி ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் மீது மக்கள் கற்களை வீசி தாக்கினர். மக்கள் போலீஸ் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியது. போராட்டம் கலவரமாக மாறியது. போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர். சம்பல் பகுதிக்குள் டிசம்பர் 10 வரை வெளியாட்கள் நுழைய மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். மேலும் நீதிமன்றம் மசூதி ஆய்வை தள்ளிப்போட்டது.
இந்நிலையில் கலவரத்தால் பாதித்தவர்களை சந்திக்க மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை 10.15 மணியளவில் சகோதரியும், வயநாடு எம்பியுமான பிரியங்கா காந்தியுடன் சம்பல் நோக்கி காரில் புறப்பட்டார்.
11 மணியளவில் டெல்லி - நொய்டா நெடுஞ்சாலையில் காசியாபூர் எல்லையில் தடுப்புகளை அமைத்து அவர்களின் காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. காங்கிரஸ் தொண்டர்கள் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி தன்னை அனுமதிக்குமாறு போலீசிடம் கூறினார். ஆனால் போலீஸ் அதற்குத் திட்டவட்டமாக மறுத்தது.
இதுகுறித்து பேசிய ராகுல் காந்தி, மக்களவை எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் அரசியல் சாசனத்தின் படி தனக்கு செல்ல உரிமை உள்ளது என்று தெரிவித்தார். போலீசுடன் தான் தனியாக சம்பல் செல்லவும் தயார் என்று அவர் தெரிவித்தார்.
#WATCH | Lok Sabha LoP & Congress MPs Rahul Gandhi, Priyanka Gandhi Vadra and other Congress leaders have been stopped by Police at the Ghazipur border on the way to violence-hit Sambhal. pic.twitter.com/EcPEOFahIV
— ANI (@ANI) December 4, 2024
அனுமதி வழங்காததற்கு பிரியங்கா காந்தியும் கடும் கண்டனம் தெரிவித்தார். இருப்பினும் போலீசார் திட்டவட்டமாக அனுமதி வழங்க மறுத்த நிலையில் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி மீண்டும் டெல்லி திரும்பியுள்ளனர்.
- போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர்
- டெல்லி - நொய்டா நெடுஞ்சாலையில் காஸிப்பூர் எல்லையிலேயே ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் 'ஷாஹி ஜமா' மசூதிக்குள் இந்து கோவில் இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் மசூதியை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த நவம்பர் 24 ஆம் தேதி ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் மீது மக்கள் கற்களை வீசி தாக்கினர்.
அதிகாரிகளுக்குத் துணையாக வந்த போலீஸ் மக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. போராட்டம் கலவரமாக மாறியது. போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர். சம்பல் பகுதிக்குள் டிசம்பர் 10 வரை வெளியாட்கள் நுழைய மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். மேலும் நீதிமன்றம் மசூதி ஆய்வை தள்ளிப்போட்டது.
இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தடையை மீறி சம்பலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அவர் சந்திக்க உள்ளார்
ராகுல் காந்தியுடன், வயநாடு எம்.பி.பிரியங்கா காந்தி மற்றும் உத்தரப் பிரதேச காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேரும் சம்பல் மாவட்டத்திற்கு செல்கின்றனர். இந்நிலையில் டெல்லி - நொய்டா நெடுஞ்சாலையில் காஸிப்பூர் எல்லையிலேயே ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் வந்த கார்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
காலை 10.15 மணியளவில் டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர்கள் 11 மணியளவில் எல்லையை அடைந்தபோது போலீசார் சாலையின் குறுக்கே தடுப்புகளை அமைத்தனர். இதனால் போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. காங்கிரஸ் தொண்டர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் தடுப்புகளில் ஏற முயன்றனர்.
#WATCH | Visuals from Ghazipur border where Lok Sabha LoP & Congress MPs Rahul Gandhi, Priyanka Gandhi Vadra and other Congress leaders have been stopped by Police on the way to violence-hit Sambhal. pic.twitter.com/eqad86lxr0
— ANI (@ANI) December 4, 2024
#WATCH | Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi at the Ghazipur border where he along with other Congress leaders have been stopped by Police on their way to violence-hit Sambhal. pic.twitter.com/HFu9Z4q07z
— ANI (@ANI) December 4, 2024
#WATCH | Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi at the Ghazipur border where he along with other Congress leaders have been stopped by Police on their way to violence-hit Sambhal. pic.twitter.com/HFu9Z4q07z
— ANI (@ANI) December 4, 2024
காஸிப்பூர் போலீஸ் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சம்பல் மாவட்டத்தில் வெளியாட்கள் நுழைய தடை இருப்பதால் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்துமாறு அம்மாவட்ட நிர்வாகம் அண்டை பகுதி அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
- போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர்
- டிசம்பர் 10 வரை வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் 'ஷாஹி ஜமா' மசூதிக்குள் இந்து கோவில் இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் மசூதியை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த நவம்பர் 24 ஆம் தேதி ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் மீது மக்கள் கற்களை வீசி தாக்கினர்.
அதிகாரிகளுக்குத் துணையாக வந்த போலீஸ் மக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. போராட்டம் கலவரமாக மாறியது. போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர். சம்பல் பகுதிக்குள் டிசம்பர் 10 வரை வெளியாட்கள் நுழைய மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். மேலும் நீதிமன்றம் நீதிமன்றம் மசூதி ஆய்வை தள்ளிப்போட்டது.
இந்த கலவரம் தொடர்பாக இன்று பாராளுமன்ற கூட்டத்தொடர் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், சம்பல் கலவரம் உ.பி. பாஜக அரசு முன்கூட்டியே திட்டமிட்டு நடத்திய சதிவேலை என மக்களவையில் தெரிவித்தார்.
இந்நிலையில் டிசம்பர் 10 வரை வெளி ஆட்கள் நுழைய தடை உள்ள நிலையில் அதை மீறி மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை [டிசம்பர் 4] சம்பல் சென்று அங்கு பாதிப்புகளை உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை ராகுல் காந்தி சந்திக்க உள்ளார். ராகுல் ஜி நாளை சம்பலுக்கு வருகை தர உள்ளார். அவர் காலையில் டெல்லியிலிருந்து சம்பலுக்கு செல்வார். அங்கு அவர் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பார் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் காவல் ஆணையர் ஆஞ்சநேய குமார் சிங், ராகுல் காந்தியின் வருகையை ஒத்திவைக்க நிர்வாகம் வலியுறுத்துகிறது. சம்பலில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கும்போதும் பதற்றம் நீடிக்கிறது. வெளியாட்கள் இருப்பது மேலும் இடையூறுகளை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
- பாகிஸ்தானில் அரசியல் கலவரம் காரணமாக இந்த தொடர் மாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
- பல்வேறு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்துள்ளன.
துபாய்:
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) போட்டியை அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் உள்ள கராச்சி, லாகூர் ராவல்பிண்டியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், வங்களாதேம், நியூசிலாந்து (ஏ பிரிவு) ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கிறது. வெஸ்ட்இண்டீஸ், இலங்கை ஆகியவை தகுதி பெறும் வாய்ப்பை இழந்தன.
பாதுகாப்பு காரணங்களுக்காக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், தங்களது அனைத்து ஆட்டங்களையும் துபாயில் விளையாட விரும்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் திட்ட வட்டமாக தெரிவித்து விட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடமும் (ஐ.சி.சி.) இதை கூறிவிட்டது.
இந்தியாவின் இந்த கோரிக்கையை ஏற்க இயலாது என்று பாகிஸ்தான் அறிவித்தது. இதனால் இந்தப் போட்டி குறித்து எந்த முடிவும் தெரியாத நிலையில் இருந்தது.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தானில் இருந்து மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அங்கு ஏற்பட்ட அரசியல் கலவரம் காரணமாக இந்த தொடர் அங்கிருந்து மாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை 'ஏ' அணி பாகிஸ்தான் 'ஏ' அணியுடன் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக அங்கு சென்றது. முதல் போட்டி முடிந்த பிறகு வன்முறை காரணமாக பாகிஸ்தானில் இருந்து இலங்கை அணி பாதியில் திரும்பி விட்டது.
பல்வேறு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்துள்ளன. இதனால் சாம்பியன்ஸ் டிராபி அங்கு திட்டமிட்டபடி நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐ.சி.சி. கூட்டம் நாளை (29-ந் தேதி) நடக்கிறது. இந்த கூட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி குறித்து முடிவு செய்யப்படும்.
- கடந்த 16 மாதங்களில் மோடி மணிப்பூருக்கு 1 நொடி கூட செலவிடவில்லை.
- மணிப்பூரைத் தவிர மற்ற மாநிலங்களின் தேர்தல் பேரணிகளில் கலந்துகொண்டு அரசியல் செய்வதில் மோடி மும்முரமாக இருக்கிறார்.
மணிப்பூருக்காக 1 நொடி கூட மோடி செலவிடவில்லை.. மன்னிக்கவே முடியாத தோல்வி - கார்கே காட்டம்
மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இனக்குழு மகக்ளுடையிலான மோதல் கலவரமாக வெடித்து 220 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய வன்முறை 16 மாதங்கள் ஆகியும் இன்னும் கட்டுப்படுத்தமுடியாமல் இருந்து வருகிறது.
இதுவரை எந்த தீர்வும் காணப்படாமல் இன்றளவும் கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன. சுமார் 70,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இரு சமூகத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் இம்பாலில் ஆளுநர் மாளிகையி முற்றுகை இட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மீண்டும் மணிப்பூரில் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கடந்த 16 மாதங்களில் மோடி மணிப்பூருக்கு 1 நொடி கூட செலவிடவில்லை. இன்னும் வன்முறை கட்டுப்படாத முடியாத அளவுக்கு உள்ளது. இவை அனைத்தும் மணிப்பூர் விஷயத்தில் மோடியின் படுதோல்வியையே காட்டுகிறது. மோடியின் மோசமான தோல்வி என்பது மன்னிக்கவே முடியாதது.
மணிப்பூர் முதல்வர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். மணிப்பூரில் பாதுகாப்புச் சூழலுக்கு மத்திய அரசு முழு பொறுப்பேற்ப வேண்டும். மணிப்பூர் வன்முறையை விசாரிக்கும் சிபிஐ, என்ஐஏ மற்றும் பிற அமைப்புகளை மோடி அரசு தவறாகப் பயன்படுத்தக்கூடாது.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மணிப்பூரில் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியுள்ளார். மணிப்பூரைத் தவிர மற்ற மாநிலங்களின் தேர்தல் பேரணிகளில் கலந்துகொண்டு அரசியல் செய்வதில் மோடி மும்முரமாக இருக்கிறார். எங்கள் மாநிலத்தில் நிலவும் வன்முறையை நிறுத்த பிரதமர் மோடி ஏன் விரும்பவில்லை? என்பதே மணிப்பூர் மக்களின் கேள்வியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
PM Modi's abject failure in Manipur is unforgivable. 1. Former Manipur Governor, Anusuiya Uikey ji has echoed the voice of the people of Manipur. She said that people of the strife-torn state are upset and sad, for they wanted PM Modi to visit them. In the past 16 months, PM…
— Mallikarjun Kharge (@kharge) September 9, 2024
- ஆளுநர் மாளிகை முன் நூற்றுக்கணக்கான மாணவர்கள் குவிந்துள்ளதால் தலைநகரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
- கான்வாய் வானத்தின் மீது கற்களை வீசி சிஆர்பிஎப் வீரர்களை மாணவர்கள் விரட்டிய வீடியோ வெளியாகி உள்ளது
மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இனக்குழு மக்ளுடையிலான மோதல் கலவரமாக வெடித்து 220 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கடந்த வருடம் முதல் நடந்து வரும் இந்த கலவரத்தில் இரண்டு குக்கி சமூகப் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய வன்முறை 16 மாதங்கள் ஆகியும் இன்னும் கட்டுப்படுத்தமுடியாமல் இருந்து வருகிறது.
இதுவரை எந்த தீர்வும் காணப்படாமல் இன்றளவும் கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன. சுமார் 70,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இரு சமூகத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தாக்குதல்களைக் கட்டுப்படுத்தக் கோரி தலைநகர் இம்பாலில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட அனைத்து மாணவர் அமைப்பை சேர்ந்த பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களமாணவர்கள் பேரணி மேற்கொண்டனர்.
#WATCH | Manipur: Hundreds of students march to Raj Bhavan in Imphal, demanding removal of DGP and Security Advisor over the situation in the state. pic.twitter.com/Agyim2sqDL
— ANI (@ANI) September 9, 2024
அப்போது சிஆர்பிஎப் வீரர்களின் கான்வாய் வாகனத்தின் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கான்வாய் வானத்தின் மீது கற்களை வீசி சிஆர்பிஎப் வீரர்களை மாணவர்கள் விரட்டிய வீடியோ வெளியாகி உள்ள நிலையில் ஆளுநர் மாளிகை முன் நூற்றுக்கணக்கான மாணவர்கள் குவிந்துள்ளதால் தலைநகரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. மணிப்பூர் முதல்வர் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோஷத்தை அவர்கள் எழுப்பி வருகின்றனர்.முன்னதாக வங்கதேசத்தில் ஆட்சியிலிருந்த ஷேக் ஹசீனா அரசை கண்டித்து அந்நாட்டின் மாணவர்கள் நடத்திய போராட்டம் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
VIDEO | Manipur: All Manipur Students Union (AMSU) protesters attacked the convoy of CRPF in Imphal.#ManipurVoilence pic.twitter.com/iFiCVm0FL8
— Press Trust of India (@PTI_News) September 9, 2024
- பெண்களை நிர்வாணமாக ஊர்வலம் நடத்திச் சென்றது, கொலை மற்றும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் ஆகியவை அரங்கேறின.
- கலவரத்துக்குப் பின் முதல் முறையாக மோடி முன் பைரன் சிங் இப்போதுதான் தோன்றியுள்ளார்.
மத்திய அரசு தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்த நிலையில் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் கூட்டத்தைப் புறக்கணித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தன்னை பேச விடவில்லை எனக் கூறி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.
இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பாஜக ஆளும் மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் மோடியை தனியாகச் சந்தித்து மாநிலத்தில் நடக்கும் கலவரங்கள் குறித்துப் பேசாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூரில் மெய்த்தேய் குக்கி இனக்குழுக்களுக்கிடையில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக கலவரம் வெடித்தது.
கிராமங்கள் தீவைத்து எரிக்கப்பட்டது, பெண்களை நிர்வாணமாக ஊர்வலம் நடத்திச் சென்றது, கொலை மற்றும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் ஆகியவை அரங்கேறின. இந்த கலவரத்தில் சுமார் 221 பேர் உயிரிழந்துள்ளனர் 60,000 பேர் தங்களின் வீடுகளை இழந்து ஒரு வருடத்துக்கும் மேலாக இன்னும் முகாம்களிலேயே தங்கியுள்ளனர்.
ஒரு வருடம் ஆகியும் மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்னும் அங்கு வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த கலவரங்கள் குறித்து மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு மவுனம் காத்து வந்ததது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. குறிப்பாக மோடியின் மணிப்பூர் மவுனம் பலருக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் மோடி இன்னும் மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்க்காதது விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில் கலவரத்துக்குப் பின் முதல் முறையாக மோடி முன் பைரன் சிங் இப்போதுதான் தோன்றியுள்ளார்.
அதுவும் நிதி நேற்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்திலும்,, பாஜக முதல்வர்கள் கூட்டத்திலுமே பைரன் சிங் பங்கேற்றுள்ளார். மோடியைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசவில்லை. இதனை விமர்சித்துள்ள காங்கிரஸ், நமது பயலாஜிக்கலாக பிறக்காத பிரதமர் பங்கேற்ற நிதி ஆயோக்கிலும், அதே கடவுளின் முன் நடந்த பாஜக முதல்வர்கள் கூட்டத்திலும் பைரன் சிங் பங்கேற்றார்.
எங்களது கேள்வியெல்லாம், மே 3 2023 இரவு முதல் எரிந்துகொண்டிருக்கும் மணிப்பூர் குறித்து மோடியை தனியாகச் சந்தித்துப் பேசி, அங்கு வந்து பார்வையிடுமாறு ஏன் பைரன் சிங் அழைக்கவில்லை. சமீபத்தில் ரஷியா செல்வதற்கு முன்னால்தான் வரவில்லை. தற்போது உக்ரைன் செல்வதற்கு முன்னாலாவது மணிப்பூரை வந்து பாருங்கள் என்று ஏன் அழைக்கவில்லை என்று கேள்வியெழுப்பியுள்ளது.
- மத்திய அமைச்சரை வீழ்த்தி முதல் முறை எம்.பியாக நாடாளுமன்றம் வந்தார் முன்னாள் ஜேஎன்யூ பல்கலைக்கழக பேராசிரியர் பிமோல் அகோய்.
- தாய்மார்களையும், விதவைகளையும் பற்றி யோசித்து பாருங்கள். அதன்பின்னர் தேசியவாதம் குறித்து பேசுங்கள்
பாராளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடர் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வரும் நிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய எதிர்கட்சி எம்.பிக்கள் பாஜக மீது காரசாரமான முறையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அந்த வகையில் வன்முறையால் துண்டாடப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் பாஜக மத்திய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சனை வீழ்த்தி வெற்றிபெற்று முதல் முறை எம்.பியாக நாடாளுமன்றம் வந்த முன்னாள் ஜேஎன்யூ பல்கலைக்கழக பேராசிரியர் பிமோல் அகோய்-க்கு நேற்று இரவு கூட்டம் முடியும் சமயத்தில் உரையாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஏற்கனேவே பலர் கூட்டத்திலிருந்து வெளியேறிய நிலையில் கிட்டத்தட்ட பெரும்பாலும் காலியாக இருந்த இருக்கைகளுக்கு மத்தியில் பிமோல் பேசத் தொடங்கினார். ஆனால் அவரின் பேச்சு அனைவரையும் வாயடைக்கச் செய்வதாக மிகவும் கூர்மையாக இருந்தது.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து அவர் பேசியதாவது, மணிப்பூரில் இன்னும் 60,000 மக்கள் மிகவும் மோசமான நிலையில் நிவாரண முகாம்களில் கடந்த ஒரு வருடமாக வாழ்ந்து வருகின்றனர். மணிப்பூர் மக்களின் அவஸ்த்தையும் கோபமும் என்னைப்போன்ற ஒரு ஒன்றுமற்ற மனிதனை அமைச்சராக இருந்தவரை வீழ்த்தச் செய்து ஜனநாயகத்தின் கோவிலான பாராளுமன்றத்துக்கு என்னை அனுப்பியுள்ளது. அந்த வலியை எண்ணிப்பாருங்கள். ஆனால் நமது பிரதமர் [மணிப்பூர் விஷயத்தில்] மௌவுனமாக உள்ளார். ஜனாதிபதி உரையிலும் மணிப்பூர் கலவரம் பற்றி ஒரு வார்த்தை கூட இடம்பெற வில்லை. இந்த மௌனம் சாதரணமானது அல்ல.
மவுனம் தான் மணிப்பூர் போன்ற தென்கிழக்கு மாநிலங்களிடம் நீங்கள் பேசும் மொழியா? என்று நீங்கள் அக்கறை காட்டாத மணிப்பூர் மாநிலம் உங்களை பார்த்து கேட்கிறது, மணிப்பூரில் 200 க்கும் மேற்பட்டோர் கலவரத்தால் இறந்தனர். உள்நாட்டுப்போர் நடப்பது போன்ற சூழலே அங்கு உள்ளது . ஆனால் கடந்த 1 வருடமாக அது யார் கண்களுகும் தெரியவில்லை.
உங்கள் நெஞ்சில் கைவைத்து கலவரத்தால் பாதிக்கப்பட்டு வீடற்று நிற்பவர்களையும், தாய்மார்களையும், விதவைகளையும் பற்றி யோசித்து பாருங்கள். அதன்பின்னர் தேசியவாதம் குறித்து பேசுங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் மணிப்பூரை பற்றி மோடி பேசத் தொடங்கினாள் நான் அமைதி ஆகிறேன் என்று தெரிவித்தார்
- மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக நடத்திச்செல்லப்பட்ட வீடியோ வெளியானது.
- மணிப்பூர் கலவரத்தில் இதுவரை 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
நாக்பூரில் உள்ள டாக்டர் ஹெட்கேவார் ஸ்மிருதி பவன் வளாகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "அமைதிக்காக மணிப்பூர் மக்கள் ஓராண்டுக்கும் மேல் காத்திருக்கின்றனர். இவ்விவகாரத்தில் முன்னுரிமை எடுத்து அரசு செயல்பட வேண்டும். மணிப்பூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைதி நிலவியது. அங்கு துப்பாக்கி கலாச்சாரம் முடிந்துவிட்டதாக உணர்ந்தேன். ஆனால் அங்கு மீண்டும் வன்முறை உருவாகியுள்ளது. மணிப்பூரில் நிலவும் சூழ்நிலையை முன்னுரிமையுடன் பரிசீலிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தேய் இனக் குழுக்களுக்கிடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் கடுமையான மோதல் ஏற்பட்டு கலவரம் நிகழ்ந்து வருகிறது.
மெய்தேய்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதால் அவர்கள் தங்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வர் என்று குக்கி இனத்தவர் அஞ்சினர். மோதல் ஏற்பட இது முக்கிய காரணமாக அமைந்தது. இந்த கலவரத்தின்போது பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக நடத்திச்செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுவரை இந்த கலவரத்தில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மணிப்பூரில் கலவரம் இன்னும் ஓயாத நிலையில் ஏராளமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.
- நேர்காணலில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் கலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
- கலவரம் நடந்த மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரடியாக சென்று பாரக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இன்றளவும் அவர்மீது எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது.
பிரஸ் ட்ரஸ்ட் ஆப் இந்தியா செய்தி ஊடக நேர்காணலில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் கலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தேய் இனக் குழுக்களுக்கிடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் கடுமையான மோதல் ஏற்பட்டு கலவரம் நிகழ்ந்தது வருகிறது.
மெய்தேய்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதால் அவர்கள் தங்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வர் என்று குக்கி இனத்தவர் அஞ்சினர். மோதல் ஏற்பட இது முக்கிய காரணமாக அமைந்தது. இந்த கலவரத்தின்போது பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக நடத்திச்செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுவரை இந்த கலவரத்தில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மணிப்பூரில் கலவரம் இன்னும் ஓயாத நிலையில் ஏராளமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் மணிப்பூரில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. கலவரக்காரர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி போலீஸ் உதவியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.கலவரம் நடந்த மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரடியாக சென்று பாரக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இன்றளவும் அவர்மீது எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு இடையில் PTI செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அமித்ஷா, மணிப்பூரில் மெய்தேய் - குக்கி இனக்குழுக்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மத்தியில் உள்ள பாஜக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தொடந்து பேசிய அவர், இதை மோதல் மற்றும் கலவரமாக மட்டும் பார்க்கக்கூடாது. இது இரண்டு இனக்குழுக்களுக்கு இடையிலான பிரச்சனை, இதற்கு வலுக்கட்டாயமாக எந்த ஒரு தீர்வையும் ஏற்படுத்த முடியாது. மிகவும் கவனமாக கையாள வேண்டிய பிரச்சனை இது. மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.