என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » robbry
நீங்கள் தேடியது "Robbry"
ஈரோடு அருகே செங்கல் சூளை அதிபரிடம் ரூ.5 லட்சம் பறித்த சென்றவர்களில் ஒருவன் பிடிபட்டான். 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 60). செங்கல் சூளை நடத்தி வருகிறார்.
கரூரில் உள்ள இவரது உறவினர் மூலம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி கொண்டு பணத்தை பையில் வைத்தப்படி ஈரோட்டுக்கு பஸ்சில் வந்தார்.
பிறகு இவர் ஈரோடு காளைமாடு சிலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவன் அவரிடம், “உங்கள் பணம் கீழே விழுந்து கிடக்கிறது” என்றான்.
உடனே அவரும் குனிந்து பார்த்த போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் மாதேஸ்வரன் கையில் வைத்திருந்த ரூ.5 லட்சத்துடன் உள்ள பணப்பையை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் “திருடன்.. திருடன்” என்று கூக்குரலிட்டார். பிறகு அவரும் அக்கம்-பக்கத்தினரும் தப்பி ஓடியவர்களை பிடிக்க விரட்டினர்.
இதில் ஒருவனை பொதுமக்கள் பிடித்தனர். மற்ற 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து சூரம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.
பிடிபட்ட ஆசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவனது பெயர் குமார் என்றும் ஈரோடு மரப்பாலம் பகுதியை சேர்ந்தவன் என்றும் தெரியவந்தது.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார் மேலும் தப்பி ஓடிய 2 கொள்ளையர்களையும் தேடி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 60). செங்கல் சூளை நடத்தி வருகிறார்.
கரூரில் உள்ள இவரது உறவினர் மூலம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி கொண்டு பணத்தை பையில் வைத்தப்படி ஈரோட்டுக்கு பஸ்சில் வந்தார்.
பிறகு இவர் ஈரோடு காளைமாடு சிலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவன் அவரிடம், “உங்கள் பணம் கீழே விழுந்து கிடக்கிறது” என்றான்.
உடனே அவரும் குனிந்து பார்த்த போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் மாதேஸ்வரன் கையில் வைத்திருந்த ரூ.5 லட்சத்துடன் உள்ள பணப்பையை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் “திருடன்.. திருடன்” என்று கூக்குரலிட்டார். பிறகு அவரும் அக்கம்-பக்கத்தினரும் தப்பி ஓடியவர்களை பிடிக்க விரட்டினர்.
இதில் ஒருவனை பொதுமக்கள் பிடித்தனர். மற்ற 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து சூரம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.
பிடிபட்ட ஆசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவனது பெயர் குமார் என்றும் ஈரோடு மரப்பாலம் பகுதியை சேர்ந்தவன் என்றும் தெரியவந்தது.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார் மேலும் தப்பி ஓடிய 2 கொள்ளையர்களையும் தேடி வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X