search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sadayanguppam flyover"

    • இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
    • தெருவிளக்கு அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை.

    திருவொற்றியூர்:

    மணலி அருகே உள்ள சடையங்குப்பம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் வடக்கே கொசஸ்தலை ஆற்றின் உபரிக்கால்வாய், தெற்கே புழல் உபரி கால்வாய், கிழக்கே பக்கிங்காம் கால்வாய், ஊருக்குள் சடையங்குப்பம் ஏரி என சுற்றியும் நீர் நிலைகள் சூழ்ந்துள்ளது.

    பருவமழையின் போது புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படும் போது அந்த தண்ணீர் கால்வாய் வழியாக ஆமுல்லை வாயல், கொசப்பூர் சடையங்குப்பம் ஆகிய பகுதிகளை கடந்து எண்ணூரில் உள்ள முகத்து வார ஆற்றில் கலக்கும்.

    இவ்வாறு கால்வாய் வழியாக பெருக்கெடுத்து வரும் உபரிநீர் சடையங்குப்பம் பகுதிகளில் உள்ள பர்மா நகர், இருளர் காலனி போன்ற பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்து விடும். இதனால் அங்குள்ள மக்கள் வெளியே வர முடியாமல் தவிப்பது தொடர்ந்து நீடித்து வந்தது.

    இதைத்தொடர்ந்து மழைக்காலத்தில் சடையங்குப்பம் பகுதியில் உள்ள மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க கடந்த 2008-ம் ஆண்டு மறைந்த கே.பி.பி.சாமி அமைச்சராக இருந்தபோது பர்மா நகர், இருளர் காலனி அருகே அன்றைய திட்ட மதிப்பீட்டின் படி ரூ.19 கோடி செலவில் கால்வாய் மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.

    ஆனால் இந்த பணி பல்வேறு காரணங்களால் நத்தை வேகத்தில் நடை பெற்றதால் பர்மா நகர் இருளர் காலனியில் வசிக்கும் மாணவ, மா ணவிகள், தொழிலாளர்கள், முதியவர்கள் ஆகியோர் பாலத்தை கடந்து செல்ல சிரமப்பட்டு வந்தனர். கடந்த 2015-ம் ஆண்டு பெரு வெள்ளத்திற்கு பின்னர் இந்த மேம்பாலப்பணி வேகம் எடுத்தது.

    இதைத்தொடர்ந்து 16 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற மேம்பாலம் பணி தற்போது 90 சதவீதம் முடிந்து உள்ளது.

    ஆனால் மேம்பாலத்தில் தெரு விளக்குகள் உள்ளிட்ட இறுதி கட்ட பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. இருப்பினும் வாகன ஓட்டிகள் இந்த பாலம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே மேம்பாலம் வழியாக இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மின்விளக்கு இல்லாததால் இருட்டான இந்த பகுதியை நோட்டமிட்டு வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    எனவே மேம்பாலத்தில் உடனடியாக தெருவிளக்குகள் பொருத்தி மேம்பாலத்தை முறையாக திறக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

    ×