search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "scammed"

    • மர்ம நபர் ஒருவர் கூகுள் மேப் குறித்து ரிவ்யூ செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்றார்.
    • புவனேஸ்வரி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை கணபதி அருகே உள்ள லட்சுமி கார்டனை சேர்ந்தவர் சதாசிவம்.

    இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 32). ஐ. டி. ஊழியர். இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு சில நாட்களுக்கு முன்பு மெசேஜ் வந்தது அதில் பகுதிநேர வேலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து புவனேஸ்வரி அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து டெலிகிராம் குழுவில் இணைந்தார்.

    பின்னர் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் கூகுள் மேப் குறித்து ரிவ்யூ செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். மேலும் அவர் பிட்காயின் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்றும் கூறினார்.

    இதனை உண்மையான நம்பிய புவனேஸ்வரி முதற்கட்டமாக முதற்கட்டமாக அவர் கூறிய வங்கி கணக்கில் அதற்குரிய வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் பணம் செலுத்தினார்.

    இதனை அடுத்து அவருக்கு லாபமாக ரூ.2800 பணம் கிடைத்தது. மேலும் ஆன்லைன் மூலமாக அவர்கள் அனுப்பிய பணிகளை செய்து கொடுத்தார்.

    அப்போது அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் வெவ்வேறு காலகட்ட ங்களில் ரூ.8.97 லட்சம் பணம் அனுப்பினார்.

    ஆனால் அவர் கூறியபடி ஆனால் லாபத் தொகை கிடைக்கவில்லை. மர்ம நபர் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து புவனேஸ்வரி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×