என் மலர்
நீங்கள் தேடியது "school van accident"
- முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் மோதி முன்பகுதி முழுவதும் சிதைந்ததில் குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
- சிகிச்சை பெற்று வந்த ஒரு குழந்தை மற்றும் பெண் உயிரிழந்ததால் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே டிராக்டர் மீது பளளி வாகனம் மோதிய விபத்தில் எல்கேஜி குழந்தை உள்பட இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் மோதி முன்பகுதி முழுவதும் சிதைந்ததில் குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தில், டிராக்டரில் இருந்த பெண், 8 குழந்தைகள் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், சிகிச்சை பெற்று வந்த ஒரு குழந்தை மற்றும் பெண் உயிரிழந்ததால் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மதனபுரம் அருகில் ஏற்கனவே எரிவாயு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாததால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.
- தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி உயிரிழந்தார்.
தாம்பரம்:
தாம்பத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர், பார்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 50). இவர் படப்பையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதற்காக தனது மகள் தீபிகா (வயது 21) உடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.
மதனபுரம் அருகில் ஏற்கனவே எரிவாயு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாததால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்தப் பகுதியை கடக்க முயற்சி செய்த போது வேகத்தை கட்டுப்படுத்த பிரேக் பிடித்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்த ரேவதி மீது பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி வாகனத்தின் பின் டயர் ஏறி இறங்கிதில் படுகாயம் அடை ந்தார். தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி உயிரிழந்தார்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மினி வேன் தாறுமாறாக ஓடி முட்புதரின் மீது சாய்ந்து
- பாதுகாப்பாக அதிகாரி வாகனத்தில் அனுப்பி வைத்தார்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பொன்ன ப்பன்தாங்கல் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு மா ணவ ர்களை ஏற்றி க்கொண்டு மினி வேன் சென்று கொண்டிருந்தது.
புதுப்பட்டு காலனி பகுதி அருகே வரும்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள முட்புதரின் மீது சாய்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.
அப்போது அந்த வழியாக வந்த கலெக்டர் வளர்மதி விபத்து நடந்த இடத்தில் இறங்கினார்.
மேலும் பள்ளி மாணவர்களை மீட்டு கலெக்டர் வளர்மதி பாதுகாப்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரி வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.
- பள்ளி குழந்தைகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
- குறுகலான சாலையில் வேன் இயக்கப்பட்டதால் விபத்து.
அம்மாப்பேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் பகுதியில் எம்.ஏ.எம். எக்ஸல் என்ற ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதி களை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகிறார்கள். அவர்களில் பலர் பள்ளி வேனில் அழைத்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களை இன்று காலை வேனில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தது.
இதையடுத்து அந்த பள்ளி வேன் அம்மா பேட்டையில் இருந்து ஊமாரெட்டியூர் செல்லும் சாலையில் அரசு கால்நடை மருத்துவமனை வழியாக பள்ளி வேன் ஓட்டுநர் அம்மாபேட்டையை சேர்ந்த குணசேகரன் (வயது 38) என்பவர் வேனை ஓட்டி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது சாலையில் சிறிய அளவிலான வளைவில் திருப்பும் போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் வலது புறம் சாலையை ஒட்டி உள்ள கரும்பு தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது.
இந்த விபத்தில் பள்ளி வேனில் பயணம் செய்த பள்ளி குழந்தைகள் 10-க்கும் மேற்பட்டவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதை கண்ட பள்ளி குழந்தைகள் கதறி அலறினர்.
இது பற்றி தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்சு தகவல் கொடுத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கு கால தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. அதற்குள் தகவல் கிடைத்ததும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து தங்கள் குழந்தைகள் விபத்தில் சிக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பள்ளி வாகனத்தில் இருந்து தங்களது குழந்தைகளை மீட்டு இரு சக்கர வாகனங்களில் ஏற்றிக்கொண்டு அருகே உள்ள அம்மா பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து பள்ளி குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அம்மாபேட்டை அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான சம்பவம் பெற்றோர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் குறுகலான சாலையில் அதிக நீளமுடைய பள்ளி வேன் இயக்கப்பட்டதால் விபத்து நிகழ்ந்திருப்பதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தகவல் அறிந்து வந்த அம்மாபேட்டை போலீசார் விபத்திற்கு உள்ளான பள்ளி வேனை, கிரேன் எந்திரம் கொண்டு வந்து அப்புறப்படுத்தி விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
- பள்ளி வேனில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர்.
- 15 மாணவ, மாணவிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம், கண்ணூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வேனில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர்.
இந்நிலையில், வளகை என்ற இடத்தில் இறக்கத்தில் வந்தபோது வேன் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர தடுப்பில் மோதி உருண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், 15 மாணவ, மாணவிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்பவர்களை பதைபதைக்க வைக்கும் இந்த விபத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- வீட்டின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது.
- 6 குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பழனியாபுரம் பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகிறார்கள். மாணவ, மாணவிகளை தினமும் பள்ளிக்கு சொந்தமான வேன், பஸ் மூலம் அழைத்து வந்து செல்கிறார்கள்.
இன்று காலையும் வழக்கம் போல் பள்ளி வேன் பெத்தநாயக்கன் பாளையம் அருகே உள்ள களரம்பட்டி பகுதிக்கு சென்று பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வந்தது. அப்போது அந்த வேனில் 16 குழந்தைகள் இருந்தனர்.
வேனை டிரைவர் சிவபெருமாள் என்பவர் ஓட்டி வந்தார். வேன் களரம்பட்டி சாலையில் வந்து கொண்டு இருந்தது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன் ரோட்டோரம் இருந்த ஒரு வீட்டின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது. இதில் வேனில் இருந்த 16 மாணவ, மாணவிகளும் படுகாயம் அடைந்து அலறினர்.
இதையடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து வேனில் சிக்கிய குழந்தைகளை மீட்டனர். பின்னர் அவர்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயம் அடைந்த 6 குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து பற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு மல்லியகரை போலீசார் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர். பின்னர் போலீசார் ஜே.சி.பி. வாகனம் மூலம் விபத்தில் சிக்கிய பள்ளி வேனை மீட்டனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை ந்டத்தி வருகிறார்கள்.
ராசிபுரம்- சேந்தமங்கலம் பிரிவு ரோட்டில் ராசி இன்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் இருந்து மாணவ - மாணவிகளை அழைத்து வருவதற்காக வேன் வசதி உள்ளது.
இன்று காலை சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி, காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து குழந்தைகளை ஏற்றி வருவதற்காக வேன் சென்றது. அந்த வேனை பெரியசாமி (வயது 42) என்பவர் ஓட்டிச் சென்றார். இதில் கிளீனராக சதீஷ்குமார் (28) என்பவர் இருந்தார்.
இந்த வேன் இன்று காலை 34 பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வெள்ளக் கணவாய் என்ற இடத்தில் வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்தது.
உடனே வேனில் இருந்த மாணவ - மாணவிகள் கதறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வேனில் இருந்த மாணவ - மாணவிகளை பத்திரமாக மீட்டனர்.
இந்த விபத்தில் கிளீனர் சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மகரிஷி, ஹேமரஞ்சினி, ஹர்சினி ஆகிய 3 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர். இவர்களை மீட்டு ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். #tamilnews
நெருப்பூர் பஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் நிறுத்தி விட்டு குழந்தைகளை ஏற்றி கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக பள்ளி வேன் மீது லாரி மோதியது. வேனில் இருந்த 6 பள்ளி குழந்தைகளுக்கு பலத்த படுகாயம் ஏற்பட்டது. உடனே அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு ஏரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு பள்ளி குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் மரடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித் நாயர் (வயது 42). இவரது மனைவி பிரியா (38). இவர்களது மகன் ஆதித்தியன் (4½).
இதே பகுதியை சேர்ந்த சனல்குமார் மற்றும் ஸ்மிதா மகள் வித்யலட்சுமி (5). இவர்கள் 2 பேரும் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தனர்.
நேற்று பள்ளி வேனில் ஆதித்தியனும், வித்யலட்சுமியும் அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளி முடிந்ததும் மீண்டும் குழந்தைகளை அவரவர் வீட்டில் விட வேனில் ஏற்றப்பட்டனர்.
வேனை அனில்குமார் (45) ஓட்டினார். ஆதித்தியன், வித்யலட்சுமி உள்பட மேலும் 6 குழந்தைகள் மற்றும் பள்ளி ஆயா லதா உன்னி ஆகியோர் இருந்தனர். வேன் சுமார் அரை கி.மீட்டர் தூரம் வந்ததும் வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
வேனில் இருந்த குழந்தைகள் அலறி சத்தம்போட்டனர். அங்குள்ள பகவதியம்மன் கோவில் குளத்தில் வேன் பாய்ந்தது. இந்த குளம் சேறு நிறைந்த குளமாகும். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வேனை பார்த்தபோது வேன் சேற்றில் மூழ்க தொடங்கியது.

இதில் குழந்தைகள் ஆதித்தியன், வித்யலட்சுமி மற்றும் பள்ளி ஆயா லதா உன்னி ஆகியோர் குளத்தில் மூழ்கி பலியானார்கள். பலியான 3 பேரின் உடல்கள் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. டிரைவர் அனில்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.