search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selaiyur police investigation"

    சேலையூர் அடுத்த மானம்பாக்கத்தில் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    பள்ளிக்கரணை:

    சேலையூரை அடுத்த மானம்பாக்கம் முதல் குறுக்குத்தெருவில் வசித்து வருபவர் நன்னப்பன், ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். கடந்த 4-ந்தேதி அவர் வீட்டை பூட்டி விட்டு ஆவடியில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார்.

    நேற்று இரவு திரும்பி வந்த போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 32 பவுன் நகையை காணவில்லை.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    இது குறித்து சேலையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×