search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "selection of administrators"

    • தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்தனர்.
    • பள்ளியின் வளர்ச்சிக்கும், பிற துறைகளின் பங்க ளிப்பை உறுதி செய்வேன், கல்வி கற்க உகந்த மகிழ்ச்சியான சூழலை உருவாக்கி பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், மேலாண்மைக் குழு மறு கட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது.

    அப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்தனர்.

    அதில், பள்ளி மேலா ண்மைக் குழு தலைவராக அ. அகிலா, துணைத் தலை வராக ந.ரேவதி, செயலா ளராக தலைமை ஆசிரியர் சின்னதுரை, உறுப்பினர்களாக ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், சுய உதவிக் குழுப்பினர்கள், கல்வி ஆர்வலர்ககள் என 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இவர்கள் அனைவரும், பள்ளியின் வளர்ச்சிக்கும், பிற துறைகளின் பங்க ளிப்பை உறுதி செய்வேன், கல்வி கற்க உகந்த மகிழ்ச்சியான சூழலை உருவாக்கி பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவர் அம்பிகா மாரிமுத்து, துணைத் தலைவர் பழனியம்மாள் ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்புப் பார்வையாளராக காட்டுப்பிரிங்கியம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் அரசுமணி கலந்து கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனலட்சுமி, ரமேஷ்பத்மாவதி, கோகிலா, தங்கபாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.

    இதே போல் காட்டுப் பிரிங்கியம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கட்டத்தில், தலைவராக மலர், துணைத் தலைவராக மணிமேகலை உள்ளிட்ட 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    ×