என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sewage"

    • நீரில் 1048 டி.டி.எஸ். உப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
    • டேங்கர் லாரியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சுள்ளிப்பாளையம் பகுதியில் தனியார் பால் உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பாலை பதப்படுத்தி பாக்கெ ட்டுகளில் அடைத்தும், ஐஸ்கிரீம், பன்னீர், வெண்ணை, நெய் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி நாடு முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது.

    இந்நிறுவனத்திற்கு சொந்தமான டேங்கர் லாரியில் தொழிற்சாலையின் கழிவுநீரை ஏற்றி சுள்ளி பாளையம், மெஜஸ்டிக் நகர் பகுதியில் சாலை யோரத்திலும் விவசாய நிலத்திலும் திறந்து விட்டதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.

    இதனால் கொதிப்படைந்த அப்பகுதி மக்கள் டேங்கர் லாரியை சிறை பிடித்ததுடன் அவர்களை விசாரித்தனர்.

    அந்த டேங்கர் லாரி டிரைவர், தனியார் பால் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இதை நம்பாத அப்பகுதி மக்கள் பாத்திரத்தில் தண்ணீரை பிடித்து பார்த்தபோது அது மஞ்சள் கலந்த நிறத்தில் இருந்ததுடன், ரசாயன வாடையும் அடித்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து அப்பகுதி மக்கள், அந்த நீரில் உள்ள உப்புத்தன்மையை பரிசோதிக்கும் டி.டி.எஸ். கருவியை கொண்டு வந்து நீரில் உள்ள உப்பின் அளவை பரிசோதித்தனர். அந்த நீரில் 1048 டி.டி.எஸ். உப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து பெருந்துறை போலீசுக்கு தகவல் அளித்த அப்பகுதி மக்கள் டேங்கர் லாரியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் சுள்ளிபாளையம் மற்றும் மெஜஸ்டிக் நகர் பகுதி மக்கள் சார்பில் போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் கூறியிருப்பதாவது:-

    அண்மைக்காலமாக இந்த பால் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் புகையால் இப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இந்த ஆலையின் கழிவு நீராலும் லாரியில் கொண்டு வந்து கொட்டும் கழிவு நீராலும் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து டேங்கர் லாரியை ஓட்டி வந்தவர்களிடமும், அந்த நிறுவனத்தின் அதிகாரி யையும் போலீசார் விசாரித்த போது, தனியார் பால் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் வளர்க்கப்படும் மரக்கன்று களுக்கு தண்ணீர் ஊற்று வதற்காகவே டேங்கர் லாரி தண்ணீரை பயன்படுத்திய தாகவும், இனிமேல் அப்பகுதியில் தண்ணீரை விடுவதில்லை என எழுதிக் கொடுத்ததன் பேரில் அவர்களை எச்சரித்த போலீசார் டேங்கர் லாரியை விடுவித்தனர்.

    இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பதை அறிந்து கொள்ள பெருந்துறையில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜாவை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. நேரில் சென்ற போதிலும் அவரை பார்க்க முடியவில்லை.

    தனியார் பால் உற்பத்தி நிறுவனம் மீது தொடர்ந்து வரும் புகார்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

    • மதுரையில் கழிவு நீரை அகற்ற கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. பெரிய கண்மாய்கள் நிரம்பி, மறுகால் பாய்ந்தன.

    கூடல் புதூர் ஆபீசர்ஸ் டவுன், குலமங்கலம் மெயின் ரோடு மற்றும் மீனாம்பாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அவை வெளியேறி செல்வதற்கான கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டது. அதனை மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை. அங்கு தண்ணீர் தொடர்ந்து தேங்கி நிற்கிறது.

    இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொது மக்கள் கொசு தொல்லை உள்பட பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர்.

    இதை கண்டித்து 4-வது வார்டு, கனகவேல் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இன்று காலை குலமங்கலம் மெயின் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் கோஷம் எழுப்பினர்.

    மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.

    • சாக்கடை நீர் காவேரி நகர் பகுதியில் இருந்து கரைபுரண்டு ஓடி வருகிறது.
    • கழிவு நீர் கால்களில் படும்போது தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

     பெருமாநல்லூர் :

    ஊத்துக்குளியில் இருந்து சென்னிமலை செல்லும் வழியில் ரெயில்வே பாலத்தின் அடியில் மழைக்காலங்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக சாக்கடை நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுசுகிறது. இதனால் இந்த வழியாக நடந்து செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் கொடிய நோய்கள் பரவும் நிலை உள்ளது. இது குறித்து ஊத்துக்குளி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த சாக்கடை நீர் காவேரி நகர் பகுதியில் இருந்து கரைபுரண்டு ஓடி வருகிறது. அப்படி கரைபுரண்டு வரும் சாக்கடை கழிவு நீரை தடுப்பு கற்கள் மூலம் தடுத்து நிறுத்தியும் சிறிது சிறிதாக கரைந்து மீண்டும் பாலத்தின் அடியில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதன் மூலம் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர் .மூக்கை பிடித்துக் கொண்டுதான் நடந்து செல்ல முடிகிறது.அது மட்டுமில்லாமல் நடந்து செல்லும் போது அந்த கழிவு நீர் கால்களில் படும்போது தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் பலமுறை ஊத்துக்குளி ஒன்றிய நிர்வாகத்திடம் குறை சொல்லிவிட்டோம். ஆனால் அவர்கள் எங்களுக்கும் நிர்வாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இது ரெயில்வே சம்பந்தப்பட்டது என்று கைவிரித்து விடுகிறார்கள்.இதனால் மக்களின் பாதுகாப்புக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஆகவே இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு இதற்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றனர். 

    • கீழக்கரையில் கழிவுநீர் கலப்பதால் கடல் வளம் பாதிக்கும் அபாயம் ஏற்படும்.
    • உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடப்பட்டது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் இருந்து தினந்தோறும் 15 லட்சம் லிட்டருக்கு மேற்பட்ட கழிவுநீர் நேரடியாக கடலில் கலந்து வருகிறது.

    பல ஆண்டுகளாக இந்த நிலை தொடர்வதால் கீழக்கரை பகுதி கடலின் நிறம் இயற்கை தன்மையிலிருந்து மாறி விட்டது. அதோடு தற்போது கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளும், கட்டிட கழிவுகளும் கொட்டப்படுகிறது.

    ஏற்கனவே பவள பாறைகளை வெட்டி எடுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இதுபோல் சாக்கடைநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கலக்கிறது. இதனால் கடலின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு கடல்நீர் மாசடைந்து மீன்வளம் குறைந்து வருகிறது.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர் செயலாளர் பாசித் இல்யாஸ் கூறியதாவது:-

    கீழக்கரை கடலில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரிப்பது தொடர்பாக நிரந்தர தீர்வு காண தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் ஆலோசனை சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் இதுவரை செயல்படுத்தவில்லை.

    கீழக்கரை நகரில் ஆண்டு கணக்கில் கழிவுநீர் கடலில் கலந்து வருகிறது. சில சமயம் குப்பைகள் கொட்டும் தளமாகவும் கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகள், கட்டிடக் கழிவுகள் கொட்டும் பகுதியாக கடற்கரை மாறி வருகிறது.

    இதற்கு நிரந்த தீர்வு காண கடலில் கலக்கும் சாக்கடையை சுத்திகரித்து விவசாயத்திற்கோ அல்லது மின்சாரம் தயாரிப்பதற்கோ பயன்படுத்த வேண்டும்.இதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேருந்து நிலையத்தில் கழிவுநீர் ஓடுவதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்
    • நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்

    கரூர்:

    கரூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பிடத்தில் இருந்து, கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர். தென் மாநிலங்களின், நுழைவு வாயிலாக உள்ள கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு நாள்தோறும், 100க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. கரூர் நகராட்சி நிர்வாகம் சார்பில், பஸ் ஸ்டாண்டின் மையப்பகுதியில், இலவச கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். கழிப்பிடத்தில், இரவு நேரத்தில் விளக்குகள் எரிவது இல்லை. நாள் தோறும் சுத்தம் செய்வது இல்லை என்ற புகார் ஏற்கனவே உள்ளது. சில நேரங்களில் கழிப்பிடத்தில் இருந்து கழிவு நீர் வெளியில் ஓடுகிறது. இதனால், பயணிகள் துர்நாற்றத்தால், முகத்தை துணியால் மறைத்து கொண்டு செல்கின்றனர். கழிவுநீர் செல்லும் பகுதியில், தள்ளுவண்டியில் பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை விற்பனை செய்கின்றனர். இதனால், கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் பயணிகளுக்கு, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கரூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பிடத்தை நாள்தோறும் சுத்தம் செய்து, கழிவுநீர் செல்வதற்கு முறையான வடிகால் வசதி செய்து தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.


    • தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தினால் அங்கன்வாடி மையத்திற்கு பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • மழை நீர் தேங்கியதால் செயல்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தையும்,நியாய விலை கடையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தும்மக்குண்டு கிராமத்தில் வி.கள்ளப்பட்டி சாலையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்

    கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு பெய்த மழையிலும், தொடர்மழை காரணமாகவும் அங்கன்வாடி மையத்தின் முன்பு முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை இல்லை. இதனால் தற்போது அந்த தண்ணீர் கழிவுநீராகி நோய் பரவும் மையமாக உருவெடுத்து உள்ளது.

    தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தினால் அங்கன்வாடி மையத்திற்கு பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.இதன் காரணமாக அங்கன்வாடி மைய பொறுப்பாளர் அருகில் உள்ள தனியார் வீட்டை வாடகைக்கு எடுத்து குழந்தைகளை அங்கு வைத்து பாடம் நடத்தி வருகிறார்.

    அங்கன்வாடி மையத்தின் அருகிலே உள்ள நியாய விலைக் கடையும் தண்ணீர் தேங்கிய காரணத்தினால் மூன்று மாதத்திற்கு மேலாக பூட்டப்பட்டுள்ளது. நியாய விலை கடை திறக்க முடியாத சூழல் இருப்பதால் தற்காலிகமாக நியாய விலை கடை தும்மக்குண்டு அருகே உள்ள பெருமாள் பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக உடை யாம்பட்டி, கரிசல்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் இப்பகுதியினர் தெரி வித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மூன்று மாத காலமாக மழை நீர் தேங்கியதால் செயல்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தையும்,நியாய விலை கடையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அப்பகுதியில் நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்
    • கழிவு நீரும், சாக்கடை நீரும் பல நாட்களாக தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

    விழுப்புரம் :

    மரக்காணம் அருகே நகர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் தெரு உள்ளது. இதில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர் இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் அனைவரும் விவசாய குடும்பத்தினை சேர்ந்தவர்கள். இந்த தெருவில் சாக்கடை கழிவு நீர் குடிநீருடன் கலந்து தெருவில் ஓடுவதாலும், அப்பகுதியில் நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தெருவில் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரும், சாக்கடை நீரும் பல நாட்களாக தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசு உற்பத்தியாகிறது. இதனால் மர்ம நோய்களும், மலேரியா, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே விழுப்புரம் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக அந்த மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஊராட்சிக்குள் கழிவுநீர் வராத வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • இரு பகுதி மக்களுக்கும் இடையே பிரச்சினை உருவாக வாய்ப்பு உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது வண்ணாரப்பேட்டை ஊராட்சி பொதுமக்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    உடனே பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், பிள்ளையார்பட்டி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருந்து கழிவுநீர் பிள்ளையார்பட்டி எல்லைக்கு உட்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அதை விரிவாக்கபணி செய்து வண்ணாரபேட்டை ஊராட்சி எல்லைவரை கொண்டு வந்துள்ளனர். இதனால் இரு பகுதி மக்களுக்கும் இடையே பிரச்சினை உருவாக வாய்ப்பு உள்ளது.

    கழிவுநீர் வருவதால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே வண்ணாரப்பேட்டை ஊராட்சிக்குள் கழிவுநீர் வராத வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து போலீசார் உங்கள் கோரிக்கை குறித்து மனு அளியுங்கள் என்றனர். அதன் பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு மனு அளித்தனர்.

      உடுமலை :

      உடுமலை ஏழுகுள பாசன திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கிராமங்களையொட்டி இத்திட்ட குளங்கள் அமைந்துள்ளன. தளி பேரூராட்சியை ஒட்டி தினைக்குளம், பள்ளபாளையம் ஊராட்சி அருகில் செங்குளம், போடிபட்டி அருகே ஒட்டுக்குளம் என முக்கிய குளங்கள் அமைந்துள்ளன.இவ்வாறு கிராமத்தின் அருகிலுள்ள குளங்களில் அங்குள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நேரடியாக கலக்கிறது.

      செங்குளத்தில் பள்ளபாளையம் கிராமத்திலிருந்து வெளியேறும் கழிவு நீர் அனைத்தும் மேற்குப்பகுதியில் சேர்கிறது. அங்கிருந்து செங்குளத்திற்கு தண்ணீர் செல்லும் மழை நீர் வடிகாலில் இணைகிறது.

      பல ஆண்டுகளாக கழிவு நீர் குளத்தில் கலப்பதால், மழைக்காலத்திலும் அணையிலிருந்து தண்ணீர் வரும் போதும் குளத்து நீர் நிறம் மாறி, துர்நாற்றம் வீசும் நிலைக்கு தள்ளப்படுகிறது. இதே போல் தினைக்குளம், ஒட்டுக்குளம் ஆகிய குளங்களிலும் அருகில் உள்ள கிராமங்களின் கழிவு நீர் நேரடியாக கலக்கிறது.

      எனவே பொதுப்பணித்துறை, சூழல் ஆர்வலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து குளங்கள் பாதுகாப்புக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

      • பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
      • சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      ஊட்டி,

      நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊட்டி படகு இல்லத்திற்க்கு தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் நீலகிரியில் இருந்து ஊட்டி படகு இல்லத்திற்க்கு ெசல்லும் சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுவதால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது.இந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள், பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் அவதிக்கு உள்ளாகிவருகின்றனர். இதனால் வாகனங்கள் அந்த பகுதியை கடக்கும் போது கழிவுநீர் தெறிப்பதினால் நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

      ஊட்டி நகராட்சியில் பல பகுதிகளில் இந்த அவல நிலை காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      • வீடுகள் முன்பு குளம் போல் தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
      • மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

      மதுரை

      மதுரை-திருப்ப ரங்குன்றம் சாலையில் உள்ள வசந்தநகர் 2-வது தெருவில் பாதாள சாக்கடையில் கழிவுநீர் நிரம்பி சாலையில் தொடர்ந்து வெளியேறி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கழிவுநீர் வெளியேறி கடை கள் மற்றும் வீடுகள் முன்பு குளம் தேங்கி இருந்தது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வந்தது.

      இதுபற்றி மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கடைகள் முன்பு சாக்கடை நீர் வராத அளவிற்கு மணலை கொட்டி வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் உள்ள ஒரு தெரு முழுவதும் கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது.

      இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது. அதே பகுதியில் உள்ள கடைகளையும் வியாபாரிகள் திறக்க முடியாமல் மூடி வைத்துள்ளனர்.

      மாநகராட்சி பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடு குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வரு கின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

      இந்த சாக்கடை நீர் பிரச்சினைக்கு உடன டியாக மாநகராட்சி தீர்வு காணாவிட்டால் பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்று அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

      • சிங்கம்புணரியில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
      • இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.

      சிங்கம்புணரி

      சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு குடியிருப்பு பகுதியில் குளம்போல் கழிவுநீர் தேங்கியுள்ளது. அங்கு கடந்த 2 ஆண்டுகளாக தெருக்களில் இருந்து வரும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.

      இதுபற்றி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த பருவமழை காலத்தில் தேங்கிய மழைநீருடன் அப்பகுதி குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும் சேர்ந்து சுமார் 2 ஏக்கருக்கும் மேற்பட்ட காலி மனையிடங்களில் தேங்கிள்ளது.

      இதன் காரணமாக கடுமை யான துர்நாற்றம் மற்றும் கொசுத்தொல்லையால் குடியிருப்பு வாசிகள் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், ஒவ்வாமை மற்றும் தோல் அரிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

      எனவே இந்தப்பகுதியில வசித்து வரும் மக்கள் தங்களுடைய வீடுகளை காலி செய்து வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

      எனவே பல மாதங்களாக தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றி குடியிருப்பு பகுதிகளுக்கு அரசு கழிவுநீர் கால்வாய் அமைத்து தரும்படி இந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

      ×