என் மலர்
நீங்கள் தேடியது "sewage"
- ஆறு, குளங்களில் கழிவுநீரை விடுவதால் அனைத்து நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து விட்டது.
- மீண்டும் உற்பத்தியாகிவிடும் .மூன்று மாதங்களுக்கு தொடந்து தூய்மை செய்ய வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு, திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-
திருவாரூர் மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால், குளங்களில் வெங்காய தாமரைகளைச்செடி ஆக்கிரமித்து நீர்நிலைகளையும், மீன்வளத்தையும், சுற்றுசூழலையும் பெருமளவில் பாதிக்கிறது. முன்பு கழிவு நீரில் மட்டுமே வளர்ந்த இந்த செடிகள்.
தற்போது ஆறு, குளங்களில் கழிவுநீரை விடுவதால் அனைத்து நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து விட்டது.
இதனால் பாசன மதகுகளில் அடைத்துக்கொண்டு பாசனத்திற்கு பெரிய இடையூராக உள்ளது.
நீர் நிலைகளை இடைவெளி இல்லாமல் மூடிவிடுவதால் ஆக்ஸிஜன் குறைந்து நன்னீர் மீன் இனங்கள் உட்பட அனைத்து நீர்வாழ் உயிரினங்களும் அழிந்து வருகிறது.
இதனால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, கோடைகாலங்களில் மக்களும், கால்நடைகளும் பயன்படுத்த முடியாமல் நீரை ஆவியாக்கிவிடுகிறது.
எனவே மாவட்ட அளவில் வெங்காய தாமரை அகற்றும் பணியை மக்கள் இயக்கமாக மேற்கொள்ள வேண்டும்.
ஒரு செடி கிடந்தாலும் மீண்டும் உற்பத்தியாகிவிடும் .மூன்று மாதங்களுக்கு தொடந்து தூய்மை செய்ய வேண்டும்.
இச்செடிகளை ஒவ்வொரு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் செயல்படும் நுண்ணுரம் தயாரிப்பு மையங்கள் மூலமும், அல்லது நிழலான பகுதிகளில் மூடாக்கு அமைத்து பஞ்சகவ்யா மூலம் எளிதாக மக்க வைத்து விவசாயிகளுக்கு வழங்க முடியும். எனவே தனி கவனம் எடுத்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சி.புதூர் கிராமத்தில் வீதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
- சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள வாடிப்பட்டி யூனியனுக்குட்பட்ட சி.புதூர் கிராமத்தில் வடக்கில் இருந்து தெற்கு பக்கம் செல்லும் முக்கிய கழிவுநீர் வாய்காலில் குடியிருப்பு களில் இருந்து வெளியேறும் தண்ணீர் கலந்து சென்று தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் பாய்ந்து வந்துள்ளது. இந்தநிலையில் நிலத்தில் பாய்ந்து வந்த கழிவுநீர் பாதையை நில உரிமையாளர் மண்கொட்டி அடைத்து விட்டதால் 2 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மேற்கொண்டு செல்ல வழியின்றி வீதிகளில் வெள்ளம்போல் தேங்கி நிற்கிறது.
இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த பகுதி வீடுகளில் உள்ளவர்கள் கால்கள் நனையாமல் நடந்து செல்ல தற்காலிகமாக கல்பாதை அமைத்து நடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊராட்சி தலைவர் பாண்டுரங்கன் கூறுகையில், இந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மாற்று வழியில்லாத நிலையால் தனியார் பட்டா இடத்தை ஆர்ஜிதம் செய்து கழிவுநீர் வாய்க்கால் கட்ட ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிள்ளோம். ஊரக வளர்ச்சி துறையின் அனுமதி கிடைத்த பின்னர் சாக்கடை நீர் வெளியேற வாய்கால் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை தெருவில் தேங்கி நிற்கும் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
- வைப்பாற்றில் கழிவுநீர்கலக்கும் விவகாரம் தொடர்பாக விருதுநகர் கலெக்டர் பதிலளிக்க வேண்டும்.
- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
விருதுநகர்
சாத்தூர் அருகே படந்தாலை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வைப்பாற்றில் கழிவுநீர் கலக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் வருசநாட்டு மலை பகுதியில் இருந்து வைப்பாற்றுக்கு தண்ணீர் வருகிறது.
இந்த தண்ணீர் மூலம் சாத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் ஆற்றின் பல இடங்களில் கழிவுநீர் கலப்பதால் மாசு அடைந்துள்ளது. இதுதொடர்பாக நகராட்சியிடமும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திட மும் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுவாமிநாதன் அமர்வு முன்பு வந்தது.அப்போது வைப்பாற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக விருதுநகர் மாவட்ட கலெக்டர், மாசு கட்டுப்பாட்டு அலுவலர், பொதுப்பணித்துதுறை அதிகாரி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.
- ரூ. 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை பார்வையிட்டார்.
- கழிவுநீர் தடையின்றி தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
திருவாரூர்:
திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரபணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் மாவட்ட அவர் கூறியதாவது:-
திருவாரூர் மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் இயங்கிவரும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மருத்துவக்கல்லூரியில் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் பார்வையாளர்கள், உடன் தங்கும் நபர்கள் தங்குவதற்காக ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டுப்பட்டுள்ள கட்டட த்தினை பார்வையிட்டார்.
பின்னர், மருத்துவ மனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை ஆய்வு செய்தார்.
மருத்துவக்கல்லூரியில் கழிவுநீர் செல்லும் வடிகா லினை பார்வையிட்டு, கழிவுநீர் தடையின்றி தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, திருவாரூர் அரசு மருத்து வக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.
- சுப்பராயக்கவுண்டர் திருமண மண்டபம் அருகே 4-வது வீதிக்கு நேற்று காலை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
- தண்ணீர் பிடிப்பதை நிறுத்தி விட்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 26-வது வார்டுக்குட்பட்ட சாமுண்டிபுரத்தை அடுத்த சுப்பராயக்கவுண்டர் திருமண மண்டபம் அருகே 4-வது வீதிக்கு நேற்று காலை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் வீடுகளில் பாத்திரங்களில் தண்ணீரை பிடித்தனர். அப்போது குடிநீருடன் கருப்பு நிறத்தில் கழிவுநீரும் கலந்து வந்துள்ளது. மேலும் குடிநீரில் துர்நாற்றம் வீசி உள்ளது.
இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் உடனடியாக தண்ணீர் பிடிப்பதை நிறுத்தி விட்டனர். இதுபோன்ற சுகாதாரமற்ற வகையில் குடிநீர் வினியோகம் செய்வதை மாநகராட்சி நிர்வாகம் முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலந்த காரணத்தால் தண்ணீர் சாக்கடை போலாகிவிட்டது.
- நொய்யல் ஆறு மீட்பு இயக்கத்தினரும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் :
கோவை, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்ட மக்களின் விவசாயம், குடிநீர் ஆதாரமாக நொய்யல் ஆறு விளங்கி வந்தது. இந்தநிலையில் சில ஆண்டுகளாக பனியன் கம்பெனிகள் மற்றும் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலந்த காரணத்தால் தண்ணீர் சாக்கடை போலாகிவிட்டது.
இதையடுத்து நொற்றல் ஆற்றை பாதுகாக்க கோரி சமூக ஆர்வலர்கள் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்தனர். மேலும் தமிழக அரசு, சுற்றுப்புற சூழல் மற்றும் வன அமைச்சகத்திடம் புகார் தெரிவித்தனர். தமிழக அரசு சாய ஆலைகளில் இருந்து கழிவுகளை நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அவ்வப்போது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நொய்யல் ஆறு மீட்பு இயக்கத்தினரும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் ஸ்ரீசக்தி தியேட்டர் தரைப்பாலம் அருகே இரண்டு புறத்திலும் இருந்து கால்வாய் வழியாக வெளியேற்றப்படும் கழிவு நீர் அருவி போல ஆற்றில் கலந்து கொண்டிருக்கிறது. இது நகரின் முக்கிய பகுதியாகும். மழைநீர் வெளியேறுவதற்காக தெருக்கள் மற்றும் வீதிகளில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் சாயக்கழிவுகளை திறந்து விடுகின்றனர். பல்வேறு சாயப்பட்டறைகள் மற்றும் வீடுகள், ஓட்டல்களில் இருந்து கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. தனியார் தொழிற்சாலையில் இருந்து கழிவு நீரை வெளியேற்ற கூடாது என்று பாதாளச் சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு கழிவு நீரை வெளியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் மூலம் கழிவுகளை வெளியேற்றாமல் நொய்யல் ஆற்றில் வெளியேற்றுவது எந்த வகையில் சரியானது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த நிலை நீடித்தால் நொய்யல் ஆறு மிகவும் பாழடைய வாய்ப்புள்ளது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- கீழ்புத்துப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மொனயம்பேட்டை கிராமத்தில் சாலையில் கழிவுநீர் குட்டை போல் தேங்கியுள்ளது
- இவற்றால் அந்தப் பகுதியில் கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் கீழ்புத்துப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மொனயம்பேட்டை கிராமத்தில் சாலையில் கழிவுநீர் குட்டை போல் தேங்கியுள்ளது. இவற்றால் அந்தப் பகுதியில் கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- புதுவை உப்பளம் தொகுதிக்குட்பட்ட புஸ்ஸி வீதியில் பாதாள வடிகாலில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு நிரம்பியது,
- கழிவுநீரை உறிஞ்செடுக்கும் நவீன இயந்திரம் மூலம் சுத்தம் செய்து கொடுத்தனர்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக் குட்பட்ட புஸ்ஸி வீதியில் பாதாள வடிகாலில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு நிரம்பியது, இதனால் கழிவு நீர் சாலைகளிலும், சைடு வாய்க்கால்களிலும் நிரம்பி வெளியேறியது.
இது குறித்து அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் சாலை ஓர வியாபாரிகளும், தொகுதி மக்களும் தெரிவித்தனர். உடனே பொதுப்பணித் துறை இளநிலைப் பொறியாளர் சங்கரை அணுகி விரைந்து பாதாள வடிகாலில் அடைப்புகள் நீக்கி கழிவு நீரை உறிந்து எடுக்கும் வாகனத்தை வரும்படிக்கு வலியுறுத்தினார்.
சிறிது நேரத்திலே கழிவுநீரை உறிந்து எடுக்கும் நவீன வாகனம் சம்பவ இடத்திற்கு வந்தது உடனடியாக அங்குள்ள அடைப்புகளை ஊழியர்கள் சரி செய்தனர். பின்னர் கழிவுநீரை உறிஞ்செடுக்கும் நவீன இயந்திரம் மூலம் சுத்தம் செய்து கொடுத்தனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.க்கு நன்றி தெரிவித்தனர். உடன் தொகுதி துணை செயலாளர் ஆரோக்கியராஜ், கிளைச் செயலாளர் லாரன்ஸ், தொழில்நுட்ப அணி அரவிந்த், தி.மு.க. நிர்வாகிகள் மோரிஸ், ரகுமான், சிரஞ்சீவி, கார்த்திக், அருள், மரி ஆகியோர் செய்திருந்தனர்.
- குட்டை அருகில் உறிஞ்சு குழி அமைத்து அதில் விடுவதாகவும் தகவல்கள் வருகிறது.
- கரைப்புதூர் ஊர் குட்டை மாசு அடைந்துவிடும்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தலைவர் பாரதி சின்னப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரைப்புதூர் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் உள்ள ஆதித்யா கார்டன், அண்ணா நகர் பகுதியில் இருந்து வரும் கழிவு நீரை மழை நீர் வடிகால் என்ற பெயரில் கழிவு நீர் கால்வாய் அமைத்து, கரைப்புதூருக்கு நீர் ஆதாரமாக இருந்து வரும் ஊர் குட்டையில் விடுவதாகவும், அல்லது குட்டை அருகில் உறிஞ்சு குழி அமைத்து அதில் விடுவதாகவும் தகவல்கள் வருகிறது. இதனால் கரைப்புதூர் ஊர் குட்டை மாசு அடைந்துவிடும். இந்த குட்டை நீரை நம்பி வாழும் கரைப்புதூர் மக்களுடைய நீராதாரம் பாதிக்கப்படும். உலக தண்ணீர் தினத்தின் மகிமையை மக்களுக்கு விழிப்புணர்வு மூலம் உணர்த்த கிராம சபை கூட்டம் நடத்தி குடிநீர் மற்றும் சுகாதார பிரச்சனைக ளுக்கு தீர்வு காண தமிழக அரசு வழி வகை செய்துள்ளது. கரைப்புதூர் ஊராட்சி ஊர் குட்டையில் இருந்து 500 மீட்டர் தொலை வில் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி பகுதிக்குள் உறிஞ்சு குழிஅமைத்து கரைப்புதூர் மக்களுடைய நீர் ஆதாரத்தை, பாதுகாத்து தரும்படி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பல்வேறு குற்றச் சம்பவங்களும் நடந்துவருகின்றன.
- குப்பைகள், கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர் மாசடைந்து விட்டது.
குடிமங்கலம் :
பி.ஏ.பி., வாய்க்கால் ஓரங்களில் திருட்டுத்தனமாக மது, போதை வஸ்து விற்பது, மரங்களை தீ வைத்து எரிப்பது, வெட்டி கடத்து வது, வெள்ளை வேளாண் மரத்தில் பட்டை உரிப்பது, தண்ணீர் திருட்டு, கொலை செய்துவாய்க்காலில் வீசுவது, தற்கொலை செய்து கொள்வது என பல்வேறு குற்றச் சம்பவங்களும் நடந்துவருகின்றன.வாய்க்காலில்இருந்து மீட்கப்படும்உடல்கள் அழுகி விடுவதால்இறப்பு க்கானமுழுமையான காரணத்தையும் கண்டறிய முடிவதில்லை. போலீசாரும் கண்டு கொள்வதில்லை. வாய்க்கால் முழுக்க உடைந்த மதுபாட்டில்கள், குப்பைகள், கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர்மாசடைந்து விட்டது. கால்நடைகள் கூட குடிக்க தகுதியற்றதாக மாறி வருகிறது.பல இடங்களில் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கழிவுநீர் நேரடியாக வாய்க்காலில் கலக்கப்படுகிறது. சிலர் வீடு, காம்பவுண்ட் சுவர் கட்டி குடியிருந்து வருகின்றனர். செப்டிக் டேங்க் கூட வாய்க்காலில் கட்டப்பட்டு ள்ளது. சில இட ங்களில் வாய்க்காலையே காணவில்லை.பாசனத்தை முறைப்படுத்தவும், வா ய்க்காலை கண்காணிக்கவும் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள், 134 பாசன சபை தலைவர்கள், 876 ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், பாசன சபை தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒன்பது பகிர்மான குழு தலைவர்கள், ஒரு திட்ட குழு தலைவர் உள்ளனர். ஆனாலும் வாய்க்காலை கண்காணிக்கவும் சட்டவிரோத செயல்களை தடுக்கவோ யாரும் குரல் கொடுப்பதில்லை என்ற மனக்குறை விவசாயிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சி நொச்சிப்பாளையம் பிரிவு திருவள்ளுவர் நகர் சாலையில் வசிக்கும் செல்வகுமார் என்பவர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில்,திருவள்ளுவர் நகரில் உள்ள சத்துணவு அங்கன்வாடி மையத்தின் பின் நீண்ட நெடுங்காலமாக பி.ஏ.பி., வாய்க்கால் பயன்பாட்டில் இருந்து வருகிறது.இக்கால்வாய் மேற்புறமுள்ள தனியார் பள்ளி நிர்வாகத்தினர், கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம் கட்ட 2, 3 முறை முயற்சி மேற்கொண்டனர். மக்களின் ஆட்சேபனையை தொடர்ந்து அவர்களது முயற்சி கைவிடப்பட்டது.தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணி செய்கின்றனர். இது குறித்து கலெக்டர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- பூங்கா அருகில் தேங்கிய கழிவுநீரை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.
- ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பட்டணம் காத்தான் முதல்நிலை ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் பட்டணம் காத்தான் ஊராட்சி ஓம்சக்தி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள கட்டிடங்கள் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து சேதுபதி நகர் முதல் தெருவில் ரூ.23.24 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி தொடங்கி உள்ளதை பார்வையிட்டு வரும் மழைக் காலத்திற்கு முன்னதாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தினார்.சேதுபதி நகர் நீரேற்று நிலையம் சீரமைக்கும் பணி மற்றும் குடிநீர் குழாய் புதிதாக நீடிப்பு செய்யும் பணி ரூ.23.19 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள உள்ளதையொட்டி அதற்கான தேர்வு செய்யப்பட்ட இடங்களை பார்வையிட்டார். அனுமதிக்கப்பட்ட இந்த பணியை உரிய காலத்திற்குள் மேற்கொள்ள வேண்டுமென கலெக்டர் அறிவுறுத்தினார்.
பின்னர் பட்டணம் காத்தான் ஊராட்சியில் உள்ள அம்மா பூங்கா பகுதிக்கு சென்று வெளிப்புற பகுதியில் கழிவு நீர் தேங்கியுள்ளதை பார்வையிட்ட கலெக்டர் கழிவுநீரை உடனடியாக அப்புறப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
- சாலையில் கழிவு நீர் ஓடியதால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும்அபாயம் ஏற்பட்டது.
- குப்பைகளை நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி காந்தி ரோட்டில் கழிவு நீர்வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் பெருக்கெடு த்து ஓடியது. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும்அபாயம் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி , துப்புரவு அலுவலர் முருகேசன், சுகாதாரஆய்வாளர்ஜெயச்சந்திரன், பாக்கியநாதன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராட்சச நீர்உறிஞ்சும் மோட்டார் வாகனத்தின் மூலம் சாக்கடை நீரை வெளியேற்றினர்.
திருமணமண்டபம்,வர்த்தகநிறுவனங் களில்சேரும் கழிவு நீர் மற்றும் குப்பைகளைதனியாக செப்டிக் டேங் அமைத்து வெளியேற்ற வேண்டும் என்றும் குப்பைகளை நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். கழிவுநீர் கால்வாயில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.