search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shiva Lingam Worship"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவபெருமானின் அருவ வடிவமாக லிங்கம் வழிபடப்படுகிறது.
    • லிங்கமானது எண்ணற்ற வகைகளில் தேவர்களாலும், மனிதர்களாலும் வணங்கப்படுகிறது.

    சைவ சமயக் கடவுளான சிவபெருமானின் அருவ வடிவமாக லிங்கம் வழிபடப்படுகிறது. இந்த லிங்கமானது எண்ணற்ற வகைகளில் தேவர்களாலும், மனிதர்களாலும் வணங்கப்படுகிறது. அவற்றை சிறு தொகுப்பாக இங்கே பார்க்கலாம்.

    * சுயம்பு லிங்கம் - இறைவன் இச்சைப்படி தானாக தோன்றிய லிங்கம்.

    * தேவி லிங்கம் - தேவி சக்தியால் வழிபடப்பட்ட லிங்கம்.

    * காண லிங்கம் - சிவ மைந்தர்களான ஆனைமுகனும், ஆறுமுகனும் வழிபட்ட லிங்கம்.

    * தைவிக லிங்கம் - மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால் மற்றும் ருத்திரன் ஆகியோராலும், இந்திரனாலும் வழிபடப்பட்ட லிங்கம்.

    * ஆரிட லிங்கம் - அகத்தியர் போன்ற முனிவர்களால் வழிபடப்பட்ட லிங்கம்.

    * ராட்சத லிங்கம் - ராட்சதர்களால் பூஜை செய்யப்பட்ட லிங்கம்.

    * தெய்வீக லிங்கம் - தேவர்களால் பூஜை செய்யப்பட்டு, முனிவர்களின் தவத்தினால் பூமிக்கு வந்த லிங்கம்.

    * அர்ஷ லிங்கம் - ரிஷிகளும், முனிவர்களும் தங்களின் வழிபாட்டிற்காக உருவாக்கிய லிங்கம்.

    * அசுர லிங்கம் - அசுரர்களால் பூஜை செய்யப்பட்ட லிங்கம்.

    * மானுட லிங்கம் - மனிதர்களால் வழிபடப்பட்ட லிங்கம்.

    * மாணி மாய லிங்கம் - இந்திரனால் வழிபடப்பட்ட லிங்கம்.

    * தாமரமய லிங்கம் - சூரியனால் வழிபட்டப்பட்ட லிங்கம்.

    * முக்தி லிங்கம் - சந்திரனால் வழிபடப்பட்ட லிங்கம்.

    * ஹேம லிங்கம் - குபேரனால் வழிபடப்பட்ட லிங்கம்.

    * ஷணிக லிங்கம் - தற்காலிக வழிபாட்டிற்காக மலர், அன்னம், சந்தனம், விபூதி போன்றவற்றைக் கொண்டு உருவாக்கப்படும் லிங்கம்.

    * வர்த்தமானக லிங்கம் - பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் ஆகியவை ஒரே அளவாகவும், இவற்றை விட ருத்ர பாகம் இரு மடங்கு அதிகம் கொண்டதாகவும் அமைந்த லிங்கம்.

    * ஆத்ய லிங்கம் - பிரம்ம பாகம், விஷ்ணு பாகம், ருத்ர பாகம் ஆகியவை அனைத்தும் சம அளவு இருக்கும் லிங்கம்.

    இவற்றில் மானுட லிங்கங்களில் மட்டும்,90 வகையான லிங்கங்கள் உள்ளதாக 'மகுடாகமம்' என்னும் சைவ ஆகமம் கூறுகிறது.


    பஞ்ச லிங்கங்கள்

    சிவபெருமான் சதாசிவமூர்த்தி தோற்றத்தில், சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் ஆகிய தனது ஐந்து முகங்களில் இருந்தும் ஐந்து லிங்கங்களை தோற்றுவித்தார். அவை 'பஞ்ச லிங்கங்கள்' என்று அறியப்படுகின்றன. அந்த லிங்கங்களாவன..

    * சிவ சதாக்கியம்

    * அமூர்த்தி சதாக்கியம்

    * மூர்த்தி சதாக்கியம்

    * கர்த்திரு சதாக்கியம்

    * கன்ம சதாக்கியம்


    திருமூலர் சொல்லும் ஆறு வகை லிங்கங்கள்

    திருமூலர் தனது நூலான திருமந்திரத்தில், ஆறு வகையான லிங்கங்கள் பற்றி குறிப்பிடுகிறார். அவையாவன:- அண்ட லிங்கம், பிண்ட லிங்கம், சதாசிவ லிங்கம், ஆத்ம லிங்கம், ஞான லிங்கம், சிவ லிங்கம் என்பவைகளாகும். இவற்றில் அண்ட லிங்கம் என்பது உலகத்தினைக் குறிப்பதாகும். பிண்ட லிங்கம் என்பது மனிதனுடைய உடலாகும். சதாசிவ லிங்கம் என்பது சிவனும் ஆதி சக்தியும் இணைந்த உருவமாக கொள்வதாகும். ஆத்ம லிங்கம் என்பது அனைத்து உயிர்களையும் இறைவனாக காண்பதாகும். ஞான லிங்கம் என்பது இறைவனின் சொரூப நிலையை குறிப்பதாகும், சிவலிங்கம் என்பது பொதுவான இறை வழிபாட்டிற்கு உரிய குறியீடு.

    ×