search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "silver medal"

    • பாரீஸ் ஒலிம்பிக்ஸில் சோ யாக்கின் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
    • பதக்கம் வென்ற பிறகு போடியத்தில் கொடுத்த அப்பாவித்தனமான ரியாக்ஷனால் யாக்கின் வைரல் ஆனார்.

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024 தொடர் சமீபத்தில் நிறைவுபெற்றது. இந்த போட்டிகளில் ஏராளமான சுவாரஸ்யங்கள், சர்ச்சைகள் அரங்கேறின. அந்த வகையில், ஜிம்னாஸ்டிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை சோ யாக்கின் அப்பாவித்தனமான க்யூட் ரியாக்சன் கொடுத்து இணையத்தில் வைரல் ஆனார்.

    18 வயதான சோ யாக்கின் சில வாரங்களுக்கு முன்பு ஒலிம்பிக் போடியத்தை அலங்கரித்த நிலையில், தற்போது நாடு திரும்பியுள்ளார். ஒலிம்பிக் போட்டி திருவிழா முடிந்த கையோடு சோ யாக்கின், தன் பெற்றோர் நடத்தும் உணவகத்தில் அவர்களுக்கு உதவ துவங்கியுள்ளார். தனது சொந்த ஊரிலேயே இயங்கி வரும் சிறிய உணவகத்தில் சோ யாக்கின், உணவு பரிமாறி வருகிறார்.

    ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நிலையில், உணவகத்தில் சோ யாக்கின் உணவு பரிமாறும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


    • தகுதிநீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டார்.
    • வினேஷ் போகத் விவகாரத்தில் மேல்முறையீடு தீர்ப்பை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    கொல்கத்தா:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். ஆனால் அவரது உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.

    தகுதிநீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டார். தனது தகுதிநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் என்ற வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்தளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.



    இதற்கிடையே, வினேஷ் போகத் விவகாரத்தில் மேல்முறையீடு தீர்ப்பை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம்.

    இந்நிலையில், கொல்கத்தாவில் சவுரவ் கங்குலி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    எனக்கு சரியான விதி தெரியாது, ஆனால் அவள் இறுதிப் போட்டிக்கு வந்தபோது, அவள் சரியாக தகுதி பெற்றிருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன்.

    எனவே நீங்கள் இறுதிப்போட்டிக்குச் செல்லும்போது, அது தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம்.

    தவறாக தகுதிநீக்கம் செய்யப்பட்டாலும், இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்திற்காவது அவர் தகுதியானவர் என தெரிவித்தார்.

    • வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு
    • தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையீடு.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான மல்யுத்த இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    இந்நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

    வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அரையிறுதியில் அவரிடம் 5 - 0 என்ற கணக்கில் மோசமாக தோல்வியடைந்த கியூப வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதி பெற்றுள்ளார்.

    இதனையடுத்து தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

    தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முதலில் கோரிக்கை வைத்திருந்த வினேஷ், தற்போது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    • வெறும் கண் கண்ணாடியுடன் சர்வ சாதாரணமாக 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்ற விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
    • இந்த வெள்ளி பதக்கம் தான் யூசுப் ஒலிம்பிக்கில் வெல்லும் முதல் பதக்கமாகும்.

    துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி நடந்த போட்டியில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்தை வென்றது. இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை துருக்கி ஜோடி யூசுப் டிகேக் - செவ்வல் இலைதா தர்ஹான் வென்றனர்.

     

    ஒரு கையை பாக்கெட்டில் விட்டுக்கொண்டு, ஒற்றைக் கையில் எந்த விதமான சிறப்பு சாதனங்களையும் பயன்படுத்தாமல் வெறும் கண் கண்ணாடியுடன் சர்வ சாதாரணமாக 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்ற விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக அவரே இணையத்தின் நாயகன். ஆனால் அந்த 45 நொடிகளுக்காக தான் தனது வாழ்க்கை முழுவதும் உழைத்ததாக யூசுப் மனம் திறந்துள்ளார்.

     

     

    தனது வெற்றி குறித்து துருக்கி ஊடகத்தில் பேசியுள்ள யூசுப், எனக்கு எந்த சிறப்பு உபகரணங்களும் தேவைப்பட்டதில்லை, எனது நண்பர்கள் கூட அது பற்றி என்னிடம் கேட்பதுண்டு. ஏன், பிற வீரர் வீராங்கனைகளும் என்னிடம் அதுபற்றி கேட்டனர். நான் அவர்களிடம் சொல்வதெல்லாம், நான் இயல்பாக இருக்க விரும்புகிறேன், நான் இயற்கையாகவே ஒரு ஷூட்டர் என்று தெரிவித்துள்ளார்.

     

    யூசுப் துருக்கியின் சிவில் பாதுகாப்புப் படையான Gendarmerie இல் பறிச்சி பெற்றவர் ஆவார். 2001 ஆம் ஆண்டு துப்பாக்கிச்சூடுதல் விளையாட்டில் ஈடுபடத் தொடங்கினார். ISSF உலக சாம்பியன் போட்டிகளில் 5 கோப்பைகளை வென்றுள்ளார். 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இருந்து தற்போது வரை 5 ஒலிம்பிக்கில் அவர் கலந்து கொண்டுள்ளார். இந்த வெள்ளி பதக்கம் தான் இவர் ஒலிம்பிக்கில் வெல்லும் முதல் பதக்கமாகும்.

     

     

    மேலும் 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க உள்ள அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் நிச்சயம் தான் தங்கம் வெல்வேன் என்றுநம்புவதாக யூசுப் தெரிவித்துள்ளார்.

     

    யூசுப் போட்டியின்போது ஒரு கையை பாக்கெட்டுக்குள் வைத்து மற்றொரு கையால் சுட்டது பார்ப்பதற்கு ஸ்டைலாக இருப்பதற்கு மட்டுமல்ல. அதன்மூலம் சுடும்போது அதிக பேலன்ஸை ஏற்படுத்தவும் தான் என்று கூறப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும், யூசுப் இன்றைய இன்டர்நெட் சென்சேஷன் என்பது மிகையாகாது. 

    • மாற்றுத்திறனாளி களுக்கான 21-வது தேசிய தடகள போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் கடந்த வாரம் நடந்தது.
    • 10.18 மீட்டர் தூரம் குண்டு வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    சேலம்:

    மாற்றுத்திறனாளி களுக்கான 21-வது தேசிய தடகள போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் கடந்த வாரம் நடந்தது. இதில் தமிழகத்தில் இருந்து 80-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.

    தமிழக அணியில் இடம்பெற்று இருந்த சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுதிறனாளி பாலாஜி ராஜேந்திரன் என்பவர் குண்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டார்.

    இதில் அவர் 10.18 மீட்டர் தூரம் குண்டு வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனையடுத்து சேலம் வந்த அவருக்கு, சேலம் மாவட்ட பாரா விளையாட்டு சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து இன்று அவர் சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பயிற்சியாளர்கள் சதீஷ்குமார், உலகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தென்னிந்திய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்றார்
    • மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாராட்டு

    ஜோலார்பேட்டை:

    33-வது தென்னிந்திய அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் கடந்த 9-ந் தேதி முதல் துவங்கி 11-ந்தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைப்பெற்றது.

    ஈட்டி எறிதல் போட்டியில் தமிழக அணி சார்பில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அரசு பெண்கள்.

    மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் எல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவரது மகள் கீர்த்திகா பிளஸ் 2 பயிலும் மாணவி பங்கேற்றார்.

    16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 37.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 2-ம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    அதனைதொடர்ந்து பயிற்சி பெற்ற நாட்றம்பள்ளியில் உள்ள எஸ்கேவிஎஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நிர்வாகி மதன் குமார் தலைமையில் வெள்ளி பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு நேற்று சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மேலும் தென்னிந்திய அளவில் ஜூனியர் தேசிய தடகளப் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் பெற்ற மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

    • புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி துணை சபாநாயகர் ராஜவேலு, புதுவை ஓவிய நுண்கலை குழு தலைவர் மாலதிராஜவேலு ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு வெள்ளி வீரவாளை பிறந்தநாள் பரிசாக வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
    • முன்னதாக துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் நெட்ட பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் ரங்கசாமி நீடூடி வாழ அவரது பெயரில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி துணை சபாநாயகர் ராஜவேலு, புதுவை ஓவிய நுண்கலை குழு தலைவர் மாலதிராஜவேலு ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு வெள்ளி வீரவாளை பிறந்தநாள் பரிசாக வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    முன்னதாக துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் நெட்ட பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் ரங்கசாமி நீடூடி வாழ அவரது பெயரில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நெட்டப்பாக்கம், மடுகரை, கரியமாணிக்கம், கரையாம்புத்தூர், கல்மண்ட பம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அன்னதானமும் பல்வேறு இடங்களில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், ஏழை எளிய மக்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிகளில் தொகுதி என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள், அந்தந்த கிராம பகுதி முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நெல்லை பிரிவு மாவட்ட நீச்சல் கழகத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
    • 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் பிரஸ்ட்ரோக் பிரிவுகளில் தலா ஒரு வெள்ளிப்பதக்கம் வென்ற நீச்சல் வீரர் நிதிஷ்சையும், நீச்சல் பயிற்சியாளர் கர்ணனையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    நெல்லை:

    பாளை அண்ணா விளையாட்டரங்கில் தமிழகத்தின் சார்பில் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற இளையோருக்கான அகில இந்திய நீச்சல் போட்டியில், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் நிதிஷ்க்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நெல்லை பிரிவு மாவட்ட நீச்சல் கழகத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு நீச்சல் கழகத்தலைவர் திருமாறன் தலைமை தாங்கினார். செயலர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மண்டல முதுநிலை மேலாளர் வீரபத்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் பிரஸ்ட்ரோக் பிரிவுகளில் தலா ஒரு வெள்ளிப்பதக்கம் வென்ற நீச்சல் வீரர் நிதிஷ்சையும், நீச்சல் பயிற்சியாளர் கர்ணனையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளிப் பதக்கம் வென்றார். #WorldWrestlingChampionship #BajrangPunia #Final
    புடாபெஸ்ட்:

    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றது. இதில் 65 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியாவும், ஜப்பான் வீரர் டகுடோ ஒடோகுரோவுடம் மோதினர்.

    இதில் பஜ்ரங் புனியா சிறப்பாக விளையாடினாலும், ஜப்பான் வீரர் ஒடோகுரோ அவரை சமாளித்தார். இதையடுத்து, இறுதிப் போட்டியில் 16-9 என்ற கணக்கில் ஒடோகுரோ பஜ்ரங் புனியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    உலக மல்யுத்தத்தில் இரண்டாவது முறையாக இந்திய வீரர் பஜ்ரங் புனியா பதக்கம் வென்றுள்ளார். இவர் ஏற்கனவே 2013-ம் ஆண்டில் வெண்கலப் பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. #WorldWrestlingChampionship #BajrangPunia #Final
    ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெள்ளி பதக்கங்களை பெற்ற அவினாசி வீரருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #AsianGame2018 #Tharun
    திருப்பூர்:

    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் ஜகர்தா மற்றும் பாலம்பேங் நகரங்களில் நடந்தது. இந்த போட்டியில் 400 மீட்டர் ஓட்டம் மற்றும் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் இந்திய வீரர் தருண் (வயது 21) கலந்துகொண்டு 2 வெள்ளி பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தார். இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள ராவுத்தம்பாளையத்தை சேர்ந்தவர். தருணின் தந்தை அய்யாசாமி. தருண் 4-ம் வகுப்பு படிக்கும் போது இறந்து விட்டார். தாயார் பூங்கொடி (46). இவர் கணியாம்பூண்டி அருகே உள்ள மைக்ரோ கிட்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    தருணின் தங்கை சத்தியா (19). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் கணினி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். தருண் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தனது தாயார் வேலை செய்து வரும் பள்ளியிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு திருப்பூர் ராக்கியாபாளையத்தில் உள்ள செஞ்சுரி மெட்ரிக்குலேசன் பள்ளியிலும் படித்தார். தற்போது மங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டு படித்து வருகிறார்.



    பள்ளியில் படிக்கும் போதே தடகள வீரராக உருவாகிய தருண் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு பதங்கங்களை வென்றுள்ளார். மேலும், பிளஸ்-2 படிக்கும் போது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். இந்த நிலையில் தற்போது நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

    வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்த அவினாசி வீரர் தருண் இந்தோனேசியாவில் இருந்து சென்னை வந்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து ரெயில் மூலம் நேற்று அதிகாலை 4.45 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார். சொந்த ஊருக்கு ரெயிலில் வந்து இறங்கிய அவரை, அவரது தாயார் பூங்கொடி, தங்கை சத்தியா மற்றும் குடும்பத்தினர், பயிற்சியாளர் அழகேசன் மற்றும் விளையாட்டு வீரர்கள் கை தட்டியும், பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

    தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் பலர் தருணை தூக்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன் பின்னர் அங்கிருந்து ராவுத்தம்பாளையத்திற்கு காரில் தருண் புறப்பட்டு சென்றார்.

    இதன் பின்னர் காலை 10.30 மணி அளவில் அவினாசி, ராவுத்தம்பாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் நல்லது நண்பர்கள் அறக்கட்டளையினர் சார்பில், அவினாசி பஸ் நிலையத்தில் தருணுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது அங்கு வந்த தருணுக்கு மேள தாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்தும், பள்ளி மாணவ-மாணவிகளின் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு கொடுத்து, மலர் கிரீடம் அணிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தருணுக்கு, வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து பாராட்டினர். மேலும், பலர் மாலையும் அணிவித்தனர்.

    அவினாசி பஸ் நிலையத்திற்கு தருண் வந்ததும், அவரை பின் தொடர்ந்து வந்த பொதுமக்கள் பலரும் தருணுடன் ‘செல்பி’ எடுக்க முயற்சி செய்தனர். இதை அறிந்த தருண் செல்பி எடுப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அவர்களுடன் புன்னகையோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    இதன் பின்னர் அவினாசி பஸ் நிலையத்தில் இருந்து வாகனத்தில் தருண் அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு மேளம், தாளங்களுடன் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். அப்போது வழியெங்கும் பொதுமக்கள் பலர் தருணுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்றதும் அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் தருணுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதன் பின்னர் கோவிலுக்குள்ளே சென்றதும், அவருக்கு பரிவட்டமும் கட்டி மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் தருண் பல வெற்றிகள் பெற வேண்டும் என அவரது பெயரில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கோவிலில் சாமிதரிசனம் செய்துவிட்டு, தருண் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் புறப்பட்டு சென்றார். கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலரும் தருணுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.  #AsianGame2018 #Tharun
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் டூட்டி சந்த் வெள்ளிப் பதக்கம் வென்றார். #AsianGames2018 #DuteeChand
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுத் தொடரில், இன்று பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில், சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனை டூட்டி சந்த் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். மாலையில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் இவர் பந்தய தூரத்தை 23.20 வினாடிகளில் கடந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 

    இப்போட்டியில் பஹ்ரைன் வீராங்கனை ஒடியாங் எடிடியாங் தங்கப் பதக்கமும் (22.96 வினாடி), சீனாவின் வெய் யோங்லி வெண்கலப் பதக்கமும் (23.27 வினாடி) வென்றனர். டூட்டி சந்த் முன்னதாக 100 மீட்டர் ஓட்டத்திலும் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

    இந்த போட்டியின் முடிவில்,  இந்தியா 9 தங்கம், 20வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 52 பதக்கங்களுடன் 9 இடத்தில் நீடிக்கிறது. #AsianGames2018 #DuteeChand
    ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தருண் அய்யாசாமிக்கு ஊக்கத்தொகையாக 30 லட்ச ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #AsianGames2018 #AyyasamyDharun #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தனது பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. இந்திய வீரர்களின் அபார திறைமையால் தங்கம், வெள்ளி, வெங்கலம் என இந்தியாவுக்கு பதக்கங்கள் குவிகின்றன.

    ஆசிய போட்டியில் வென்று பதக்கம் பெற்ற தமிழக வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஆடவருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமிக்கு 30 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அறிக்கையில், வெற்றி வீரர் தருண் அய்யாசாமி கடந்த 2016-ம் ஆண்டு போட்டியில் தங்கம் வென்றதையும் சுட்டிக்காட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு பாராட்டு கடிதம் எழுதியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தருணின் வெற்றிக்கு பெருந்துணையாக இருந்த அனைவருக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்ட முதல்வர், தருண் அய்யாசாமியின் எதிர்கால வெற்றிக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக, ஸ்குவாஷ் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் சவரல் கோஷல், தீபிகா கார்த்திக், ஜோஸ்னா சின்னப்பா ஆகியோருக்கு தலா 20 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. #AsianGames2018 #AyyasamyDharun #TNCM #EdappadiPalaniswami
    ×