search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100003"

    வியாசர்பாடியில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாத 44 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    பெரம்பூர்:

    வியாசர்பாடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் இன்று காலை, அம்பேத்கர் கல்லூரி அருகே இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தார்.

    மோட்டார் சைக்கிளின் பின்னால் ஹெல்மெட் அணியாமல் உட்கார்ந்திருந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் 44 பேருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது. ஹெல்மெட் அணியாதவர்களுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதித்தார். குடிபோதையில் வண்டி ஓட்டியவருக்கு ரூ. 2,500 அபராதம் விதிக்கப்பட்டது.

    ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கப்பட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவிட்டார்.

    அதன்பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் அறிவுரையின்படி ராசிபுரம் புதிய பஸ் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பூபதி, செங்கோடன் ஆகியோர் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிந்து செல்வதால், விபத்தில் மரணத்தை தவிர்க்கலாம் என்பது குறித்தும், வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டிச் செல்வது பற்றியும், விபத்தில் உயிர் பலியை தடுக்க இரு சக்கர வாகனத்தை ஓட்டுச் செல்பவர்களின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். 
    மோட்டார் சைக்கிளை ஓட்டுபவரும், உடன் செல்வோரும் கட்டாயம் ‘ஹெல்மெட்’(தலைகவசம்) அணியாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்பவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறியிருந்தார்.

    இதையடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்கள், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 129 மற்றும் அரசாணை எண் 22.02.2007-ன் படி இருசக்கர வாகன ஓட்டுனர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர் ஆகிய இருவரும் ‘ஹெல்மெட்’ கட்டாயமாக அணிய வேண்டும்.

    இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ‘ஹெல்மெட்’ அணியாதவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. எனினும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் ‘ஹெல்மெட்’ அணியாமல் இருப்பது காணப்படுகிறது.

    எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதியும், சாலை விபத்துகளில் ‘ஹெல்மெட்’ அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும்.

    ‘ஹெல்மெட்’ அணியாமல் வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் ஆகிய இருவர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    அம்மாபேட்டையில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    அம்மாபேட்டை:

    இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

    போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன சேதனையில் ஈடுபட்டு ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    தற்போது இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    அம்மாபேட்டையில் இன்று காலை பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் மாலதி தலைமையில் வாகன சோதனை நடந்தது.

    இதில் லைசென்சு இல்லாமல், வாகன உரிமம் இல்லாமல், ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் எப்.சி. புதுப்பிக்கப்படாத ஆட்டோக்களும் சோதனையிடப்பட்டன. இதில் 2 ஆடடோக்கள் எப்.சி. புதுப்பிக்காமல் இயக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்ட அபராதம் விதிக்கப்பட்டது.

    மொத்தம் ரூ.32 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது. #Helmet #tamilnadu
    கோவை மாநகரில் கடந்த 2 நாட்களில் மட்டும் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 2 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #Helmet #Tamilnadu
    கோவை:

    இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்பவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதலே கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதி என மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து சென்றவர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.

    கோவை மாநகரில் கடந்த 2 நாட்களில் மட்டும் 1400 பேருக்கு ஹெல்மெட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் 760 பேர் ஆவர். பின்னால் அமர்ந்திருந்தவர்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் 640 பேர் ஆவர்.

    மாவட்டத்தின் புறநகர் பகுதியில் கடந்த 2 நாட்களில் மட்டும் 600 பேருக்கு ஹெல்மெட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் 280 பேர் ஆவர். பின்னால் அமர்ந்திருந்தவர்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் 320 பேர் ஆவர். மொத்தத்தில் 2 நாட்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    கோவை முழுவதும் 3-வது நாளாக இன்றும் தீவிர வாகன சோதனை நடந்தது. மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவுப்படி போக்குவரத்து போலீசார் கோவை அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின்பேரில் சூலூர், பொள்ளாச்சி, கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம், வால்பாறை என மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.

    இதேபோல காரில் செல்பவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. காரை ஓட்டுபவரும், டிரைவர் இருக்கை அருகே முன்னால் இருப்பவரும், பின்னால் இருப்பவர்களும் அணிந்திருக்கிறார்களா? என சோதனை நடத்தி வருகின்றனர்.

    காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். #Helmet #Tamilnadu
    அரியலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற 161 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    அரியலூர்:

    இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிந்து செல்லாத காரணத்தால் ஏற்பட்ட விபத்தில் ஏராளமான பேர் இறந்துள்ளனர். இதில் தொடர்ந்து உயிர்பலி அதிகரித்து வருகிறது. மோட்டார் வாகன சட்ட பிரிவு 129–ன்படி இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பதனை சென்னை உயர்நீதிமன்றமும் பலமுறை அறிவுறுத்தி உள்ளது. 

    இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றவர்கள் மீது சட்ட பிரிவு 129–ன் கீழ் 161 பேர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் சட்டப்படி போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவல் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

    பெரம்பலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வெண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் மீது பிரிவு 129 மோட்டார் வாகன சட்டப்படி போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    மோட்டார் சைக்கிளில் செல்பவர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என்று மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டு உள்ளார்.

    மதுரை:

    தமிழகத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய வேண்டியது அவசியம். அணியவில்லை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்ற நிலை இருந்தது.

    இந்தநிலையில் திருச்சியில் நடந்த சம்பவத்திற்கு பின்னர் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவரை மடக்கி பிடிப்பதில் போலீசார் அக்கறை காட்டவில்லை.

    இந்தநிலையில் ‘மோட்டார் சைக்கிளில் செல்பவர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம்’ என்று மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டு உள்ளார்.

    இதுதொடர்பாக மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது வாகன ஓட்டுநர் மட்டுமின்றி இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து இருப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.

    அவ்வாறு தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டினாலோ, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றாலோ மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள தாசில்தார் அலுவலக ஊழியர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாமில் அரசு ஊழியர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்து பங்கேற்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள தாசில்தார் அலுவலக ஊழியர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்க கூட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது.

    தாசில்தார் மதன் குப்புராஜ் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்இன்ஸ்பெக்டர் கோவிந்தன், மண்டல துணை தாசில்தார் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி தாலுக்காவில் பணியாற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் தாசில்தார் அலுவலக ஊழியர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது தாசில்தார் மதன் குப்புராஜ் உள்பட அனைவரும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் தலையில் ஹெல்மெட் அணிந்தவாறு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    அரசு ஊழியர்கள், சாலை விதிகளை எப்படி கடைபிடிக்கின்றனர்? அது குறித்து அவர்களின் மனநிலை என்ன? என தனித்தனியே ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்டறியப்பட்டது. அதில் தவறு இருப்பின் அவை, அதிகாரிகளால் சுட்டி காட்டப்பட்டது.

    மேலும் சாலை பாதுகாப்பில் விழிப்புணர்வு என்பது எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்து அதிகாரிகள் செயல்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்தனர். முன்னதாக வருவாய் ஆய்வாளர் கந்தசாமி வரவேற்றார்.

    முடிவில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாலாஜி நன்றி கூறினார்.
    ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் போலீசார் மீது நாளை முதல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. #Helmet #Police
    சென்னை:

    தமிழகத்தில் விபத்துக்களை குறைக்கும் வகையில் 2015-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதும், கார் டிரைவர்கள் சீட் பெல்ட் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டது.

    போலீசார் அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்தும், லைசென்சை ரத்து செய்தும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் போலீசார் 75 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக டி.ஜி.பி. மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் புகார்கள் சென்றன. எனவே ஒழுங்கீனமான போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர் போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-


    தமிழக போலீசில் 1 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது இல்லை. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் போலீசார் மீது நாளை முதல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் காலை 7 மணிக்கு ரோல்காலில் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து வந்துள்ளேன் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும்.

    ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வரும் போலீசாரிடம் வாகன சாவியை வாங்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசார் ஹெல்மெட் வாங்கி வந்த பிறகே அவரை பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Helmet #Police
    இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஊட்டியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போலீசார் அறிவுரை கூறினர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா உத்தரவிட்டார். அதன்படி, ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து போலீசார் கூறியதாவது:-

    கல்லூரி மாணவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வருகிறார்கள். எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கக் கூடாது. போலீசாரின் சோதனையில், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இயக்குவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.

    தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி சாலைகளில் குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. செல்போன் பேசுவதில் கவனம் இருந்தால், எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படக்கூடும். குடிபோதையில் வாகனங்களை எக்காரணத்தை கொண்டும் இயக்கக்கூடாது. முக்கிய சந்திப்பு பகுதிகளில் மாணவர்கள் சாலையை கடக்கும் போது இருபுறமும் வாகனங்கள் வருகிறதா? என்பதை நன்கு கவனித்து செல்ல வேண்டும்.

    கார்களை இயக்கும் போது சீட் பெல்ட் அணிய வேண்டும். வாகனங்கள் வளைவுகளில் திரும்பும் போதும், நிறுத்தும் போதும் சிக்னல் செய்ய வேண்டும். அப்போது தான் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் அதற்கு ஏற்றவாறு வாகனத்தை இயக்க முடியும். பள்ளி மாணவர்கள் கையில் தான் எதிர்காலம் உள்ளது. மாணவர்களாகிய நீங்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும்.

    மேலும் உங்களது பெற்றோர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினருக்கு போக்குவரத்து விதிகள் குறித்து எடுத்துக்கூற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 
    குழந்தைகள்-மனைவியை மனதில் கொண்டு இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் அறிவுரை வழங்கினார்.
    தஞ்சாவூர்:

    இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மேட் அணிய வேண்டும். கார் போன்ற வாகனங்களில் ஓட்டுனர்கள் கட்டாயம் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்றுகாலை 10 மணி முதல் 12 மணி வரை போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    தஞ்சை பெரியகோவில் புதுஆற்றுப்பாலம் அருகே தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் மேற்பார்வையில் வாகன தணிக்கை நடைபெற்றது. அப்போது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை அழைத்து எதற்காக ஹெல்மெட் அணியாமல் வந்தீர்கள் என போலீசார் கேள்வி எழுப்பினர்.

    அப்போது அவர்கள், தரமான ஹெல்மெட் கிடைப்பதில்லை. முடி உதிரும் என்றும், அவசரத்தில் மறந்துவிட்டு வந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்து போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் பேசும்போது, நமக்கு உயிர் தான் முக்கியம். முடி அல்ல. அவசரத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்துவிட்டதாக இனிமேல் கூறக்கூடாது. குடும்ப தலைவனாக, தலைவியாக, அண்ணனாக, தம்பியாக பல நிலைகளில் நீங்கள் உங்கள் குடும்பத்தில் இருக்கலாம்.

    உங்களது குழந்தைகள்-மனைவி மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களை மனதில் கொண்டு இருசக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள். விபத்தில் உங்களுக்கு ஏதாவது நேரிட்டால் குடும்பத்தை யார்? பார்த்து கொள்வார்கள். விபத்து ஏற்பட்டால் தலையில் தான் முதலில் அடிபடும். தஞ்சை மாவட்டத்தில் கடந்த 5 மாதத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக 25 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது இலக்கு அல்ல. உங்களை ஹெல்மெட் அணிய வைக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். உங்களது நன்மைக்காக தான் சொல்கிறோம். அவசரம் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது என்று கூறினார்.

    பின்னர் அவர், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டியவர்களை அழைத்து பாராட்டினார். மேலும் ஹெல்மெட் அணிந்து தலைமுறையை காப்பீர். ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டாதீர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.

    முன்னதாக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் நிருபர்களிடம் கூறும்போது, இருசக்கர வாகனங்களால் தான் 75 சதவீத விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த போலீஸ்காரர்கள் முதல் டி.ஐ.ஜி. வரை எல்லா நிலையில் உள்ளவர்கள் வாகன தணிக்கையில் 2 மணிநேரம் ஈடுபட்டனர். தினமும் வாகன தணிக்கை நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. தொடர் நடவடிக்கையின் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் 50 சதவீதமும், திருவாரூர், நாகை மாவட்டங்களில் 32 சதவீதமும் விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் விபத்துகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்று கூறினார். 
    போலீசாரும், போலீஸ் அதிகாரிகளும் கண்டிப்பாக ஹெல்மெட், சீட்பெல்ட் அணிய வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர். #Helmet #Seatbelt
    சென்னை:

    சென்னை கொரட்டூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 51 லட்சத்து 47 ஆயிரம் மோட்டார் வாகனங்கள் உள்ளன. அதில் 2 கோடியே 11 லட்சத்து 44 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள். அதிக விபத்தில் சிக்குபவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தான். பலியானவர்களில் 70 முதல் 90 சதவீதம் பேர் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமலும், காரில் ‘சீட் பெல்ட்’ அணியாமலும் சென்றவர்கள் தான்.

    2016-ம் ஆண்டு ஹெல்மெட் அணியாததால் விபத்தில் 4,091 பேர் இறந்துள்ளனர். அதன்பின்னர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு எடுத்த கடும் நடவடிக்கையின் காரணமாக 2017-ம் ஆண்டு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 2,956 ஆக குறைந்துள்ளது.

    மோட்டார் வாகன சட்டப்படி மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள், பின்னால் உட்கார்ந்திருப்பவர்கள் ஆகிய இருவரும் கண்டிப்பாக ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும். அதேபோல காரில் டிரைவர் மட்டுமல்ல, பக்கவாட்டில், பின்னால் உட்கார்ந்திருப்பவர்கள் என்று அனைவரும் கண்டிப்பாக ‘சீட் பெல்ட்’ அணியவேண்டும்.

    இந்த சட்ட விதிகளை போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக பின்பற்றினால் விபத்தில் உயிரிழப்பு மிகப்பெரிய அளவில் குறையும். அதனால், இந்த சட்டப்பிரிவையும், விதிகளையும் தீவிரமாக அமல்படுத்தக்கோரி போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர், போக்குவரத்து ஆணையர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோரிடம் கடந்த மார்ச் 29-ந்தேதி மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் கோரிக்கையை பரிசீலிக்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் கூறியதாவது:-

    ஹெல்மெட் சட்டத்தை அதிகாரிகள் தீவிரப்படுத்தியதால் 2017-ம் ஆண்டு வாகன விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது என்று கூறியுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், விபத்தில் மனித உயிர் பலியாகவில்லை என்ற நிலை வரவேண்டும் என்று மனுதாரர் நினைக்கிறார்.

    இதற்காக போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட வேண்டும். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.

    கேரளாவில் கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள், நீதிபதி வாகனங்களுக்கு போக்குவரத்து விதிமீறியதாக கூறி போலீசார் அபராதம் விதித்துள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் பொதுமக்கள் மட்டுமல்ல, போலீஸ்காரர்களும் ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்கின்றனர். கார்களில் ‘சீட் பெல்ட்’ அணியாமல் போலீஸ் அதிகாரிகள் செல்கின்றனர்.

    இதுபோன்ற நிலை மாறவேண்டும். போலீஸ்காரர்கள், போலீஸ் அதிகாரிகள் கண்டிப்பாக ‘ஹெல்மெட்டும்’, ‘சீட் பெல்ட்டும்’ அணிந்துகொண்டு தான் மோட்டார் வாகனங்களை ஓட்டவேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    கூடுதல் அரசு பிளடர் இ.மனோகரன், இந்த சட்டத்தையும், விதிகளையும் போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்துகின்றனர். அடிக்கடி திடீர் சோதனைகளை நடத்துகின்றனர் என்று கூறினார்.

    தற்போது நவீன வாகனங்களில் முகப்பு விளக்கின் வெளிச்சம் அதிகமாக உள்ளது. அந்த முகப்பு விளக்கில் கருப்பு ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்படுவது இல்லை. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு மிகப்பெரிய இடையூறு ஏற்படுகிறது.

    புதிதாக தயாரிக்கப்படும் மோட்டார் சைக்கிள்களில் பகல் நேரங்களில் முகப்பு விளக்கு எரிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை இயக்கியவுடன் தானாக முகப்பு விளக்கு எரிவதுபோல புதிய வண்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட விளக்குகளில் பொருத்தப்படும் பல்புகள் சர்வதேச தரத்துடன் இருக்க வேண்டும்.

    ஆனால், சிலர் சந்தையில் இருந்து கலர் கலராக எல்.இ.டி. பல்புகளை வாங்கி முகப்பு விளக்கில் பொருத்தி போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதை தடுக்க போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எனவே இதுதொடர்பாக எடுத்துள்ள, இனி எடுக்கப்போகின்ற நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர், போக்குவரத்துத்துறை ஆணையர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் வருகிற 27-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர். 
    ×