என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 100104
நீங்கள் தேடியது "ரம்ஜான்"
ரம்ஜான் மாதத்தை மதிக்காத பாகிஸ்தான் ராணுவம் எல்லைப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா முப்தி குற்றம்சாட்டியுள்ளார். #Pakistanfiring #Mehbooba
ஜம்மு:
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரா, ஆர்னியா உள்ளிட்ட எல்லைப்பகுதி காவல் சாவடிகளின்மீது பாகிஸ்தான் படைகள் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவை சேர்ந்த எல்லை பாதுக்காப்பு படைவீரர் மற்றும் பொதுமக்களில் 4 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா முப்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதியை நிலைநாட்ட இந்தியா எடுத்துவரும் முயற்சிகளுக்கு பாகிஸ்தான் மதிப்பளித்து ஒத்துழைக்க வேண்டும்.
ரம்ஜான் நோன்பு மாதம் என்பதால் இருதரப்பு தாக்குதல்களை நிறுத்திகொள்ள வேண்டும் என்னும் நிலைப்பாட்டை இந்தியா முன்னெடுத்துள்ளது. ஆனால், ரம்ஜான் மாதத்துக்கு பாகிஸ்தான் மதிப்பளிக்கவில்லை என்பதைதான் இன்றைய தாக்குதல் காட்டுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள கனூர் கிராமத்தின்மீது இந்திய படைகள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள பாகிஸ்தான் அரசு இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய தூதரை அழைத்து இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Pakistanfiring #Mehbooba
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரா, ஆர்னியா உள்ளிட்ட எல்லைப்பகுதி காவல் சாவடிகளின்மீது பாகிஸ்தான் படைகள் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவை சேர்ந்த எல்லை பாதுக்காப்பு படைவீரர் மற்றும் பொதுமக்களில் 4 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா முப்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதியை நிலைநாட்ட இந்தியா எடுத்துவரும் முயற்சிகளுக்கு பாகிஸ்தான் மதிப்பளித்து ஒத்துழைக்க வேண்டும்.
ரம்ஜான் நோன்பு மாதம் என்பதால் இருதரப்பு தாக்குதல்களை நிறுத்திகொள்ள வேண்டும் என்னும் நிலைப்பாட்டை இந்தியா முன்னெடுத்துள்ளது. ஆனால், ரம்ஜான் மாதத்துக்கு பாகிஸ்தான் மதிப்பளிக்கவில்லை என்பதைதான் இன்றைய தாக்குதல் காட்டுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள கனூர் கிராமத்தின்மீது இந்திய படைகள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள பாகிஸ்தான் அரசு இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய தூதரை அழைத்து இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Pakistanfiring #Mehbooba
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளுக்கு இலவசமாக 5 ஆயிரம் டன் அரிசியை வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து இறைவனை வழிபடுவது வழக்கம். இந்த மாதம், இஸ்லாமியர்களின் புனித மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளிலிருந்து வருடந்தோறும் அரசு சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டும் இஸ்லாமிய அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று, தமிழகம் முழுவதும் உள்ள 3000 மசூதிகளுக்கு, சுமார் 5 ஆயிரத்து 145 டன் அளவிலான அரிசியை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #CMpalaniswami #freericetomosques
ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து இறைவனை வழிபடுவது வழக்கம். இந்த மாதம், இஸ்லாமியர்களின் புனித மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளிலிருந்து வருடந்தோறும் அரசு சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள மசூதிகளுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டும் இஸ்லாமிய அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று, தமிழகம் முழுவதும் உள்ள 3000 மசூதிகளுக்கு, சுமார் 5 ஆயிரத்து 145 டன் அளவிலான அரிசியை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #CMpalaniswami #freericetomosques
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X