search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறிசேனா"

    இலங்கை அரசியல் களத்தில் ஸ்திரமற்ற நிலை தோன்றியுள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சிக்குள் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. #MaithripalaSirisena #RanilWickremesinghe #MahindaRajapakse

    கொழும்பு:

    இலங்கை அரசியல் களத்தில் ஸ்திரமற்ற நிலை தோன்றியுள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சிக்குள் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    கட்சி தலைவரான ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அவரது கட்சிக்குள் முரண்பாடு ஏற்படுள்ளது.

    இந்தநிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசாவை தலைவராக நியமிக்க உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டி பெரும் பான்மையை நிரூபித்துக் காட்ட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன்மூலம் சஜித்தை பிரதமராக்க முடிவு செய்துள்ளனர்.


    இந்த யோசனையினால் தான் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் சஜித் குழுக்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக அதிபர் சிறிசேனாவுக்கு, ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே கருத்து வேறுபாடு தீவிரம் அடைந்துள்ளது.

    இக்காலகட்டத்தில் மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்கும் பட்சத்தில் சுமூகமாக செயல்படுவதில் சிக்கல் உள்ளது. எனவே சஜித் பிரேமதாசா தலைமையில் பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் அரசு அமைக்க முடியும். ஐக்கிய தேசிய கட்சி எம்.பி.க்கள் நம்புகின்றனர்.

    அதேநேரத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கும் சிறிய கட்சிகள் அதுவரை சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கவில்லை. கட்சி தலைவராக ரணில் விக்கிரமசிங்கே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என கருதுகின்றனர். #MaithripalaSirisena #RanilWickremesinghe #MahindaRajapakse

    தமிழ்தேசிய கூட்டணி ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் ராஜபக்சேவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. #MaithripalaSirisena #RanilWickremesinghe #MahindaRajapakse

    கொழும்பு:

    தமிழகம் அருகே நான்கு புறமும் கடலால் சூழப்பட்டுள்ள இலங்கையில் இந்தியா போல் அல்லாமல் அதிபர் ஆட்சி முறை கடை பிடிக்கப்படுகிறது.

    பொதுத்தேர்தலில் அதிபர் (ஜனாதிபதி) நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். பின்னர் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெஜாரிட்டி எம்.பி.க்கள் அடிப்படையில் பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார்.

    கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்சேயை எதிர்த்து இலங்கை சுதந்திரா கட்சியைச் சேர்ந்த சிறிசேனா போட்டியிட்டு வெற்றி பெற்றார். சிறிசேனாவுக்கு ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு அளித்தது.

    அதன்பிறகு அதே ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரம சிங்கே கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றதால் சிறிசேனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் ஆனார். அவர் கூட்டணி மந்திரிசபை அமைத்தார்.

    சமீபகாலமாக அதிபர் சிறிசேனா-பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சே கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. மேலும் ரணில் விக்கிரமசிங்கே மீது பல்வேறு முறைகேடுகள் கூறப்பட்டன.

     


     

    இதனால் ரணில் விக்கிரமசிங்கே மீது இலங்கை பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாதீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் ரணில் விக்கிரமசிங்கேயை எதிர்த்து சிறிசேனா கட்சி எம்.பி.க்களும், ராஜபக்சே கட்சி எம்.பி.க்களும் வாக்களித்தனர் என்றாலும் ரணில் விக்கிரமசிங்கே மெஜாரிட்டி எம்.பி.க்கள் ஆதரவுடன் வெற்றிபெற்றார். இந்த வெற்றி காரணமாக சிறிசேனா- ரணில் இடையேயான மோதல் மேலும் வெடித்தது. ரணில் தன்னிச்சையாக நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்தார். அதற்கு சிறிசேனா முட்டுக்கட்டை போட்டார்.

    இந்தநிலையில் அதிபர் சிறிசேனா தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கேயை அதிரடியாக நீக்கினார். அவருக்கு பதில் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இது இலங்கை அரசியலில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    சிறிசேனா தன்னை நீக்கியது செல்லாது என்றும் நான் இன்னும் பிரதமர் பதவியில் நீடிக்கிறேன் என்றும் ரனில் விக்கிரம சிங்கே தெரிவித்தார். இது தொடர்பாக சிறிசேனாவுக்கு கடிதமும் எழுதினார். மேலும் பாராளுமன்றத்துக்குள் ரணில் நுழைய முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கேக்கு மெஜாரிட்டி ஆதரவு இருப்பதால் அவர் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி வெற்றிபெற்று விடக் கூடாது என்பதற்காக அதிபர் சிறிசேனா தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்றத்தை வருகிற 16-ந்தேதி வரை முடக்கி உத்தரவிட்டுள்ளார்.

    நவம்பர் 16-ந்தேதி வரை பாராளுமன்றம் முடக்கப்பட்டு இருப்பதால் அதன்பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியும். குதிரைபேரம் மூலம் எம்.பி.க் களை இழுப்பதற்கு வசதியாக சிறிசேனா 20 நாட்களுக்கு பாராளுமன்றத்தை முடக்கி வைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

    இதனால் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி கூடுவதாக இருந்த பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும்பான்மை பலத்துடன் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேயை அதிபர் சிறிசேனா நீக்கியது அரசியல் சட்ட சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே பாராளுமன்றத்தை எப்போது கூட்டினாலும் ரணில் விக்கிரமசிங்கே வெற்றிபெறும் வாய்ப்பு இருப்பதாகவும் ராஜபக்சே வெற்றிபெறுவது கடினம் என்றும் தெரியவருகிறது.

     


     

    இலங்கை பாராளுமன்றத்தில் மொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கை 225. இதில் மெஜாரிட்டிக்கு 113 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.

    ரணில் விக்கிரமசிங்கே கட்சிக்கு 106 எம்.பி.க்கள் உள்ளனர். சிறிசேனா-ராஜபக்சே கூட்டணியில் 95 எம்.பி.க்களே உள்ளனர். ரணில் விக்கிரமசிங்கே வெற்றிபெற இன்னும் 7 எம்.பி.க்கள் ஆதரவே தேவைப்படுகிறது.

    தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 எம்.பி.க்கள் உள்ளனர். ராஜபக்சேவை கடுமையாக எதிர்க்கும் அவர்கள் இந்தியாவுடன் நல்ல நட்புடன் இருக்கும் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    மேலும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதவிர மனோகணேசன், பழனி திகம்பரம், ரி‌ஷத் பதியுதீன் ஆகிய தமிழர் மற்றும் முஸ்லிம் கட்சி எம்.பி.க்களும் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் ரணில் வெற்றிபெறும் நிலை உள்ளது. அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவாரா? அல்லது பாராளுமன்றம் கலைக்கப்படுமா? என்ற பரபரப்பு நிலவுகிறது.

    ராஜபக்சேவை பிரதமராக அங்கீகரிப்பதா? அல்லது ரணில் விக்கிரமசிங்கே தொடர்வதை அனுமதிப்பதா? என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் பாராளுமன்ற சபாநாயகர் ஜெய சூர்யாவிடம் உள்ளது. அவர் சிறிசேனா ஆதரவாளராக இருந்தார்.

    ஆனால் நேற்று அவர் ரணில் விக்கிரமசிங்கே கோரிக்கையை ஏற்று பாராளுமன்றத்தை கூட்ட முடிவுசெய்து இருந்தார். இதை அறிந்த சிறிசேனா பாராளுமன்றத்தை முடக்கி உத்தரவிட்டார். இதனால் சபாநாயகர் ரணில் விக்கிரமசிங்கே ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் வி‌ஷயத்தில் அவர் என்ன முடிவு எடுப்பார் என்பதை இலங்கை அரசியல் தலைவர்கள் எதிர்நோக்கி உள்ளனர். #MaithripalaSirisena #RanilWickremesinghe #MahindaRajapakse

    இலங்கை அதிபர் சிறிசேனாவை கொல்ல சதி திட்டம் தீட்டியது குறித்த மனுவை விசாரித்த கோர்ட்டு சீன நிறுவனமான குயாவேயின் உதவியுடன் தகவல்களை மீட்டெடுக்க அனுமதி வழங்கியுள்ளது. #MaithripalaSirisena #RAW #assassinationplot
    கொழும்பு:

    இலங்கை போலீஸ் துறைக்கு ரகசிய தகவல் தெரிவிக்கும் உளவாளி நமல் குமாரா என்பவர் கடந்த மாதம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா மற்றும் ராஜபக்சேவின் தம்பியும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சேவையையும் கொல்ல டெலிபோனில் சதி திட்டம் தீட்டப்பட்டது. அது குறித்த தகவல்களை உயர் போலீஸ் அதிகாரியிடம் கேட்டேன் என தெரிவித்தார்.

    இது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த எம்.தாமஸ் என்பவர் கடந்த மாதம் செப்டம்பர் 22-ந் தேதி கைது செய்யப்பட்டார். எனவே அதிபர் சிறிசேனாவை கொலை செய்ய இந்திய உளவு அமைப்பான ‘ரா’ திட்டமிட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதை அதிபர் சிறிசேனா மறுத்தார். பிரதமர் மோடியுடன் டெலிபோனில் பேசினார்.

    ஆனால் இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அது குறித்த விசாரணையை இலங்கை குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கொலை சதி திட்டம் தீட்டியதற்கான டெலிபோன் உரையாடல்கள் அழிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் சீன நிறுவனமான குயாவேயின் தொழில் நுட்ப உதவியுடன் டெலிபோன் உரையாடலை மீண்டும் பெற முயற்சி நடைபெற்றது. அதற்காக இலங்கை போலீசார் கோர்ட்டில் அனுமதி கேட்டு மனு செய்தனர்.

    மனுவை விசாரித்த கோர்ட்டு சீன நிறுவனமான குயாவேயின் உதவியுடன் சதி திட்ட தகவல்களை மீட்டெடுக்க அனுமதி வழங்கியுள்ளது.

    இந்த விசாரணையின் போது தாமஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சி.ஐ.டி. போலீசார் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், எனவே அவர்களின் பாதுகாப்பில் இருந்து தன்னை விடுவிக்கும் படியும் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார். #MaithripalaSirisena #RAW #assassinationplot
    இலங்கை வடக்கு மாகாணத்தின் முதல் மந்திரியாக தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தை நேற்று நிறைவுசெய்த விக்னேஸ்வரன் இன்று தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியை தொடங்கினார். #Wigneswaranresigns #newTamilalliance
    கொழும்பு:

    இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் சார்பில் வடக்கு மாகாணத்தின் முதல் மந்திரியாக பதவி வகித்த சி.வி. விக்னேஸ்வரனின் ஐந்தாண்டு பதவிக்காலம் நேற்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைந்தது.

    தனது பதவியின் இறுதி நாளான நேற்று வடக்கு மாகாண சபையில் உரையாற்றிய விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் முக்கிய பிரச்சனைகள் மீது பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள  தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் அக்கறை செலுத்தவில்லை என குற்றம்சாட்டி இருந்தார்.

    அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவின் தலைமையிலான அரசு முந்தைய அரசுகளுக்கு எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல என்று குறிப்பிட்ட அவர், தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை சிறிசேனா நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.

    வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்னும் தமிழர்களின் கோரிக்கைக்கு சிறிசேனாவின் அரசு செவி சாய்க்கவில்லை. மேலும், தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட சுமார் 60 ஆயிரம் ஏக்கர் நிலம் இன்னும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

    இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியில் இருந்து இன்று விலகிய விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியை  தொடங்கியுள்ளார். இதர தமிழர் கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழ் தேசியத்தின் அடிப்படை கொள்கைகளுக்காக தனது தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி பாடுபடும் என்று உறுதியளித்துள்ளார். #Wigneswaranresigns  #WigneswarannewTamilalliance #newTamilalliance
    இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவை கொல்ல இந்திய உளவுத்துறையான ‘ரா’ திட்டம் தீட்டியதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. #MaithripalaSirisena #RAW #assassinationplot
    கொழும்பு:

    இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தலைமையில் நேற்று நடந்த மந்திரிசபை கூட்டத்தின்போது தன்னை கொலை செய்வதற்கு இந்திய உளவு அமைப்பான ’ரா’ சதி செயலில் ஈடுபட்டுள்ளதாக மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்ததாக இன்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

    இலங்கை அரசியல் தலைவர்கள் அடிக்கடி இந்திய உளவு அமைப்பான 'ரா' மீது குற்றம்சாட்டுவது தொடர்ந்து நடந்து வருகிறது. 2015-ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்ததும் இந்திய உளவு அமைப்பு ’ரா’ மீதுதான் ராஜபக்சே குற்றம் சாட்டினார்.



    சிறிசேனா குற்றச்சாட்டினால் இந்தியா - இலங்கை இடையிலான நல்லுறவு பாதிக்கப்படலாம் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதினர்.

    இந்நிலையில், இந்த தகவலை இன்று இலங்கை அதிபரின் ஆலோசகரும், ஒருங்கிணைப்பு செயலாளருமான ஷ்ரிலால் லக்திலகா மறுப்பு தெரிவித்துள்ளார். பத்திரிகைகளில் வரும் செய்திகள்போல் அதிபர் மைத்ரிபாலா எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். #MaithripalaSirisena #RAW #assassinationplot 
    இந்திய உளவு அமைப்பான 'ரா' என்னை கொல்ல சதி செய்தது என்று இலங்கை அதிபர் சிறிசேனா பகிரங்கமான குற்றம்சாட்டியுள்ளார். #RAW #Sirisena
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக இருந்து வருபவர் மைத்திரி பால சிறிசேனா.

    இலங்கையில் வாரம் தோறும் நடக்கும் மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் சிறிசேனா பேசும்போது, “என்னை கொலை செய்வதற்கு இந்திய உளவு அமைப்பான “ரா” சதி செயலில் ஈடுபட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக எதுவும் தெரியாது.



    ஜனாதிபதி சிறிசேனா இவ்வாறு கூறியதும் கூட்டத்தில் பங்கேற்ற மந்திரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ‘ரா’ அமைப்பு எத்தகைய வழிகளில் தன்னை கொலை செய்ய முயற்சி செய்கிறது என்பதை சிறிசேனா வெளியிடவில்லை.

    அதிர்ச்சியூட்டும் இந்த தகவல் பற்றி கூடுதல் தகவல்கள் அறிய பல்வேறு பத்திரிகையாளர்களும் இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தை தொடர்பு கொண்டனர். ஆனால் இலங்கை ஜனாதிபதி அலுவலகம் சார்பில் உரிய பதில் தெரிவிக்கப்படவில்லை.

    இலங்கை அரசியல் தலைவர்கள் அடிக்கடி இந்திய உளவு அமைப்பான “ரா” மீது குற்றம் சாட்டுவது தொடர்ந்து நடந்து வருகிறது. 2015-ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்ததும் இந்திய உளவு அமைப்பு ‘ரா’ மீதுதான் ராஜபக்சே குற்றம் சாட்டினார்.

    சிறிசேனா குற்றச்சாட்டினால் இந்தியா இலங்கை இடையிலான நல்லுறவு பாதிக்கப்படும் என உயர் அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

    இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே விரைவில் இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். இந்த சூழ்நிலையில்தான் அந்நாட்டு அதிபர் சிறிசேனா இது போல் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #RAW #Sirisena

    இலங்கை ராணுவத்தினர் மீதான போர்க் குற்றச்சாட்டுகளை நீக்க ஐ.நா. சபையில் வற்புறுத்துவேன் என்று அதிபர் சிறிசேனா கூறியுள்ளார். #UN #MaithripalaSirisena
    கொழும்பு :

    இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டு போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், சுமார் 20 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போனதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

    பெரும்பாலானோர் காணாமல் போனதற்கு இலங்கை ராணுவம், கடற்படை, போலீஸ் ஆகியவையே காரணம் என்று காணாமல் போனவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக கண்டனங்கள் எழுந்ததால், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக வெவ்வேறு காலகட்டங்களில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலங்கை ராணுவத்தினர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கவும், போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் இலங்கை அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபையின் 73-வது கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக, இலங்கை அதிபர் சிறிசேனா தலைமையிலான பிரதிநிதிகள் குழு, அங்கு செல்கிறது.



    ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், சிறிசேனா 25-ந் தேதி பேசுகிறார்.

    இதுகுறித்து சிறிசேனா நேற்று கொழும்பு நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களும், சில அரசு சார்பற்ற அமைப்புகளும் மனித உரிமை மீறல் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை தனிமைப்படுத்தப்படுவதை நாங்கள் தடுத்ததுடன், நல்ல நட்புறவையும் உருவாக்கி உள்ளோம்.

    ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசும்போது, இலங்கை ராணுவத்தினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகளை நீக்குமாறு வற்புறுத்துவேன். இப்பிரச்சினைக்கு தீர்வுகாண எங்களுக்கு சில சலுகைகள் அளிக்குமாறு கேட்டுக்கொள்வேன்.

    இதுதொடர்பாக விசே‌ஷ வேண்டுகோள் விடுப்பேன். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் எழுத்துமூலமாகவும் கோரிக்கை விடுப்பேன்.

    இவ்வாறு சிறிசேனா கூறினார். #UN #MaithripalaSirisena
    இலங்கை அதிபர் சிறிசேனா தனது மந்திரிசபையை இன்று விரிவாக்கம் செய்துள்ளார். இதில், தமிழர் உள்பட 7 மந்திரிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். #MaithripalaSirisena
    கொழும்பு :

    இலங்கை அதிபர் சிறிசேனா தனது மந்திரிசபையை விரிவாக்கம் செய்துள்ளார். இதில், அந்நாட்டு பொதுத்தேர்தலில் ஆளும் இலங்கை சுதந்திரா கட்சி சார்பாக வெற்றி பெற்றுள்ள ஒரே தமிழரான, திரிகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் உள்பட 7 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த 7 பேரில், 2 பேர் மந்திரிகளாகவும் 5 பேர் இணை மந்திரிகளாகவும் நியமணம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கை அதிபர் மாளிகையில் இன்று மந்திரிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.

    தமிழரான அங்கஜன் ராமநாதன் இணை மந்திரியாக நியமணம் செய்யப்பட்டுள்ளார். புதிய அமைச்சர்களில் 5 பேர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #MaithripalaSirisena
    ×