search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100153"

    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். கர்நாடக கூட்டணி அரசு சுமுகமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் ஜனதா தளம் (எஸ்), காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. மாநில அரசுக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதால் மாநில அரசு தொடர்ந்து நெருக்கடியில் இருந்து வருகிறது.

    சமீபத்தில் அதிருப்தியில் உள்ள 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிஹோலி, சுதாகர் ஆகியோர் பா.ஜனதா தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர்கள் இது அரசியல்ரீதியான சந்திப்பு அல்ல என்று தெரிவித்துள்ளனர்.



    இந்தநிலையில் கர்நாடக மாநில முதல்-மந்திரி குமாரசாமி நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது சோனியா காந்தியும் அங்கு இருந்தார். அப்போது குமாரசாமி கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசியல் சூழ்நிலை குறித்து ராகுல் காந்தியிடம் விளக்கினார். இந்த சந்திப்பு குறித்து ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதில், “கர்நாடக முதல்-மந்திரி மாநில அரசியல் சூழ்நிலை குறித்து ராகுல் காந்தியிடம் விளக்கினார்.

    இரு கட்சிகளின் ஒத்துழைப்புடனும், நல்லுறவுடனும் மாநில அரசு சுமுகமாக நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது என்றும், அவரது சேவை நாட்டுக்கு தேவை என்றும் குமாரசாமி வலியுறுத்தினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் நடவடிக்கையாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்க முதல்-மந்திரி குமாரசாமி முடிவு செய்துள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா கடந்த ஓராண்டாக தீவிர முயற்சி செய்து வருகிறது.

    இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜனதா 25 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த நிலையில் பா.ஜனதாவினர் மீண்டும் ஆபரேஷன் தாமரை திட்டத்தை கையில் எடுப்பார்கள் என்று பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதற்கு ஏற்ப காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசியது பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது.

    இதனால் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்கும் பணியில் முதல்-மந்திரி குமாரசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இறங்கியுள்ளனர்.

    காங்கிரசை சேர்ந்த பி.சி.பட்டீல், சுயேச்சை எம்.எல்.ஏ.வான சங்கர் ஆகிய 2 பேருக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து கூட்டணி தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான மகேஷ் கமடள்ளி நேற்று முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த பேச்சுவார்த்தையால் கூட்டணி ஆட்சிக்கு ஏற்பட்டு வந்த சிக்கல் தற்போது நீங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே காங்கிரஸ் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்க வசதியாக மூத்த தலைவர்கள் மந்திரி பதவியை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று அக்கட்சிகளின் தலைவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    தற்போது மந்திரிசபையில் காங்கிரசுக்கு ஒன்று மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 2 என்று மொத்தம் 3 மந்திரி பதவிகள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறுகையில் ‘நாங்கள் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. நாங்கள் புதிதாக சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம்.’ என்றார்.

    முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘கூட்டணி ஆட்சி உறுதியாக இருக்கிறது.

    ரமேஷ் ஜார்கிகோளி உள்பட எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியைவிட்டு விலக மாட்டார்கள். கடந்த ஓராண்டாக எடியூரப்பா, கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்று கூறி வருகிறார். வருகிற 1-ந்தேதி கர்நாடகத்தில் பா.ஜனதா தலைமையில் அரசு அமைப்பேன் என்று எடியூரப்பா கூறியிருக்கிறார். அப்படி முடியாவிட்டால் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ய தயாரா?’ என்று சவால்விட்டு உள்ளார். இதனால் கர்நாடகத்தில் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.
    மண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி வெற்றி பெறுவது உறுதி. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி எம்.எல்.ஏ. ஹாசனில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

    மண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி வெற்றி பெறுவது உறுதி. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஊடகங்கள், இந்த கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்று செய்திகளை வெளியிடுகிறீர்கள். உண்மை நிலையை அறிந்து செய்தி வெளியிடுங்கள்.

    இந்த கூட்டணி அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும். மண்டியாவில் தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், கூட்டணி அரசுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

    இவ்வாறு அனிதா குமாரசாமி கூறினார்.
    கர்நாடக முதல்வர் குமாரசாமியை விமர்சித்து பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காங்கிரசாருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    கர்நாடகாவில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி முதல்-மந்திரியாக உள்ளார். அவரது அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளில் காங்கிரசார் உள்ளனர்.

    இந்த கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து காங்கிரஸ் தலைவர்களுக்கும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. சமீபகாலமாக இரு கட்சியினருக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் இடையே வார்த்தை போர் வெடித்து குமாரசாமியை நீக்கக் கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இதற்காக ரகசிய ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கர்நாடகா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர் குண்டுராவ், முன்னாள் முதல்-அமைச்சர் சித்த ராமையா, துணை முதல்- மந்திரி பரமேஸ்வரா ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் குமாரசாமி மீது சரமாரியாக புகார் கூறினார்கள்.

    அதோடு கூட்டணிக்கு எதிராக குமாரசாமியும், மதச் சார்பற்ற ஜனதாதளம் தலைவர்களும் பேசிவரும் தகவல்களையும் தெரிவித்தனர். இவை அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட ராகுல் இப்போதைக்கு எந்தவித முடிவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.


    மேலும் கூட்டணியை சீர்குலைக்கும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என்றும், பேச வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். பா.ஜனதாவை தோற்கடிக்க மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர்களுடன் இணைந்து செயல்படுமாறும் கேட்டுக் கொண்டார்.

    குமாரசாமியை விமர்சித்து பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராகுல்காந்தி எச்சரித்துள்ளார். இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இனி அமைதியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருப்பதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடகா முதல்வர் குமாரசாமி ஆகியோர் இன்று காலை குடும்பத்தினருடன் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தனர்.
    திருமலை:

    முன்னாள் பிரதமர் தேவகவுடா தனது 86-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று மாலை தனது மகன் கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய திருப்பதி வந்தார்.

    அவருக்கு தேவஸ்தான அதிகாரி அசோக் சிங்கால் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

    இதையடுத்து பத்மாவதி தாயார் தங்கும் விடுதியில் தங்கினர். இன்று காலை 7 மணிக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் தனது மனைவி மற்றும் மகனும், கர்நாடக முதல்வருமான குமாரசாமி மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

    தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி ஆட்சியை கவிழ்த்து விட்டு சித்தராமைய்யா முதல்வர் ஆகும் முயற்சியில் தனது ஆதரவாளர்களுடன் பேசி வருகிறார். #Kumaraswamy #Siddaramaiah #congress

    பெங்களூர்:

    கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தலைவர் எடியூரப்பா 4 தடவை முயற்சி செய்தார். ஆனால் 4 தடவையும் அந்த முயற்சி தோல்வி அடைந்தது.

    காங்கிரசில் சில எம்.எல். ஏ.க்கள் குமாரசாமி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் எடியூரப்பா ஈடுபட்டுள்ளார். ஆனால் அதில் இன்னும் பலன் கிடைக்கவில்லை.

    இதற்கிடையே சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவி எதிர்பார்த்து போர்க்கொடி தூக்கி உள்ளனர். குறிப்பாக ரமேஷ் ஜார்கிகோலி, நாகேந்திரா, மகேஷ் கும்தஹள்ளி, பீம நாயக், காம்ப்ளி கணேஷ் ஆகிய 5 எம்.எல்.ஏ.க்கள் குமாரசாமி ஆட்சியை கவிழ்ப்போம் என்று மிரட்டல் விடுத்தப்படி இருக்கிறார்கள்.

    இந்த அதிருப்தி எம்.எல். ஏ.க்களை சமரசம் செய்யும் முயற்சிகளை குமாரசாமி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ்குண்டு ராவ் மேற்கொண்டுள்ளனர். நேற்று அவர்கள் மூவரும் சில அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசினார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்த பிறகு அமைச்சரவையை மாற்றலாம் என்று அப்போது பேசப்பட்டது. மேலும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பதவிகள் வழங்குவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஆனால் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமைய்யாவும் மீண்டும் முதல்-மந்திரி பதவியை பிடிக்க காய்களை நகர்த்தி வருகிறார். குமாரசாமியை ஒதுக்கி விட்டு பதவியை கைப்பற்ற வேண்டும் என்று அவர் கருதுகிறார். இதற்காக தனது ஆதரவாளர்களை அவர் தூண்டி விட்டுள்ளார்.

    அவரது ஆதரவாளர்களில் முக்கியமானவராக கருதப்படும் சோமசேகர் எம்.எல்.ஏ. என்பவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை ரகசியமாக கூட்டி உள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பலருக்கும் கூட்டத்துக்கு வரும்படி ரகசிய கடிதம் அனுப்பி உள்ளார்.


    இது குமாரசாமிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சியை கவிழ்த்து விடுவார்களோ என்ற புதிய தலைவலியை குமாரசாமி எதிர்கொண்டுள்ளார். #Kumaraswamy #Siddaramaiah #congress

    இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் கர்நாடகா மாநிலத்தின் ஜேடிஎஸ் கட்சியினர் 2 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் மாயமாகியுள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. #HDKumaraswamy #SrilankanBlasts
    பெங்களூரு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

    இந்த தாக்குதல்களில் அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியானது.

    இந்நிலையில் இன்று சுஷ்மா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இலங்கை குண்டுவெடிப்புகளில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், அவர்கள் பெயர் கே.ஜி.ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த சம்பவத்தில் இதுவரை 5 இந்தியர்கள் பலியாகியுள்ளனர் எனவும் கூறினார்.



    இது குறித்து கர்நாடகா முதல் மந்திரியும், மதச்சார்பற்ற ஜனதா தளம்(ஜேடிஎஸ்) கட்சியின் தலைவருமான எச்.டி.குமாரசாமி கூறியதாவது:

    கொழும்புவிற்கு சுற்றுலா மேற்கொண்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினைச் சேர்ந்த 7 தொண்டர்கள், நேற்று நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு  சம்பவத்திற்கு பின்னர்  மாயமானதாக தகவல் கிடைத்தது. இதனை கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன்.

    அவர்கள் குறித்த தகவல் அறிய இந்திய தூதருடன் தொடர்பில் இருந்தேன். இன்று காலை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், உயிரிழந்த 5 இந்தியர்களுள் 2 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என அறிவித்திருந்தார். இதைக் கேட்டு மிகவும் வருந்தினேன்.

    இந்த தாக்குதலில் மறைந்த கே.ஜி.ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா ஆகிய இருவரும் எனக்கு நெருக்கமான தொண்டர்கள் ஆவர். இருவரின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் குடும்பத்தாருடன் என்றும் நான் துணை நிற்பேன்.  

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து இலங்கை வெடிகுண்டு தாக்குதல்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஆன்மீக தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது. #HDKumaraswamy #SrilankanBlasts

    மோடியை விட தனது தந்தை தேவேகவுடா சிறந்த பிரதமராக மக்களுக்கு சேவை செய்ததாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். #LokSabhaElections2019 #Kumaraswamy #DeveGowda
    ஹூப்ளி:

    கர்நாடக முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான தேவேகவுடா, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    எனது தந்தை தேவேகவுடாவின் ஆட்சிக்காலத்தில் நாடு மிகவும் அமைதியாக இருந்தது. ஒரு பயங்கரவாத தாக்குதல் கூட நடைபெறவில்லை. நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்திலும் அதிக அக்கறை செலுத்தினார். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியை விட மிகவும் சிறப்பாக செயல்பட்டார்.



    தேவேகவுடாவின் 10 மாத ஆட்சிக்காலத்தில் என்ன நடந்தது? மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் என்ன நடந்தது? என்பதை ஆவணங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

    தேவேகவுடா ஆட்சியின்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்த மோதலும் நடைபெறவில்லை. ஜம்மு காஷ்மீரில் ஒரு குண்டுவெடிப்பு கூட நடக்கவில்லை. நாட்டிற்குள்ளேயும் வெடிகுண்டு தாக்குதல் நடக்கவில்லை.

    பாலக்கோட் விமான தாக்குதலை பாராளுமன்றத் தேர்தலில் தனது அரசியல் ஆதாயத்துக்காக மோடி பயன்படுத்துகிறார். இதுவரை எந்த பிரதமரும் இதுபோன்று இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த சண்டையில் ஆதாயம் தேடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேவேகவுடா 1996ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் 1997ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி வரை பிரதமராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Kumaraswamy #DeveGowda
    கர்நாடக மாநிலத்தில் இன்று தனது வாக்கை பதிவு செய்த முதல்வர் குமாரசாமி, வாரிசு அரசியலால் பல்வேறு மாநிலங்களில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக கூறினார். #LokSabhaElections2019 #Kumaraswamy
    பெங்களூர்:

    பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. தமிழகம், புதுவை, கர்நாடகம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வத்துடன் சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர். இதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

    அவ்வகையில், கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி ராமநகரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவருடன் அவரது மனைவி அனிதா குமாரசாமி, அவரது மகனும் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளருமான நிகில் ஆகியோரும் வாக்களித்தனர்.



    வாக்களித்த பின்னர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “வாரிசு அரசியல் இப்போது முக்கிய பிரச்சனை அல்ல. நாட்டின் பிரச்சனைகள்தான் பிரதானம். வாரிசு அரசியல் மற்றும் பிராந்திய அரசியலால் மட்டுமே பல்வேறு மாநிலங்களில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் பாஜகவின் விமர்சனங்களை கண்டுகொள்வதில்லை” என்றார்.

    முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடா ஹசன் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். கர்நாடக பொதுப்பணித்துறை மந்திரி ரேவண்ணா, படுவலகிப்பி கிராமத்தில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வாக்களித்தார். #LokSabhaElections2019 #Kumaraswamy 
    பெங்களூருவில் வருமான வரித்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்தியது குறித்து விசாரணைக்கு ஆஜராக முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையாவுக்கு நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. #IncomeTaxDepartment #Kumaraswamy #Siddaramaiah
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம்(மார்ச்) 28-ந் தேதி காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்தவர்களை குறி வைத்து நடத்தப்படுவதாக கூறி கூட்டணி தலைவர்கள் குற்றச்சாட்டு கூறினார்கள்.

    அன்றைய தினம் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எதிராக பெங்களூருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்ட தலைவர்களும், 2 கட்சிகளின் பிரமுகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமாருக்கு, வருமான வரித்துறை இயக்குனர் பாலகிருஷ்ணன் புகார் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதம் மாநில போலீஸ் டி.ஜி.பி நீலமணி ராஜுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸ் டி.ஜி.பி.யின் உத்தரவின் பேரில் வருமான வரித்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) பிளாக் தலைவர்கள் உள்ளிட்ட சிலர் மீது கமர்சியல்தெரு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

    அதே நேரத்தில் இந்த வழக்கு குறித்து விசாரிக்க பானசாவடி உதவி போலீஸ் கமிஷனர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், வருமான வரித்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையா உள்ளிட்ட தலைவர்களுக்கு பானசாவடி உதவி போலீஸ் கமிஷனர் நோட்டீசு அனுப்பி வைத்துள்ளார். மேலும் விசாரணைக்கு ஆஜராக 7 நாட்கள் காலஅவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. குமாரசாமி, சித்தராமையா உள்ளிட்டோருக்கு போலீசார் நோட்டீசு அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #IncomeTaxDepartment #Kumaraswamy #Siddaramaiah 
    நாட்டில் பதற்றமான சூழலை பிரதமர் மோடி உருவாக்கிவிட்டார் என்று முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். #Kumaraswamy #PMModi
    பெங்களூரு :

    பெங்களூரு வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிருஷ்ண பைரேகவுடாவை ஆதரித்து முதல்-மந்திரி குமாரசாமி யஷ்வந்தபுரத்தில் பிரசாரம் செய்தார். அங்கு நடைபெற்ற பிரசார கூட்டத்தில் குமாரசாமி பேசியதாவது:-

    பெங்களூருவில் ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்பது எங்களின் குறிக்கோள். இந்த திட்டத்தை ஏற்கனவே தொடங்கி வைத்துள்ளோம். காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு பலமாக உள்ளது.

    இந்த அரசு 5 ஆண்டுகள் ஆட்சி செய்யும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். பெங்களூருவில் வெளிவட்ட சாலை அமைக்க ரூ.17 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது. இந்த திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    பா.ஜனதா வேட்பாளர் சதானந்தகவுடா, என்னை பார்த்து ஓட்டுப்போட வேண்டாம், மோடியை பார்த்து வாக்களியுங்கள் என்று கேட்கிறார். மோடிக்கு ஊடகங்கள் எவ்வளவு விளம்பரம் வழங்கினாலும், அவர் மீண்டும் பிரதமராக முடியாது.

    வருமான வரித்துறை உள்பட பல்வேறு விசாரணை அமைப்புகளை மோடி தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் தலைவர்களை மிரட்டுகிறார். இளைஞர்கள், மோடி, மோடி என்று கோஷமிடுகிறார்கள்.



    இளைஞர்களுக்கு மோடி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தாரா?. மோடி தனது தவறான திட்டங்களால் ஆயிரக்கணக்கான மக்களை வீதியில் தள்ளினார். இது தான் அவரது சாதனை. இதை இளைஞர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

    மோடி ஒரு மிக மோசமான அரசியல்வாதி. நாட்டில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளார். யார் மக்களின் நலனிற்காக உழைக்கிறார்களோ அவர்களை அடையாளம் கண்டு ஓட்டுப்போடுங்கள்.

    இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ண பைரேகவுடாவை மக்கள் ஆதரிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அவர் இ்ந்த பகுதி மக்களுக்காக குரல் கொடுப்பார்.

    நான் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஒடிந்து விழுந்துவிடுவேன் என்று ஈசுவரப்பா கூறி இருக்கிறார். எனக்கு மக்களின் ஆசி உள்ளது. அதனால் எனது உயிர் உறுதியாக உள்ளது. எங்கள் குடும்பத்திற்கு தெய்வபலம் உள்ளது.

    இவ்வாறு குமாரசாமி பேசினார். #Kumaraswamy #PMModi
    மண்டியாவில் முதல்-மந்திரி குமாரசாமி மகனின் வெற்றிக்கு பாடுபடுங்கள் என்று வீடியோ மூலம் காங்கிரசாருக்கு சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார். #Siddaramaiah #MandyaConstituency #NikhilKumaraswamy
    பெங்களூரு :

    பாராளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியும், அவரை எதிர்த்து நடிகை சுமலதா சுயேச்சையாகவும் போட்டியிடுகிறார்கள். சுமலதாவுக்கு பா.ஜனதா ஆதரவு வழங்கியுள்ளது. அந்த தொகுதியில் அவர்கள் இருவர் இடையே தான் போட்டி ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மண்டியா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவாக தோதல் பணியாற்ற முடியாது என்று காங்கிரசார் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். அந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து சித்தராமையா பேசினார். ஆயினும் அவர்கள் குமாரசாமி மகனின் வெற்றிக்கு தேர்தல் பணியாற்ற முடியாது என்று கூறிவிட்டனர்.

    இந்த நிலையில் சித்த ராமையா வீடியோ மூலம் மண்டியா காங்கிரசாருக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.

    அதில், “காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் மண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். அவரது வெற்றிக்கு காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஜனதா தளம்(எஸ்) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து பாடுபட வேண்டும். அவருக்கு ஆசி வழங்க வேண்டும்.

    நானும், தேவேகவுடாவும் வருகிற 12-ந் தேதி கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளோம்” என்று பேசியுள்ளார்.

    மேலும் முதல்-மந்திரி குமாரசாமியும் தனது டுவிட்டர் பக்கத்தில் சித்தராமையா பேசிய வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். அதில், “கர்நாடகத்தில் 28 தொகுதியிலும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிக்கு இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார். #Siddaramaiah #MandyaConstituency #NikhilKumaraswamy 
    ×