search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100153"

    மண்டியாவில் எனது மகனை தோற்கடித்து அரசியல் ரீதியாக என்னை ஒழித்துக்கட்ட சிலர் முயற்சி செய்கிறார்கள் என்று குமாரசாமி கூறியுள்ளார். #Kumaraswamy #ParliamentElection
    பெங்களூரு :

    முதல்-மந்திரி குமாரசாமி மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    மண்டியா தொகுதியில் சில காங்கிரஸ் தலைவர்கள் எனது மகனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்கள். சிலர் வேலை செய்யவில்லை. அதை பற்றி நான் கவலைப்படவில்லை. மண்டியாவில் எனது மகனை தோற்கடித்து, அரசியல் ரீதியாக என்னை ஒழித்துக்கட்ட சிலர் முயற்சி செய்கிறார்கள்.

    ஆனால் மண்டியா மக்கள் அத்தகையவர்களை ஆதரிக்க மாட்டார்கள். மண்டியாவில் 8 தொகுதிகளிலும் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தான் உள்ளனர். அது தவிர எம்.பி,. 3 எம்.எல்.சி.க்களும் இருக்கிறார்கள்.

    எங்கள் கட்சியின் வெற்றிக்கு அவர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவார்கள். நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. துமகூரு, ஹாசனில் கூட்டணி கட்சியில் இன்னும் சிலர் அதிருப்தியில் உள்ளனர்.

    எங்கள் கூட்டணி வேட்பாளர்களை நாங்கள் கைவிட மாட்டோம்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #Kumaraswamy #ParliamentElection
    பா.ஜனதா கொள்ளையடிக்கும் கலாசாரம் கொண்டது என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். #LokSabhaElections2019 #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாங்கள் ஜனநாயகத்தை சிதைக்கும் பணியை செய்யவில்லை. என்னால் ஜனநாயகம் சிதைந்துவிட்டது என்று சொல்ல எடியூரப்பாவுக்கு தகுதி இல்லை. எனக்கு எதிராக எடியூரப்பா போட்ட வழக்குகளை கடந்த 12 ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகிறேன்.

    தன் மீதான வழக்குகளை எடியூரப்பா எப்படி நீக்கிக் கொண்டார் என்பது எனக்கு தெரியும். அரசியலமைப்பு சட்டப்படி செயல்படும் அமைப்புகளை நாங்கள் தவறாக பயன்படுத்தவில்லை. சட்டப்படி போராட்டம் நடத்துகிறோம். நான் முன்பு முதல்-மந்திரி பதவியை விட்டு செல்லும்போது, பி.எம்.டி.சி.யில் ரூ.1,000 கோடி டெபாசிட் செய்து வைத்திருந்தேன். அதன் பிறகு அந்த துறைக்கு ஆர்.அசோக் மந்திரியாக வந்த பிறகு பி.எம்.டி.சி. நிறுவனத்தையே சீரழித்துவிட்டார்.



    வருமானவரி சோதனை நடத்திய அதிகாரிகளுக்கு பணம் சிக்கியுள்ளதா?. 10 ரூபாயாவது கிடைத்ததா?. எதற்காக இந்த சோதனை நடத்த வேண்டும். உள்நோக்கத்துடன் வருமான வரித்துறையினர் இந்த சோதனையை நடத்தி இருக்கிறார்கள். பா.ஜனதா தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தாதது ஏன்?. பா.ஜனதா தலைவர்கள் அனைவரும் ஏழைகள். பணம் இல்லாமல் கைகூப்பி கும்பிட்டுக் கொண்டு ஓட்டு கேட்கிறார்கள். நாங்கள் அனைத்து வகையான போராட்டத்திற்கும் தயாராக உள்ளோம். துமகூரு தொகுதி பிரச்சினை முடிந்தது. போட்டி வேட்பாளர் முத்தஹனுமேகவுடா தனது மனுவை வாபஸ் பெற்றுள்ளார். பா.ஜனதா, கொள்ளையடிக்கும் கலாசாரம் கொண்டது. முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, ஆர்.அசோக் என்னென்ன செய்தனர் என்பது எனக்கு தெரியும்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #LokSabhaElections2019 #Kumaraswamy

    கர்நாடகாவில் மாணவர்களுக்கான தேர்வில், மாநில முதல்வரை கேலி செய்யும் வகையில் வினாத்தாள் தயாரித்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். #BangloreTeacherDismissed
    பெங்களூரு:

    பெங்களூருவில் மவுண்ட் கார்மெல் ஆங்கில உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 200க்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர். இந்த பள்ளியில் தற்போது 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கன்னட மொழிப்பாடத் தேர்வுக்காக தயாரித்த வினாத்தாளில், ‘சரியான விடையை தேர்வு செய்க’ எனும் தலைப்பில்,  அரசியல் தலைவர்களை கேலி செய்யும் வகையில் ஒரு கேள்வி இடம்பெற்றிருந்தது.

    ‘விவசாயிகளின் நண்பன் யார்?
    அ) மண்புழு, ஆ) முதல்வர் குமாரசாமி, இ) பாஜக தலைவர் எட்டியூரப்பா’ என அந்த கேள்வி இருந்தது.

    அந்த கேள்வி இடம்பெற்றிருந்த வினாத்தாளின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து முதல்வர் குமாரசாமி மற்றும் பாஜக தலைவர் எட்டியூரப்பா ஆகியோர் குறித்த மீம்ஸ்களும் வேகமாக பரப்பப்பட்டு வருகின்றன.



    இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ராகவேந்திரா கூறுகையில், ‘இந்த கேள்வித்தாள் தயாரித்த ஆசிரியரை உடனடியாக பணியில் இருந்து நீக்கி விட்டோம். பள்ளியின் தலைமைக்கு தெரியாமலேயே இந்த வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு கட்சியினரையும், அரசியலையும் ஊக்குவிக்கும் எண்ணத்தோடு பள்ளி நிர்வாகம் செயல்படவில்லை என்பதை தெளிவாக கூறிக் கொள்கிறேன்’ என்றார். #BangloreTeacherDismissed 

    மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். #DeveGowda #TumkurLSpolls
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு இருகட்டமாக ஏப்ரல் 18, 23-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்கின்றன. 

    இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டு காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 8 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    இதே தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக பதவி வகிக்கும் முட்டாஹனுமேகவுடாவும் காங்கிரஸ் வேட்பாளராக இங்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

    முன்னர், ஹஸ்ஸன் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தேவேகவுடா அந்த தொகுதியை தனது பேரன் பிரஜ்வால் ரேவன்னா போட்டியிடுவதற்காக விட்டுக் கொடுத்தார். 

    தொகுதி பங்கீட்டின்படி மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு காங்கிரஸ் கட்சியால் முன்னர் ஒதுக்கப்பட்ட வடக்கு பெங்களூரு தொகுதிக்கு பதிலாக அக்கட்சியின் டெல்லி தலைமையிடம் பேசி தும்கூர் தொகுதியை தேவேகவுடாவுக்கு ஒதுக்குமாறு துணை முதல் மந்திரி பரமேஸ்வரா மூலம் கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி ஏற்பாடு செய்தார்.

    இதனால், தேவேகவுடாவுக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட வடக்கு பெங்களூரு தொகுதியில் போட்டியிட முட்டாஹனுமேகவுடாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

    ஆனால், அவர் எனக்கு இந்த தொகுதியில்தான் செல்வாக்கு அதிகம் என்று கூறி வீம்பாக தும்கூரில் மீண்டும் காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர்கள் இருவரில் யார் வேட்புமனுவை வாபஸ் பெறுவார்கள்? என்பது புரியாத நிலையில் தும்கூரு தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக பாஜக சார்பில் பசவராஜ் போட்டியிடுகிறார். #DeveGowda #TumkurLSpolls
    மண்டியா பாராளுமன்ற தொகுதியில் என்னை தோற்கடிக்க சதி நடக்கிறது என்று நிகில் குமாரசாமி கூறியுள்ளார். #ParliamentElection #MandyaConstituency #NikhilKumaraswamy
    பெங்களூரு :

    மண்டியா பாராளுமன்ற தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக நடிகர் அம்பரீசின் மனைவி சுமலதா களத்தில் குதித்துள்ளார். அவருக்கு நடிகர்கள் தர்ஷன், யஷ் மற்றும் சில கன்னட நடிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் மண்டியா காங்கிரஸ் தலைவர்களும் சுமலதாவுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் சுமலதாவுக்கு பா.ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்திருப்பதுடன், அங்கு பா.ஜனதா சார்பில் வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால் சுமலதாவுக்கு தொடர்ந்து ஆதரவு அதிகரித்து வருகிறது. இதுபற்றி மண்டியா தொகுதி ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் நிகில் குமாரசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

    மண்டியா தொகுதியில் கூட்டணி கட்சிகள் சார்பில் நான் போட்டியிடுகிறேன். சுயேச்சை வேட்பாளர் சுமலதாவுக்கு பா.ஜனதா ஆதரவு தெரிவித்திருப்பதால், எனக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. மண்டியா தொகுதியில் என்னை தோற்கடிக்க சதி நடக்கிறது. எனக்கு எதிராக சில சக்திகள் ஒன்று சேர்ந்துள்ளன. அதுபற்றி நான் கவலைப்பட போவதில்லை. என்னுடைய வேலையை செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு எதிராக எந்த சக்திகள் ஒன்று சேர்ந்தாலும், மண்டியா மக்கள் என்னுடன் இருக்கிறார்கள். அவர்கள் என்னை கைவிட மாட்டார்கள்.

    என்னை தோற்கடிக்க நினைக்கும் அனைவருக்கும் நல்லதே நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன். யார் மீதும் குற்றச்சாட்டு கூற விரும்பவில்லை. மண்டியா தொகுதியில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அவர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். மண்டியா மக்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன்.

    இவ்வாறு நிகில் குமாரசாமி கூறினார். #ParliamentElection #MandyaConstituency #NikhilKumaraswamy 
    ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் எப்போதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். #Yeddyurappa #BJP
    பெங்களூரு :

    கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அரசியலுக்கு வயது ஒரு பாரம் இல்லை. மீண்டும் முதல்-மந்திரி பதவி கிடைக்குமா? என்று எனக்கு தெரியாது. ஆனால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன். மக்களின் ஆதரவு கிடைத்தால் மீண்டும் முதல்-மந்திரி ஆவேன்.

    வயது 77 ஆக இருந்தாலும், அந்த வயதால் கிடைத்த அனுபவம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படும். கவர்னர் பதவி கிடைத்தால் அதை நான் ஏற்கமாட்டேன். கர்நாடகத்தின் வளர்ச்சியே எனக்கு முக்கியம். இங்கேயே இருந்து விவசாயிகளின் நலனுக்காக போராடுவேன்.

    பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 28 தொகுதியிலும் பாஜக போட்டியிடும். குறைந்தது 22 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். பாஜக, இரண்டு இலக்க எண்ணில் வெற்றி பெறாது என்று தேவேகவுடா சொல்கிறார். காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி தான் இரண்டு இலக்க எண்களில் வெற்றி பெறாது.

    நாட்டின் எல்லைகளை சிறப்பான முறையில் காத்து வருகிறோம். ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை மோடி நடத்தியுள்ளார். கொடுத்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றியுள்ளார். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கி பேசிக்கொள்கிறார்கள். அவர்கள் ஒற்றுமையாக செயல்பட மாட்டார்கள்.

    அக்கட்சியின் தலைவர்கள் வேண்டுமானால் ஒற்றுமையாக செயல்படலாம். ஆனால் அடிமட்டத்தில் உள்ள நிர்வாகிகள் ஒற்றுமையாக செயல்பட மாட்டார்கள். 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளோம். 38 இடங்களில் வெற்றி பெற்றவர்கள் ஆட்சி நடத்துகிறார்கள்.



    பாஜகவில் இருந்து விலகி நான் தனி கட்சி தொடங்கி தவறு செய்தேன். அதன் பிறகு நான் செய்தது தவறு என்று உணர்ந்தேன். அதற்காக மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்டேன். கர்நாடகத்தில் மாநில கட்சிக்கு இடம் இல்லை.

    முன்பு பாஜக-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தினோம். ஆளுக்கு 20 மாதங்கள் என்ற ஒப்பந்தப்படி ஆட்சி நடத்தப்பட்டது. முதல் 20 மாதங்கள் குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தார்.

    அடுத்த 20 மாதங்கள் ஆட்சி நடத்த பாஜகவுக்கு தேவேகவுடா, குமாரசாமி ஆகியோர் வாய்ப்பு வழங்கவில்லை. தேவேகவுடா, குமாரசாமி நம்பிக்கை துரோகிகள். அதனால் மீண்டும் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. அக்கட்சியுடன் எப்போதும் கூட்டணி அமைக்கமாட்டோம்.

    மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவதில் குமாரசாமி நிபுணர். அது அவரது திறமை. இந்த பாராளுமன்ற தேர்தலில் 3 பெண்களுக்கு டிக்கெட் வழங்கப்படும். இந்த தேர்தலில் பாஜக 22 தொகுதிகளில் வெற்றி பெற்றால், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் பிரச்சினை ஏற்படும். அதன் மூலம் இந்த கூட்டணி அரசு கவிழும்.

    மக்கள் ஆதரவுடன் குடும்பத்தில் 2, 3 பேர் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை. இது எல்லா கட்சிகளிலும் உள்ளது. ஆனால் தேவேகவுடா குடும்பத்தில் மகன்கள், மருமகள்கள், பேரன்கள் என அனைவரும் அரசியலில் உள்ளனர். இது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குடும்ப அரசியலுக்கு ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும். தேவேகவுடா குடும்பத்தினர் அந்த கட்டுப்பாட்டை மீறுகிறார்கள். அனைத்து அதிகாரமும் தங்களுக்கே வேண்டும் என்று செயல்படும் தேவேகவுடா குடும்பத்தினரின் செயலை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார். #Yeddyurappa #BJP
    மண்டியா மக்களை ஏமாற்ற ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது என்று நடிகை சுமலதாவை நிகில்குமாரசாமி மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். #ParliamentElection #MandyaConstituency #NikhilKumaraswamy
    ஹலகூர் :

    பாராளுமன்ற தேர்தலை கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சி கூட்டணி அமைத்து எதிர்கொள்கிறது. இந்த கூட்டணியில், மண்டியா தொகுதி ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். இதே தொகுதியில் நடிகை சுமலதா காங்கிரஸ் சார்பில் போட்டியிட டிக்கெட் கேட்டார். ஆனால் கூட்டணியில் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கியதால் அதிருப்தி அடைந்த சுமலதா சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

    இதனால் நடிகை சுமலதா, நிகில் குமாரசாமி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் மண்டியாவில் சூறாவளி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கரடகெரே கிராமத்தில்நிகில் குமாரசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

    விவசாயிகள் தான் ஹீரோக்கள்

    நான் எந்த சுயநலத்திற்காகவும் இங்கு போட்டியிட வரவில்லை. எனது தாத்தா தேவேகவுடா, தந்தை குமாரசாமி வழியில் மக்கள் சேவை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன். அதனால் தான் மண்டியா தொகுதியில் போட்டியிடுகிறேன்.

    மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் ஜனதாதளம்(எஸ்) கட்சி வெற்றி பெற்றுள்ளது. மண்டியா மாவட்டத்தை பற்றிய அறிவு எங்களிடம் இருக்கிறது. எனவே என்னை உங்கள் வீட்டுபிள்ளை என நினைத்து ஆசிர்வதித்து தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும். விவசாயிகள் தான் நமது ஹீரோக்கள். தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற இடமெல்லாம் திரண்டு வந்து விவசாயிகள் என்னை உற்சாகமாக வரவேற்றனர்.

    என்னை தோற்கடிக்க எதிரிகள் தந்திரங்களை கையாளுகிறார்கள். அந்த கூட்டம் மண்டியா மாவட்ட மக்களை ஏமாற்ற புறப்பட்டுள்ளனர். எந்த காரணத்தை கொண்டும் அவர்களுக்கு நீங்கள் (மக்கள்) ஆதரவு கொடுக்காதீர்கள். (அதாவது நடிகை சுமலதாவை தான் நிகில்குமாரசாமி மறைமுகமாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.)

    இன்று (அதாவது நேற்று) தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பு தடை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஆனால் இதுபோன்ற கீழ்த்தரமான அரசியலை தேவேகவுடா குடும்பத்தினர் செய்ததில்லை. செய்யமாட்டோம். போராடி வெற்றி பெறுவேனே தவிர, கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடமாட்டேன்.

    யார் குற்றச்சாட்டு கூறுகிறார்களோ, அவர்களே தொலைக்காட்சி ஒளிபரப்பை தடை செய்துவிட்டு எங்கள் மீது ஏன் குற்றம்சாட்டக் கூடாது?. எனவே அதை நீங்கள் சிந்தித்து பாருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அந்த கிராமத்தில் உள்ள ஆஞ்சநேய சாமி கோவிலில் நிகில் குமாரசாமி சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் மந்திரி டி.சி.தம்மண்ணா உள்பட பலர் இருந்தனர். #ParliamentElection #MandyaConstituency #NikhilKumaraswamy 
    பா.ஜனதாவினர் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். #LSPolls #BJP #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. நல்லாட்சி நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

    பாராளுமன்ற தேர்தலையும் நாங்கள் கூட்டணி மூலமே எதிர்கொள்கிறோம். சில தொகுதிகளில் நிர்வாகிகளிடையே சிறிய அளவில் பிரச்சினைகள் உள்ளது. அதை சரிசெய்து கொள்வோம். கர்நாடகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே எங்களின் இலக்கு.



    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் பா.ஜனதாவினர் கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்யவில்லை. அங்கிருந்து வெளியேற்றினர்.

    பிற கட்சிகளுக்கு மரியாதை கொடுக்க பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கற்றுக்கொள்ள வேண்டும். அதை விடுத்து ஒரு கட்சியின் தலைவருக்கு எதிராக பேசுவதை ஊக்குவிப்பதை அவர் நிறுத்த வேண்டும். பா.ஜனதாவினர் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #LSPolls #BJP #Kumaraswamy
    நடிகை சுமலதா பற்றி மந்திரி ரேவண்ணா கூறிய கருத்துக்காக கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி மன்னிப்பு கேட்டு உள்ளார். #kumarasamy #Sumalatha

    பெங்களூரு:

    நடிகை சுமலதா பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்க முடிவு செய்துள்ளார். இது பற்றி கருத்து தெரிவித்த கர்நாடக பொதுப்பணித்துறை மந்திரி ரேவண்ணா, “கணவர் இறந்து 6 மாதங்கள் கூட ஆகவில்லை, அதற்குள் அவரது மனைவி சுமலதா தேர்தலில் போட்டியிட வேண்டுமா?” என்று கூறினார்.

    மந்திரி ரேவண்ணா கூறிய இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கர்நாடகத்தில் குறிப்பாக மாண்டியா தொகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.


    ஜே.டி.எஸ். கட்சியை சேர்ந்தவர்களே, நடிகை சுமலதாவுக்கு ஆதரவாக ஓட்டு போடுவோம் என்று ஆவேசமாக கூறி வருகிறார்கள். இது ஜே.டி.எஸ். கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாண்டியா தொகுதியில் தனது மகன் நிகில் குமாரசாமி வெற்றிக்கு சிக்கல் ஏற்பட்டு விடுமோ என்று குமாரசாமி மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளார்.

    நடிகை சுமலதா பற்றி மந்திரி ரேவண்ணா கூறிய கருத்துக்காக முதல்-மந்திரி குமாரசாமி மன்னிப்பு கேட்டு உள்ளார்.

    இது குறித்து முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    நடிகை சுமலதா பற்றி மந்திரி ரேவண்ணா கூறிய கருத்து, யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால், அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். எங்கள் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் ரேவண்ணா சார்பில் நான் இந்த மன்னிப்பை கேட்கிறேன்.

    எங்கள் குடும்பம், சாமானிய மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அவமரியாதை செய்யாது. ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு, நான் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், உதவி செய்து வந்திருக்கிறேன்.

    இது பற்றி எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். மந்திரி ரேவண்ணா பேசும்போது, எச்சரிக்கையுடன் பேசி இருந்தால் சர்ச்சை ஏற்பட்டு இருக்காது. ஊடகங்கள் சென்று அவரிடம் கருத்து கேட்டபோது, அவர் வாய் தவறி கருத்து தெரிவித்து விட்டார்.

    மாண்டியா தொகுதி வி‌ஷயத்தில் இந்த அளவுக்கு முக்கியத்துவம் காட்டுவது ஏன்? என்று தெரியவில்லை. குதிரை பேர விவகாரத்தில் வெளியான ஆடியோ உரையாடல் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுஅமைக்கப்படும். 15 நாட்கள் தாமதமானால் என்ன ஆகிவிடும்.

    இந்த வி‌ஷயத்தில் அதிகாரிகள் உரிய முடிவு எடுப்பார்கள். ஆளுங்கட்சிகளின் எம்.எல்.ஏக்களை இழுக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வி‌ஷயத்தில் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ரமேஷ் ஜார்கிகோளியை பா.ஜனதாவை சேர்ந்த சிவன்னகவுடா நாயக் சந்தித்து பேசியது பற்றி யாரும் கவலைப்பட தேவை இல்லை. எனக்கும், ரமேஷ் ஜார்கிகோளிக்கும் இடையே உள்ள நல்லுறவு நன்றாகவே உள்ளது.

    காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ். கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். நான் மாநிலத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறேன்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #kumarasamy #Sumalatha

    அரசியலில் வாரிசுகள் வரக்கூடாது என்று சட்டம் எதுவும் கிடையாது என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #kumaraswamy

    பெங்களூரு:

    ஜே.டி.எஸ். கட்சியின் தேசிய தலைவரான தேவகவுடா ஏற்கனவே பிரதமராக இருந்தார். அவரது மகன் குமாரசாமி கர்நாடக முதல் மந்திரியாக உள்ளார். இன்னொரு மகன் ரேவண்ணா கர்நாடக மந்திரியாக உள்ளார். குமாரசாமியின் மனைவி அனிதா எம்.எல்.ஏ.வாக உள்ளார். ரேவண்ணாவின் மனைவி பவானி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார்.

    இந்த நிலையில் குமாரசாமியின் மகனும், நடிகருமான நிகில் கவுடாவும் அரசியலில் குதிக்கிறார். அவர் மாண்டியா எம்.பி. தொகுதியில் ஜே.டி.எஸ். வேட்பாளராக போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது குறித்து கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அரசியலில் வாரிசுகள் வரக்கூடாது என்று சட்டம் எதுவும் கிடையாது. என் மகன் நிறுத்தப்படுகிறான் என்றால் வாரிசு அடிப்படையில் அல்ல. வெற்றி வாய்ப்பு எப்படி என்பதை பொறுத்தே சீட் வழங்கப்படுகிறது.

    நமது ஜனநாயக அமைப்பில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அது அவர்களின் உரிமை. வாரிசு வளர்ப்பு என்பது முக்கியமான வி‌ஷயம் அல்ல. தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதை தான் பார்க்க வேண்டும்.

    வாரிசுகள் அரசியலுக்கு வருவது எல்லா இடங்களிலும் தான் இருக்கிறது. நாங்கள் ஒன்றும் மறை முகமாக எங்கள் வாரிசை கொண்டு வரவில்லை. மக்களை சந்தித்தே அரசியலுக்கு கொண்டு வருகிறோம். மக்களால் தேர்ந்து எடுக்கப்படுகிறோம். அது மக்களின் முடிவு.

    எங்கள் பிள்ளைகளும் இந்த நாட்டின் குடி மக்கள் தானே, தேர்தலில் நிற்க அவர்களுக்கும் உரிமை இருக்கிறது.

    என் குடும்பத்தினர் யாரும் இனி அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று 8 மாதங்களுக்கு முன்பு சொன்னதை நினைவூட்டி கேட்கிறீர்கள். 8 மாதங்களில் அரசியல் சூழல்கள் எவ்வளவோ மாறிவிட்டது. கட்சித் தொண்டர்களின் விருப்பப்படியே எல்லாம் நடக்கிறது.

    காங்கிரஸ், ஜே.டி.எஸ். தொகுதி பங்கீடு முடிந்து விட்டது. இன்னும் 2, 3 நாளில் தொகுதி பங்கீடு விவரம் வெளிவரும் எங்களுக்கு எத்தனை இடம் என்பது பிரச்சினை அல்ல. பா.ஜனதாவுக்கு எதிராக எத்தனை இடம் ஜெயிக்கிறோம் என்பது தான் முக்கியம். அதற்கேற்பவே எங்களின் களப்பணி இருக்கும். 22 முதல் 24 இடங்களை கைப்பற்றுவோம்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #kumaraswamy 

    கர்நாடகாவில் மத சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் ஒட்டு போட்டு 22 தொகுதிகளை கைப்பற்றினால் தேவேகவுடா பிரதமர் ஆவார் என குமாரசாமி கூறியுள்ளார். #kumaraswamy #DeveGowda
    மாண்டியா:

    கர்நாடகா மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    கர்நாடக முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தள மாநில தலைவருமான குமாரசாமி மாண்டியாவில் ரூ.5 ஆயிரம் கோடி நலத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இது அவரது தேர்தல் பிரசார தொடக்கமாக கருதப்படுகிறது. விழாவில் குமாரசாமி பேசியதாவது:-

    கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் பிரதமராகும் உகந்த சூழ்நிலை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. மத சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் ஒட்டு போட்டு 22 தொகுதிகளை கைப்பற்றினால் கர்நாடகாவை சேர்ந்தவர் பிரதமர் நாற்காலியில் அமரலாம். 1996-ல் இருந்த அரசியல் சூழ்நிலை போலவே தற்போது உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். தனது தந்தையான தேவேகவுடா மீண்டும் பிரதமர் பதவிக்கு தயாராக இருப்பதாக குமாரசாமி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். தேவேகவுடா 1996 ஜூன் முதல் 1997 ஏப்ரல் வரை பிரதமராக பணியாற்றினார். #kumaraswamy #DeveGowda
    பாராளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் காங்கிரசிடம் நாங்கள் பிச்சை கேட்கவில்லை என்று கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #Kumaraswamy #Parliamentelection

    பெங்களூரு:

    கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி மைசூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரும் பாராளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து சில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஜே.டி.எஸ். கட்சிக்கு அதிகபட்சமாக 7 தொகுதிகளுக்கும் மேல் ஒதுக்கீடு செய்ய முடியாது என்று கூறி வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் காங்கிரசிடம் நாங்கள் யாசகம் (பிச்சை) கேட்கவில்லை.

    எங்கள் கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதிக தொகுதிகளை கேட்பது எங்கள் உரிமை. காங்கிரஸ் கட்சியினரும் எங்களின் கவுரவத்துக்கு குறைவராமல் தொகுதிகளை ஒதுக்குவது குறித்து ஆலோசிக்க வேண்டும். என்றாலும் தேர்தல் நெருங்கும்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஜே.டி.எஸ். மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு காண்பார் என நம்புகிறேன்.

    மேலும் கர்நாடகத்தில் ஜே.டி.எஸ். - காங்கிரஸ் கூட்டணியில் சிறந்த ஆட்சியை வழங்கி வருவதை எனது கடமையாக கொண்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Kumaraswamy #Parliamentelection

    ×