என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 100153"
பெங்களூரு:
கர்நாடகத்தில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளதாக முதல்-மந்திரி குமாரசாமி புகார் கூறி வருகிறார்.
இந்த நிலையில் ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ. நாகனகவுடாவின் மகன் சரண்கவுடாவுடன் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா பேரம் பேசி பா.ஜனதாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக ஆடியோ வெளியானது. இந்த ஆடியோவை கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி கடந்த 8-ந் தேதி வெளியிட்டார்.
பா.ஜனதாவில் இணைய உள்ள எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று சபாநாயகருடன் பா.ஜனதா பேரம் பேசியதாகவும் தகவல் வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் கர்நாடக சட்டசபையிலும் எதிரொலித்தது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நிலையில் எடியூரப்பா மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிவனகவுடாநாயக், பிரிதம் கவுடா ஆகியோர் ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ. நாகனகவுடாவின் மகன் சரண்கவுடாவிடம் பேரம் பேசி உள்ள ஆடியோவை குமாரசாமி நேற்று வெளியிட்டார்.
இதனால் மீண்டும் ஆடியோ விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பா.ஜனதாவின் இமேஜை குலைக்கும் முயற்சியில் அந்த கட்சி தொடர்பான ஆடியோக்களை குமாரசாமி வெளியிட்டு வருவது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #kumaraswamy #bjp #yeddyurappa
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். பா.ஜனதாவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அத்துடன் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் உள்ளது. இன்னும் 7 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தால் பா.ஜனதா ஆட்சி அமைத்துவிடும்.
இதற்காக கூட்டணி ஆட்சியில் மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருந்து வரும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
இதற்காக ‘ஆபரேஷன் தாமரை’ திட்டத்தை பா.ஜனதா கையில் எடுத்துள்ளது. காங்கிரசின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, உமேஷ் ஜாதவ், மகேஷ் கமடள்ளி, நாகேந்திரா ஆகியோர் மும்பையில் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த 8-ந் தேதி பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் கூட்டத்தை புறக்கணித்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் மனு கொடுப்பது என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் கடந்த 8-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவர் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த நாகன கவுடா எம்.எல்.ஏ.வை இழுக்க அவரது மகன் ஷரண் கவுடாவிடம் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பேரம் பேசிய உரையாடல் ஆடியோவை வெளியிட்டு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார்.
அந்த உரையாடலில் இருப்பது தனது குரல் இல்லை என்று மறுத்த எடியூரப்பா, முதல்-மந்திரி குமாரசாமி தனது தோல்விகளை மறைக்க போலி ஆடியோவை வெளியிட்டு நாடகமாடுகிறார் எனவும் சாடியிருந்தார்.
மேலும், தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாகவும் எடியூரப்பா அறிவித்திருந்தார். பா.ஜனதாவினரும், குமாரசாமி வெளியிட்ட பேர ஆடியோ போலியானது எனவும் கூறி வந்தனர்.
இந்த நிலையில், பேரம் பேசியதாக குமாரசாமி வெளியிட்ட ஆடியோ பதிவில் இருப்பது தனது குரல்தான் என்று எடியூரப்பா நேற்று திடீரென்று ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து முதல் மந்திரி குமாரசாமி உத்தரவிட வேண்டும். 15 நாட்களுக்குள் சட்டசபையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ் குமார் வலியுறுத்தினார்.
இதைதொடர்ந்து, மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.வை இழுக்க எடியூரப்பா நடத்திய பேரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழுவை அமைத்து முதல் மந்திரி குமாரசாமி இன்று உத்தரவிட்டுள்ளார். #KarnatakaCM #Kumaraswamy #Yeddyurappa
பெங்களூருவில் பா.ஜனதா செய்தி தொடர்பாளரான அஸ்வத் நாராயணா எம்.எல்.ஏ நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-மந்திரி குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வின் மகனுடன் பேரம் பேசுவது தொடர்பாக ஒரு ஆடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த ஆடியோ போலியானது. குமாரசாமி சினிமா தயாரிப்பாளராக இருந்து அரசியலுக்கு வந்ததால், எந்த விதமான வீடியோ, ஆடியோவை தயாரிப்பதில் கைதேர்ந்தவர். அதனால் தான் எடியூரப்பா பேசுவது போன்ற ஆடியோவை போலியாக தயாரித்து வெளியிட்டுள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களை திருப்திப்படுத்தவே இந்த போலி ஆடியோவை வெளியிட்டுள்ளார்.
எடியூரப்பா மீது மாநில மக்களிடையே தவறான தகவல்களை குமாரசாமி பரப்பி வருகிறார். இதற்கு முன்பு எடியூரப்பா பேசுவது போல 2 ஆடியோவை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உக்ரப்பா வெளியிட்டு இருந்தார். அது போலியானது என்று தெரியவந்தது. தற்போது மற்றொரு போலி ஆடியோவை எடியூரப்பாவுக்கு எதிராக வெளியிட்டுள்ளனர்.
ஜனதாதளம்(எஸ்) கட்சியில் சூட்கேசு கலாசாரம் இருப்பதாக தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவே கூறி இருக்கிறார். அதனால் சட்டசபை தேர்தல், எம்.எல்.சி. தேர்தல், டெல்லி மேல்-சபை தேர்தல் நடந்தால், அந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு சீட் வழங்க குமாரசாமியும், தேவேகவுடாவும் பணம் பெற்று வருகின்றனர். சீட் கேட்பவர்களிடம் பணம் வாங்க கடையை விரித்து வைத்து 2 பேரும் காத்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் எடியூரப்பாவை பற்றி பேச தகுதி இல்லை.
பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.சி.யிடம் முதல்-மந்திரி குமாரசாமி ரூ.25 கோடி பேரம் பேசும் ஆடியோ உள்ளது. அதனை விரைவில் வெளியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #BJP
கர்நாடக மாநிலத்தில் ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தொடர்ந்து சதி செய்து வருவதாக 2 கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டி இருந்தனர்.
இந்த நிலையில் முதல் மந்திரி குமாரசாமி இன்று ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ. நாகனகவுடாவுக்கு மந்திரி பதவியும், ரூ. 50 கோடியும் தருவதாக எடியூரப்பா ஆசை வார்த்தை கூறி பேசிய காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
நாகனகவுடாவின் மகனும், எடியூரப்பாவும் போனில் பேசிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டு இன்று ஆடியோவாக வெளியிடப்பட்டது. இந்த ஆடியோ வெளியானதால் பா.ஜனதாவினர் கலக்கத்தில் உள்ளனர். #Kumaraswamy #Yeddyurappa
கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும், எனவே முதல்-மந்திரி குமாரசாமி பதவி விலக வேண்டும் என்று கோரி பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் கடும் அமளி ஏற்பட்டு, நேற்று சட்டசபையை நாள் முழுவதும் சபாநாயகர் ரமேஷ்குமார் ஒத்தி வைத்தார்.
பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே கூட்டணி அரசு கவிழும் என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சூழ்நிலையில், இன்று மதியம் முதல் மந்திரி குமாரசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டில் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பாக்கப்படுகிறது.
பட்ஜெட் தாக்கலின்போது சட்டசபையில் தொடர்ந்து அமளியை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜகவை சமாளிக்க ஜேடிஎஸ், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆயத்தமாக உள்ளனர்.
இதற்கிடையே, பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக, அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் வகையில் அவர்களுக்கு முதல் மந்திரி குமாரசாமி முக்கிய பொறுப்புகள் வழங்கி உள்ளார். #KarnatakaBudget #HDKumaraswamy #RebelMLAs
கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று நடந்த 2-வது நாள் கூட்டத்தில், கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும், எனவே முதல்-மந்திரி குமாரசாமி பதவி விலக வேண்டும் என்று கோரி பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனால் கடும் அமளி ஏற்பட்டு சட்டசபையை நாள் முழுவதும் சபாநாயகர் ரமேஷ்குமார் ஒத்தி வைத்தார்.
இதுகுறித்து முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூரு விதான சவுதாவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பா.ஜனதாவினர் சட்டசபை நடவடிக்கைகளுக்கு குறுக்கீடு செய்யும் வகையில் தர்ணா போராட்டம் நடத்துகிறார்கள். சபை சுமுகமாக நடைபெற ஒத்துழைத்தால், அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன்.
அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறி தர்ணா நடத்துகிறார்கள். தர்ணா நடத்துவதற்கு பதிலாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை பா.ஜனதா கொண்டுவர வேண்டும். எந்த நோக்கத்திற்காக அவர்கள் தர்ணா நடத்துகிறார்கள் என்பது தெரியவில்லை.
நாடாளுமன்றத்தில் நிதித்துறை மந்திரி பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, அதன் பிரதியை உறுப்பினர்களுக்கு வழங்குவது இல்லை. பட்ஜெட் முழுமையாக தாக்கல் செய்யப்பட்ட பிறகே புத்தகம் வழங்கப்படுகிறது. அந்த நடைமுறையை தான் இப்போது நான் இங்கே பின்பற்ற முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு குமாரசாமி கூறினார். #Kumaraswamy #BJP
சட்டசபை கூட்டம் தொடங்குவதற்கு முன்பு கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் அதன் தலைவர் எடியூரப்பா பெங்களூரு விதான சவுதாவில் ஆலோசனை நடத்தினார். இதில் எடியூரப்பா பேசியதாவது:-
கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை. அதனால் கூட்டணி அரசு எந்த நேரத்திலும் கவிழும். அதற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. அதனால் நமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினரின் ஆசைகளுக்கு அடிபணிய வேண்டாம். உங்களுடன் கட்சி உள்ளது. உங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படுங்கள். இந்த கூட்டணி அரசு பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே கவிழ்ந்துவிடும் என்று தோன்றுகிறது.
நமது கட்சி எம்.எல்.ஏ.க்களிடையே ஒற்றுமை தொடர்ந்து இருக்க வேண்டும். இன்று (அதாவது நேற்று) எடுத்துள்ள முடிவில் இருந்து யாரும் பின்வாங்கக்கூடாது. இந்த கூட்டணி அரசில் நடந்து வரும் ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு சாதகமாக இருக்கிறது. சட்டசபை கூட்டத்தில் நமது கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொண்டு ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும். இது நமது கட்சி மேலிட தலைவர்களின் உத்தரவு ஆகும்.
கவர்னர் உரையின்போதே இந்த அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது வெளிப்பட்டுள்ளது. குமாரசாமி மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. அவர்களே சண்டை போட்டுக்கொண்டு ஆட்சியை இழப்பார்கள். நாம் பொறுமையாக அதை பார்க்க வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி இன்று (வெள்ளிக்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் எடியூரப்பா கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Yeddyurappa #BJP
கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எனது கூட்டணி அரசுக்கு எந்த மிரட்டலும் இல்லை. எனது தலைமையிலான காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு பாராளுமன்ற தேர்தல் வரை மட்டுமல்ல, தனது 5 ஆண்டுகள் ஆட்சி காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் நான் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன்.
சில ஊடகங்கள், அரசின் நிலையற்ற தன்மையில் இருப்பதாக தவறான தகவல்களை பரப்புகின்றன. காங்கிரசை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியிடப்படுகின்றன. நான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் இன்று கூட பேசினேன். சட்டசபை கூட்டத்தில் அவர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த கூட்டணி அரசு தனது ஆட்சி காலத்தை பூர்த்தி செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதை நான் செய்வேன். இந்த அரசுக்கு காலக்கெடு குறித்து வருகிறார்கள். பிரச்சினைகளை எவ்வாறு சரிசெய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும்.
எனது கூட்டணி அரசுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அதை பாதுகாக்க பா.ஜனதாவில் எனக்கு ஆதரவு உள்ளது. எனது செயல்பாட்டில் காங்கிரசின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். கூட்டணி அரசு நீடிக்காது என்று தவறான தகவல்களை சிலர் வேண்டுமென்றே பரப்புகிறார்கள்.
கூட்டணி அரசு என்றாலே சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். இதை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பதை நான் செய்கிறேன். சித்தராமையா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களை கையாளுவதில் எந்த பிரச்சினையும் இல்லை.
முதல்-மந்திரி பதவி காலி இல்லை என்று சித்தராமையாவே கூறி இருக்கிறார். பெரும்பான்மை எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் இருந்தால், யார் வேண்டுமானாலும் முதல்-மந்திரியாக முடியும். இதுபற்றி நான் எதற்காக கவலைப்பட வேண்டும்.
சித்தராமையா முதல்-மந்திரியாக வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் பேசுகிறார்கள். இதில் தவறு ஒன்றும் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு குறித்து தேவேகவுடா பேசுவார்.
நிதி ஆதாரங்களை திரட்டுவதில் பிரச்சினை உள்ளது. அதனால் கர்நாடகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த சாத்தியமில்லை. ஆனால் பெண்கள், மதுவிலக்கை அமல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கிறார்கள். குஜராத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தாலும், மதுபானம் தாராளமாக கிடைக்கிறது. மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து ஆழமாக ஆலோசிக்க வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி கூறினார். #Kumaraswamy #Congress
கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
இதில் கூட்டணி கட்சியான காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். அவர்களை ‘ஆபரேஷன்’ தாமரை திட்டத்தின் மூலம் தங்கள் பக்கம் இழுத்து ஆட்சி அமைக்க அவ்வப்போது பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. இதனால் கூட்டணி ஆட்சிக்கு அடிக்கடி சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையே கூட்டணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான நாகேஷ், சங்கர் ஆகியோர் திரும்ப பெற்றனர். அத்துடன் மந்திரி சபையில் இருந்து நீக்கப்பட்ட ரமேஷ் ஜார்கிகோளி உள்ளிட்ட சில காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைய முயற்சி செய்தனர்.
இதனால் கூட்டணி ஆட்சியில் சலசலப்பு உருவானது. இதைதொடர்ந்து சட்டமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் காங்கிரசை சேர்ந்த ரமேஷ் ஜார்கிகோளி, உமேஷ் ஜாதவ், மகேஷ் கமடள்ளி, நாகேந்திரா ஆகிய 4 பேர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் அவர்கள் 4 பேருக்கும் விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சி நோட்டீசு அனுப்பியது. அதற்கு 4 பேரும் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை எனக் கூறி அவர்களை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டது.
ஆனால் அவர்கள் நேரில் ஆஜராகியும் விளக்கம் அளிக்கவில்லை. இதனால் 4 எம்.எல்.ஏ.க்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், சபாநாயகர் மூலம் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யவும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை(புதன்கிழமை) பெங்களூருவில் உள்ள விதானசவுதா கட்டிடத்தில் தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் நாளை தொடங்கும் சட்டசபை கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றுகிறார்.
இந்த கூட்டத்தொடரில் கூட்டணி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக காங்கிரசை சேர்ந்த 20 எம்.எல். ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கவும், பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்காமல் இருக்க செய்யவும் பா.ஜனதா முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுத்து கூட்டணி ஆட்சியை கலைக்க பா.ஜனதா தலா ரூ.50 கோடி பேரம் பேசி வருவதாக கூட்டணி ஆட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கொப்பலில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பா.ஜனதாவினருக்கு ஆட்சி அதிகார பைத்தியம் பிடித்துவிட்டது. கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்கிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜனதா தலா ரூ.50 கோடி(மொத்தம் ரூ.1,000 கோடி) தருவதாக பேரம் பேசுகிறது. இந்த பணம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?. ஒரு வாரம் அரியானாவில் நட்சத்திர ஓட்டலில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருந்தனர். அதற்கு எங்கிருந்து பணம் வந்தது?.
பொதுமக்கள் வரியாக செலுத்திய பணத்தை பா.ஜனதாவினர் கொள்ளையடித்து உள்ளனர். மீண்டும் கொள்ளையடிக்க ஆட்சி அதிகாரம் வேண்டும். அதற்காகத்தான் அவர்கள் ஆட்சிக்கு வர முயற்சித்து வருகிறார்கள்.
இவ்வாறு சித்தராமையா கூறினார். #Siddaramaiah #BJP
ஜனதா தளம்(எஸ்) கட்சியின் பொதுக்கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா கலந்து கொண்டு பேசியதாவது:-
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் முதல்-மந்திரி குமாரசாமியை தொடர்புகொள்ள முடியவில்லை என்று சொல்கிறார்கள். இதுபோல் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் தினமும் பேசுகிறார்கள். காங்கிரஸ் கொடுத்த பட்டியலில் ஒரு வாரியத்தை தவிர மற்ற வாரியங்களுக்கு தலைவர்களை நியமனம் செய்துள்ளோம்.
ஆட்சி நிர்வாகத்தை எப்படி நடத்துவது என்று எங்களுக்கு தெரியவில்லை. எத்தனை நாட்கள் தான் இவ்வாறு நடந்து கொள்வீர்கள்?. ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் ஒவ்ெவான்று பேசுகிறார்கள். நாங்கள் இப்போது இறுதிக்கட்டத்தில் வந்து நிற்கிறோம்.
நாட்டில் சில கூட்டணி அரசுகள் அமைந்துள்ளன. நானும் காங்கிரசின் ஆதரவில் பிரதமரானேன். தரம்சிங் ஆட்சியில் கூட்டணி நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை. தரம்சிங் அரசு கவிழ நானோ அல்லது குமாரசாமியோ காரணமல்ல. இப்போது காங்கிரஸ் ஆதரவில் குமாரசாமி முதல்-மந்திரி ஆகி இருக்கிறார்.
தனக்கு ஏற்பட்ட வேதனை காரணமாக, முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக குமாரசாமி கூறினார். எங்கள் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் தான்(சித்தராமையா) எந்த பணிகளையும் செய்யவில்லை. அப்போது எனக்கு ஏற்பட்ட வலி, கடவுளுக்கு மட்டுமே தெரியும்.
சோனியா காந்திக்கு அழுத்தம் கொடுத்திருந்தால், நான் முதல்-மந்திரி ஆகி இருப்பேன் என்று அவர் (சித்தராமையா) அடிக்கடி சொன்னார். கூட்டணி ஏற்பட்டபோதும், என்னையே மீண்டும் முதல்-மந்திரியாக்கி இருக்கலாம் என்று அவர் கூறினார்.
அப்போது காங்கிரசில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. யார் ஆட்சியை நடத்துவது என்ற கேள்வி எழுந்தது. சோனியா காந்தியின் பிரதிநிதிகள் வந்து, குமாரசாமியை முதல்-மந்திரியாக்கினால் ஆதரவு வழங்குவதாக கூறினார்கள். இதனால் காங்கிரஸ் மேலிடத்தின் விருப்பப்படி குமாரசாமி முதல்-மந்திரியானார்.
கூட்டணி அரசு பற்றி யாராவது விமர்சனம் செய்தால் அதை நான் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டேன். அதற்கு தக்க பதில் கொடுப்பேன். காங்கிரசார் தொடா்ந்து எங்களை விமர்சித்து பேசினால், நிலைமை கைமீறி போய்விடும்.
இனி காங்கிரசாரின் விமர்சனத்தை நான் சகித்துக்கொள்ள மாட்டேன். சித்தராமையா 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்து ஆட்சி நிர்வாகத்தை நடத்தினார். அவரை பற்றி நாங்கள் எந்த விமர்சனமும் செய்யவில்லை. குமாரசாமி இதுவரை எல்லை மீறி பேசியது இல்லை.
ஒரு முறை மட்டும், நான் குமாஸ்தாவை போல் பணியாற்றுவதாக கூறினார். அது உண்மை. ஆனால் அது, ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் அவர் தனிப்பட்ட முறையில் கூறியது. கூட்டணி அரசை நடத்துவது எவ்வளவு கடினமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கவே அவர் அவ்வாறு கூறினார். அந்த வார்த்தையின் பின்னணியில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.
இவ்வாறு தேவேகவுடா கூறினார். #Devegowda #Congress
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) அரசு நடக்கிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். ஆனால் காங்கிரஸ் மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலர், எங்கள் முதல்-மந்திரி சித்தராமையா தான் என்று கூறுகிறார்கள்.
இதற்கு சற்று கோபமாக பதிலளித்த குமாரசாமி, காங்கிரசார் இதேபோல் தொடர்ந்து பேசினால், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன் என்று எச்சரிக்கை விடுத்தார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, குமாரசாமியை தனது வீட்டுக்கு அழைத்து பேசினார்.
அப்போது தேவேகவுடா, “காங்கிரசாரின் விமர்சனத்திற்கு உடனே கருத்து கூற வேண்டாம். அதுபற்றி கவலைப்பட வேண்டாம். முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியது தவறு. அரசியலில் இதுபோன்ற விமர்சனங்களை தாங்கிக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் பொறுமையை இழக்க வேண்டாம். அவற்றை கவனத்தில் கொள்ளாமல் ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று அறிவுரை கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Devegowda #Kumaraswamy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்