என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 100153"
கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா சதி செய்து வருவதாக 2 கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டி வந்தனர். அவர்கள் உள்கட்சி மோதலில் பா.ஜனதாவை தேவையில்லாமல் வம்புக்கு இழுப்பதாக எடியூரப்பா பதிலடி கொடுத்து இருந்தார்.
இந்த நிலையில் கூட்டணி கட்சி மோதல் இன்று பகிரங்கமாக வெடித்தது. காங்கிரசை சேர்ந்த சோமசேகர் எம்.எல்.ஏ. சித்தராமையா ஆட்சியை புகழ்ந்து பேட்டி கொடுத்தார். அவர் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டு காலம் சித்தராமையா நன்றாக ஆட்சி நடத்தினார். மக்களுக்கு தேவையான அனைத்து பணிகளும் திட்டமிட்டபடி நடந்தன. ஆனால் தற்போது கூட்டணி ஆட்சியில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. எங்களை மதிப்பதும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினர்.
இதே போல மந்திரி நாகராஜ் கூறும்போது, கூட்டணி ஆட்சியில் எந்த பணியும் நடைபெறவில்லை என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
குமாரசாமி பேட்டிக்கு பதில் கூறும் வகையில் காங்கிரசை சேர்ந்த துணை முதல்மந்திரி பரமேஸ்வர் கூறியதாவது:-
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பேசுவதில் தவறு இல்லை. 5 ஆண்டு காலம் சித்தராமையா சிறப்பான ஆட்சியை நடத்தினார். அதனால் அவரை பற்றி எம்.எல்.ஏ.க்கள் பேசுகிறார்கள். அவர்தான் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் என்பதால், அவரை முதல்வர் என்று எம்.எல்.ஏ.க்கள் அழைக்கிறார்கள். குமாரசாமி முதல்-மந்திரியாக தொடர்வதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டணி ஆட்சியை விமர்சித்து பேசிய எம்.எல்.ஏ. சோமசேகருக்கு விளக்கம் கேட்டும் நோட்டீசு அனுப்பப்படும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ்குண்டுராவ் தெரிவித்தார். #Congress #Kumaraswamy
ஜனதா தளம்(எஸ்) தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இதுவரை தொடங்கவில்லை. இந்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும்.
பெங்களூரு நகருக்குள் வரும் பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு செயல் தலைவர் நியமனம் செய்யப்படுவார். தேர்தல் பொறுப்பாளராக குபேந்திரரெட்டி எம்.பி. நியமனம் செய்யப்படுவார். அவர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கலந்துரையாடுவார். தேர்தல் பிரசாரத்தை அவர் ஒருங்கிணைப்பார்.
காங்கிரசுடன் பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகே, எத்தனை தொகுதிகள் எங்களுக்கு கிடைக்கும் என்பது தெரியவரும். பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ஹாசன் தொகுதியில் எனது பேரன் பிரஜ்வல்லை நிறுத்து முடிவு செய்துள்ளேன் என்பதை நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன். ஆயினும் இதுபற்றி எங்கள் கட்சியின் உயர்நிலை குழு கூட்டத்தில் தான் இறுதி முடிவு எடுக்கப்படும்.
ஏழை மக்களின் நலனை காக்க குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு செயலாற்றி வருகிறது.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் டி.ஏ.ஷரவணா எம்.எல்.சி., குபேந்திரரெட்டி எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.#DeveGowda
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதள ஆட்சியை கவிழ்க்க பாரதீய ஜனதா சதி செய்து வருவதாக கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான சித்தராமையா ஆகியோர் கூறி இருந்தனர்.
ஏற்கனவே 2 முறை ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்ததாகவும், தற்போது 3-வது முறையாக இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் சித்தராமையா மற்றும் துணை முதல்மந்திரி பரமேஸ்வர் ஆகியோர் குற்றம் சாட்டி இருந்தனர்.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க காங்கிரசார் நடவடிக்கை எடுத்தாலும் பாரதீய ஜனதா தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் போனில் பேசி அவர்களை இழுக்க முயற்சி செய்து வருவதாக கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடக மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிக்க வில்லை என்று எடியூரப்பா கூறி இருக்கிறார். ஆபரேசன் தாமரை நடைபெறவில்லை என்றும் அவர் கூறி இருக்கிறார். ஆனால் உண்மையில் ஆபரேசன் தாமரை திட்டத்தை பா.ஜனதா கைவிடவில்லை. இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் பா.ஜனதா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
கடந்த வியாழக்கிழமை இரவு கூட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவருடன் பா.ஜனதாவினர் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். அப்போது பா.ஜனதாவுக்கு வரும்படி அந்த எம்.எல்.ஏ.வை அழைத்து இருக்கிறார்கள்.
அதற்காக மிகப்பெரிய பரிசை கொடுப்பதாக அந்த எம்.எல்.ஏ.விடம் சொல்லி இருக்கிறார்கள். அந்த மிகப்பெரிய பரிசு நீங்கள் நினைப்பது போல் மிகக்குறைவான பரிசு அல்ல. அது மிகப்பெரிய பரிசு.
அந்த மிகப்பெரிய பரிசு என்னவென்று நான் சொன்னால் அனைவரும் வியப்படைவீர்கள். மிகப்பெரிய பரிசு மட்டுமல்ல பணமும் கொடுப்பதாக அந்த எம்.எல்.ஏ.விடம் பா.ஜனதாவினர் பேரம் பேசி இருக்கின்றனர்.
ஆனால் அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜனதாவுக்கு வரமாட்டேன் என்று கூறி இருக்கிறார். தற்போது தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தன்னை தொடர்பு கொள்வதை விட்டுவிடும்படியும் அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜனதாவிடம் கூறி இருக்கிறார். இந்த தகவலை அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வே என்னிடம் கூறினார்.
அந்த எம்.எல்.ஏ.வுக்கு பா.ஜனதா கொடுக்கும் மிகப்பெரிய பரிசு என்ன என்பதை நான் கூறமாட்டேன். அதுகுறித்து அந்த எம்.எல்.ஏ.வை தொடர்பு கொண்டு நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்.
கடந்த 2008-ம் ஆண்டு எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசி இழுத்து முதல் மந்திரி பதவியை எடியூரப்பா தக்க வைத்துக்கொண்டார். அதுபோலத்தான் தற்போதும் எம்.எல்.ஏ.க் களை இழுக்கும் பணியை பா.ஜனதா மேற்கொண்டு வருகிறது.
எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சித்து வருவதை நான் ஒன்றும் செய்ய முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #kumarasamy #bjp #congressmlas #yeddyurappa
பிரதமர் வேட்பாளராக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆதரிப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திக்கு, கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டால், அவரை நாங்கள் ஆதரிப்போம். இதற்கு எங்கள் கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடாவும் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளும் ஒன்றுகூடி போராட வேண்டியது அவசியம். பிரதமர் பதவியை நிர்வகிக்கும் தகுதி, திறன் ராகுல் காந்திக்கு உள்ளது. பிரதமர் மோடிக்கு பலமான போட்டியாளர் ராகுல் காந்தி.
பிரதமர் மோடி வெறும் காகித புலி. கடந்த தேர்தலின்போது, மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை. வெறும் வாய்ப்பேச்சால் நாட்டு மக்களின் கவனத்தை திசைதிருப்புகிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #RahulGandhi
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் அந்த மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி மத்திய பா.ஜனதா தலைமையிலான ஆட்சியை வருகிற தேர்தலில் தோற்கடிப்பதற்காக 22 எதிர்க்கட்சிகளை திரட்டி பொதுக்கூட்டம் நடத்தினார்.
இதில் கர்நாடக முதல்-மந்திரியும், ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவருமான குமாரசாமியும் கலந்துகொண்டார். குமாரசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மம்தா பானர்ஜி இந்த மகாகூட்டணியை திரட்டி பொதுக்கூட்டத்தை நடத்தி மிகப்பெரிய வேலையை செய்துள்ளார். ஏன் இடதுசாரி கட்சிகளைக்கூட அவர் இந்த கூட்டணியில் பங்கேற்கும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது பா.ஜனதா அரசுக்கு எதிரான அவரது போராட்ட தந்திரத்தையும், பெருந்தன்மையையும் காட்டுகிறது. இந்த போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக அவர் சில சமரசங்களை செய்துகொள்ளவும் தயாராக இருக்கிறார்.
தலைமையை முடிவு செய்வது தேர்தல் வெற்றிக்கு ஒரு அளவுகோல் இல்லை. பிரதமர் நரேந்திரமோடி அரசின் நிர்வாகத்தின் மீது நாட்டு மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பல மாநிலங்களிலும் அவர்களது சொந்த பிரச்சினைகள் உள்ளன. எனவே தேர்தலுக்கு முன்பு தலைவரை தேர்வு செய்யவேண்டிய அவசியம் இல்லை.
மம்தா பானர்ஜி மிக எளிமையாகவும், மிகச்சிறந்த நிர்வாகியாகவும் இருக்கிறார். அவருக்கு இந்த நாட்டை தலைமை தாங்கி வழிநடத்தும் அனைத்து தகுதிகளும் இருப்பதாக நான் நம்புகிறேன். அவர் ஏற்கனவே மேற்கு வங்காளத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தி இதனை நிரூபித்து இருக்கிறார்.
இந்த மகா கூட்டணி தேசிய கட்சிகளுக்கு மாற்றாக இருக்கும். ஒவ்வொரு கட்சிக்கும் தேசிய கட்சி உறுப்பினர்களைவிட வலிமையான மாநில தலைவர்கள் இருக்கிறார்கள். இந்த மாநில கட்சிகள் தேர்தலில் முக்கிய பங்காற்றும். இந்த முறை மக்கள் அவர்களை வெற்றி பெறச் செய்வார்கள். தேர்தலுக்கு பின்னர் சந்திரசேகர்ராவ் போன்ற மேலும் பல தலைவர்கள் இந்த கூட்டணியில் சேருவார்கள்.
இவ்வாறு குமாரசாமி கூறினார். #MamataBanerjee #Kumaraswamy
கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம் - காங்.,கூட்டணி ஆட்சி நடக்கிறது. அமைச்சரவை விஸ்தரிப்புக்கு பின், காங்கிரசில் அதிகரித்த அதிருப்தி, இன்னும் ஓயவில்லை.
அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட, ரமேஷ் ஜார்கிஹோளி, தன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களுடன் டெல்லி சென்றிருந்தார். பா.ஜ., மேலிட தலைவர்களை சந்திக்க முயற்சித்தார். இதற்கிடையில், கார்ப்பரேஷன் மற்றும் வாரிய நியமனத்துக்கு பின், காங்கிரசில் சில, எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் கொதித்தனர். இவர்கள், ரமேஷ் ஜார்கிஹோளி கோஷ்டியில் இணைந்தனர். சிலர், அதிருப்தி கொடியேந்தி, மஹாராஷ்டிர மாநிலம், மும்பைக்கு பறந்தனர்.
இந்த அதிருப்தியை சாதகமாக்கி, கர்நாடகாவில் ஆட்சியமைக்க, பா.ஜனதா தலைவர்கள், களமிறங்கியதாக தகவல் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த விவகாரத்தில், காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு, அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த முயற்சி எடுத்து வருகிறது.
கூட்டத்தின் முடிவில், மேலிட தலைவர்கள் கூறியதாவது:
பா.ஜ.,வின்,ஆப்பரேஷன் தாமரை' முயற்சி இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், சில நாட்கள் கட்டாயமாக சொகுசு விடுதியில் தங்க வேண்டும். எந்த விளக்கமும் தேவையில்லை. வீட்டுக்கு செல்ல வாய்ப்பு அளிக்க முடியாது. தொலைபேசி மூலம் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, விடுதிக்கு செல்லும் விஷயத்தை கூறி, உங்களுக்கு தேவையான பொருட்களை வரவழைத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
இதையடுத்து, காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், பிடதியில் உள்ள சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால், குமாரசாமி தலைமையிலான அரசுக்கு ஆபத்து நீடிக்கிறது. குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர், கடும் கலக்கத்தில் உள்ளனர். #OperationLotus #CLP #KarnatakaPolitics #Congress
பெங்களூரு விதானசவுதாவில் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டணி ஆட்சியை காப்பாற்றி கொள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்க நாங்கள் முயற்சிக்கவில்லை. ஆனால் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க அனைத்து முயற்சியிலும் பா.ஜனதா தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்க நான் முயற்சிப்பதாக எடியூரப்பா குற்றச்சாட்டு கூறியுள்ளார். இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. புத்தாண்டை கொண்டாட எனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்றிருந்தேன். அதனை எடியூரப்பா பெரிய குற்றச்சாட்டாக கூறினார். தற்போது எதற்காக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அரியானாவில் உள்ள ஓட்டலில் தங்கி உள்ளார்கள் என்று தெரியவில்லை.
வறட்சி பாதித்த தாலுகாக்களில் நிவாரண பணிகள் நடைபெறவில்லை என்று எடியூரப்பா குற்றச்சாட்டு கூறியுள்ளார். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அரியானா ஓட்டலில் அமர்ந்து வறட்சி பாதித்த தாலுகாக்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்களா? என்பது குறித்து எடியூரப்பா தான் சொல்ல வேண்டும். நான் ஓரிரு நாட்கள் வெளிநாட்டுக்கு சென்றதை பெரிதுபடுத்திய எடியூரப்பா, ஒரு வாரத்திற்கும் மேலாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் டெல்லி மற்றும் அரியானாவில் தங்கி இருப்பது ஏன் என்பது குறித்து தெரிவிக்க வேண்டும்.
பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் செல்போன்களை பறித்து வைத்து கொண்டு இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளது. இவை எல்லாம் எதற்காக பா.ஜனதாவினர் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை.
கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதாவினர் நினைப்பதாக நான் எந்த குற்றச்சாட்டும் சொல்லவில்லை. அதுபோன்ற தகவல்கள் பத்திரிகைகளில் தான் வருகிறது. காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை சரியாக வைத்துகொள்ள வேண்டியது, அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் பொறுப்பு தான் என்று பா.ஜனதாவினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். நாட்டில் எந்தவொரு மாநிலத்திலும் எம்.எல்.ஏ.க்களை ஒரே இடத்தில் அடைத்து வைப்பது கிடையாது. பா.ஜனதாவினர் தான் அப்படி செய்துள்ளனர்.
எங்கள் எம்.எல்.ஏ.க்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. அதனால் அவர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதித்துள்ளோம். கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நினைப்பது, மாநிலத்தில் பா.ஜனதா செய்யும் அரசியல் நிலை குறித்து மக்கள் தினம் தினம் கவனித்து வருகின்றனர். பா.ஜனதாவுக்கு சரியான நேரத்தில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை மூலம் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சித்து வருவதாக முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். அதே நேரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை, முதல்-மந்திரி குமாரசாமி இழுக்க முயற்சிப்பதாக கூறி அவர்கள் (பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள்) கடந்த 3 நாட்களாக டெல்லி மற்றும் அரியானாவில் உள்ள ஓட்டல்களில் முகாமிட்டு இருந்தனர். இந்த நிலையில், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதுபோன்று எதுவும் நேற்று நடைபெறவில்லை.
இதனால் பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரை தோல்வியில் முடிந்துள்ளதாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் டெல்லி, அரியானாவில் முகாமிட்டுள்ள எடியூரப்பா மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இன்று(வியாழக்கிழமை) பெங்களூருவுக்கு திரும்ப உள்ளனர். இதற்கிடையில், காங்கிரஸ் குற்றச்சாட்டு குறித்து பா.ஜனதா செய்தி தொடர்பாளர் சி.டி.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா நினைக்கவில்லை. ஆபரேஷன் தாமரையும் நடக்கவில்லை. ஆனால் மக்களை திசை திருப்பவும், பா.ஜனதாவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தவும் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு கூறி நாடகமாடுகின்றனர்.
எங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக டெல்லியில் தங்கியுள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பா.ஜனதாவுடன் தொடர்பில் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் பா.ஜனதா மீது குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #BJP #Congress
பெங்களூருவில் மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதாவினர் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். எல்லாருக்கும் பதவி மீது ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லை. அதனால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சி, அதிகாரத்திற்காக பா.ஜனதா செய்யும் தந்திரங்கள் பற்றி நன்கு தெரியும்.
எத்தனை எம்.எல்.ஏ.க்களுடன் அவர்கள் பேரம் பேசி உள்ளனர். எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த விதமான பதவிகள், பணம் தருவதாக கூறியுள்ளனர் என்ற தகவல்கள் உள்ளன. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பேரம் பேசியது உள்ளிட்ட எல்லா ஆதாரங்களையும் காங்கிரஸ் தலைவர்களிடம் எம்.எல்.ஏ.க்களே கொடுத்துள்ளனர்.
எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவது பற்றி முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையாவுக்கு நன்கு தெரியும். அதனை அவர்கள் அலட்சியமாக விட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி குமாரசாமியும், சித்தராமையாவும் பொறுமையாக உள்ளனர். நானாக இருந்தால் 24 மணிநேரத்தில் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிட்டு இருப்பேன். கூடிய விரைவில் எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிடுவோம்.
மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து ஆட்சியை கவிழ்க்க சதி நடந்து வருகிறது. தற்போது 3 எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் முகாமிட்டுள்ளனர். அந்த எம்.எல்.ஏ.க்கள் யார்? என்று தற்போது சொல்ல முடியாது. அவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களா? பா.ஜனதாவை சேர்ந்தவர்களா? என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது.
மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பலர் எங்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்.
இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார். #DKShivakumar
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்