search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100153"

    மேகதாதுவில் அணை கட்டும் முடிவை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்று கர்நாடகா அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. #karnataka #Mekedatudam
    பெங்களூரு:

    தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

    இந்நிலையில், பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரிகள் மற்றும் மந்திரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    அப்போது கூட்டத்தில் கர்நாடக அரசு சார்பில் கர்நாடக மந்திரி சிவக்குமார் பேசியதாவது:

    மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி, திட்டத்தை கர்நாடகா ஒருபோதும் கைவிடாது. நாளை முதல் அணை கட்டுவது குறித்து ஆய்வுப் பணிகள் தொடங்கப்படும்.

    வனத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் நாளை ஆய்வு மேற்கொள்கின்றனர் என்றார். #karnataka #Mekedatudam
    முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் இ்ன்று(வியாழக்கிழமை) மேகதாது திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. #MekedatuDam #Kumaraswamy
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு முதல் கட்ட ஒப்புதலை வழங்கியுள்ளது. ரூ.5,912 கோடியில் இந்த அணை கட்டப்படுகிறது. கர்நாடக அரசு, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளது.

    இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. மேகதாது திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று(வியாழக்கிழமை) நடக்கிறது.



    இந்த நிலையில் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க முன்னாள் முதல்-மந்திரிகள் மற்றும் முன்னாள் நீர்ப்பாசனத்துறை மந்திரிகளின் ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் இன்று நடக்கிறது. இதில் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட மந்திரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    மேகதாது திட்ட விவகாரத்தில் தமிழக அரசின் எதிர்ப்பை எவ்வாறு எதிர்கொள்வது, இந்த திட்டத்தை அடுத்தகட்டமாக எப்படி முன்னெடுத்து செல்வது என்பது குறித்து குமாரசாமி ஆலோசனைகளை கேட்டு பெறுகிறார்.

    இந்த நிலையில் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் தலைமையில் ஒரு குழு, நாளை(வெள்ளிக்கிழமை) மேகதாதுவுக்கு சென்று அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #MekedatuDam #Kumarasamy
    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முடியாது என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #Kumaraswamy #Karnataka
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வரும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக குதிரை பேர ஆடியோ பதிவு ஒன்று குமாரசாமிக்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் முதல்-மந்திரி குமாரசாமி தனது குடும்பத்துடன் மல்லேசுவரத்தில் உள்ள காடு மல்லேஸ்வரா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஆனால் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முடியாது. பா.ஜனதாவின் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது.



    நாங்கள் நல்லாட்சியை நடத்தி வருகிறோம். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று (அதாவது நேற்று) நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஸ்வரா கோவிலில் சிறப்பு பூஜை செய்ய முடிவு செய்திருந்தேன். ஆனால் வேறு நிகழ்ச்சிகள் இருப்பதால் அங்கு செல்ல முடியவில்லை.

    அதனால் இங்கு வந்து காடு மல்லேஸ்வரா கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டேன். கர்நாடக மக்களுக்கு நல்லது நடைபெறட்டும் என்று இறைவனிடம் வேண்டினேன்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #Kumaraswamy #Karnataka
    விவசாய கடன் தள்ளுபடி திட்ட பணிகளை வருகிற 5-ந் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று கலெக்டர்களுக்கு குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். #kumarasamy
    முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர்களுக்கு குமாரசாமி பிறப்பித்த உத்தரவுகள் குறித்த விவரம் வருமாறு:-

    விவசாய கடன் தள்ளுபடி குறித்து தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. அதனால் விவசாயிகள் இடையே எழுந்துள்ள சந்தேகங்களை போக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய கடன் தள்ளுபடி திட்ட பணிகளை வருகிற 5-ந் தேதி முதல் தொடங்க வேண்டும்.

    33 வங்கிகளிடம் இருந்து சுமார் 20 லட்சம் விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் தள்ளுபடிக்கு என்று தனியாக ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் பணியை சேடம் மற்றும் தொட்டபள்ளாபுரா ஆகிய தாலுகாக்களில் சோதனை அடிப்படையில் தொடங்கி இருக்கிறோம். இதுவரை 4,000 விவசாயிகள் தாமாக முன்வந்து தங்களின் விவசாய கடன் பற்றிய தகவல்களை கொடுத்துள்ளனர்.

    தெருவோர வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 தாலுகாக்கள் வறட்சி பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை கண்காணிக்க தாலுகாக்களுக்கு தலா ஒரு கண்காணிப்பு அதிகாரி வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கோசாலை திறக்க வேண்டிய அவசியம் எழுந்தால், அதற்கு சரியான இடத்தை மாவட்ட கலெக்டர்கள் தேர்வு செய்ய வேண்டும். பசுமை தீவனத்தை வளர்க்கும் வகையில் விவசாயிகளுக்கு அதற்கான விதைகளை வழங்க கால்நடைத்துறைக்கு ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    வறட்சி பாதித்த பகுதிகளில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். குடிநீர் விநியோக பணிகளுக்கு 30 மாவட்டங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வெங்காய விலை குறைந்துவிட்டது. இதனால் வெங்காயத்திற்கு ஆதரவு விலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளுக்கு நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்வதில் காலதாமதம் ஆவதாக புகார்கள் வந்துள்ளன. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பள்ளி கட்டிடங்களை சீரமைக்க ரூ.950 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்பு திட்டத்தின் மூலம் கூடுதலாக ரூ.450 கோடி ஒதுக்கி இருக்கறோம். இதை பயன்படுத்தி பள்ளி கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 9 மாவட்டங்களில் ெதாழிற்பேட்டைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். #kumarasamy
    பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #Mandyabus #kumarasamy
    மண்டியா :

    மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் இருந்து மண்டியாவுக்கு கடந்த 24-ந் தேதி தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் பள்ளி மாணவ-மாணவிகள் பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். அந்த பஸ் கனகனமரடி பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பாய்ந்தது. இதில் பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல்- மந்திரி சித்தராமையா, மந்திரிகள் டி.சி.தம்மண்ணா, புட்டராஜூ ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியானவர்களின் உடல்களை பார்வையிட்டனர். பின்னர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.

    இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று மண்டியாவில் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாண்டவபுரா தாலுகா கனகனமரடி பகுதியில் கால்வாயில் பஸ் பாய்ந்து 30 பேர் பலியான சம்பவம் துரதிர்ஷ்ட வசமானது. இறந்தவர்களின் குடும்பத்தினர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீண்டு இருக்க மாட்டார்கள்.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று நான் ஏற்கனவே அறிவித்து இருந்தேன். அதன்படி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விரைவில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Mandyabus #kumarasamy
    கர்நாடக மாநில முன்னாள் மந்திரியும் பிரபல கன்னட நடிகருமான அம்பரீஷ் உடல் பெங்களூருவில் உள்ள கன்ட்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. #ActorAmbareesh #Ambareeshlaidtorest
    பெங்களூரு:

    சுமார் 200 திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ்(66) பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு காலமானார்.

    நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பரான அம்பரீஷ் கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் முன்னர் மந்திரியாகவும் பதவி வகித்தவர். 

    உடல்நலக்குறைவால் பெங்களூரு நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அம்பரீஷ் மறைந்த செய்தியைக் அறிந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று பெங்களூருக்கு சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

    இந்நிலையில், பெங்களூரு நகரில் உள்ள கன்ட்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் அம்ரீஷின் உடல் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.  அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சிதைக்கு அம்ரீஷின் மகன் அபிஷேக் தீமூட்டினார்.

    முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல் மந்திரிகள் எடியூரப்பா, சித்தராமையா உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர். #ActorAmbareesh #Ambareeshlaidtorest
    பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் நேற்று காலமானார். அவரது உடலுக்கு நடிகர் ரஜினி காந்த், கர்நாடக முதல்வர் குமாரசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். #ActorAmbareesh
    அம்பரீஷ் பிரபல கன்னட நடிகர் ஆவார். அவர் கன்னட படங்களில் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பர் ஆவார். அவர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக பதவி வகித்தவர்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அம்பரீஷ் நேற்றிரவு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இந்த செய்தியைக் அறிந்த நடிகர் ரஜினிகாந்த் ஆழந்த இரங்கலை தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில் இன்று கர்நாடகா சென்ற ரஜினிகாந்த், அம்பரீஷ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். கர்நாடக முதல்வர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினார். அம்பரீஷ் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. #ActorAmbareesh
    6 மாதங்கள் ஆட்சியை பாதுகாத்ததே குமாரசாமியின் சாதனை என்றும், விவசாயிகளின் தற்கொலைக்கு குமாரசாமி தான் காரணம் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார். #Yeddyurappa #Kumaraswamy
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா  ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-

    குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்று 6 மாதங்கள் ஆகிறது. இதில் அவர் மக்களுக்கு கொடுத்த பொய்யான வாக்குறுதிகள் தான் அவரது சாதனை ஆகும். இந்த 6 மாதங்கள் ஆட்சியை பாதுகாத்துக் கொண்டதே அவரது முக்கிய சாதனை ஆகும்.

    இந்த அரசு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்திருந்தால், விவசாயிகள் எதற்காக தினமும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்?. இன்று (அதாவதுநேற்று) கூட மண்டியா மற்றும் கலபுரகியில் விவசாயிகள் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். விவசாயிகள் தற்கொலைக்கு முதல்-மந்திரி குமாரசாமியே காரணம் ஆகும்.

    தனது அரசு, சூழ்நிலையால் பிறந்த குழந்தையை போன்றது ஆகும் என்று குமாரசாமியே ஏற்கனவே கூறி இருக்கிறார். இந்த சூழ்நிலையால் பிறந்த குழந்தைக்கு ஏதாவது கொள்கை, கோட்பாடு, இலக்கு இருக்க முடியுமா?.

    குமாரசாமி தனது 6 மாத ஆட்சி காலத்தில் பாதி நாட்களை கோவிலுக்கு சென்றும், மீதமுள்ள நாட்களை சொகுசு ஓட்டலிலும் கழித்துள்ளார். பொதுமக்களை குறிப்பாக விவசாயிகளை தரக்குறைவாக பேசியது தான் அவர் செய்த சாதனை. ஆட்சி அதிகாரம், அவரது தலைக்கு ஏறிவிட்டது. அதனால் அவர் அடிக்கடி ஆணவ போக்குடன் பேசுகிறார்.



    பிரச்சினைகள் வரும்போது, பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிடுவேன் என்று குமாரசாமி பேசுகிறார். இது மக்களையும், ஜனநாயகத்தையும் அவமானப்படுத்துவது போல் ஆகும்.

    குமாரசாமி, இந்த மண்ணின் மைந்தன் என்று பேசுகிறார். விவசாயிகளின் பிரச்சினைகள் தனக்கு நன்றாக தெரியும் என்று சொல்கிறார். ஆனால் போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைக்கிறார்.

    செயல்படாத நிலையில் உள்ள குமாரசாமியின் செயல்பாடுகளை கண்டு காங்கிரசார் வாய் திறக்காமல் இருப்பது எனக்கு ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. பெண் விவசாயி ஒருவரை குமாரசாமி தரக்குறைவாக பேசுகிறார். இதன் மூலம் அவர் பெண் இனத்தை அவமதித்துவிட்டார்.

    இதற்கெல்லாம் குமாரசாமிக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ் தான் பொறுப்பு. வருகிற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Yeddyurappa #Kumaraswamy
    ஜனார்த்தனரெட்டிக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை என்று கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா கூறியுள்ளார். #Eshwarappa #TipuJayanti
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா பாகல்கோட்டையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எங்கள் கட்சியினரின் யாருடைய உடலிலும் திப்பு சுல்தானின் ரத்தம் ஓடவில்லை. பாரத மாதா, சுதந்திர போராட்டக்காரர்களின் ரத்தம் தான் ஓடுகிறது. இந்த திப்பு ஜெயந்தி விழாவை மாநில அரசு எதற்காக இவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்பது தெரியவில்லை. திப்பு ஜெயந்தி விழாவை கொண்டாட தொடங்கியதில் இருந்து இந்துமத அமைப்புகளின் தொண்டர்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தின்போது, குடகில் குட்டப்பா என்பவர் மரணம் அடைந்தார்.

    அப்போது அவரது வீட்டுக்கு குமாரசாமி நேரில் சென்று ஆறுதல் கூறினார். தான் முதல்-மந்திரியானால் திப்பு ஜெயந்தி விழாவை நடத்த அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார்.



    ஆனால் இப்போது குமாரசாமி திடீரென முதல்-மந்திரி ஆகி இருக்கிறார். கர்நாடகத்தில் இந்து-முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இருந்தனர். ஆனால் இப்போது இந்த அரசு திப்பு ஜெயந்தி விழாவை நடத்தி, இந்து, முஸ்லிம் மக்களிடையே அமைதியை குலைக்கிறது. மக்கள் இறந்தால், காங்கிரசாருக்கு மகிழ்ச்சியாக இருக்குமோ என்னவோ தெரியவில்லை.

    கர்நாடக பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாளை(அதாவது இன்று) பெங்களூருவில் நடக்கிறது. கூட்டத்தில் திப்பு ஜெயந்தி விழாவுக்கு எதிராக போராடுவது குறித்து முடிவு எடுக்கப்படும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்துவோம். திப்பு ஜெயந்தி விழா விஷயத்தில் குமாரசாமிக்கு எந்த நிலைப்பாடும் இல்லை. ஜனார்த்தனரெட்டிக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை. அவரை பற்றி என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம்.

    இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.  #Eshwarappa #TipuJayanti
    கர்நாடக மாநிலத்தில் திப்பு சுல்தான் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட எதிர்ப்பு பெருகிவரும் நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க குடகு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #144inKodagu #TipuJayanti
    பெங்களூரு:

    கர்நாடகம் உள்ளிட்ட இந்தியாவின் தெற்கு பகுதிகளை ஆண்ட திப்பு சுல்தானின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தனது ஆட்சிக்காலத்தில் இந்துக்களை கொடுமைப்படுத்தி, கொடூரமாக கொன்றுகுவித்த திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழாவை  சிறுபான்மையின மக்களின் ஓட்டுகளை கவரும் நோக்கத்தில் மாநில அரசு நடத்துவதாக சமீபகாலமாக எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

    திப்பு ஜெயந்தி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரில் நடந்த இந்த போராட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள், திப்பு ஜெயந்திக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

    நாளை நடைபெறும் திப்பு ஜெயந்தி விழாவில் பங்கேற்பதாக இருந்த முதல் மந்திரி குமாரசாமி அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க  குடகு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #144inKodagu  #TipuJayanti 
    கர்நாடக அரசு சார்பில் திப்பு ஜெயந்தி கொண்டாடினால் பா.ஜனதா சார்பில் 9-ந்தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. #BJP
    மைசூரு :

    ‘மைசூரு புலி‘ என அழைக்கப்படும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கர்நாடகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் வருகிற 10-ந்தேதி திப்பு ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை கர்நாடக அரசு சார்பில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதற்கு பா.ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மைசூருவுக்கு வந்த முன்னாள் துணை முதல்-மந்திரியும், பா.ஜனதா எம்.எல்.ஏ.வுமான ஆர்.அசோக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



    கர்நாடகத்தில் அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழா கொண்டாட ஏற்பாடு நடந்து வருகிறது. கடந்த காலங்களில் திப்பு ஜெயந்தி விழாவில் பங்கேற்க கேரள மாநிலத்தில் இருந்து முஸ்லிம் அமைப்புகள் இங்கே வந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடந்தால், மாநில அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்.

    கர்நாடக அரசு சார்பில் 10-ந்தேதி திப்பு ஜெயந்தி விழாவை கொண்டாடினால் பா.ஜனதா சார்பில் 9-ந்தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறேன். கூட்டணி ஆட்சி அமைந்து 5 மாதங்கள் ஆகிறது. ஆனால் இன்னும் இந்த அரசு செயல்படத் தொடங்கவில்லை. முதல்-மந்திரி குமாரசாமி தான் செல்லும் இடங்களில் மக்கள் மத்தியில் கண்ணீர் விட்டு அழுகிறார். விவசாயிகளின் கடனை இதுவரை தள்ளுபடி செய்யவில்லை. ஆனால் தனது இ‌ஷ்டத்துக்கு அவர் ஆட்சி நடத்தி வருகிறார். அரசின் கஜானா காலியாகிவிட்டது. இதனால் ஆட்சி நடத்த அவர் பரிதவித்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP
    கர்நாடகத்தில் ஆன்-லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக குமாரசாமி கூறினார். #kumaraswamy
    பெங்களூரு :

    பெங்களூருவில் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் ஆன்-லைனில் மதுபானம் விற்பனை செய்யும் முடிவு முந்தைய அரசால் எடுக்கப்பட்டது. இதை நான் அனுமதிக்க மாட்டேன். ஆன்-லைன் மூலம் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படும். இதை உடனடியாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஒப்பந்ததாரருக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்பது இதன் நோக்கம் அல்ல.

    நான் சிவமொக்காவுக்கு சென்று வந்த பிறகு மதுபான விற்பனை அதிகரித்துவிட்டதாக பா.ஜனதாவினர் சொல்கிறார்கள். நான் அங்கு சென்று வந்த பிறகு பா.ஜனதாவினருக்கு பீதி ஏற்பட்டுள்ளது. அதனால் மதுபான விற்பனை அதிகரித்திருக்கும். ராமநகரில் பா.ஜனதா வேட்பாளர் விலகியது கடவுளின் செயலாக இருக்கலாம்.

    வேட்பாளரை விலை கொடுத்து வாங்கும் அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் அங்கு பிரசாரத்திற்கு செல்லாவிட்டாலும், வாக்காளர்கள் எங்கள் கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்வார்கள். கர்நாடக மேல்-சபைக்கு மொத்தம் 3 நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். 2 நியமன உறுப்பினர்கள் காங்கிரஸ் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு நியமன உறுப்பினரை எங்கள் கட்சி சார்பில் நியமனம் செய்வோம்.



    இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு பெரிய அளவில் விவசாயிகள் மாநாடு நடத்தப்படும். அதில் கடன் தள்ளுபடிக்கான கடிதம் விவசாயிகளுக்கு வழங்கப்படும். தீபாவளிக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு மாதமும் ஒரு இனிப்பான செய்தியை விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளேன். அதற்கு தேவையான திட்டங்களை தயாரித்து வைத்துள்ளேன்.

    மாநிலத்தில் உள்ள முக்கியமான அரசு ஆஸ்பத்திரிகளுக்கு நவீன மருத்துவ உபகரணங்களை வழங்க முடிவு செய்துள்ளோம். நெடுஞ்சாலைகளில் 10-க்கும் அதிகமான விபத்து சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மருத்துவ உதவி கேட்டு ஜனதா தரிசனத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் என்னிடம் மனு கொடுக்கிறார்கள்.

    ஏழை மக்களுக்கு உதவ தனியார் மருத்துவமனைகள் முன்வர வேண்டும். ரூ.45 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளோம். இவ்வளவு பெரிய தொகையை தள்ளுபடி செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. தனியார் பஸ்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக எனக்கு புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார். #kumaraswamy
    ×