search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காரிமங்கலம்"

    காரிமங்கலம் அருகே நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் உண்டியல் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    காரிமங்கலம்:

    காரிமங்கலம் ஒன்றியம் பேகாரஅள்ளியில் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு கடந்த மாதம் 17-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலில் தர்மபுரியை சேர்ந்த சபரி (வயது 40) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்தநிலையில் நேற்று காலை கிராமமக்கள் கோவில் வழியாக சென்றனர். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர்கள் ஊர் பிரமுகர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு திரண்டு வந்த பொதுமக்கள் கோவிலின் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது கும்பாபிஷேகம் நடந்தவுடன் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது. உண்டியலில் பல லட்சம் ரூபாய் இருந்து இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். அப்போது நள்ளிரவு மர்ம ஆசாமிகள் கோவில் பூட்டு மற்றும் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். காரிமங்கலம் பகுதியில் மர்ம ஆசாமிகள் கோவில்களை குறி வைத்து தொடர்ந்து நகை, உண்டியல் பணத்தை திருடிச்செல்லும் துணிகர சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
    காரிமங்கலம் அருகே லாரி டிரைவர் அடித்து கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்துள்ள பீரன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் அனிபீரன் (வயது 35). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி முருகம்மாள் (30). இவர்களுக்கு 12 வயதில் அர்ச்சனா என்ற மகளும், 5 வயதில் அன்பு மூர்த்தி என்ற மகனும் உள்ளனர்.

    அனிபீரனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    நேற்று காலை அனிபீரன் வீட்டில் இருந்து வெளியில் சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவி முருகம்மாள் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இந்தநிலையில் இன்று காலை அவரது வீட்டின் அருகேயுள்ள விவசாய கிணற்றில் ஒரு வாலிபர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீசார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் உடலை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் கிணற்றில் இருந்து கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர்.

    அப்போது பிணமாக கிடந்த வாலிபர் அதே பகுதியை சேர்ந்த மாயமான அனிபீரன் என்பது தெரியவந்தது. கிணற்றின் அருகில் அனிபீரனை அடித்து கொலை செய்ததற்கான ரத்த காயம் இருந்துள்ளது.

    பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இத தொடர்பாக காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் வழக்கு பதிவு செய்து கிணற்றில் பிணமாக கிடந்த அனிபீரனை அடித்து கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? அல்லது அவருக்கு வேறு எதுவும் முன்விரோதம் காரணமாக கொலை செய்தார்களா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

    காரிமங்கலம் அருகே மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த தும்பலஅள்ளி நடுகொட்டாயில் வசித்து வருபவர் சின்னம்மாள் (வயது75).

    தனியாக வசித்து வந்த இவர் நேற்றிரவு சாப்பிட்டு விட்டு தூங்கினார். இன்று காலை வெகுநேரமாகியும் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உடனே கதவை தட்டி பார்த்த போது கதவு திறக்கவில்லை. உடனே வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது சின்னம் மாள் எந்தவித அசைவும் இல்லாமலும் இருந்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சின்னம்மாள் படுக்கையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. மேலும் அவர் காதில் அணிந்திருந்த தோடு மற்றும் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றிருந்தது தெரிய வந்தது.

    இந்த சம்பம் குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் டி.எஸ்.பி ராஜேந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    போலீசார் விசாரணையில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை நோட்டமிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை தராததால் மர்ம நபர்கள் தாக்கி கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்.

    ×