என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வழக்குபதிவு"
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த வக்கீல்கள் ராமசுப்பு, வேல்முருகன் உள்பட 15 பேர் நேற்று முன்தினம் இரவு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வீட்டின் முன்பு ஒரு புகார் மனு கொடுக்க போவதாக கூடி நின்றார்கள்.
அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் நள்ளிரவு 11.30 மணி ஆகிவிட்டதால் மறுநாள் காலையில் மனு கொடுக்கு மாறு அறிவுறுத்தினார்கள். ஆனால் வக்கீல்களும், அவருடன் வந்தவர்களும் போலீசாருடன் வாக்குவாதம் செய்தார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு புளியரையில், கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அப்போது சில லாரிகள் அபராதம் இல்லாமல் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கலெக்டரிடம் புகார் கொடுக்க போவதாக அவர்கள் கூடி அங்கு ஆர்ப்பாட்டம் செய்தனர். சம்பவ இடத்திற்கு பாளை போலீசார் விரைந்து வந்து அவர்களை சமரசம் செய்து அனுப்பினர்.
இது குறித்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸ்காரர் சதீஸ் மோகன் பாளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், வக்கீல்கள் ராமசுப்பு, வேல்முருகன் ஆகியோர் உட்பட 15 பேர் மீது போலீஸ்காரருடன் வாக்குவாதம் செய்து அவதூறு பேசியதாக வழக்குப்பதிவு செய்தனர்.
பாகூர்:
கிருமாம்பாக்கம் புறக்குட்டை பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 57). இவருக்கு அமராவதி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.
தமிழரசன் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தார். குடிப்பழக்கம் உள்ள இவர் நேற்று மாலை மது குடித்து விட்டு வீட்டுக்கு மது பாட்டில் வாங்கி வந்தார்.
மது பாட்டில் வைத்திருந்த இடத்தில் துணி வெளுக்க வைக்கும் ஆலா பாட்டில் இருந்ததால் குடிபோதையில் மது என நினைத்து ஆலா பாட்டிலை எடுத்து குடித்து விட்டார். இதில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த தமிழரசனை அவரது குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ் பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தமிழரசன் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று உற்சாகமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. குறிப்பாக பல இடங்களில் அரசு அறிவித்த நேரத்தை மீறி பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்தனர்.
காலை முதல் இரவு முழுவதும் பட்டாசு வெடி சத்தத்தை கேட்க முடிந்தது. குழந்தைகளும், பெண்களும், இளைஞர்களும் தெருக்களில் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
இதற்கிடையே அரசு அறிவித்த தடையை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று தீபாவளியையொட்டி பல இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தடையை மீறி பட்டாசு வெடிக்கிறார்களா? என்று கண்காணித்தனர்.
இதில் மாவட்டம் முழுவதும் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 31 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 29 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் நகரில் தம்பித்துரை (வயது 24), சூர்யா (25), வெங்கடேஷ் (18), கொரடாச்சேரியில் வினோத் (22), சுதாகர் (30), கூத்தாநல்லூரில் சண்முகவேல் (32), வடபாதிமங்கலத்தில் பாப்பையன் (26), வைப்பூரில் பரரதி மோகன் (38), ரகுநாத் (28), நன்னிலத்தில் சக்திவேல் (40), பேரளத்தில் வேல்குமார் (20), வலங்கைமானில் பழனிவேல் (30), கார்த்தி கேயன் (25), வடுவூரில் விமல் (24) மன்னார்குடியில் நவீன்(24) உள்பட மொத்தம் 31 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 29 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று போலீசார் பல்வேறு இடங்களில் தடையை மீறி பட்டாசு வெடிக்கிறார்களா? என்று கண்காணித்தனர்.
இதில் தஞ்சை சாலைக்கார தெருவில் நள் ளிரவு 12 மணிக்கு வெடி வெடித்ததாக மாயக்காளை (50), மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த விக்கி (24), உள்பட 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதேபோல் நாகை மாவட்டத்திலும் அரசு தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 27 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. #CrackersBursting #Diwali #CrackersCase
நெய்வேலி:
நெய்வேலி அருகே உள்ள ஊ.மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி நவீனா (வயது 24). இவர்களுக்கு பிரதிக்ஷா (2) என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் குழந்தை பிரதிக்ஷாவுக்கு உடல்நிலை சரியில்லை. எனவே அவளை நான் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கிறேன் என நவீனா தனது கணவர் வீரமணியிடம் கூறினார். பின்னர் குழந்தை பிரதிக்ஷாவுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் இரவுவரை வீடு திரும்ப வில்லை. அதிர்ச்சியடைந்த வீரமணி உறவினர்கள் மற்றும் பல இடங்களில் மனைவி மற்றும் குழந்தையை தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து வீரமணி ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குபதிவு செய்து மாயமான நவீனா மற்றும் குழந்தை பிரதிக்ஷாவை தேடி வருகிறார்.
நாகர்கோவில்:
குளச்சல் அருகே உள்ள குறும்பனை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ராபர்ட். மீனவர். வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மேரி (வயது 25). நேற்று முன்தினம் இரவில் அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டிருந்தது. இதனால் காற்றுக்காக மேரி தனது வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் மேரியின் வீட்டுக்குள் புகுந்தார். அவர் மேரி அணிந்திருந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிக்க முயன்றார். திடுக்கிட்டு எழுந்த மேரி, வீட்டில் திருடன் நுழைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டு திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.
அக்கம்பக்கத்தினர் எழுந்து வந்து திருடனை துரத்தினர். அதற்குள் திருடன் 8 பவுன் தங்கச்சங்கிலியுடன் தப்பிச் சென்றான். இது குறித்து மேரி குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் தூங்கிக் கொண்டிருந்த தன்னிடம் இருந்து மர்ம நபர் 8 பவுன் நகையை பறித்துச் சென்று விட்டதாகவும், அந்த நபரை கண்டுபிடித்து நகையை மீட்டுத் தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
புகார் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வேலூர்:
காட்பாடி அருகேயுள்ள குழந்தைகள் இல்லத்தில் சமூக பணியாளராக பணிபுரிந்து வரும் ரஞ்சிதா, விருதம்பட்டு போலீசில் புகார் மனு அளித்தார்.
அதில், ‘‘எங்களது குழந்தைகள் இல்லத்தில் வாலாஜா தாலுகா ஒழுகூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி தங்கி காட்பாடியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மாணவி மன அழுத்தத்துடன் காணப்பட்டார். வழக்கத்தைவிட அதிகமாக கோபம் கொண்டார்.
இதையடுத்து மாணவியை அருகேயுள்ள மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்து சென்றோம். சிகிச்சையின்போது, மாணவி கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி விடுமுறை நாளில் காங்கேயநல்லூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு வைத்து அருகேயுள்ள வீட்டிற்கு வந்த வேலூர் கஸ்பாவை சேர்ந்த சேகர் (62) என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
அதன்காரணமாக மாணவி மன அழுத்தத்துடன் காணப்பட்டுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சேகர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் சேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பி.ஆண்டிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சத்யநாதன் (வயது 30). இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு தனியார் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (26).
இவர்களுக்கு 1.12.2016 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சில மாதங்கள் மட்டுமே அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்து வந்தனர். பின்னர் சத்யநாதன் குடும்பத்தினர் ரம்யாவை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரம்யா பண்ருட்டி அனைத்து மகளிர் போலீ சில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
எனது திருமணத்தின் போது 32 பவுன் நகை ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது. திருமணம் முடிந்த சில மாதங்களிலே கூடுதல் வரதட்சணை கேட்டு எனது கனவர் சத்யநாதன் சித்ரவதை செய்ய தொடங்கினார்.
இதைத்தொடர்ந்து நான் எனது பெற்றோர் வீட்டுக்கு சென்று 10 பவுன் நகையும், ரூ.10 லட்சமும் வாங்கி கொடுத்தேன். அதன் பின்னரும் எனது கணவர் மீண்டும் வரதட்சணை வாங்கி வரும்படி சித்ரவதை செய்தார். இதற்கு எனது மாமனார் கோவிந்தசாமி, மாமியார் தமிழ் செல்வி, கணவரின் தம்பி சண்முகபிரியன், அவரது மனைவி ஸ்ரீமதி, உறவினர்கள் சந்திர மோகன், இளவரசன் ஆகியோர் உடந்தையாக இருந்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார்.
அதன்பேரில் சத்யநாதன் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே உள்ள நெல்லூரைச் சேர்ந்தவர் சின்னமுருகன். இவரது மகன் பாண்டி (வயது 28) என்பவருக்கும், நரசிங்காபுரத்தைச் சேர்ந்த பிரவீனா (19) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது 7 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் சீர் வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக மேலும் ரூ.1 லட்சம் பணம், 3 பவுன் கூடுதல் வரதட்சணையாக கேட்டு பிரவீனாவை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுமை படுத்தி வந்துள்ளனர்.
இது குறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பிரவீனா புகார் அளித்தார். அதன் பேரில் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவர் பாண்டி, மாமனார் சின்ன முருகன், மாமியார் மாயக்காள் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகில் உள்ள கடமலைக்குண்டு போலீஸ் சரகத்திற்குட்பட்ட மூலக்கடை ஆளந்தனார் ரோடு பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது42). இவரது மனைவி அறிவுக்கொடி ( 40). பால்பாண்டிக்கும் அவரது அண்ணன் சேகரன் (45) என்பவருக்கும் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று சேகரன் தனது தோட்டத்திற்கு கூடுதலாக ½ மணி நேரம் தண்ணீர் பாய்ச்சி உள்ளார். இதனால் பால்பாண்டியும் அவரது மனைவியும் தட்டி கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த சேகரன் மற்றும் அவரது மனைவி ராசி ஆகிய 2 பேரும் அறிவுக்கொடியை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி தாக்கி உள்ளனர்.
இதனால் மனமுடைந்த அறிவுக்கொடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய சேகரன் மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்