search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100341"

    தமிழகத்தில் முதல்-அமைச்சராக வேண்டும் என்ற ஆசை, தகுதி தனக்கு உள்ளதாக நெய்வேலியில் நடைபெற்ற கூட்டத்தில் திருநாவுக்கரசர் பேசினார். #congress #Thirunavukkarasar
    பண்ருட்டி:

    கடலூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நெய்வேலி இந்திராநகரில் உள்ள எஸ்.பி.டி.யார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

    தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். எனவே காங்கிரஸ் கட்சியின் சத்தியமூர்த்தி பவன் உங்களை நோக்கி வந்திருக்கிறது. இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த செயல்வீரர்கள் கூட்டம் மாநாடு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் இருந்தது தற்போது அண்ணா தி.மு.க பிளவு பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் தொண்டர்கள் ஒன்றாக இருக்கின்றார்கள். ஆனால் தலைவர்கள் வேறுபட்டு நிற்கிறார்கள். இந்த நிலை மாறி அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும்.

    தமிழகத்தில் காமராஜர் ஆட்சி விரைவில் அமைய வேண்டும். யார் முதல்-அமைச்சர் என்பது முக்கியமல்ல. தலைவர் ராகுல் விட்ட பணியை சிறப்பாக செய்து வருகிறேன். முதல்-அமைச்சராக வேண்டும் என்ற ஆசை, தகுதி எனக்கு உள்ளது.

    தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஆந்திராவில் என்.டி.ஆர் ஆகியோர் நடிகர்களாக இருந்து கட்சி தொடங்கி முதல்-அமைச்சர்களாக ஆனார்கள். ஆனால் அதன் பிறகு கட்சி ஆரம்பித்த நடிகர்கள் எல்லாம் காணாமல் போய் விட்டனர். தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி இல்லை, எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆட்சி நடைபெறுகிறது.


    இந்த ஆட்சி விரைவில் அகற்றப்பட வேண்டும். காங்கிரஸ் நிர்வாகிகள் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும். மக்கள் பிரச்சனைக்காக அதிகாரிகளை சந்திக்க வேண்டும். கட்சியில் அதிகளவு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

    மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பு இழப்பால் ஏழைகளுக்கு எந்த பயனும் இல்லை. இந்த அரசு ஏழைகளுக்கான அரசு அல்ல. கடந்த நான்கு ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை.

    மத்திய அரசை மாற்ற காங்கிரசால் மட்டுமே முடியும். நாடு முழுவதும் ராகுல் அலை வீசுகிறது. வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் பிரதமராக வருவார்.

    இவ்வாறு அவர் பேசினார். #congress #Thirunavukkarasar
    கவர்னரின் செயல்பாட்டை தட்டிக்கேட்க தமிழக அரசுக்கு துணிச்சல் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Thirunavukkarasar #GovernorBanwarilalPurohit

    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம். காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்கும் பிரதிநிதிகள் தமிழக உரிமையை வற்புறுத்த வேண்டும்.

    கர்நாடக அரசு ஒத்துழைப்பு தரவில்லை என்றால் மத்திய அரசை வற்புறுத்த வேண்டும், பிரதமரை அனுக வேண்டும், தேவையிருந்தால் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும். பல ஆண்டுகளுக்கு பின் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு மூலமாக கிடைத்த வெற்றியை,வாய்ப்பை நழுவவிடாமல் பாதுகாக்க, அமைக்கப்பட்ட ஆணையத்தின் மூலமாக காவிரி தண்ணீரை பெற வேண்டியது தமிழக அரசின் கடமையும் பொறுப்பும் ஆகும்.



    காவிரி பிரச்சனையில் கர்நாடகாவில் அனைத்து கட்சிகளை கூட்டி கூட்டம் நடத்தி உள்ளனர். தமிழகத்தில் தேவையென்றால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். தொடர்ந்து சட்டரீதியாகவும்,அரசு ரீதியாகவும் தமிழ்நாட்டின் உரிமையை காக்க முயற்சி செய்ய வேண்டும்.

    கவர்னர் வி‌ஷயத்தில் கவனம் செலுத்துவதும் மக்கள் பிரச்சனை தான். அரசு செயல்பாட்டில், அரசு முடங்குகிற விதத்தில், தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் முடங்குகிற விதத்தில் கவர்னர் செயல்படுவதை எதிர்கட்சி தான் கேட்க முடியும். தற்போதுள்ள தமிழக அரசுக்கு கவர்னரின் செயல்பாட்டை தட்டி கேட்கக்கூடிய தைரியம், துணிச்சல் இல்லை.

    ஜனநாயகத்தில் கருப்பு கொடி காட்டுவது வெளி நடப்பு செய்வது ஒரு பகுதி. ஆளுங்கட்சியாய் இருப்பதினால் தமிழிசைக்கு அது தெரியாமல் இருக்கலாம். எதிர்கட்சியாக வரும்போது இவைகளைப் பற்றி அவருக்கு தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirunavukkarasar #GovernorBanwarilalPurohit

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #thirunavukkarasar #localelection

    திருச்சி:

    திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் சமயபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைத்ததை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதி நிதிகள் இல்லாத காரணத்தினால் அரசு உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கும் நிதி முழுமையாக செலவிடப்படவில்லை. உள்ளாட்சி அமைப்புகள் இருந்தால்தான் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த முடியும். என்னை பொருத்தவரை இன்னும் ஓராண்டு காலம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது. அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரியவில்லை. தமிழக அரசு நினைத்தால் இன்னும் மூன்று , நான்கு மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியும். உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்.

    சுமார் 20,000 காவலர்கள் ரத்த தானம் செய்து இருப்பதை வரவேற்கிறேன். பல மாவட்டங்களில் காவலர்களிடம் எடுக்கப்பட்ட ரத்தத்தை முறையான பிரீசர் பாக்ஸ் எனப்படும் ஐஸ் பெட்டியில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் சாதாரண அட்டைப் பெட்டிகளில் எடுத்து சென்றுள்ளனர். இது கண்டனத்திற்குரியது. ராமசாமி படையாச்சியார் பிறந்த நாள் மற்றும் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் ஆகியவற்றை அரசு விழாவாக எடுத்து இருப்பதை வரவேற்கிறேன். இரண்டு பேரும் அரசியல் மற்றும் கலைத்துறையில் மக்களுடைய மரியாதையை பெற்றவர்கள். 

    சிலை கடத்தல் வழக்கில் உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பின்புலமாக செயல் படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என எதிர் பார்க்கிறோம். எனவே இதுதொடர்பாக தமிழக சார்பில் அமைக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் வலுவாக எடுத்துரைக்க வேண்டும். தமிழக டெல்டா விவசாயிகளுக்கு பாசன நீர் குடிப்பதற்கு ஏற்ற வகையில் வலுவான அழுத்தத்தை கொடுக்க வேண்டும். இந்த குழு கூட்டத்திலேயே தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணி தொடர்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.

    சென்னை-சேலம் 8 வழி சாலையால் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட போவதில்லை. மக்களை தொல்லைப்படுத்தி கமி‌ஷனுக்காக சாலை அமைக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபட கூடாது. 

    இவ்வாறு அவர் கூறினார்.  #thirunavukkarasar #localelection

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். #Congress #thirunavukarasar
    ஆற்காடு:

    வேலூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கட்சி வளர்ச்சி சம்பந்தமான சந்திப்பு மற்றும் ஆய்வு கூட்டம் மேல்விஷாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் இரு வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ள 3-வது நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்கவேண்டும்.

    தகுதி நீக்கத்தால் 18 தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை, வாக்களித்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும்.

    அ.தி.மு.க. இருவேறு அணிகளாக இருப்பதாலும், தோல்வி பயத்தாலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயங்குகிறது. வருகிற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. தோற்பது உறுதி. இப்போது நடைபெறும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல. அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு.

    மக்கள் ஜெயலலிதாவுக்குதான் வாக்களித்தார்கள். எடப்பாடி பழனிசாமிக்கோ, பன்னீர்செல்வத்துக்கோ அல்ல. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகமாக உள்ளது.

    மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தமிழக அரசை பின்னால் இருந்து இயக்குகிறது. தமிழகத்தில் எங்கு தீவிரவாதம் உள்ளது என்பதை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெளிவாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மத்திய அரசே நடவடிக்கை எடுக்கலாம்.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை யார் வேண்டுமானலும் சந்திக்கலாம். நடிகர் கமல்ஹாசன் புதிதாக கட்சி தொடங்கியுள்ளார். அவர் மரியாதை நிமித்தமாக ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். இருவரும் அரசியல் நிலவரம் குறித்து பேசினார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #thirunavukarasar
    ரூ. ஆயிரம், ரூ.2 ஆயிரம் கோடி கமி‌ஷனுக்காக சென்னை- சேலம் 8 வழி சாலை அமைக்கப்படுகிறது என்று திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார். #thirunavukkarasar #chennaisalem8wayproject

    தாம்பரம்:

    காஞ்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் ரூபி மனோகரன் தலைமையில் தாம்பரத்தில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை சுமார் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்று குதிரை வண்டியில் அழைத்து வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கிய திருநாவுக்கரசர் மக்கள் பணிகள் எதுவாக இருந்தாலும் அந்தந்த பகுதி காங்கிரஸ் நிர்வாகிகள்தான் முதலில் நின்று உதவ வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சேலம் 8 வழி சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் காட்டு மரங்களை விளை நிலங்களை குன்றுகளை அழித்து சாலை அமைக்க வேண்டிய அவசியம் என்ன. தமிழகத்தில் சாலையே இல்லாத இடங்கள் மற்றும் ஒரு வழிசாலை இரு வழி சாலை ஆகியவற்றை மேம்படுத்தலாம்.

    ரூ. ஆயிரம், ரூ.2 ஆயிரம் கோடி கமி‌ஷன் பெற ஒரு சிலரிடம் காண்ட்ராக்ட் கொடுத்து 10 ஆயிரம் கோடி செலவில் சாலை அமைக்கும் பெயரில் மக்களுக்கு தொல்லை கொடுக்க கூடாது. போராடும் மக்களை கைது செய்வது பாசிச நடவடிக்கை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. மக்கள் தொகைக் கேற்ப காவலர்களை நியமித்து அவர்கள் பணியாற்ற சுதந்திரம் தந்து மக்களை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாதனை புத்தகத்தை திருநாவுக்கரசர் வெளியிட முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் பிரின்ஸ் தேவசகாயம், மாவட்ட பொருளாளர் சிவா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #thirunavukkarasar #chennaisalem8wayproject

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சுற்றுப்பயணம் செய்வதை குறைத்துக்கொள்வது நல்லது என்று திருநாவுக்கரசர் கூறினார்.#banwarilalpurohit
    புதுடெல்லி:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி கடந்த வாரம் டெல்லி வந்தார். ஒரு வாரம் டெல்லியில் தங்கியிருந்த அவர் நேற்று தமிழகத்துக்கு புறப்பட்டார். முன்னதாக அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர்கள் அசோக் கெலாட், முகுல்வாஸ்னிக் உள்ளிட்டோரை சந்தித்து கட்சி நிர்வாகம் சம்பந்தமாக பேசினேன். கட்சிப்பணிக்காக ஏற்கனவே 26 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தேன். அடுத்து நாளை (புதன்கிழமை) மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறேன். இன்னும் 16 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டியுள்ளது.

    ஜூலை முதல் வாரத்தில் முகுல்வாஸ்னிக் தமிழகம் வந்து 4 மாவட்ட சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்கிறார். தமிழகத்தில் கவர்னரின் ஆய்வு பயணத்தை நானும் கண்டித்து இருக்கிறேன். கவர்னர் என்பவர் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒரு பாலமாக இருந்து, மாநிலத்துக்கு தேவையான நிதி கிடைக்க உதவியாக இருக்க வேண்டும். அதை விடுத்து ஊர் ஊராக சுற்றுப்பயணம் செய்ய தேவை இல்லை. இதை குறைத்துக்கொள்வது அவருக்கு நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குஷ்பு விவகாரம் குறித்து திருநாவுக்கரசரிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘காங்கிரஸ் ஒரு ஜனநாயக கட்சி. இங்கு ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வார்கள். நான் தலைமை ஏற்றபின்னர் கட்சியில் எந்த பிரச்சினையும் ஏற்பட்டது இல்லை. யாருடனும் கருத்துவேறுபாடு இல்லை. தமிழகம் முழுவதும் ராகுல்காந்தி அணியாகத்தான் உள்ளது. குஷ்புவை பற்றியே ஏன் அதிகம் கேட்கிறீர்கள்? குஷ்பு என்ன பெரிய தலைவரா? குஷ்புவுடன் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. பத்திரிகைகள் தான் அதுபற்றி பெரிதாக பேசிக்கொள்கின்றன’ என்றார்.

    பேட்டியின்போது மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் அமீர்கான், வக்கீல் சந்திரசேகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். #banwarilalpurohit
    அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் 2-ம் கட்ட ஆய்வு கூட்டம் 27-ந் தேதி தொடங்கும் என்று சு.திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். #Thirunavukkarasar #Congress
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குச்சாவடி தலைவர் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட, வட்டார, நகர, பேரூர், மாநகரங்களில் சர்க்கிள் அல்லது மண்டலம், வட்டம் அல்லது வார்டு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளோடு வாக்குச்சாவடி கமிட்டிகள் விரிவுபடுத்துதல், புது உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சி வளர்ச்சி சம்பந்தமான சந்திப்பு மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது.

    முதற்கட்டமாக இதுவரை 25 மாவட்டங்களில் வெற்றிகரமாக மாவட்ட ஆய்வுக் கூட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றது.

    இரண்டாம் கட்ட மாவட்ட ஆய்வுக் கூட்டங்களுக்கான சுற்றுப் பயண விவரம் அறிவிக்கப்படுகிறது. ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறும் தேதி, மாவட்டம், பார்வையாளர்கள் விவரம் வருமாறு:-

    ஜூன் 27-ந் தேதி - காஞ்சீபுரம் வடக்கு - கே.சிரஞ்சீவி. 28-ந் தேதி - வேலூர் கிழக்கு - எஸ்.எம்.இதாயத்துல்லா. 30-ந் தேதி - திருச்சி வடக்கு - பென்னட் அந்தோணிராஜ். ஜூலை 2-ந் தேதி - கடலூர் வடக்கு - சி.டி.மெய்யப்பன். 4-ந் தேதி - கோவை மாநகர் மற்றும் திருப்பூர் வடக்கு - ஆர்.எம்.பழனிச்சாமி, எம்.ஆர்.சுந்தரம். 5-ந் தேதி - ஈரோடு தெற்கு மற்றும் திருப்பூர் தெற்கு - ஆர்.எம்.பழனிச்சாமி, எம்.ஆர்.சுந்தரம்.

    7-ந் தேதி - விழுப்புரம் வடக்கு மற்றும் திருச்சி மாநகர் - எம்.கே.விஷ்ணுபிரசாத், பென்னட் அந்தோணிராஜ். 8-ந் தேதி - கரூர் மற்றும் திண்டுக்கல் மேற்கு - திருச்சி வேலுச்சாமி, வீனஸ் மணி. 10-ந் தேதி - மதுரை மாநகர் மற்றும் திண்டுக்கல் கிழக்கு - சொர்ணா சேதுராமன், அ.சந்திரசேகரன். 11-ந் தேதி - திண்டுக்கல் மாநகர் மற்றும் தேனி - அ.சந்திரசேகரன், ராம.சுப்புராம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Congress
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் காலத்தினை கருத்தில் கொண்டு மிக விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். #Congress #Thirunavukkarasar #18MLAs
    கோவை:

    ஊட்டியில் அரசு பஸ் பள்ளத்தில் உருண்டு 9 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 15 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    அவர்களில் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள். தற்போது 9 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்த திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊட்டியில் அரசு பஸ் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 2 லட்சம் நிதி அறிவித்துள்ளது. சுனாமி, இயற்கை சீற்றம், போன்றவற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ரூ. 20 லட்சம் வரை வழங்கி வருகிறது.

    அதே போல் ஊட்டி பஸ் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 20 லட்சம் வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

    காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமாக பல மாதங்கள் ஆகும் என்பதால் அவர்களது குடும்பத்துக்கு தேவையான நிதி உதவியை அரசு வழங்க வேண்டும்.

    ஊட்டி மலை பாதை அதிக வளைவு, நெளிவுகளை கொண்டது. எனவே அங்கு தரமான பஸ்களை இயக்க வேண்டும். ஊட்டியில் விபத்து அடிக்கடி நடைபெறுவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க அங்கு மல்டி ஸ்பெ‌ஷல் ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும்.

    தற்போது அங்கு மூடப்பட்டு உள்ள இந்துஸ்தான் பிலிம் தொழிற்சாலையில் மல்டி ஸ்பெ‌ஷல் மருத்துவமனை அமைக்கலாம். இல்லாவிட்டால் ஊட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்.

    ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 7 பேரின் கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

    ஜனாதிபதி நிராகரித்து விட்ட நிலையில் அரசியல் ரீதியாக எந்த முயற்சியும் செய்ய முடியாது. கோர்ட்டு மூலம் தான் நிவாரணம் பெற முயற்சிக்க வேண்டும். இந்த வி‌ஷயத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்.

    ராஜீவ் கொலையாளிகள் தங்களை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறி உள்ளதாக தெரிகிறது.

    அவர்கள் விடுதலையை நம்பி இருந்து கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் வருத்தத்தில் அவ்வாறு சொல்லி இருக்கலாம். இது ஏற்புடைய கருத்து அல்ல.


    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இரு நீதிபதிகள் இரு விதமான தீர்ப்பு வழங்கி உள்ளனர். இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளதால் 18 எம்.எல்.ஏ.க்களும் தற்போது பதவியில் உள்ளார்களா? இல்லையா? என்பதில் பிரச்சனை உள்ளது.

    நீதி திரிசங்கு சொர்க்கத்தில் உள்ளது. தற்போது 3-வது நீதிபதி தீர்ப்பு வழங்குவார் என கூறப்பட்டு உள்ளது. காலத்தினை கருத்தில் கொண்டு மிக விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு ஏற்கனவே 8 மாதம் ஆகி விட்டது. இப்பிரச்சனை 18 எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. தொகுதி மக்கள் பிரச்சனை.

    ஒரு தொகுதிக்கு சுமார் 2 லட்சம் மக்கள் இருந்தாலும் 18 தொகுதிகளுக்கும் சேர்த்து 45 லட்சம் மக்களின் பிரச்சனை ஆகும். மேலும் அரசுக்கு ஸ்திரதன்மை உள்ளதா? என்பது இந்த தீர்ப்பில் தெரிய வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார், கணேஷ் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட தலைவர் மகேஷ் குமார், நிர்வாகிகள் உமாபதி, சவுந்திர குமார், கணபதி சிவகுமார், துளசி ராஜ், கேபிள் வினோத், காமராஜ்துல்லா, எம்.எஸ். பார்த்தீபன், காட்டூர் சோமு, இருகூர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். #Congress #Thirunavukkarasar #18MLAs
    திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க கூடாதென அரசுக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்த இருக்கிறோம் என்று திருநாவுக்கரசர் கூறினார்.
    திருமானூர்:

    அரியலூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் திருமானூர் கொள்ளிடம் பாலத்தில், கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினரை சந்தித்தார். 

    அப்போது, திருமானூர் பகுதி கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் செய்து வரும் போராட்டங்களை கேட்டறிந்த அவர், கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க கூடாதென காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்துவோம் என்றார். தொடர்ந்து, 

    கொள்ளிடம் நீராதாரக்குழு மற்றும் காங்கிரஸ் சார்பில் திருமானூர் பஸ் நிலையம் அருகே திருநாவுகரசருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு தீர்ப்பு வந்தபிறகு தமிழகத்தில் நிலையான தன்மை ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். #18mlacase #Congress #Thirunavukkarasar
    தஞ்சாவூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டசபையில் நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்கள் குறித்து உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வரவுள்ளதை வரவேற்கிறேன்.


    இந்த தீர்ப்பு வந்தபிறகு தமிழகத்தில் நிலையான தன்மை ஏற்படும். மேலும், ஆட்சி கவிழ்கிறதா? அல்லது நிலை பெறுமா? என்பது தெரியவரும்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக மாநிலம் சார்பில் உறுப்பினர் நியமிக்கப்படாததற்கு அம்மாநில அரசும், மத்திய அரசுமே பொறுப்பு. இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு வேகமாக செயல்படவேண்டும். காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் என்பது இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனை. இதில் கட்சிகளை வைத்து இப்பிரச்சனையை அணுக முடியாது. எனவே தமிழக அரசு போராடி மத்திய அரசை தலையிடச்செய்து தீர்வு காணவேண்டும்.

    எஸ்.வி.சேகர் மீது தமிழக காவல்துறைதான் வழக்கு பதிவு செய்தது. ஆனால் அவரை கைது செய்யவில்லை என்றால் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா? அல்லது காவல் துறை பயப்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #18mlacase #Congress #Thirunavukkarasar
    தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மீண்டும் மலர முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று காங். தொண்டர்களுக்கு திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள காமராஜர் திருமண மண்டபத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    விருதுநகர் மேற்கு மாவட்டத் தலைவர் தளவாய் பாண்டியன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் சங்கர்கணேஷ் வரவேற்றுப் பேசினார்.

    முன்னதாக காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் நேரு பவனத்தில் ராம்கோ குரூப் முன்னாள் சேர்மன் பி.ஆர். ராமசுப்பிரமணியராஜா உருவப்படத்தை திறந்த வைத்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் 32 மாவட்டமாக இருந்ததை நிர்வாக வசதிக்காக காங்கிரசில் 50 கட்சி மாவட்டமாக ஏற்படுத்தப்பட்டிருந்தது. நான் தலைவராக வந்தபிறகு அதனை 72 கட்சி மாவட்டமாக விரிவுபடுத்தி உள்ளேன்.

    32 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதை 50 லட்சம் உறுப்பினர்களாக உயர்த்த வேண்டும் என்கிற இலக்கு வைத்து அதற்கான வழி முறைகளை செயல்படுத்தி வருகிறோம்.

    தமிழத்தில் 60 ஆயிரம் பூத் கமிட்டிகள் உள்ளன. அனைத்து பூத் கமிட்டிக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். காமராஜர் ஆட்சியில்தான் தமிழகத்தில் ஏராளமான கனரக ஆலைகள், அணைக் கட்டுகள் திறக்கப்பட்டன. கிராமங்கள் தோறும் பள்ளிகள் உருவாக்கப்பட்டு பொற்கால ஆட்சி நடந்தது.

    தமிழகத்தில் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் கொண்டு வந்தே தீருவோம் என்று சபதம் எடுத்துக்கொண்டு காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

    ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் உள்ள நிலவரப்படி தமிழகத்தில் காங்கிரஸ்தான் இரண்டாவது பெரிய கட்சியாக திகழ்கிறது. எனவே காமராஜரின் பொற்கால ஆட் சியை விரைவில் அமைத்தே தீருவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் முன்னாள் நகரத் தலைவர் பீமராஜா நன்றி கூறினார். கூட்டத்தில் முன்னாள் எம்.பி.க்கள் ராமசுப்பு, விஸ்வநாதன், மாநில மகளிரணி தலைவர் ஜான்சிராணி, மாநில செய்தி தொடர்பாளர் அந்தோணிராஜ், நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் சிவகுமார், தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் தமிழ்செல்வன், மகேஸ்வரன், அய்யனார், செல்வராஜ், ராதாகிருஷ்ணன், ராஜா ராம், பசும்பொன், மாவட்ட மகளிரணி தலைவி காளீஸ் வரி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாபர்சித்திக், தொழிற்சங்கம் சார்பில் எச்.எம்.எஸ். கண்ணன், ஜ.என்.டி.யு.சி. பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பிரதமர் மோடியின் ஆட்சி கோடீஸ்வரர்களின் ஆட்சியாக உள்ளது என்று வேதாரண்யத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திருநாவுக்கரசர் பேசினார். #Congress #Thirunavukkarasar #Modi
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் நாகை தெற்கு மாவட்ட காங். செயல் வீரர்கள் கூட்டம் முன்னாள் எம்.பி. பி.வி.ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

    காவிரி மேலாண்மை வாரியத்தில் உறுப்பினர் நியமனம் செய்ய கர்நாடகாவை தமிழக அரசு தான் முனைப்போடு முன்னின்று செயல்பட வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களுக்கு தீர்வு காணாமல் பாசிச போக்கை கடைப்பிடிப்பது கண்டிக்கத்தக்கது.

    தற்போது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. 35 லட்சம் உறுப்பினர் கொண்டதை 50 லட்சமாக உயர்த்த மாவட்ட, நகர, பேரூர் தலைவர்கள் பாடுபட வேண்டும். தமிழக காங்கிரசில் காலியாக உள்ள பொறுப்புகளுக்கு உரிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மாவட்ட, மாநில, நகர அளவில் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    சாதி, மத பேதங்களை கடந்த கட்சி காங்கிரஸ் கட்சியாகும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அந்த கட்சியில் சூழ்நிலை சரியில்லை. ஓ.பி.எஸ். இ.பி.எஸ். அணிகள் ஆட்சி இருக்கும் வரைதான். தற்போது மாமா, மாப்பிள்ளை (திவாகரன், தினகரன்) கட்சிகளும் புதிதாக கிளம்பியுள்ளது. அனைவரும் அ.தி.மு.க.வை தோற்றுவித்த எம்.ஜி.ஆரை மறந்து விட்டனர். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போன்ற ஒரு சிலரை தவிர சினிமாவில் இருந்து வந்த யாரும் முதல்வராக முடியாது.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைக்கு பின்னர் நடந்த தேர்தலில் (1991) காங்கிரஸ் தனித்து நின்றிருந்தால் ஆட்சியை பிடித்திருக்கும். 50 ஆண்டுகளுக்கு பிறகும் காங்கிரஸ் கட்சி வலுவாகதான் உள்ளது. கட்சிக்கு குளுக்கோஸ் ஏற்ற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். கட்சி தெம்பாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி வரவேண்டும் என்ற இலக்கோடு கட்சித் தலைவர்கள் பணியாற்ற வேண்டும். தூய்மையான ஆட்சி நடத்திய காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்பதில் தவறில்லை. தற்போதைய பிரதமர் மோடி பல்வேறு பொய்களை சொல்லி ஆட்சியை பிடித்துள்ளார். அவரது பொய்யை நம்பி மக்கள் ஓட்டு போட்டு ஏமாந்து விட்டனர். மோடியின் ஆட்சி கோடீஸ்வரர்களின் ஆட்சியாக உள்ளது. வரும் தேர்தலில் மோடிக்கு பிறகு நிலையான ஆட்சியை தரக்கூடியவர் ராகுல் தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Thirunavukkarasar #Modi
    ×