search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100341"

    திமுக, காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றிபெறும் எனவும் தமிழகத்தில் மோடிக்கும், அ.தி.மு.க. அரசுக்கும் எதிரான அலை வீசுகிறது எனவும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Congress

    தூத்துக்குடி:

    தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொள்ளாச்சி சம்பவத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவர் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்று அரசு, குற்றவாளியை பாதுகாக்கும் விதத்திலோ, காப்பாற்றும் விதத்திலோ செயல்படக்கூடாது. இது மிகவும் கண்டனத்துக்கு உரியது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு போலீசார் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை கண்டறியப்பட்டு குற்றவாளி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

    தி.மு.க. கூட்டணி திடீரென உருவான கூட்டணி அல்ல. கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக போராட்டம் நடத்தி வருகிறோம். அந்த அடிப்படையில் கூட்டணி உருவாகி உள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை மோடியால் மிரட்டி வைக்கப்பட்ட கூட்டணி. அ.தி.மு.க.வினர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கூட்டணிக்கு செல்லவில்லை என்றால் வெளியில் இருப்பதே கஷ்டம். இதனால் அச்சுறுத்தி கூட்டணிக்கு கொண்டு வந்தார்கள். அதன்பிறகு இரவில் ஒரு கட்சியிடம் பேசிவிட்டு காலையில் மற்றொரு கட்சியுடன் பேசி கூட்டணி அமைக்கிறார்கள். இது கொள்கை ரீதியான கூட்டணி அல்ல. பா.ஜனதா அ.தி.மு.க. கூட்டணி மூழ்கும் கப்பல். இதில் ஏறி உள்ள எல்லா கட்சிகளும் மூழ்கும்.

    கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது. விவசாயி முதல் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இதனால் தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை, அ.தி.மு.க. அரசுக்கு எதிரான அலை வீசுகிறது. அதே நேரத்தில் எங்கள் கூட்டணி பலமான கூட்டணி. எங்கள் கூட்டணி 39 தொகுதியிலும் மகத்தான வெற்றியை பெறும். ராகுல்காந்தி நாட்டின் பிரதமராக வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirunavukkarasar #Congress

    அதிமுக கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இணையும் என்று அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #ministerjayakumar #admk #dmdk #parliamentelection
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி அமைப்பதிலும், தொகுதி பங்கீடுகளை முடிப்பதிலும் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் கண்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. இந்த முறை மெகா கூட்டணியுடன், தேர்தலை சந்திக்க இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி இழுபறி முடிவுக்கு வருமா? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் முடிவு எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    விஜயகாந்துடனான சந்திப்பு குறித்து திருநாவுக்கரசர் அல்லது ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். அதிமுக கூட்டணியில் இன்னும் பல்வேறு கட்சிகள் இணைய உள்ளன. அதிமுக கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இணையும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministerjayakumar #admk #dmdk #parliamentelection
    பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி விஷயத்தில் நாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுக்கும்படி விஜயகாந்திடம் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Vijayakanth
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் அதிமுக, பாமக, பாஜக இணைந்து வலுவான கூட்டணி அமைத்துள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கி கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதன்பின்னர் இதர கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான திருநாவுக்கரசர் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது விஜயகாந்திடம் நலம் விசாரித்த திருநாவுக்கரசர், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.



    இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்த சந்திப்பு நட்பு ரீதியானது என்றும், அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பிய தனது நண்பர் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்ததாக கூறினார்.

    அரசியல் ரீதியாக பேசப்பட்டதா? என்று கேட்டதற்கு, “அவர் ஒரு கட்சியின் தலைவர், நானும் ஒரு அரசியல் தலைவர். இது தேர்தல் நேரம். இரண்டு கட்சிகளின் தலைவர்களும் சந்திக்கும்போது, அரசியல்  பேசாமல் இருக்க முடியுமா? பாராளுமன்றத் தேர்தல் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசினோம். அப்போது, நாட்டின் நலன் கருதி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என விஜயகாந்திடம் கூறினேன்” என்றார் திருநாவுக்கரசர். #Thirunavukkarasar #Vijayakanth
    அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியால் தமிழக மக்களுக்கு லாபம் தான் என்று கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #ThambiDurai #BJP #Congress #Thirunavukkarasar
    கரூர்:

    கரூர் பசுபதிபாளையத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சமீப காலமாக ஒருமையில் பேசுவதை கவனித்து இருப்பீர்கள். தங்களால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது, வெற்றி பெற முடியாது என்ற மன அழுத்தத்தால் அநாகரீகமான முறையில் பேசிக்கொண்டு இருக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தல் உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தல் என எந்த தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறப்போவது இல்லை. இந்த விரக்தியின் விளிம்பில் சவால்கள் விட்டுக்கொண்டு இருக்கிறார். பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. தலைவர்கள் உரிய முடிவு எடுப்பார்கள் என்று நான் தெரிவித்து இருந்தேன். அந்த அடிப்படையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில்தான் ஒன்றரை லட்சம் இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர்களுக்கு துரோகம் செய்த கட்சி மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

    மத்தியில் வரப்போகும் ஆட்சி கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கும். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த காரணத்தால் மத்திய அரசிடம் இருந்து கேட்ட நிதியை பெறமுடியவில்லை. வரப்போகும் ஆட்சி கூட்டணி ஆட்சி என்பதால் ரூ.20 கோடி என்ன, ரூ.50 ஆயிரம் கோடி கூட கேட்டுப்பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியால் தமிழக மக்களுக்கு லாபம்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    பின்னர் அவரிடம் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை கட்டாய திருமணம் என்று விமர்சித்து உள்ளாரே? என்று கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த தம்பிதுரை, புரோகிதர்தான் கட்டாய திருமணமா? இல்லையா? என்பதை சொல்லவேண்டும், திருநாவுக்கரசர் தற்போது பதவி இல்லாமல் அம்போ என நிற்கிறார். அவர் சொல்வதை யாரும் கேட்க வேண்டாம் என்றார். #ADMK #ThambiDurai #BJP #Congress #Thirunavukkarasar
    அ.தி.மு.க.வை விட்டால் பா.ஜ.க.வை எந்த கட்சியும் கூட்டணியில் சேர்க்காது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #ADMK #Congress #Thirunavukkarasar

    அறந்தாங்கி:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் அறந்தாங்கியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அனுமதி அளிக்கும் தொகுதியில் தான் போட்டியிடுவேன். அந்த தொகுதி ராமநாதபுரமாகவும், திருச்சியாகவும், சென்னையாகவும் இருக்கலாம். பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுவது, அனைத்து அரசுகளும் வாடிக்கையாக செய்யக் கூடிய ஒன்று தான்.

    ஆனால் கடந்த 4½ஆண்டுகளாக பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாமல், தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிதி உதவி வழங்குவது தேர்தலை மனதில் வைத்து தான். ரூ.15 லட்சம் தருவதாக மக்களை ஏமாற்றிய மோடி, தற்போது இந்த தேர்தலில் மக்களை ஏமாற்றும் நோக்கத்தில் விவசாயிகளுக்காக கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

    அ.தி.மு.க. பிளவு பட்டதால், தற்போது பெரும் பான்மையை இழந்துள்ள அரசைக் காப்பாற்றிக்கொள்ளவும், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ளவும், தமிழக அரசு பா.ஜ.க.வின் பினாமி அரசு போல செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க.வின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்தே அக்கட்சியை நடக்க உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியில் அ.தி.மு.க. சேர்க்கிறது.

    தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.விற்கும் கெட்ட பெயர் உள்ளதால், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தான் பலமான கூட்டணியாக உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. சேராவிட்டால், அந்த கட்சியை யாருமே சேர்க்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ADMK #Congress  #Thirunavukkarasar

    அ.தி.மு.க.வை பயமுறுத்தி பா.ஜ.க. கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருவதாக திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார். #Thirunavukkarasar #BJP

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளோடு விரைவில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கப்பட உள்ளது. எங்களுடைய கூட்டணி பலமாக உள்ளது.

    ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்காக வர உள்ளனர். காங்கிரஸ் கட் சியில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு இணைந்து தேர்தல் பணியாற்றுவோம்.

    நேரடியாக நடக்காத வி‌ஷயத்தை சரியாக தெரிந்து கொள்ளாமல் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை, பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    பா.ஜ.க.விற்கு கூட்டணி கட்சிகள் கிடைக்கவில்லை. இதனால் இருக்கின்ற கட்சிகளை விடக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை நிர்பந்தப்படுத்தி பயமுறுத்தி கூட்டணி பேச்சுவார்த்தையை தற்போது நடத்தி வருகின்றனர்.

    அ.தி.மு.க.விலேயே பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்கலாம் , வைக்கக்கூடாது என்று இருவேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirunavukkarasar #BJP

    முன்னாள் தலைவர் என்ற முறையில் மகிழ்ச்சியோடும், பெருமையோடும் கே.எஸ்.அழகிரியிடம் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறேன். ஆனால் தன்னுடைய பதவி பறிபோன போது வருத்தமாக இருந்ததாக திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Congress
    சென்னை :

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்கும் நிகழ்ச்சி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது.

    இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

    முன்னாள் தலைவர் என்ற முறையில் மகிழ்ச்சியோடும், பெருமையோடும் கே.எஸ்.அழகிரியிடம் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறேன்.

    புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.எஸ்.அழகிரியுடன் இணைந்து செயல்படுவோம். ராகுல்காந்தியை பிரதமராக நாற்காலியில் உட்கார வைப்போம். அடுத்ததாக தமிழகத்தில் இருக்கும் ஊழல் கட்சியை அகற்ற வேண்டும். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல்-அமைச்சராக வர வேண்டும்.

    கே.எஸ்.அழகிரிக்கு என்னுடைய பரிபூரண ஒத்துழைப்பு எப்போதும் உண்டு. என்னுடைய பதவி பறிபோன போது வருத்தமாக தான் இருந்தது. ஆனால் தலைவர் ராகுல்காந்தியை நேரில் பார்த்த போது அந்த வருத்தம் காணாமல் போய்விட்டது. தற்போது தேர்தல் பிரசார குழுவில் இருக்கிறேன். விரைவில் தேர்தல் களத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #Thirunavukkarasar #Congress
    நடிகர் ரஜினிகாந்த் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்து, மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். #Rajini #RajiniMeetsThirunavukkarasar
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் வரும் 11ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.  திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார்.



    அவ்வகையில், சென்னை அண்ணாநகரில் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்தார். அப்போது இருவருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமணத்தில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.

    அமெரிக்காவில் ரஜினியை திருநாவுக்கரசர் பார்த்ததாக சர்ச்சை வெளியான நிலையில், இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    திருநாவுக்கரசர் சமீபத்தில் ரஜினிகாந்தை அமெரிக்காவில் சந்தித்து பேசியதால் கட்சி கோபப்பட்டதாகவும், அதனால்தான் மாநில தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், ரஜினி தனக்கு 40 ஆண்டுகால நண்பர் என்பதால், அவரை சந்திக்க நான் அமெரிக்கா வரை செல்ல வேண்டியதில்லை என்று திருநாவுக்கரசர் கூறியது குறிப்பிடத்தக்கது. #Rajini #RajiniMeetsThirunavukkarasar
    ராகுல் காந்தி என்னை தேர்தலில் போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Congress #RahulGandhi #Thirunavukkarasar
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட திருநாவுக்கரசர் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்னை தலைவர் பதவியில் இருந்து மாற்றியதால் ராகுலை சந்திக்கும் வரை வருத்தம் இருந்து இருக்கலாம். இப்போது எந்த வருத்தமும் இல்லை. மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.

    இதுவரை எத்தனையோ தலைவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டபோது அவர்களை அழைத்து பேசியதில்லை. ஆனால் ராகுல்காந்தி என்னை அழைத்து பேசியதே மிகப்பெரிய சந்தோ‌ஷம்.

    புதிய தலைவருக்கு எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து காங்கிரஸ் தொண்டராக பணியாற்றுவேன். நான் தலைவர் பொறுப்பில் இருந்தபோது அனைத்து போராட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் கலந்து ஒத்துழைப்பு தந்த அனைத்து தலைவர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.



    என்னை பதவியில் இருந்து மாற்றியதற்கு ப.சிதம்பரம் காரணமா என்கிறீர்கள்? அது எப்படி சொல்ல முடியும். அவர் காங்கிரஸ் தலைவர் இல்லை. அவரால் எப்படி என்னை நீக்க முடியும்?

    என்னிடம் எவ்விதமான கசப்போ, மன அழுத்தமோ இல்லை. மகிழ்ச்சியோடு இருக்கிறேன்.

    ராகுல் காந்தி என்னை தேர்தலில் போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன். வேண்டாம் என்றால் போட்டியிட மாட்டேன்.

    ராகுல்காந்தி எனக்கு சில பணிகளை கொடுத்துள்ளார். அவரது வழிகாட்டுதல்படி கட்சியின் சாதாரண 5 ரூபாய் உறுப்பினராக இருந்து செயல்படுவேன்.

    அமெரிக்காவில் ரஜினியை சந்தித்ததால் கட்சி கோபப்பட்டது என்கிறீர்கள். ரஜினி எனக்கு 40 ஆண்டுகால நண்பர். அவரை சந்திக்க நான் அமெரிக்கா வரை செல்ல வேண்டியதில்லை. இது தவறான தகவல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது முன்னாள் எம்.பி. விசுவநாதன், காஞ்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரன் ஆகியோர் உடன் இருந்தனர். #Congress #RahulGandhi #Thirunavukkarasar
    தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமானது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரி கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், ம.ம.க., முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றாக செயல்பட்டு வருகிறோம். பாராளுமன்ற தேர்தலில் ஒரே கூட்டணியாக போட்டியிடுவோம்.

    தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிதான் பலமாக உள்ளது. 40 தொகுதிகளிலும் மக்களின் ஆதரவுடன் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

    கூட்டணிக்கான கதவு திறந்து இருப்பதாக மோடி சொல்லி பல நாட்களாகியும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணிக்கு எந்த கட்சியும் தயாராக இல்லை. ஆனால் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 10 தொகுதிகளில் வெற்றிபெறும் என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். இது வினோதமாக உள்ளது.

    கோர்ட்டில் வழக்கு இருக்கும்போது ராமர் கோவில் கட்ட முடியாது. இந்து வாக்கு வங்கியை பெற தேர்தலுக்கு முன்னால் பாரதிய ஜனதா சொல்லும் வார்த்தை இது.

    ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி எந்த அடிப்படையில் சொன்னாரோ, அதன்படியே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததால் ஏழை மக்களின் வங்கி கணக்கில் குறைந்தபட்ச நிதி போடுவேன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். அதை ராகுல் காந்தி நடைமுறைப்படுத்துவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பொய்யான வாக்குறுதிகளை அளித்து காங்கிரஸ் வெற்றி பெற முயற்சிப்பதாக மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். #BJP #PonRadhakrishnan #Congress #Rahulgandhi
    ஆலந்தூர்:

    மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி கடந்த 27-ந்தேதி மதுரை வந்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். பா.ஜனதா கூட்டத்திலும் பங்கேற்றார். இது தமிழக அரசியலில் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    வருகிற 10-ந்தேதி திருப்பூருக்கும், 19-ந்தேதி கன்னியாகுமரிக்கும் பிரதமர் வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும், கூட்டங்களை பிரமாண்டமாக நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரது வருகை புதிய எழுச்சியை ஏற்படுத்தும்.



    ஏழைகளுக்கு வருமானம் வரும் திட்டத்தை ராகுல்காந்தி தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலில் வெற்றி பெற முயற்சி செய்கிறது. மக்கள் இதை நம்ப மாட்டார்கள்.

    இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 20 அம்ச திட்டத்தை அறிவித்தார். அந்த வாக்குறுதி என்ன ஆனது? அதுபோல இப்போதும் மக்களை ஏமாற்ற பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். இதை ஏற்க மக்கள் தயாராக இல்லை.

    தமிழ்நாட்டில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதை முடிவுக்கு கொண்டு வர அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும். போராட்டம் செய்பவர்களை அழைத்துப் பேசி நல்ல தீர்வு ஏற்பட செய்வார்கள் என்று நம்புகிறேன்.

    இந்து மதம் வாட்ஸ்அப் மூலம் வளரும் நிலை உள்ளதாக விஜயேந்திரர் வருத்தப்பட்டுள்ளார். துறவிகள் மதத்தின் காவலர்கள். இந்து மதத்தை எந்த காலத்திலும் அழிக்க முடியாது. நவீன தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் இளைஞர்கள் அதற்காக அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.

    ஓட்டுப்பதிவு எந்திரம் மூலம் பா.ஜனதா தில்லு முல்லு செய்வதாக காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்து வருகிறது. சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 3 மாநிலங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பல இடைத்தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி வாய்ப்புகளை இழந்துள்ளது.

    உண்மை இவ்வாறு இருக்க ஓட்டு எந்திரங்களில் மோசடி செய்வதாக காங்கிரஸ் கூறுவது ஜனநாயக நம்பிக்கையை அழிக்கும் செயல். உண்மையை மறைத்து ஆதாயம் பெற காங்கிரஸ் முயற்சிக்கிறது.

    தமிழ்நாட்டில் பா.ஜனதா வலுவான கூட்டணி அமைக்கும். பாராளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும்.

    10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சிகள் தவறான கருத்துக்களை கூறி வருகின்றன. ஏழைகளுக்கு உதவுவதற்காக பிரதமர் மோடி கொண்டு வந்த அருமையான திட்டம் இது. ஏழைகள் முன்னேறாமல் ஜாதி எப்படி ஒழியும்?

    தமிழ்நாட்டில் பா.ஜனதா பரிதாப நிலையில் உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். இதை சொல்லும் அவருடைய நிலைமை தான் பரிதாபமாக உள்ளது.

    இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார். #BJP #PonRadhakrishnan #Congress #Rahulgandhi
    திரும்பிப்போ மோடி என்பது ஒட்டுமொத்த இந்தியாவின் குரல் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #PMModi

    சென்னை:

    பிரதமர் மோடி இன்று மதுரை வந்தார். அவருடைய வருகைக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் ‘‘கோ பேக் மோடி’’ என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டன. இது இந்தியா முழுக்க டிரெண்டிங் ஆனது.

    இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-

    திரும்பிப்போ மோடி என்பது தமிழகத்தின் குரல் மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவின் குரல். எதுவுமே செய்யாத மோடி பதவியை விட்டு போகவேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதன் வெளிபாடுதான் இந்த பதிவுகள்.

    தமிழகத்தில் புயல் பாதித்த நேரத்திலும் சரி, தூத்துக்குடிச் சம்பவத்திலும் சரி ஒரு ஆறுதல் வார்த்தை கூட சொல்லாதவர், தமிழகத்தை திரும்பி பார்க்காதவர். எனவே திரும்பிப்போ என்று சொல்லாமல் என்ன செய்வார்கள்.

     


    வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் அவருக்கு இதே நிலைதான் ஏற்படும். ஓட்டு கேட்டு வராதீர்கள். நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்றுதான் சொல்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதைத்தொடர்ந்து பிற்பட்டோர் பிரிவின் மாநில செயற்குழு கூட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்கு பிற்பட்டோர் பிரிவின் மாநில தலைவர் டி.ஏ.நவீன் தலைமை தாங்கினார். டெல்லி பிரதிநிதிகள் ரோதஸ் பசோயா, மோகன் நாயுடு, சிரஞ்சீவி, சி.டி.மெய்யப்பன், தாமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். #Thirunavukkarasar #PMModi

    ×