என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 100341"
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் நிரூபர்களிடம் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கொள்ளையால் தான் திருச்சி முக்கொம்பு அணை மதகுகள் உடைந்தன.
இதேபோன்று மேலும் பல அணைகள், மணல் கொள்ளையால் சேதமாகி உறுதிதன்மையை இழந்துள்ளது. அணைகளை சரிசெய்ய தலை சிறந்த பொறியாளர்களை நியமிக்க வேண்டும்.
மணல் கொள்ளையை முற்றிலும் தடுக்க வேண்டும். முக்கொம்பு அணையில் ஏற்பட்டதை போல் எதிர் காலத்தில் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
காவிரி தண்ணீர் கடைமடை வரை செல்லாததற்கு சரியான பராமரிப்பு இல்லாதது தான் காரணம். இதனை கவனிக்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் கமிஷன் வாங்குவதிலேயே குறியாக உள்ளனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள நெடுஞ்சாலையைத் துறையில் ரூ.4 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடர போவதாக ஸ்டாலின் கூறி இருக்கிறார். நாட்டிலேயே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் தான் அதிகம் நடக்கிறது.
மக்கள் தொகைக்கு ஏற்ப காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். காவல்துறை பணி சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளை கவனிப்பது தான்.
அதைவிடுத்து, அமைச்சர்கள் எங்கு சென்றாலும் அதிக அளவில் காவல்துறையினர் பாதுகாப்பாக குவிக்கப்படுவது சரியில்லை. உதாரணத்திற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல்காந்தி, கருணாநிதி இறுதி நிகழ்ச்சியில் வந்த போது, காவல்துறையினர் போதிய பாதுகாப்பு வழங்க வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பேராவூரணி:
தஞ்சை மற்றும் டெல்டா மாவட்டங்களில் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் க.மாணிக்கவாசகம். 1979-ம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்த இவர், 2012-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.
காவல் துறையில் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ள இவர், கடந்த 2010-ம் ஆண்டு தமிழக முதல்-அமைச்சரின் வீர, தீர செயலுக்காக பதக்கம் பெற்றவர். காவல் துறையில் பணிபுரிந்த காலத்தில் தான் சந்திந்த பல நிகழ்வுகளை தொகுத்து 55 சிறு கதைகளாக ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா 25-ந் தேதி(சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு தஞ்சையில் உள்ள தீர்க்க சுமங்கலி மகாலில் நடைபெற உள்ளது.
விழாவுக்கு அழகப்பா பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் பெ.சுபாஷ்சந்திரபோஸ் தலைமை தாங்குகிறார். ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு அரு.உலகநாதன் வரவேற்கிறார். விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் கலந்து கொண்டு நூலை வெளியிடுகிறார். அதை சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.நாகமுத்து பெற்றுக்கொண்டு பேசுகிறார். நூல் ஆசிரியர் க.மாணிக்கவாசகம் ஏற்புரையாற்றுகிறார்.
இதில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி க.கணேசன், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் அ.கலியமூர்த்தி, வீ.சித்தண்ணன், சி.ராஜமாணிக்கம், பெ.மாடசாமி மற்றும் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். விழா ஏற்பாடுகளை ஆவணம் க.அடைக்கலம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். #thirunavukkarasar
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள்விழா காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ராஜீவ்காந்தியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அண்டை மாநிலமான கேரள மாநிலம் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது. அங்குள்ள மக்களுக்கு உதவுவதற்காக தமிழக காங்கிரஸ் சார்பில் முதல்கட்டமாக ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படுகிறது.
மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் 1 மாத சம்பளத்தை வழங்குகிறார்கள். அதேபோல முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஒரு மாத ஓய்வூதியத்தையும் வழங்குகிறார்கள். இந்த நிதி அனைத்தையும் டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு அனுப்பி மொத்தமாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் குமரி அனந்தன், அகில இந்திய செயலாளர் செல்லக்குமார், முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன், ராணி, மாநில நிர்வாகிகள் தணிகாசலம், சிரஞ்சீவி, பவன்குமார், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், ரூபி மனோகரன், சிவராஜசேகர், வீரபாண்டியன் தாமோதரன், சொர்ணா சேதுராமன், தமிழ்செல்வன், மயிலை தரணி, திருவான்மியூர் மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். #Congress #Thirunavukkarasar #KeralaFloods
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள பஞ்சாயத்துகளில் நாளை நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் பங்கேற்று விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இந்த தீர்மானத்தின் நகலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் ஒப்படைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் கிராம சபைகளின் செயல் பாட்டை உறுதி செய்திடுவோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக 11 நாட்கள் காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது இறுதி சடங்குகள் நிறைவுற்று 8-ம் தேதி மாலை அவர் மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டார்.
முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதிக்கு தமிழக மக்களும், தொண்டர்களும் விடிய விடிய அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுகவின் திருச்சி சிவா முன்வைத்தார்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில், திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மேலும், கருணாநிதிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதும், சென்னை நகரின் பிரதான சாலைக்கு கருணாநிதியின் பெயரை வைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். #Karunanidhi #Thirunavukkarasar
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இன்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்துள்ள ஊழல் வேதனையையும், மனவருத்தத்தையும் அளிக்கிறது. மாணவர்கள் எதிர்காலத்தை கேள்விக்குறி யாக்கி இருக்கிறார்கள். இந்த சம்பவம் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள அவமானம். இது எந்த மட்டத்தில் நடந்துள்ளது என்பதை நீதி விசாரணை மூலம் கண்டறிய வேண்டும். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் இருந்து கொள்ளைபோன சிலைகளை நேர்மையான போலீஸ் அதிகாரியான பொன்மாணிக்கவேல் கண்டுபிடித்து வரும் நிலையில் அரசியல் ரீதியாக யாரையோ காப்பாற்றுவதற்காக அவருக்கு இடையூறு கொடுப்பது நல்லதா?
அண்ணா பல்கலைக்கழக ஊழல், அறநிலையதுறை ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி வருகிற 10-ந்தேதி மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.
ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி வருகிற 20-ந்தேதி வடசென்னையில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெறும்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரசுக்கு சாதகமான நிலையே நிலவுகிறது. காங்கிரஸ் தலைமையிலான அணியோடு இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், தினகரன் அணியினர் கருத்துக்களை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர். நடிகர் கமல்ஹாசன் ராகுல் காந்தியை சந்தித்தது, அவர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மூலம் காங்கிரஸ் அணியில் அவர் இணைவதற்கான சிக்னல் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அ.தி.மு.க. பக்கம் செல்வாரா? என்று என்னால் ஆரூடம் சொல்ல முடியாது. பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. அணிகள் இணைவதற்கான வாய்ப்பும் இல்லை. ரஜினி பா.ஜனதா பக்கம் சென்றால் தலித், சிறுபான்மையினர் உள்ளிட்ட 36 சதவீத வாக்குகளை இழப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பேரன் காஜா செய்யது இப்ராகிம், திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன், சிவராஜ சேகர், ரூபி மனோகரன், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், துணைத் தலைவர் தாமோதரன், கோபண்ணா, சிரஞ்சீவி, ஆகியோர் உடனிருந்தனர்.#kamalhassan #Thirunavukkarasar
சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வந்தால் அக்கட்சியுடன் புதிதாக தேர்தல் கூட்டணி ஏற்படுத்திகொள்ள தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
கரூர்:
தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் இருந்து வருகிறது. இந்தநிலையில் கரூரில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் அக்கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் தாந் தோன்றி வட்டார காங்கிரஸ் கமிட்டியின் செயல்வீரர்கள் கூட்டம் வெள்ளியணை பகு தியில் நடந்தது. கூட்டத்திற்கு தாந்தோன்றி வட்டார தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யு.சி. மாநில பொது செயலாளர் அம்பலவாணன், பட்டதாரிகள் அணி மாநில துணை தலைவர் லூர்துசாவியோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன், கரூர் நகர தலைவர் ஆர்.ஸ்டீபன் பாபு, வட்டார தலைவர் ஆடிட்டர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம நாதன், மாவட்ட செயலாளர் சுரேகா பாலசந்தர், துணை தலைவர் சின்னையன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர் களாக கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ராணுவ விமானத்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த பயன்பாட்டுக்காக, மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் அனுப்பி வைத்தது கண்டனத்துக்குரியது. எனவே அவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும்.
கரூர் அருகே ஜேடர் பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டி வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க வேண்டும். இதன் மூலமாக பஞ்சப்பட்டி ஏரி, தாதம்பாளையம், வெள்ளியணை ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வந்து அப்பகுதி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடுவை சந்தித்தது காங்கிரஸ் தொண்டர்களுக்கு வருத்தம் அளிக்கிறது. மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சாய்விமல் உள் ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #thirunavukkarasar
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கட்சியை வலுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது மாவட்ட அளவில் செயல்வீரர்கள் கூட்டத்தையும் நடத்தினார். இந்தநிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் அழைப்பின்பேரில் திருநாவுக்கரசர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புதுடெல்லி சென்றனர்.
அவர்கள் அனைவரும் ராகுல்காந்தியை சந்தித்து பேசினர். அப்போது எம்.எல்.ஏ.க்கள் ராகுல்காந்தியிடம், தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், மாநிலத்தலைவரின் செயல்பாடு குறித்தும், தமிழக அரசியல் சூழ்நிலை குறித்தும் விரிவாக பேசினர். பின்னர் ராகுல்காந்தி, திருநாவுக்கரசருடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
சமீபகாலமாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசரை நீக்க வேண்டும் என்று ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த வேளையில் டெல்லியில் இந்த சந்திப்பு நடந்தது தமிழக காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேநேரத்தில் திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் கூறும்போது, ‘தமிழகத்தில் விரைவில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இது சம்பந்தமாகவே ராகுல்காந்தியுடன், திருநாவுக்கரசர் ஆலோசனை நடத்தி இருக்கிறார். திருநாவுக்கரசர் பொறுப்பேற்ற பிறகு தான் கட்சி நல்ல வளர்ச்சியை பெற்று வருகிறது’ என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே ராகுல்காந்தியை, திருநாவுக்கரசர் நேற்று மாலை 4.30 மணிக்கு மீண்டும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து ராகுல்காந்தியிடம் அவர் முழுமையாக விளக்கி கூறியதாக தெரிகிறது.
மேலும் தமிழகம் முழுவதும் தான் நடத்திய செயல்வீரர்கள் கூட்டங்களை பற்றியும், அதில் பங்கேற்ற, பங்கேற்காத நிர்வாகிகள் குறித்தும் அவர் விளக்கி கூறியதாக தெரிகிறது.
இந்தநிலையில், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்புவும், ராகுல்காந்தியை நேற்று தனியாக சந்தித்து பேசினார். தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ராகுல்காந்தியுடன் அவர் பேசியதாக தெரிகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஆகியோருடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தியிருப்பதன் மூலம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை கட்சி தலைமை தொடங்கி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். #Thirunavukkarasar #Kushboo #RahulGandhi
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே. சிரஞ்சீவியின் தந்தை ஏ.கே. கிருஷ்ணன் இயற்கை எய்தியதை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன்.
தனது தந்தையை இழந்து வாடும் கே. சிரஞ்சீவி மற்றும், அவரது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் என் சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தை துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்