search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புலாவ்"

    அவலில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று அவல், காய்கறிகள் சேர்த்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நறுக்கிய பீன்ஸ், கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு - அரை கப்,
    வெங்காயம் - 1,
    கெட்டி அவல் - 2 கப்,
    தக்காளி - 2,
    தேங்காய் பால் - அரை கப்,
    கரம்மலாசா தூள் - அரை டீஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை,
    மஞ்சள்தூள் - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    தக்காளி சாறுடன், தேங்காய் பால் கலந்து அதில் அவலைப் போட்டு அரை மணி நேரம் ஊறவிடவும் (அவல் மூழ்கும் அளவுக்கு தக்காளி சாறு, தேங்காய் பால் கலவையை விட்டால் போதும்).

    கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறித் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    காய்கறிக் கலவை வதங்கியதும், ஊறிய அவலை சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

    வித்தியாசமான சுவையில் வெரைட்டியான புலாவ் ரெடி!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பன்னீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீர், புதினா சேர்த்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 2 கப்
    பன்னீர் - 200 கிராம்
    புதினா - 1 கட்டு
    கிராம்பு - 4
    பட்டை - 1 இன்ச்
    வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    தண்ணீர் - 4 கப்



    செய்முறை :

    பன்னீரை துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

    புதினாவை நன்றாக கழுவி, மிக்ஸியில் போட்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

    அரிசியை நன்கு கழுவி உதிரியாக வடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை 3 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதே வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வரும் வரை வதக்குங்கள்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும், அரைத்து வைத்திருக்கின்ற புதினா மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள்.

    புதினா பச்சை வாசனை போனவுடன் இறுதியில் வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகள் மற்றும் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் பிரட்டி, இறக்கி விட வேண்டும்.

    தற்போது சுவை நிறைந்த புதினா பன்னீர் புலாவ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு மதிய உணவிற்கு வெஜிடபிள் தேங்காய் பால் புலாவ் செய்து கொடுக்கலாம். இன்று இந்த புலாவ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாஸ்மதி அரிசி - 2 கப்
    பெரிய வெங்காயம் - 2
    கேரட் - 2
    பச்சை பட்டாணி - 50 கிராம்
    பீன்ஸ் - 50 கிராம்
    காலிஃப்ளவர் - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 5
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    கொத்தமல்லி, புதினா தழை - சிறிதளவு
    தேங்காய் துருவல் - 2 கப்
    பட்டை - 1 அங்குலம்
    கிராம்பு - 2
    ஏலக்காய் - 2
    பிரியாணி இலை - சிறிது
    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை  :

    அரிசியை கழுவி, 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    வெங்காயத்தை நீளமாக, நறுக்கி கொள்ளவும்.

    தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு அரைத்து 4 கப் தேங்காய் பால் எடுத்து கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட், பீன்ஸை சமமான துண்களாக வெட்டிக்கொள்ளவும்.

    காலிஃப்ளவரை சிறியதாக நறுக்கி வெந்நீரில் அலசி வைக்கவும்.

    பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாயை நைசாக அரைத்து கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை  போனவுடன் அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் காய்கறிகளை சேர்த்து லேசாக கிளறவும். நன்றாக வதக்கினால் கலர் மாறிவிடும் எனவே வதக்கவேண்டாம்.

    இதனுடன் அரிசி சேர்த்து கிளறி, தேங்காய் பால் சேர்த்து கலக்கவும்.

    மூடி போட்டு விசில் போடாமல் அடுப்பை வேகமாக எரிய விடவும். தண்ணீர் கொதித்து வரும் போது லேசாக திறந்து உப்பு போட்டு கலக்கவும்.

    பின்னர் குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.

    10 நிமிடம் கழித்து மூடியை திறக்கவும்.

    சுவையான வெஜிடபிள் புலாவ் ரெடி.

    சாதம் உடையாமல் எடுத்து ஒரு பாத்திரத்தில் மாற்றி அதன் மேல் கொத்தமல்லி, புதினா இலைகளை தூவி அலங்கரிக்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு வெரைட்டி சாதம் செய்து கொடுக்க விரும்பினால் உருளைக்கிழங்கு, கார்ன் சேர்த்து புலாவ் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் : 

    பாசுமதி அரிசி - ஒரு கப்,
    கார்ன் - அரை கப்,
    வெங்காயம் - ஒன்று,
    தக்காளி - 3,
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 2,
    புதினா, கொத்தமல்லித் தழை - தலா ஒரு கைப்பிடி அளவு,
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
    தேங்காய்ப் பால் - அரை கப்,
    பட்டை, லவங்கம்,
    ஏலக்காய் - தலா ஒன்று,
    எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி தேங்காய்ப் பால், ஒன்றேகால் கப் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.

    குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், லவங்கம் தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    வெங்காயம் வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் கார்ன், மிளகாய்த்தூள், புதினா, கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    பிறகு, ஊற வைத்த அரிசி கலவையை ஊற்றவும்.

    இதனுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து, குக்கரை மூடவும். நன்கு ஆவி வந்ததும் ‘வெயிட்’ போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து, 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு - கார்ன் புலாவ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் செய்த இடியாப்பம் மீந்து போனால் மாலையில் அதை வைத்து சூப்பரான புலாவ் செய்யலாம். இன்று இடியாப்ப புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இடியாப்பம் - 6,
    வெங்காயம், தக்காளி, கிராம்பு - தலா 1,
    பட்டை - ஒரு சிறிய துண்டு,
    கீறிய பச்சை மிளகாய் - 2,
    கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இடியாப்பத்தை உதிர்த்து வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு தாளித்த பின்னர், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, பின்னர் உதிர்த்து வைத்த இடியாப்பம், உப்பு சேர்த்து கிளறவும்.

    மசாலா அனைத்து இடியாப்பத்தில் சேர்ந்தவுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான இடியாப்ப புலாவ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு கலந்த சாதமாக செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். இன்று பைனாபிள் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 1 கப்
    அன்னாசிப் பழத் துண்டுகள் (தோல் சீவி நறுக்கியது) - 1 கப்
    அன்னாசி பழச்சாறு - அரை கப்
    வெங்காயம் - அரை கப்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    சர்க்கரை, கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள் - தலா அரை டீஸ்பூன்
    பட்டை, பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, ஏலக்காய் - தலா 1
    முந்திரி, பாதாம் - தலா 10
    எண்ணெய் - அரை டேபிள் ஸ்பூன்
    நெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    தண்ணீர் - முக்கால் கப்



    செய்முறை :

    வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பாசுமதி அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊறவையுங்கள்.

    குக்கரில் எண்ணெய் ஊற்றி, பட்டை, பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ, ஏலக்காய் ஆகியவற்றைப் போட்டுத் தாளித்த பின்னர் வெங்காயம், பைனாப்பிள் இரண்டையும் சேர்த்து நன்றாக வதக்குங்கள்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்குங்கள்.

    அடுத்து அதில் அரிசியைச் சேர்த்து நன்றாகப் புரட்டுங்கள்.

    உப்பு, சர்க்கரை, அன்னாசிச் சாறு, தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து குக்கரை மூடுங்கள்.

    இரண்டு விசில் வந்தவுடன் இறக்கிவிடுங்கள்.

    விசில் போனவுடன் நெய்யில் முந்திரி, பாதாம் வறுத்துப் போட்டுக் கிளறுங்கள்.

    வெங்காயப் பச்சடியுடன் சேர்த்துப் பரிமாறுங்கள்.

    பைனாபிள் புலாவ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான மதிய உணவு செய்து கொடுக்க விரும்பினால் கொண்டைக்கடலை புலாவ் செய்வது கொடுக்கலாம். இன்று இந்த புலாவ் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாசுமதி அரிசி - ஒரு கப்,
    தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 5,
    பச்சை மிளகாய் - 2
    பெரிய வெங்காயம் - ஒன்று
    பட்டை - சிறு துண்டு
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
    வெள்ளை கொண்டைக்கடலை - கால் கப்,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    நெய்யில் வறுத்த முந்திரி - தேவையான அளவு



    செய்முறை :

    முதலில் வெள்ளை கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் வேகவைத்து கொள்ளவும்.

    தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

    பாசுமதி அரிசியை உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும்.

    வெங்காயம், பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும்.

    அடிகனமான வாணலியில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் வேகவைத்த கொண்டைக்கடலை, வறுத்துப் பொடித்த பொடி, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு வதக்கி, உதிராக வடித்த சாதம் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை, முந்திரி தூவி பின்பு பரிமாறவும்.

    சூப்பரான கொண்டைக்கடலை புலாவ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×