search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100387"

    ரஷிய உலகக்கோப்பை போட்டியில் 4 கோல்கள் அடித்துள்ள ரொனால்டோ இன்று ஈரானுக்கு எதிரான ஆட்டத்திலும் அதிரடியாக விளையாடுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #FIFA2018 #CristianoRonaldo
    உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் ரொனால்டோ. போர்ச்சுக்கல்லை சேர்ந்த அவர் உலக கோப்பையில் அபாரமாக ஆடி வருகிறார். ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார். அடுத்து மொராக்கோவுக்கு எதிராக 1 கோல் அடித்தார். 4 கோல்கள் அடித்துள்ள அவர் இன்று ஈரானுக்கு எதிரான ஆட்டத்திலும் அதிரடியாக விளையாடுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 கோல் அடித்து முன்னிலையில் இருக்கும் இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேனை முந்துவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #FIFA2018 #CristianoRonaldo
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘பி’ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈரான் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அனியை வீழ்த்தியது. #FIFA2018 #WolrdCup2018 #MARIRN

    உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நேற்று தொடங்குகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியா 5-0 என சவுதி அரேபியாக துவம்சம் செய்தது. இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று நடைபெற்ற ஏ பிரிவு ஆட்டத்தில் உருகுவே 1-0 என எகிப்தை வீழ்த்தியது.

    இரண்டாவது ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஈரான் - மொராக்கோ அணிகள் மோதின. 



    ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் முதல்பாதி நேர ஆட்டம் கோலின்றி முடிவடைந்தது.

    2-வது பாதி நேரத்திலும் இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் வலது பக்கம் கார்னர் பகுதியில் இருந்து ஈரான் அணிக்கு ப்ரீஹிக் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் மொராக்கோ அணியின் பவுஹட்டவுஸ் தலையில் பட்ட பந்து கோலானது. இதனால் ஈரான் 1-0 என முன்னிலைப் பெற்றது.



    அதன்பின் மொராக்கோ அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஈரான் 1-0 என வெற்றி பெற்றது. #FIFA2018 #WolrdCup2018 #MARIRN
    ஈரான் நாட்டில் பெண்கள் தலையில் முக்காடு அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாடில் நடக்கவுள்ள ஆசிய செஸ் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை விலகியுள்ளார். #SoumyaSwaminathan #Chess
    புனே:

    ஆசிய அணிகள் பிரிவு செஸ் போட்டி ஈரான் நாட்டில் உள்ள ஹமதான் நகரில் ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 4-ந்தேதி வரை நடக்கிறது.

    இந்தப் போட்டியில் விளையாட இருந்த இந்தியாவின் 5-ம் நிலை வீராங்கனை சவுமியா சுவாமிநாதன் அதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் தலையில் முக்காடு அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் முக்காடு அணிய மாட்டேன் என்று கூறி அவர் விலகியுள்ளார். இது தொடர்பாக 29 வயதான சவுமியா கூறியதாவது:-

    தலையில் முக்காடு அல்லது புர்கா அணிய வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை.கட்டாயம் அணிய வேண்டும் என்பது எனது அடிப்படை உரிமைக்கு எதிரானது. இதனால் ஈரானில் நடைபெறும் ஆசிய அணிகள் பிரிவு போட்டியில் பங்கேற்க மாட்டேன்.



    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    சவுமியா உலக ஜூனியர் பட்டத்தை வென்றவர். உலக தர வரிசையில் தற்போது 97-வது இடத்தில் இருக்கிறார்.#SoumyaSwaminathan #Chess
    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அணு பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது தொடர்பாக ஈரான் அதிபருடன் ஆலோசனை நடத்தினார். #RouhaniPutindiscuss
    பீஜிங்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷியா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த ஆண்டு இந்த அமைப்பில் இந்தியாவும் தன்னை ஒரு உறுப்பினராக இணைத்துக் கொண்டது.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர்.

    இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அணு பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது தொடர்பாக ஈரான் அதிபருடன் ஆலோசனை நடத்தினார்.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் கண்காணிப்பாளராக மட்டுமே உள்ள ஈரானுக்கு இந்த அமைப்பில் நிரந்தர இடம் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ரஷியா மேற்கொள்ளும் என ரவுகானியிடம் புதின் உறுதி அளித்துள்ளார்.

    சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை சீர்குலைக்க முயலும் சக்திகளை எதிர்த்து போராடுவதில் ஈரானும், ரஷியாவும் மும்முரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #RouhaniPutindiscuss #USexitnucleardeal
    அணு ஆயுதங்கள் தயாரிக்க தேவையான யூரேனியத்தை செறிவூட்டப் போவதாக அறிவித்துள்ள ஈரான் அரசின் முடிவில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு குறிப்பிட்டுள்ளார். #Iran #BenjaminNetanyahu
    பாரிஸ்:

    யூரேனியம் செறிவூட்டும் நிலையத்தை மீண்டும் செயல்படுத்தி அதிகமான உற்பத்தியை தொடங்கவுள்ளதாக ஈரான் அரசு சர்வதேச அணு சக்தி முகமையிடம் தெரிவித்துள்ளது.

    இந்த முடிவுக்கு எதிராக முதல் நாடாக இஸ்ரேல் குரல் எழுப்பியுள்ளது. தற்போது, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அணு ஆயுதம் தயாரிக்க தயாராகும் ஈரானின் முடிவில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து பெஞ்சமின் நேதன்யாகு அளித்த வீடியோ பேட்டியில், ‘ஈரான் நாட்டின் தலைவர் அயாத்துல்லா கமேனி இருநாட்களுக்கு முன்னர் அளித்த பேட்டியின்போது இஸ்ரேலை அழிக்கப்போவதாக தெரிவித்திருந்தார். வரிசையாக அணு குண்டுகளை தயாரிக்கும் விதத்தில் அளவுக்கதிகமான யூரேனியத்தை செறிவூட்டுவதன் மூலம் இதை செய்து முடிக்கப் போவதாக நேற்று அவர் தெரிவித்தார்.

    எனவே, அணு ஆயுதங்கள் தயாரிக்க தேவையான யூரேனியத்தை செறிவூட்டப் போவதாக அறிவித்துள்ள ஈரான் அரசின் முடிவில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. எனினும், ஈரானின் கையில் அணு ஆயுதங்கள் சிக்குவதை இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது’ என்று குறிப்பிட்டுள்ளார்.  #Iran #IsraelPM #BenjaminNetanyahu
    வளைகுடா நாடுகளான ஈராக் மற்றும் ஈரான் நாடுகள் தங்களிடையே கச்சா எண்ணெய்யை பரிமாறிக்கொள்ள முடிவு செய்துள்ளதாக ஈரான் பெட்ரோலிய துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. #Iraq #Iran
    டெஹ்ரான் :

    எண்ணெய் வளம்  மிக்க ஈராக் மற்றும் ஈரான் நாடுகள் கச்சா எண்ணெய்யை பரிமாறிக்கொள்ள முடிவு செய்துள்ளதாக ஈரானிய பெட்ரோலியத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இதுவரை எதிரி நாடுகளாக இருந்த இவ்விரண்டு நாடுகளும் திடீரென  தங்களிடையே கச்சா எண்ணெய்யை பரிமாறிக்கொள்ள முடிவு செய்துள்ளது முக்கிய நிகழ்வாகும்.

    ஈராக்கின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள கிர்குக் பகுதியில் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய்யை ஈராக் டேங்கர் லாரிகள் மூலம்  ஈரானுக்கு அனுப்பி வைக்கும். அதை ஈரான்,  தங்களது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளும். மீண்டும், ஈரான் அதே அளவிலான எண்ணெய்யை ஈராக்கின் தெற்கு துறைமுகங்களுக்கு அனுப்பி வைக்கும்.

    கடந்த வருடம் ஈராக்கின் குர்திஷ் பிராந்தியத்தில் இருந்த போராளிகளை விரட்டி, ஈராக் சுதந்திரமடைய ஈரான் முக்கிய பங்காற்றியது. இதன் பின்னர், அதிகமான எண்ணெய் வளம் மிக்க ஈராக்கின் கிர்குக் பகுதியில் தங்களது வர்த்தக ஆதிக்கத்தை ஈரான் வலுப்படுத்த தொடங்கியுள்ளது.

    தினம் தோறும் 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேரல்கள் வரை ஈராக்கில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் ஈரானில் தெற்கு பிராந்தியமான டராஹ் ஷாஹ்ர் பகுதிக்கு சென்றடையும். காலப்போக்கில் இரு நாடுகளுக்கு இடையில் குழாய் பதித்து எண்ணெய்யை கொண்டு செல்லவும் இவ்விரண்டு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

    ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகி அந்நாடின் மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்திருந்த நிலையில், அண்டை நாடான ஈராக்குடன், ஈரான் நெருங்கி செல்வது வளைகுடா எண்ணெய் பிரதேசங்களில் அமெரிக்கா செலுத்தி வரும் ஆதிகத்துக்கு ஒரு போட்டியாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள். #Iraq #Iran
    இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Trump #theresamay
    வாஷிங்டன்:

    ஈரான் அரசு சிரியாவில் இருந்து தனது எதிரி நாடான இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஏறக்குறைய 20 ஏவுகணைகளை கொண்டு கோலன் பகுதியிலுள்ள இஸ்ரேலிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவற்றில் சில ஏவுகணைகளை இஸ்ரேல் வழிமறித்து அழித்துள்ளது.

    இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதுபற்றி தொலைபேசி மூலம் பிரிட்டன் பிரதமர் தெரசா மே உடன் தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசினார்.  

    அதன்பின்னர் வெள்ளை மாளிகை வெளிட்டுள்ள செய்தியில், ‘சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது ஈரான் அரசு நடத்திய முன்னறிவிக்கப்படாத ஏவுகணை தாக்குதல்களுக்கு இரு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஈரானின் தாக்குதல் போக்கை சரியான முறையில் எப்படி எதிர்கொள்வது என அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #Trump #theresamay
    ஈரானுடன் உறவை வலுப்படுத்திக்கொள்ள உறுதி பூண்டிருப்பதாக ரஷிய வெளியுறவுத்துறை துணை மந்திரி செர்கெய் ரியாப்கோவ் கூறினார். #Russia #Iran #NuclearDeal
    மாஸ்கோ:

    வல்லரசு நாடுகளுடன் ஈரான் செய்துகொண்ட அணுஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து உள்ளார்.

    ஆனால் அந்த ஒப்பந்தத்தில் தொடர்புடைய பிற நாடுகள், ஒப்பந்தத்தை தொடரப்போவதாக கூறின.

    இந்த நிலையில் ஈரானுடன் உறவை வலுப்படுத்திக்கொள்ள உறுதி பூண்டிருப்பதாக ரஷிய வெளியுறவுத்துறை துணை மந்திரி செர்கெய் ரியாப்கோவ் கூறினார்.

    இதற்கிடையே ஈரானுடன் அமெரிக்கா மனிதாபிமான அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஈரான் நாட்டில் சிறைவைக்கப்பட்டு உள்ள அமெரிக்கர்களின் குடும்பத்தினர் ஜனாதிபதி டிரம்புக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    அமெரிக்க கைதிகள் விவகாரத்தில் ஈரானுடன் டிரம்ப் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த திறந்த மனதுடன் உள்ளதா என வெள்ளை மாளிகையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் வெள்ளை மாளிகை உடனடியாக பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. #Russia #Iran #NuclearDeal
    ×