என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 100430"
ஆந்திர மாநிலத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு நடக்கிற தேர்தலில், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள அரக்கு தொகுதி மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.
இங்கு மத்திய மந்திரியாக இருந்த தந்தையை எதிர்த்து மகளே களத்தில் நிற்கிறார்.
மத்தியில் முந்தைய மன்மோகன் சிங் அரசில் மலைவாழ் பழங்குடியினர் விவகாரம், பஞ்சாயத்து ராஜ் துறைகளின் கேபினட் மந்திரியாக இருந்தவர் கிஷோர் சந்திரதேவ் (வயது 72).
சென்னை கிறித்தவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவர், காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். 6 முறை எம்.பி. பதவி வகித்த இவர் கடந்த மாதம், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் ஐக்கியமானார்.
அவரை எதிர்த்து யாரை நிறுத்தலாம் என காங்கிரஸ் கட்சி யோசித்தது. அதே கிஷோர் சந்திரதேவின் மகளும், சமூக சேவகியுமான சுருதிதேவியை வேட்பாளர் ஆக்கிவிட்டது.
ஆக தந்தை கிஷோர் சந்திரதேவை எதிர்த்து மகள் சுருதிதேவி போட்டியிட தேர்தல் களம் பரபரப்பாகி இருக்கிறது. இருவரில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வியை எழுப்ப ஒரு வழி இல்லை.
ஏனென்றால் அங்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, கோடட்டி மாதவியை நிறுத்தி இருக்கிறது. எனவே மும்முனைப்போட்டி நிலவுகிறது.
இதேபோன்று விஜயநகரம் பாராளுமன்ற தொகுதியில் தெலுங்குதேசம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான அசோக் கஜபதி ராஜூ போட்டியிடுகிறார். விஜயநகரம் சட்டசபை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளராக அவரது மகள் ஆதித்தி களத்தில் குதித்திருக்கிறார். இதுவும் மக்களால் பரபரப்பாக பேசப்படுகிறது. #LSPolls
திருமலை:
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜ சேகர ரெட்டியின் தம்பி விவேகானந்த ரெட்டி (வயது 68). கடப்பா மாவட்டம் புலி வெந்துலாவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
1989 மற்றும் 94-ம் ஆண்டில் புலிவெந்துலா தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று ஒருங்கிணைந்த ஆந்திராவில் வேளாண்மை துறை அமைச்சராக பணி புரிந்துள்ளார்.
இவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் வசித்து வருகின்றனர். விவேகானந்த ரெட்டி அரசியல் சம்பந்தமான விஷயங்களுக்காக கடப்பா வந்து தங்கி செல்வார்.
2 முறை கடப்பா எம்.பி.யாவும் பணிபுரிந்த விவேகானந்தரெட்டி தற்போது நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு மற்றும் கட்சி பணிகளை அவரது அண்ணன் மகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியுடன் இணைந்து மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான புலிவெந்துலா வந்த விவேகானந்தரெட்டி இரவு பொதட்டூரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பங்கேற்று விட்டு வீட்டுக்கு வந்தார்.
நேற்று காலை விவேகானந்தரெட்டி தனது வீட்டு கழிவறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். விவேகானந்த ரெட்டி கழிவறையில் தலை மற்றும் காலில் வெட்டுப்பட்ட நிலையில் கிடந்தார்.
விவேகானந்தரெட்டி உடலில் 7 இடங்களில் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவரை கொலை செய்தவர்களை கண்டு பிடிக்க கடப்பா போலீசார் 5 சிறப்பு படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
விவேகானந்த ரெட்டியின் உறவினர்கள், வீட்டு வேலைக்காரர்களிடம் முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது.
தனது சித்தப்பா விவேகானந்த ரெட்டி கொலை குறித்து ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாவது:-
என் சித்தப்பா ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி மரணத்தை மாநில போலீசார் திசை திருப்ப பார்க்கிறார்கள். சந்திரபாபு நாயுடுவின் கீழ் செயல்படும் போலீசார் விசாரணை செய்தால் உண்மை வெளிவரும் என்னும் நம்பிக்கை எனக்கு இல்லை. அவரை 7 முறை கொடூரமாக வெட்டி கொலை செய்திருக்கிறார்கள்.
என் தாத்தா ராஜா ரெட்டி 1998-ல் இதேபோல படுகொலை செய்யப்பட்டார். என் தந்தை எதிர்க்கட்சி தலைவராக அப்போது தீவிர பிரசாரம் செய்து வந்தார். அவரை பிரசாரம் செய்ய விடக்கூடாது என்பதற்காகவே என் தாத்தாவை கொலை செய்து என் தந்தையை கடப்பாவிலேயே முடக்கி வைத்தனர். அப்போதும் சந்திரபாபு நாயுடுதான் முதல்வர்.
அதன்பிறகு 2009-ல் இரண்டாம் முறை முதல்வரான எனது தந்தையை நீ எப்படி சட்டமன்றத்திற்கு வருவாய் என பார்க்கிறேன் என சந்திரபாபு நாயுடு சட்டமன்றத்திலேயே சவால் விட்டார். அடுத்த நாளே எனது தந்தை ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். அவரது மரணம் விபத்தல்ல என்னும் சந்தேகம் எங்கள் மனதில் இன்றும் உள்ளது.
இப்போது என் சித்தப்பாவின் படுகொலை இதைகூட சாதாரணமாக பார்க்கிறார்கள்.
தேர்தல் வரும்போது தேர்தலில் தோற்கும் போதும் சந்திரபாபு நாயுடு என் குடும்பத்தினர் மீது இதுபோன்ற கொலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறார். உண்மை வெளியே வரவேண்டும். மாநிலத்தில் எனக்கு நீதி கிடைக்காது. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
மேலும் எங்கள் கட்சி தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த சம்பவம் காரணமாக யாரும் எந்த அசம்பாவிதமும் ஏற்படுத்தாமல் பொறுமை காக்க வேண்டும். நான் கடவுளை நம்புகிறேன். நிச்சயம் நீதி கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #Jaganmohan #ChandrababuNaidu
மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர், இரு வர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.
பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களை வேட்டையாட சிறப்பு தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.
இந்நிலையில் விசாகப்பட்டினத்தின் பேடாபயலு பகுதியில் நக்சலைட்கள் ஊடுருவி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று அதிகாலை சிஆர்பிஎப் மற்றும் மாநில போலீசார் அங்கு சென்று, அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் முடிவடைந்த நிலையில், ஒரு சிஆர்பிஎப் வீரர் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #AndraNaxal #ShotDead
சென்னை:
தமிழக போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவை சேர்ந்த 3 டி.எஸ்.பி.க்கள், 10 இன்ஸ்பெக்டர்கள், 7 சப்-இன்ஸ்பெக்டர்கள், 20 போலீசார் கொண்ட தனிப்படை போலீஸ் சென்னை, காஞ்சீபுரம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் 3 குழுக்களாக பிரிந்து சென்று மாதவரம், கோயம்பேடு, செங்குன்றம் ஆகிய பஸ் நிலையங்களிலும், சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களிலும் டி.பி. சந்திரம், நுங்கம்பாக்கம, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதில் மாதவரம் பஸ் நிலைய நுழைவு வாயிலில் அசார் என்ற அசாருதீன் (23) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். கேரளாவை சேர்ந்த இவரது பையில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. விசாரணையில் இந்த கஞ்சா ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து கேரளாவிற்கு கொண்டு செல்வதற்காக சென்னை மாதவரம் பஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தது தெரியவந்தது.
ராயபுரம்:
சென்னை காசிமேட்டை சேர்ந்த சின்னதுரைக்கு சொந்தமான விசைப்படகில் 11 மீனவர்கள் 4 நாட்களுக்கு முன்பு ஆந்திரா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நேற்று காலையில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது சரக்கு கப்பல் ஒன்று நேருக்கு நேர் மோதியது. இதில் படகு கவிழ்ந்து சேதம் அடைந்தது. படகில் இருந்த 11 பேரும் கடலில் தத்தளித்தனர். நடுக்கடலில் தத்தளித்த அவர்களை அந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர்.
11 மீனவர்களும் உயிருடன் திரும்பியதைத் தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசில் விசைப்படகு உரிமையாளர் புகார் அளித்தார். கடலில் மூழ்கிய படகினை மீட்டு தர வேண்டும். சேதம் அடைந்த படகிற்கு நஷ்டஈடு பெற்றுத்தர வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரகாசம் பகுதியை சேர்ந்தவர் வெங்கா ரெட்டி ஆவார். இவரது மகள் வைஷ்ணவி(20) ஓங்கோலில் உள்ள கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். இந்நிலையில், வைஷ்ணவி தன்னுடன் வகுப்பில் பயிலும் லிங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மாணவனுடன் காதல் வசப்பட்டுள்ளார்.
இவர்கள் 2 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், 8 மாதங்களுக்கு முன் இவர்களுக்கிடையேயான காதல் வைஷ்ணவியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து பெற்றோர் வைஷ்ணவியை கண்டித்துள்ளனர். இதனை ஏற்க மறுத்து கடந்த 2ம் தேதி திருமணம் செய்ய வைஷ்ணவி வீட்டை விட்டு சென்று மர்கபூர் சென்றுள்ளார்.
இதனை அறிந்த பெற்றோர் அந்த இடத்திற்கு விரைந்து, வைஷ்ணவியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக பெற்றோருக்கும் வைஷ்ணவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது ஆத்திரமடைந்த தந்தை, மகள் என்றும் பாராமல் வைஷ்ணவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிகிறது.
வைஷ்ணவி மாரடைப்பால் இறந்ததாக உறவினர்களிடம் கூறியுள்ளார். ஆனால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, வைஷ்ணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வைஷ்ணவியின் உடலில் காயங்கள் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியிருப்பதாக கூறுகின்றனர்.
இது தொடர்பாக தல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வைஷ்ணவியின் தந்தையிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரகாசம் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 4 கவுரவ கொலைகள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. #AndraGirldead
வேலூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன், வனவர்கள் ரவி, முருகன் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குடியாத்தம் சித்தூர் சாலையில் உள்ள சைனகுண்டா சோதனை சாவடியில் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து வேகமாக வந்த காரை மறித்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. அதனை ஜீப்பில் துரத்தினர். 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள போடிகுப்பம் என்ற இடத்தில் காரை மடக்கினர். காரை நிறுத்திவிட்டு 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். காரில் 1½ டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ. 30 லட்சமாகும்.
காருடன் செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த செம்மரங்களை ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. காரில் இருந்த தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். #RedSandalwood
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சபரிமலைக்கு செல்ல விரும்பும் இளம்பெண்களை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கூறியது.
கேரள பெண்கள் ஐயப்பனை தரிசனம் செய்ததை தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த மனிதி அமைப்பின் பெண்களும் சபரிமலைக்குச் செல்ல விருப்பம் தெரிவித்து கேரள அரசுக்கு மனு அனுப்பினர். இதற்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்திக்க நேரம் ஒதுக்கும்படியும் கேட்டுள்ளனர்.
இதற்கிடையே ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்கள் 4 பேர் ஐயப்பனை தரிசிக்க சபரிமலை வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர பெண்கள் கோட்டயம் வந்துள்ளதாகவும், அங்கிருந்து எரிமேலி வழியாக பம்பை சென்று சன்னிதானம் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆந்திராவில் இருந்து ஏற்கனவே பல பெண்கள் சபரிமலை வந்து பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக திரும்பி சென்றுள்ளனர். இப்போது மேலும் 4 பெண்கள் சபரிமலை வந்திருப்பதாக வெளியான தகவல் சபரிமலையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #SabarimalaTemple
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்