என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 100430"
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் சாலக்குடியில் இருந்து திருச்சூருக்கு அரசு பஸ்சில் கஞ்சா கடத்துவதாக சாலக்குடி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் ஆம்பலூர் என்ற இடத்தில் குறிப்பிட்ட பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது பஸ்சில் சந்தேகப்படும்படி இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.
இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 148 செ.மீட்டர் நீளமுள்ள ஒரு மண்ணுளி பாம்பு இருந்தது. மேலும் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த 3 செப்பு பட்டயமும் சிக்கியது.
அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த ஜெசீர் (வயது 34), அப்துல்லா (46), சம்சுதீன் (49), அலி (58) ஆகியோர் என்பது தெரியவந்தது. மண்ணுளி பாம்பு, 3 செப்பு பட்டயங்களை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்தவர்களை போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கூறும்போது, ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ஒருவரிடம் ரூ.10 லட்சம் கொடுத்து மண்ணுளி பாம்பு மற்றும் பட்டயங்களை வாங்கி வருகிறோம். அதனை திருச்சூரில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்க கொண்டு செல்லும்போது பிடிபட்டோம் என்று கூறினர்.
இதனையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து ரூ.10 லட்சம் கொடுத்து வாங்கப்பட்ட மண்ணுளி பாம்பு எதற்காக கடத்தப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
#WATCH: Early morning visuals of #TitliCyclone making landfall in Srikakulam's Vajrapu Kotturu. #AndhraPradeshpic.twitter.com/x7H4yoF7ez
— ANI (@ANI) October 11, 2018
ஆந்திரா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்திவருவதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காஞ்சீபுரம் மாவட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் தலைமையிலான போலீசார் நேற்று காலை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை வந்த ஆந்திர மாநில பஸ்சை சோதனை செய்தனர். அப்போது ஒரு வாலிபர் சூட்கேசில் கட்டுக்கட்டாக ரூ.1 கோடியே 5 லட்சத்தை 24 பண்டல்களாக கொண்டுவந்ததை கண்டுபிடித்தனர்.
போலீசார் அந்த வாலிபரை அவர் கொண்டுவந்த பணத்துடன் பிடித்து செங்குன்றம் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில் பணத்தை கொண்டுவந்த வாலிபர் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், பாவகாபுரம் கிராமத்தை சேர்ந்த துர்காராவ் (வயது 35) என்பது தெரிந்தது.
சென்னை சவுகார்பேட்டையில் நகைகள் வாங்குவதற்காக இந்த பணத்தை கொண்டுவந்ததாக அவர் தெரிவித்தார். செங்குன்றம் போலீசார் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். அந்த பணம் பாதுகாப்பாக செங்குன்றம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. #AndhraPradesh #Chennai #OneCrore
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தில் ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர அரசு தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும்.
இதற்காக கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். இதற்காக வரை 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் வெட்டப்பட்டது. இதில் ஆந்திராவில் 152 கிலோ மீட்டர், தமிழகத்தில் 25 கிலோ மீட்டர் தூரம் வரை கால்வாய் உள்ளது.
தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயின்டிலிருந்து பூண்டி ஏரி இடையே உள்ள 25 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.
இந்த நிலையில் ஆந்திர பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாய் சேதம் அடைந்து இருக்கிறது. சித்தூர் மாவட்டம் பொட்டம்மேடு, தில்லமேடு மற்றும் பல பகுதிகளில் கால்வாய் ஓரம் உள்ள சிமெண்ட் சிலாப்புகள் உடைந்து சிதறி கிடக்கிறது.
இதேபோல் கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. கற்கள், மணல்களும் கால்வாய்க்குள் கிடக்கிறது. இதனால் கால்வாயில் தண்ணீர் செல்வது கடுமையாக பாதிக்கப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணா கால்வாயில் செல்லும் தண்ணீரை ஆந்திர விவசாயிகளும் பயன்படுத்துகிறார்கள். எனவே கிருஷ்ணா கால்வாயை விரைவில் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.
இதேபோல் தமிழக பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் கடந்து செல்ல சிறு பாலங்கள் உள்ளன. அந்த பாலங்களும் பழுதடைந்து கீழே இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. அதையும் உடனே சீர்செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆந்திராவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 200 கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன. 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலைகள் அடியோடு துண்டிக்கப்பட்டு விட்டது.
மேலும் இந்த 2 மாவட்டங்களிலும் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் முற்றிலுமாக நாசம் அடைந்துள்ளன. இதையடுத்து வெள்ள சேத பகுதிகளை மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். பிறகு அதிகாரிகளுடன் வெள்ள நிலைமை குறித்து ஆய்வும் நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “2 மாவட்டங்களிலும் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டு உள்ளது. பயிர்கள் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். வெள்ளத்தில் முற்றிலுமாக சேதம் அடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும்” என்றார். #AndhraPradesh #Flood #ChandrababuNaidu
திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்ச்சி காரணமாக நோய்வாய்பட்டு தற்போது காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முழுநேர மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் கருணாநிதியின் உடல்நிலை தற்போது வெகுவாக முன்னேறியுள்ளது.
அதன்படி, இன்று முன்னாள் பிரதமர் தேவகவுடா சென்னை காவிரி மருத்துவமனை வந்தடைந்தார். முக ஸ்டாலினிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்த தேவகவுடா, கருணாநிதி 100 ஆண்டுகள் கடந்தும் நலமுடன் வாழ்வார் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு நாளை சென்னை காவிரி மருத்துவமனை வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #KauveryHospital #DMK #Karunanidhi #GetWellKarunanidhi #MKStalin #ChandrababuNaidu
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் சாலை வசதிகள் முறையாக இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களிலும் விமர்சிக்கப்பட்டது.
இதையடுத்து, தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை செய்ய முடிவு செய்துள்ளது. சாலை வசதி குறைபாட்டால் கர்ப்பிணிப் பெண் 12 கிலோ மீட்டர் தூக்கிச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆந்திர மாநில அரசுக்கும், தலைமை செயலருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. #AndhraPradesh #NHRC
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானம் மீது கடந்த 20-ந்தேதி நடந்த விவாதத்துக்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கூடாது என 14-வது நிதிக்குழு பரிந்துரைத்து இருப்பதாக கூறினார்.
ஆனால் அப்படி ஒரு பரிந்துரையை 14-வது நிதிக்குழு வெளியிடவில்லை என தெலுங்குதேசம் கட்சித்தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருக்கும் தனது கட்சி எம்.பி.க்களுடன் நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியபோது இதை அவர்களிடம் கூறிய சந்திரபாபு நாயுடு, இதன் மூலம் பிரதமரும், மத்திய மந்திரிகளும் மக்களவையை தவறாக வழிநடத்தி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
எனவே பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர பரிசீலிக்குமாறு தெலுங்குதேசம் எம்.பி.க்களுக்கு அவர் அறிவுறுத்தினார். அதன்பேரில் பிரதமருக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க அந்த கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டு உள்ளனர்.
முன்னதாக ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. #TDP #PrivilegeMotion #Modi
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பசுவுல்லங்கா என்னும் இடத்தில் இருந்து சலாதிவரி பாலெம் என்னும் இடம் நோக்கி பயணிகள் ஒரு படகு நேற்று மாலை கவுதமி ஆற்றில் சென்று கொண்டிருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர்.
இந்த நிலையில் நீர்ச்சுழலில் சிக்கிய அந்த படகு ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தின் தூண் ஒன்றின் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த 30 பேரும் ஆற்றுக்குள் விழுந்து தத்தளித்தனர். இதையடுத்து விசாகப்பட்டினம் மற்றும் ராஜமகேந்திரவரம் நகரங்களில் இருந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்களுடன் உள்ளூர் போலீசாரும் இணைந்து 23 பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
எனினும் மற்ற 7 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. அவர்களை தேடும்பணி தொடர்ந்து நீடித்து வருவதாக மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். #AndhraPradesh #EastGodavri
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்