search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100430"

    ஆந்திராவில் என்.டி.ஆர் பெயரில் பல்வேறு மாவட்டங்களில் 60 அண்ணா கேன்டீன்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். #AnnaCanteens
    நகரி:

    தமிழ்நாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்க அம்மா கேன்டீன்களை திறந்தார்.

    அதேபோல் ஆந்திராவில் மறைந்த முதல்வர் என்.டி. ராமராவ் பெயரில் மலிவு விலை உணவு கேன்டீன்கள் திறக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்தார். ஆந்திராவில் என்.டி. ராமராவ் அன்பாக ‘அண்ணா’ என்று அழைக்கப்படுகிறார்.

    இதையடுத்த அண்ணா கேன்டீன்கள் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்காக ஆந்திர அரசு அதிகாரிகள் தமிழகத்துக்கு வந்து அம்மா உணவகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து சென்றனர்.

    இதையடுத்து ஆந்திராவில் அண்ணா கேன்டீன்கள் தொடங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. ஆந்திரா தலைநகர் அமராவதியில் தலைமை செயலகத்தில் 2016-ம் ஆண்டு அண்ணா கேன்டீன் தொடங்கப்பட்டது.

    மாநிலத்தில் மற்ற பகுதிகளில் தொடங்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வந்தன.


    இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் 60 அண்ணா கேன்டீன்கள் முதல்கட்டமாக நேற்று தொடங்கப்பட்டது. விஜயவாடாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு ‘அண்ணா’ கேன்டீனை தொடங்கி வைத்து உணவு சாப்பிட்டார்.

    இங்கு காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேலைகளிலும் சாப்பாடு ரூ.5 மலிவு விலையில் வழங்கப்படுகிறது.

    அண்ணா கேன்டீன் திறந்தது குறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில், “இந்த கேன்டீன்களில் தூய்மை, சுகாதாரம், தரம் ஆகியவை சிறப்பாக இருக்கும். சர்வதேச அளவில் உள்ள ரெஸ்டாரண்ட்கள் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு பராமரிக்கப்படும். இந்த திட்டத்துக்கு பலதரப்பினர் ஆதரவு தரவேண்டும்” என்றார்.

    இதற்கிடையே அண்ணா கேன்டீன்களுக்காக பலர் பணமாகவும், காய்கறிகளாகவும் நன்கொடை அளித்து வருகிறார்கள். #AnnaCanteens
    எளிதாக தொழில் நடத்த உகந்த மாநிலங்களில் ஆந்திராவுக்கு தொடர்ந்து 2-வது ஆண்டாக முதல் இடம் கிடைத்து உள்ளது. தமிழ்நாட்டுக்கு 15-ம் இடம் கிடைத்து இருக்கிறது.
    புதுடெல்லி:

    நாட்டில் எளிதாக தொழில் தொடங்கி நடத்த உகந்த மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் ஆராய்ந்து, மத்திய தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறை தரவரிசை பட்டியல் தயாரித்து வெளியிட்டு உள்ளது.

    கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்குதல், தொழிலாளர்கள் நலன், சுற்றுச்சூழல் ஒப்புதல், தகவல் பெறும் வசதி, நிலம் கையிருப்பு, ஒற்றைச்சாளர முறையில் விரைவான அனுமதி உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் ஆராய்ந்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    இந்த பட்டியலில் தொடர்ந்து 2-வது ஆண்டாக ஆந்திரா முதல் இடம் பிடித்து உள்ளது. 2-ம் இடத்தில் தெலுங்கானா மாநிலம் உள்ளது. முதல் 10 இடங்களில் தமிழ்நாட்டுக்கு இடம் இல்லை.

    3-ம் இடம் அரியானா, 4-ம் இடம் ஜார்கண்ட், 5-ம் இடம் குஜராத், 6-ம் இடம் சத்தீஷ்கார், 7-ம் இடம் மத்திய பிரதேசம், 8-ம் இடம் கர்நாடகம், 9-ம் இடம் ராஜஸ்தான், 10-ம் இடம் மேற்கு வங்காளம் மாநிலங்களுக்கு கிடைத்து உள்ளது.

    தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்து உள்ளது.

    டெல்லி யூனியன் பிரதேசத்துக்கு 23-வது இடம். கடைசி இடம் மேகாலயாவுக்கு கிடைத்து இருக்கிறது. 
    ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையை அமைத்துத் தரக்கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ரமேஷ் கால வரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். #AndhraPradesh #TDP #Ramesh
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானாவை பிரித்தபோது ஆந்திராவுக்கு என சில வாக்குறுதிகளை மத்திய பா.ஜ.க அரசு அறிவித்து இருந்தது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, ஒருங்கிணைக்கப்பட்ட இரும்பு ஆலை போன்ற பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், எந்த வாக்குறுதியையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

    இதையடுத்து, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு தெலுங்கு தேசம் கட்சி நெருக்கடி கொடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஒருங்கிணைந்த இரும்பு ஆலையை அமைத்து தரக்கோரி, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி ரமேஷ் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.



    அவரது உண்ணாவிரதம் இன்று 11-வது நாளாக நீடிக்கிறது. இதனால் ரமேஷின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய எம்.பி ரமேஷ், ஆலை அமைப்பதற்கான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும், மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக இறுதி வரை போராடுவேன் எனவும் தெரிவித்தார். #AndhraPradesh #TDP #Ramesh
    ஆந்திராவில் இறந்த பெண்ணுக்கு கடவுள் உயிர் கொடுப்பார் என்று நம்பி அவரது குடும்பத்தினர் மூன்று நாட்களாக சடலத்தை புதைக்காமல் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஜங்கரெட்டி குடம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியுள்ளது. இதுபற்றி குடியிருப்புவாசிகள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து பார்த்தபோது, அந்த வீட்டில் வசித்து வந்த அருணா ஜோதி (வயது 41) என்ற பெண் இறந்து அழுகிய நிலையில் சடலம் கிடந்தது தெரியவந்தது. இது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது.

    ஆனால், அருணா ஜோதி இறந்ததை ஒரு பொருட்டாக கருதாமல் அவரது தாயும், தம்பியும் வழக்கமான பணிகளை செய்துகொண்டிருந்தனர். போலீசார் அவர்களிடம், அருணா ஜோதி இறந்துவிட்டதாக கூறியும்  எந்த ரியாக்சனும் இல்லை. அருணா ஜோதியின் உயிரை கடவுள்தான் எடுத்தார், கடவுள் மறுபடியும் உயிர் கொடுப்பார் என்று இருவரும் கூலாக கூறியுள்ளனர்.

    பின்னர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், அருணா ஜோதி இறந்ததால், அவரது குடும்பத்தினரின் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.

    வாடகை கூட கொடுக்க முடியாத அளவுக்கு இவர்களின் குடும்பம் வறுமையில் வாடியதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பசியால் அருணா ஜோதி இறந்தாரா?அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. #AndhraSuperstition #FamilyKeepsBody
    குடியாத்தம் அருகே உள்ள நீரோடையில் விழுந்து பெண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழக, ஆந்திர வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதி, ஆந்திர எல்லையில் உள்ளது. ஆந்திர வனச்சரகத்திற்குட்பட்ட கவுண்டன்யா யானைகள் சரணாலயம் மிக அருகிலேயே இருக்கிறது.

    இங்கு இருந்து குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மோர்தானா, சைனகுண்டா, கொட்டமிட்டா, தனகொண்டப்பல்லி உள்ளிட்ட கிராமங்களுக்குள் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்யும்.

    மோர்தானா நீரோடையில் தண்ணீர் குடிக்க யானைகள் கூட்டம், கூட்டமாக வந்து செல்லும். நேற்று ஆடு, மாடுகளை மேய்ப்பவர்கள் மோர்தானா நீரோடையில், யானை இறந்து கிடந்ததை பார்த்தனர்.

    இதுகுறித்து, உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஜி.பி.எஸ். மூலம் ஆய்வு செய்ததில் யானை இறந்துகிடந்த பகுதி தமிழக-ஆந்திர வனப்பகுதி எல்லையில் இருந்தது.

    இதனால், ஆந்திர வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எல்லை பிரச்சினை காரணமாக, யானை உடலை அகற்றுவது யார்? என்பதில் முரண்பாடு ஏற்பட்டது.

    இதையடுத்து, வேலூர் மாவட்ட வன அலுவலர் முருகன், குடியாத்தம் வனச்சரக அலுவலர் சங்கரய்யா தலைமையில் தமிழக வனத்துறையினர் மற்றும் ஆந்திர வனத்துறையினர் இன்று காலை மோர்தானா நீரோடை பகுதிக்கு வந்தனர்.

    யானை உடல் அழுகி துர்நாற்றம் வீசியது. சுமார் 40 வயது இருக்கும். ஒரு வாரத்திற்கு முன்பே தண்ணீர் குடிக்க மோர்தானா நீரோடைக்கு வந்துள்ளது.

    அப்போது தவறி விழுந்து நீரோடையில் இறந்துள்ளது என தமிழக-ஆந்திர வனத்துறையினர் தெரிவித்தனர்.

    மேலும், யானையின் அழுகிய உடலில் இருந்து பெரிய புழுக்கள், சதை துணுக்குகள் நீரோடையில் கலந்து மோர்தானா அணைக்கு செல்கிறது.

    இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீரோடையில் கிடந்த யானையின் உடலை தமிழக- ஆந்திர வனத்துறையினர் அகற்றினர். மேலும், யானை இறப்பு குறித்து இருமாநில வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். tamilnews
    ஆந்திராவுக்கு நிதி அளிக்க மறுப்பு தெரிவிக்கும் மத்திய அரசுக்கு நாம் ஏன் வரி கொடுக்க வேண்டும் என அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.#ChandrababuNaidu
    விஜயவாடா:

    தெலுங்கானா மாநிலம் தனிமாநிலம் ஆனதால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனால் அதை ஏற்க மத்திய அரசு மறுத்து விட்டது.

    இதற்காக பாராளுமன்றத்தில் தெலுங்குதேசம் எம்.பி.க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து சபை நடைபெற முடியாதபடி தினமும் அமளியில் ஈடுபட்டனர். பா.ஜனதா கூட்டணியில் இருந்தும் தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. பா.ஜானதாவை கடுமையாக எதிர்த்து வரும் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் 3 நாள் மாநாடு விஜயவாடாவில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய தெலுங்கு தேசம் தலைவரும், முதல்- மந்திரியுமான சந்திரபாபு நாயுடு மத்திய பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது:-

    ஆந்திராவின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க மறுத்து வருகிறது. தலைநகர் அமராவதியில் இருந்து வருமானவரி, சொத்து வரி, ஜி.எஸ்.டி வரி என மிகப்பெரிய அளவில் வரி வசூலாகி மத்திய அரசுக்கு செல்கிறது.



    ஆனால் மத்திய அரசு புதிய தலைநகரை உருவாக்க போதுமான நிதி வழங்க மறுத்து வருகிறது. ஆந்திராவுக்கு உலக தரத்திலான புதிய தலைநகர் தேவைப்படுகிறது. தெலுங்கானா மாநிலத்துக்கு ஐதராபாத்தில் இருந்து கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

    கர்நாடகத்துக்கு பெங்களூரில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு சென்னையில் இருந்தும் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. ஏன் ஆந்திரா மட்டும் தலைநகரை உருவாக்ககூடாது.

    குஜராத்தில் ‘தேலேரா’ என்ற நகரை ஸ்மார்ட் சிட்டியாக ரூ.95,000 கோடி செலவில் மாற்றி வருகிறது. அதற்கு நிதி தேவைப்படுகிறது. அதனால் அமராவதிக்கு நிதி மறுக்கப்படுகிறது. அவர்கள் மட்டும் தேலேராவை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றலாம். நாம் அமராவதியை உருவாக்க கூடாதா?

    ஆந்திராவை புறக்கணிக்கும் மத்திய அரசுக்கு நாம் ஏன் வரி கொடுக்க வேண்டும். ஆந்திர அரசு தனது நிதியை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் ஒட்டு மொத்தமாக அமராவதி கட்டுமான பணிக்கு ஒதுக்குவதாக எதிர்க்கட்சிகள் குறைகூறுவது தவறு. அமராவதியின் வளர்ச்சி ஒவ்வொருவருக்கும் பயன் அளிக்கும்.

    அமராவதியில் உள்கட்டமைப்புகள் செய்து வருகிறோம். சாலைகள், கழிவு நீர் கால்வாய், மின்சாரம், குடிநீர், குடியிருப்புகள் கட்டப்படுகின்றனர். அமராவதி நகரம் வளர்ச்சி அடைந்தது வருமானம் பெருமளவில் கிடைக்கும். இது மாநிலத்தின் மற்ற வளர்ச்சி பணிகளுக்கு பயன் அளிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.#ChandrababuNaidu
    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என கூறி ராஜினாமா செய்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள், ராஜினாமாவை ஏற்குமாறு சபாநாயகரை வலியுறுத்த உள்ளனர். #AndhraPradesh #specialstatus
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி தெலுங்குதேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசின் மீது அதிருப்தி தெரிவித்தார்.

    மத்திய அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்களை பதவி விலக வைத்தார். அதன்பின் பா.ஜ.க.வுடனான கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியது.

    இதேபோல் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் ராஜினாமா கடித்தத்தை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி மக்களவை சபாநாயகரிடம் அளித்தனர்.

    ஆனால் இதுவரை சபாநாயகர் அவர்களது ராஜினாமாவை ஏற்கவில்லை என்றும், அதற்கான காரணமும் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, கடந்த வாரத்தில் சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து எம்.பி.க்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் நாளை (மே.29) சபாநாயகரை நேரில் சந்திக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதுகுறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவரான மேகபதி ராஜமோகன் ரெட்டி கூறுகையில், ‘நாளை குறித்த நேரத்தில் சபாநாயகரை நேரில் சந்தித்து எங்களது விளக்கத்தை அளித்து ராஜினாமாவை ஏற்கும்படி வலியுறுத்துவோம். இதுவரை ராஜினாமாவை ஏற்காததற்கான காரணம் தெரியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

    ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் மக்களவை சபாநாயகர், எம்.பி.க்களின் ராஜினாமாவை ஏற்று, 5 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வழிவகுப்பாரா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. #AndhraPradesh #specialstatus
    ஆந்திர முன்னாள் முதல் மந்திரி மறைந்த எம்.டி.ராமாராவுக்கு நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருது அளிக்கப்பட வேண்டும் என சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். #NTRamaRao #BharatRatna #ChandrababuNaidu
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தில் ஆளும்கட்சியாக உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு விஜயவாடா நகரின் அருகேயுள்ள கனூரு பகுதியில் அமைந்துள்ள சித்தார்த் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், இன்றைய மாநாட்டில் பேசிய ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான மறைந்த எம்.டி.ராமாராவுக்கு நாட்டின் மிக உயரிய விருதானபாரத ரத்னா அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். #NTRamaRao #BharatRatna #ChandrababuNaidu
    பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரியான பண்டாரு தத்தாத்ரேயா மகன் பண்டாரு வைஷ்ணவ் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். #BJPMP #BandaruDattatreya
    புதுடெல்லி:

    மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் பண்டாரு தத்தாத்ரேயா. பாஜகவை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள முஷிராபாத் பகுதியில் இவரது குடும்பத்தினர் வசித்து வந்தனர். இவரது மகன் வைஷ்ணவ் (21). மருத்துவ படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில், நேற்று இரவு திடீரென வைஷ்ணவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உறவினர்கள் அதே பகுதியில் உள்ள குருநானக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    வைஷ்ணவ் மிகவும் இள வயதிலேயே மரணமடைந்தது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டாரு தத்தாத்ரேயா செகந்திராபாத் தொகுதி எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆந்திராவில் மைனர் பையனுக்கு 23 வயது பெண்ணை பெற்றோர் காதல் திருமணம் செய்து வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    திருமலை:

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவன் 13 வயது சிறுவன். கர்நாடக மாநிலம் சனிக்கனூரை சேர்ந்த அய்யம்மாள்(23) என்பவர் சிறுவனின் உறவினர் ஆவார். இதனால் இருவரும் ஒருவர் வீட்டுக்கு மற்றொருவர் அடிக்கடி சென்று வந்து உள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வயது வித்தியாசம் இல்லாமல் காதல் மலர்ந்தது.

    மைனரான சிறுவனுக்கும், மேஜர் பெண்ணுக்கும் ஏற்பட்ட இந்த காதல் உறவு பெற்றோர்களுக்கு தெரியவந்தது. பெற்றோர்கள் இந்த விநோத காதலுக்கு பச்சைக்கொடி காட்டி சிறுவனுக்கும், அந்த பெண்ணுக்கும் கடந்த மாதம் 27-ந்தேதி உப்பரஹால் கிராமத்தில் திருமணத்தை நடத்தினார்கள்.

    இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் சமீபத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மைனர் பையனுக்கு 23 வயது பெண்ணை பெற்றோர் திருமணம் செய்து வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த திருமணத்தை செய்து வைத்த பெற்றோர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

    இதை அறிந்ததும் மணமக்களும் அவர்களது பெற்றோர்களும் தற்போது போலீசுக்கு பயந்து தலைமறைவாகி விட்டனர்.

    ஆந்திராவில் 13 வயது சிறுவனுக்கும், 23 வயது இளம்பெண்ணுக்கும் பெற்றோர்களே திருமணம் நடத்திவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருமலை, மே.12-

    ஆந்தி£வில் 13 வயது சிறுவனுக்கும், 23 வயது இளம் பெண்ணுக்கும் பெற்றோர்களே திருமணம் நடத்திவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், கவுதாலம் மண்டலத்துக்கு உட்பட்ட உப்பரஹால் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனுக்கும், கர்நாடக மாநிலம் சனிக்கனூரில் வசிக்கும் இந்த சிறுவனின் உறவினர் அய்யம்மாள் (23) என்பவருக்கும் கடந்த மாதம் 27-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு உப்பரஹால் கிராமத்தில் திருமணம் நடந்துள்ளது.

    இவர்கள் 2 பேரும் உறவினர் என்பதால், ஒருவர் வீட்டுக்கு மற்றொருவர் அடிக்கடி சென்று வரும்போது, அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வி‌ஷயம் பெற்றோர் களுக்கு தெரியவரவே, 2 பேருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி வைரலாக பரவியதை தொடர்ந்து, ஆந்திராவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

    ஏனெனில், 13 வயது சிறுவன் 'மைனர்' என்பது தெரிந்தும், அவனை 23 வயது இளம்பெண்ணுக்கு பெற்றோர்களே எப்படி திருமணம் செய்து வைத்தனர் என்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதுபற்றி அறிந்ததும், இளம்பெண் மற்றும் சிறுவன் ஆகியோருடன் 2 பேரின் பெற்றோர்களும் தலைமறைவாகி விட்டனர்.

    இருப்பினும், மைனர் சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. * * * திருமணம் முடிந்ததும் சிறுவனுக்கு முத்தம் கொடுத்த மணப்பெண். ( சமூக வலை தளங்களில் வெளியான படம்.)

    ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணம் செய்த 80 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். #BoatFire #PapiHills
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பாபிகொண்டலு மலைப்பகுதியின் அழகை கண்டுகளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் இன்று படகில் சென்றுகொண்டிருந்தனர். ராயல் கோதாவரி சுற்றுலா நிறுவனத்துக்கு சொந்தமான அந்த படகில் 120 பேர் வரை சென்றதாக தெரிகிறது.

    வீரவரப்பு ரங்கா கிராமத்தின் அருகே கோதாவரி ஆற்றின் நடுப்பகுதியில் படகு சென்றுகொண்டிருந்தபோது, திடீரென படகின் ஒரு பகுதியில் தீப்பிடித்தது. பின்னர் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியதால் கடும் புகை எழுந்தது. பயணிகள் பீதியடைந்து படகின் ஒரு பகுதிக்கு ஓடினர். இதனால் படகு நிலை குலைந்தது. எனினும் படகோட்டி சாமர்த்தியமாக செயல்பட்டு கரைக்கு படகை திருப்பினார்.


    கரையை நெருங்கியபோது ஏராளமான பயணிகள் கீழே குதித்து உயிர் தப்பினர். ஒருசிலரை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.  இதனால் படகில் சென்ற அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், இந்த விபத்துகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.  #BoatFire #PapiHills
    ×