search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதவியேற்பு"

    பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை பிடித்துள்ள தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்கிறார். #ImranKhan #ImranasPakPM
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுன்றத்துக்கு கடந்த 25-ம் தேதி நடந்த தேர்தலில் 116 தொகுதிகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 64 தொகுதிகளிலும், மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    முத்தாஹிதா மஜ்லிஸ் அமல் வேட்பாளர்கள் 12 இடங்களிலும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (காயிதே ஆஸம் பிரிவு), பலூசிஸ்தான் தேசிய கட்சி, பாகிஸ்தான் முத்தாஹிதா குவாமி இயக்கம், பலூசிஸ்தான் அவாமி கட்சி, அவாமி தேசிய கட்சி, அவாமி முஸ்லிம்  லீக், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சானியத் மற்றும் ஜம்ஹூரி வட்டான் ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தலா ஒரு இடங்களில் வென்றுள்ளனர். ஆக உதிரி கட்சிகளிடம் தற்போது 20 எம்.பி.க்கள் உள்ளனர். இதுதவிர 14 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

    பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 137 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், இந்த தேர்தலில் போதிய பெரும்பான்மையை எந்த கட்சியும் பெறவில்லை. அதிக இடங்களை பெற்ற கட்சி என்ற வகையில் கூட்டணி அரசு அமைக்க இம்ரான் கான் கடந்த இருநாட்களாக சில தலைவர்களுடன் மும்முரமாக பேசி வருகிறார்.



    இதற்கிடையில், 5 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட இம்ரான் கான், அவை ஐந்திலுமே வெற்றி பெற்றுள்ளார். இம்ரான் கட்சியின் சார்பில் கைபர் பக்துங்கவா மாகாணத்தின் முதல் மந்திரியாக முன்னர் பொறுப்பேற்றிருந்த பர்வேஸ் கட்டாக் என்பவர் இந்த தேர்தலில் பாராளுமன்றத்துக்கும் கைபர் பக்துங்கவா சட்டசபைக்கும் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி  பெற்றுள்ளார்.

    இதுமட்டுமின்றி, கைபர் பக்துங்கவா மாகாணத்தில் 66 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அங்கு மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. முதல் மந்திரியாக  பர்வேஸ் கட்டாக்-கை மீண்டும் நியமிக்க இம்ரான் கான் தீர்மானித்துள்ளார்.

    பாகிஸ்தான் முஸ்லிம் லீக் வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் உள்துறை மந்திரி நிசார் அலி கான் சவுத்ரியை எதிர்த்து போட்டியிட்ட இம்ரான் கட்சி வேட்பாளரான குலாம் சர்வார் கான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றதுடன் மேலும் ஒரு பாராளுமன்ற தொகுதியிலும் வென்றுள்ளார்.

    எனவே, தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் குலாம் சர்வார் கான் ஒரு தொகுதியில் தனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்ய வேண்டியுள்ளது. இதேபோல், பக்துங்கவா மாகாண முன்னாள் முதல் மந்திரி பர்வேஸ் கட்டாக் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.

    மேலும், 5 தொகுதிகளில் வெற்றிபெற்ற இம்ரான் கான் 4 தொகுதிகளில் ராஜினாமா செய்ய வேண்டியுள்ளது. இதனால், தற்போது 116 ஆக இருக்கும் இம்ரான் கான் கட்சியின் பலமானது, 6 எம்.பி. தொகுதி உறுப்பினர்களின் ராஜினாமாவுக்கு பின்னர் 110 ஆக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே, 27 எம்.பி.க்களின் தயவுடன்தான் இம்ரான் கானின் பிரதமர் நாற்காலி கனவு மெய்ப்பட வேண்டும் என்னும் சூழல் உருவாகியுள்ளது.

    எந்த நிலையிலும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் அல்லது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவை நாட மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள இம்ரான் கான் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சைகளாக போட்டியிட்டு வெற்றிபெற்ற 14 எம்.பி.க்களிடமும் அவர் ஆதரவு கேட்டுள்ளார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் இம்ரான் கான் பிரதமராக பதவி ஏற்று விடுவார் என தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் மேலிட தலைவர் நயீனுல் ஹக் குறிப்பிட்டுள்ளார். #ImranKhan #ImranasPakPM  
    கர்நாடக மாநிலத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக சிறப்பு சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும், புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். #KarnatakaCMRace #KarnatakaFloorTest
    பெங்களூரு:

    கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், அதிக தொதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார்.  அவர் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கவர்னர் உத்தரவிட்டார். ஆனால் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மே 19-ம் தேதி மாலை 4 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.

    இதையடுத்து சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்டும்படி ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டார். அதன்படி தற்காலிக சபாநாயர் போபையா தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சட்டசபை கூடியது.

    சபை கூடியதும், எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் போபையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.



    பா.ஜ.க.வின் குதிரை பேரத்தை தடுப்பதற்காக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் ஐதராபாத்தில் உள்ள சொசுகு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் நேற்று இரவு அங்கிருந்து புறப்பட்டு பெங்களூர் வந்து சேர்ந்தனர். இன்று சட்டசபைக்கு வரும் வரை அவர்கள் சிதறிவிடாமல் ஒருங்கிணைத்து கொண்டு வரும் பணியில் கட்சி தலைவர்கள் தீவிரமாக பணியாற்றினர். #KarnatakaCMRace #KarnatakaFloorTest

    ×