search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100434"

    செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரங்களை தினமும் அல்லது செவ்வாய்க்கிழமை தோறும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
    குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ
    மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
    அங்காரகனே அவதிகள் நீக்கு

    அங்காரக காயத்ரி

    ஓம் வீரத்வஜாய வித்மஹே
    விக்ன ஹஸ்தாய தீமஹி
    தந்நோ பௌம: ப்ரசோதயாத்.

    அங்காரக ஸ்துதி

    தரணீகர்ப்ப ஸம்பூதம் வித்
    யுத்காந்தி ஸமப்ரபம்
    குமாரம்சக்திஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்
    பயந்த சுபாவம் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை தோறும் அல்லது தினமும் இந்த இரு மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்து வர பயம் நீங்கித் தைரியம் பெறுவார்கள்.
    நரசிம்ம மந்திரம்

    தூங்கும் முன் சிறிது தண்ணீர் எடுத்து "ஓம் ஹூம் பட் நரசிம்மாய ஸ்வாஹா"

    என்று 18 தடவை ஜெபித்து அந்த நீரைக் குடித்துப் பின்னர் தூங்க பயங்கரமான கனவுகள் தோன்றாது. பயந்த சுபாவம் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை தோறும் இந்த முறையைச் செய்து வர பயம் நீங்கித் தைரியம் பெறுவார்கள்.

    துர்கா தேவி மந்திரம்

    ஓம் ஹ்ரீம் ஸ்ரீம்
    க்லீம் துக்க ஹந்த்யை
    துர்க்காயை தே நம ஸ்வாஹா ||

    தூங்கும் முன் சிறிது தண்ணீர் எடுத்து மேற்சொன்ன மந்திரத்தை 18 தடவை ஜெபித்து அந்த நீரைக் குடித்துப் பின்னர் தூங்க பயங்கரமான கனவுகள் தோன்றாது.

    பயந்த சுபாவம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் இந்த முறையைச் செய்து வர பயம் நீங்கித் தைரியமும் நல்வாழவும் பெறுவார்கள்.
    எதிரிகளின் தொல்லை, துன்பம், கஷ்டம் வரும் போது வாராகிமாலையில் உள்ள மிருககுண மாரணம் 17 என்ற பாடலை பாடி வாராகி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும்.
    மிருககுண மாரணம் 17:-

    “பாடகச் சீரடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
    ஓடவிட்டே கை உலக்கை கொண்டு உதிரமெல்லாம்
    கோடகதிட்டு வடித்தெடுத்து ஊற்றி குடிக்கும் எங்கள்
    ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள் என் அம்பிகையே…”

    விளக்கம்:- வாராகி என்னும் பஞ்சமியை தொழுத அன்பர்கள் பகைவரை ஓடவிட்டு தன் கையில் இருக்கும் உலக்கை கொண்டு அடித்து உதிரத்தை குடித்தும் தன் நெஞ்சில் பூசியும் தன் ஆவேசத்தை தீர்த்து கொள்பவள் இந்த வாராகி.

    பயன்பாடு:- பகைவர் வேண்டும் என்றே துன்புறுத்தும் போது அன்னையை இப்பாடலை பாடி வணங்கலாம்.
    இத்துதியை நோயுற்றவர்களோ அல்லது அவர்கள் சார்பில் யாராவது ஒருவர் 1008 முறை விபூதியில் ஜபம் செய்து அதை தினமும் பூசிக்கொண்டால் நோய்கள் படிப்படியாக விலகும்.
    அம்ருத கலச ஹஸ்தம் காந்தி ஸம்பூர்ணதேஹம்
    ஸகல விபுதவந்த்யம் வேத சாஸ்த்ரைரசிந்த்யம்
    விவித ஸுலப பக்ஷை: தூய மானாண்ட கோநம்
    ஸகல விஷவிநாஸனம் சிந்தயேத் பக்ஷிராஜம்.
    க்ஷிப ஓம் ஸ்வாஹா:

    பொதுப் பொருள்:

    அம்ருத கலசத்தை கையில் ஏந்தியவர். தேக காந்தி மிக்கவர். அனைத்து தேவதேவியர்களாலும் வணங்கப்படுபவர். இவருடைய பெருமையை யாராலும் விவரிக்க இயலாது. இவரது இறக்கை காற்று அண்டங்களை எல்லாம் நடுங்கச்செய்யும். இவரை உபாசித்தால் பாம்பு விஷம் நீங்கும். சகல விஷ வியாதிகளும் விலகும். பக்ஷிராஜரான கருடபகவானை நான் சிந்தையில் நிறுத்தி ஆராதிக்கிறேன்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை கர்மசிரத்தையுடன் சொல்லச் சொல்ல... நம் வாழ்வில் தொலைந்த பொருளை மீட்டெடுக்கலாம். இழந்த வாழ்க்கையைக்கூட திரும்பப் பெற்று வாழலாம்.
    இழப்புகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், தாங்கிக்கொள்ள இயலாதவை! இழந்த பதவியைப் பெறுவதற்காக அப்பேர்ப்பட்ட பிரம்மதேவரே கடும் தவம் புரிந்து, வரம் பெற்றார். நாம் இழந்ததைப் பெறுவதற்கும் தொலைத்ததை மீட்டெடுப்பதற்கும் ஒரு ஸ்லோகம் இருக்கிறது.

    இந்த ஸ்லோகத்தை கர்மசிரத்தையுடன் சொல்லச் சொல்ல... நம் வாழ்வில் தொலைந்த பொருளை மீட்டெடுக்கலாம். இழந்த வாழ்க்கையைக்கூட திரும்பப் பெற்று வாழலாம்.

    அந்த ஸ்லோகம் இதுதான்!  

    ஸ்ரீகார்த்தவீர்யாஜுன மந்திரம்

    அபூர்வ ராஜ்ய ஸம்ப்ராப்திம்  நஷ்டஸ்ய புனராகமம்,
    லபதே நாத்ர ஸந்தேஹ ஸத்யேமேதந் மயோதிதம்
    ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ  நாம:
    ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந் ||.
    யஸ்ய ஸ்மரந மாத்ரேன நஷ்டம் த்ரவ்யம் ச லப்யதே
    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் ஜபித்து வந்தால் சனி, ராகு தோஷம் விலகும். சத்ரு பயம், ரோகம், மனக்கவலை நீங்கும்.
    ஸாஸ்தாரம் ஜகதாம் ப்ரபன்னஜனதா
    ஸம்ரக்ஷனே தீக்ஷிதம்
    த்ராதாரம் ஸகலாத்பயாத்
    ஹரிஹரப்ரேமா ஸ்பதம் ஸாஸ்வதம்!
    கந்தாரம் நிஸிரக்ஷணாய
    கரிராட்வாஹம் த்ருதம் க்ஷேமதம்
    ப்ரத்யக்ஷம் து கலென
    த்ரியம்பசுபுரா தீஸம் பஜே பூதயே!!

    பொதுப் பொருள்:

    உங்களைக் காப்பவரும், தன்னை நமஸ்கரித்த ஜன சமூகத்தை ரக்ஷிப்பதில் தீக்ஷை கொண்டவரும், எல்லா பயத்திலிருந்தும் காப்பவரும், விஷ்ணு, சிவன் இரண்டு பேர்களுடைய அன்புக்கும், பாத்ரமானவரும், அழிவற்றவரும், இரவில் பக்தர்களைக் காப்பதற்காகக் கூடச் செல்பவரும், யானையின் மேல் அமர்ந்தவரும், சீக்ரம் ஷேமத்தைக் கொடுப்பவரும், கலியில் ப்ரத்யஷமானவரும், த்ரியம்பகபுரம் என்கிற (எருமத்தலை ஷேத்திரத்திற்கு ஈசுவரனுமான) ஸ்ரீ  மஹா சாஸ்தாவை (ஸ்ரீ  ஐயனாரை) பூஜிக்கிறேன்.
    பரசுராமரின் இந்த மந்திரத்தை துதிப்பவர்கள் சொந்த வீடு, நிலம், சொத்துகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பல தீமைகளில் இருந்து காக்கப்படுவார்கள்.
    ஒவ்வொருவருக்கும் வசிப்பதற்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதே பேராசை என்று கூறும் அளவிற்கு இக்காலத்தில் உலகத்தின் நிலைமை இருக்கிறது. அதிலும் பலரும் தங்களுக்கென்று சொத்தாக இருக்கிறது. நிலத்தையும் பெற்றிருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்த நிலம் சம்பந்தமான சொத்துகளில் உறவினர்கள், எதிரிகள் என அனைவரும் பாக சண்டைக்கு வருகின்றனர். இப்படிப்பட்ட பிரச்சனைகளால் தவிப்பவர்கள் துதிக்க வேண்டிய “ஸ்ரீ பரசுராமர் மந்திரம்” இதோ.

    பரசுராமர் மந்திரம் ஓம் ராம் ராம்
    ஓம் ராம் ராம் ஓம் பரசு ஹஸ்தாய நமஹ

    விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஸ்ரீ பரசுராமர். ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் புதல்வராக அவதரித்தவர். சிவன் மீது தீவிர தவமியற்றி, அந்த சிவபெருமானிடமிருந்தே ஆற்றல் வாய்ந்த தவமியற்றி, மழு எனப்படும் கோடரி ஆயுதத்தை பெற்றவர். தாயை கொள் என்று தந்தை கூறியதும். தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தனது தாயின் தலையை கொய்தார். பின்பு தனது தந்தையிடம் தாய் ரேணுகா தேவியை உயிர்பிக்குமாறு கூறி தனது தாயை உயிர்ப்பிக்க செய்தார். பரசுராமரின் இந்த மந்திரம் துதிப்பவர்கள் பல தீமைகளில் இருந்து காக்கப்படுவார்கள்.
    ஷீரடி சாய்பாபாவின் பரிபூரண அருளை பெற விரும்புவோர் அவரை வணங்கும் சமயத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை ஜபிப்பது மிகவும் சிறந்தது.
    இந்துக்களால், கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாக போற்றப்படும் சாய் பாபா, தான் இந்த பூவுலகில் வாழ்ந்த சமயத்தில் பற்பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டி தன்னுடைய திவ்ய சக்தியை மக்களுக்கு நிகழ்த்திக்காட்டி பல அதிசய நிகழ்வுகளை நாம் படித்திருப்போம். அதே போல அவர் இந்த பூவுலகை விட்டு பிரிந்து சென்ற பிறகும் தன் பக்தர்களை கண் இமைபோல காத்து வருகிறார். சாய் பாபாவின் பரிபூரண அருளை பெற விரும்புவோர் அவரை வணங்கும் சமயத்தில் கீழே உள்ள மந்திரம் அதை ஜபிப்பது சிறந்தது.

    “ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி”

    இந்த ஒரு வரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் பயனாக சாய் பாபவின் முறை அருளை பெறலாம். சாய் பாபா மூல மந்திரம் அதை தினம் தோறும் ஜபிக்க இயலாதவர்கள் வியாழக்கிழமைகளில் ஜபிப்பது சிறந்தது.
    ஒரு வளர்பிறை செவ்வாய்கிழமையன்று, அனுமன் சன்னதியிலோ அல்லது அரச மரத்தடியிலோ அமர்ந்து இந்த மந்திரத்தை செபிக்க உங்களுக்குள்ள பணப்பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறையும்.
    ஒரு வளர்பிறை செவ்வாய்கிழமையன்று, அனுமன் சன்னதியிலோ அல்லது அரச மரத்தடியிலோ அமர்ந்து இந்த மந்திரத்தை 48 உரு அல்லது 108 உரு மன ஒருநிலையுடன் செபிக்க உங்களுக்குள்ள பணப்பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறையும். அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க மிக நல்ல பலன்கள் கிட்டும்.

    மந்திரம்:

    "ஓம் ஹ்ரீம் உத்தரமுஹே
    ஆதி வராஹாய பஞ்சமுஹி
    ஹனுமதே லம்லம் லம்லம்
    ஸகல ஸம்பத்கராய ஸ்வாஹா"
    செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சக்தி தேவிக்கு உகந்த இந்த மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் துன்பம் நீங்கும். வறுமை ஒழியும்.
    அந்தரி சுந்தரி அதிபயங்கரி சக்தி
    மந்தாகினி வாலைக்குமரி மஹாசக்தி
    நிரந்தரி நீலி கால பைரவி
    திரிசூலி தேவி மஹிஷாசுர மர்த்தினி
    சரணம் சரணம் சரணம் தேவி
    எனைக் காத்தருள்வாய மஹாசக்தி

    இம்மந்திரம் ஐந்து முறை படிக்க வேண்டும்! அதன் பின்னரே கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தைப் படிக்க வேண்டும்!

    காரணமும் தனுவு  நினைக்கெனத் தந்தேன்
    காளி நீ காத்தருள் செய்யே!

    மரணமும் அஞ்சேன் நோய்களை அஞ்சேன்;
    மாரவெம் பேசயினை அஞ்சேன்;
    இரணமும் சுகமும் பழியு நற்புகழும்
    யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்!

    சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்!
    தாயெனைக் காத்தருள் கடனே!

    தவத்தினை எளிதாப் புரிந்தனள்; யோகத்
    தனி நிலை ஒளியெனப் புரிந்தாள்;

    சிவத்தினை எளிதாப் புரிந்தனள்; மூட்ச்
    சித்தமும் தெளிவுறச் செய்தாள்;

    பவத்தினை வெறுப்ப அருளினாள்; நாளும்
    பான்மைகொ ளவள்மயம் புரிந்தாள்;

    அவத்தினைக் களைந்தாள்; அறிவென விளைந்தாள்;
    அருந்தவமா வாழ்கவிங் கவளே!

    ஓம்  ஓம்  ஓம்!
    காயத்ரி தேவிக்கான மந்திரங்கள், மந்திரங்களிலேயே அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த மந்திரங்கள் அனைத்து பலன்களையும் தருவதாக அமைந்துள்ளது.
    சூரிய தேவனை புகழ்ந்து பாடும் பெண் தெய்வமாய்; பிரம்ம தேவனின் மனைவி மற்றும் நான்கு வேதங்களின் தாயாக விளங்குகிறாள், இந்த காயத்ரி தேவி. அவள் தாமரை மீது அமர்ந்தவாறு ஐந்து தலைகள், பத்து கரங்கள் கொண்டவளாக சித்தரிக்கப்பட்டிருக்கிறாள்.

    அவளது கைகளில் நிறைய ஆயுதங்கள் உள்ளன. அவற்றுள் கோடாரி, சவுக்கை, தண்டாயுதம் போன்றவையும் இருக்கிறது. இந்த காயத்ரி தேவிக்கான மந்திரங்கள், மந்திரங்களிலேயே அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. காயத்ரி மந்திரங்களை விசுவாமித்திர முனிவர் உருவாக்கினார்.

    இந்த மந்திரங்கள் அனைத்து பலன்களையும் தருவதாக அமைந்துள்ளது.
    ×