search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரிஷா"

    சினிமாவுலகில் 15 வருடங்களை கடந்து முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, தனிமையை அதிகமாக விரும்புவதாக கூறியிருக்கிறார். #Trisha #TrishaKrishnan
    திரிஷா சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போதும் அரை டஜன் படங்கள் கைவசம் வைத்து ‘பிசி’யாக நடித்து வருகிறார். மூன்று படங்கள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. அதில் மோகினி என்ற பேய் படமும் அடக்கம். இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.

    பழகும் நண்பர்கள், மன அழுத்தம் தீர்க்கும் வழிமுறைகள் போன்றவை குறித்து திரிஷா அளித்த பேட்டி வருமாறு:-

    “வாழ்க்கையில் தினமும் நிறைய பேரை சந்திக்கிறோம். என் எதிரில் வரும் பலர் கையை தூக்கி ‘ஹாய்’ சொல்லி விட்டு செல்கிறார்கள். அவர்களில் சிலருடன் பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அதில் கொஞ்சம் பேர் நண்பர்களாக மாறி விடுவார்கள். எப்படிப்பட்ட நண்பர்களாக இருந்தாலும் சொந்த விஷயங்கள் எல்லாவற்றையும் அவர்களுடன் பகிர்ந்து விட முடியாது.

    அதனால் தினமும் ஒரு தடவையாவது நமக்கு நாமே ‘ஹலோ’ சொல்லிக் கொள்ள வேண்டும். நமக்கு நாம்தான் நண்பன். ஒவ்வொருவரும் தங்களை ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எனக்கு மன அழுத்தம் ஏற்படும்போது தனிமையைத்தான் விரும்புவேன். தனக்குத்தானே ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.



    மனஅழுத்தம் வரும்போது தனிமையில் இருந்து எதற்காக பிரச்சினை வந்தது என்று எனக்குள்ளேயே கேட்டு என்னை பரிசோதனை செய்து கொள்வேன். நல்ல குடும்பம், நண்பர்கள் இருக்கலாம். ஆனால் எனக்கு நானேதான் துணை.”

    இவ்வாறு திரிஷா கூறினார். 
    நடிகை திரிஷா போலி கணக்கு காட்டியதாக வருமானத்துறை விதித்த அபராதத்தை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. #Trisha #Trishkrishnan
    நடிகை திரிஷா கடந்த 2010-11-ம் நிதி ஆண்டில் ரூ.89 லட்சம் வருமானம் ஈட்டியதாக வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டியிருந்தார். ஆனால் திரிஷா காண்பித்த வருமான கணக்கை வருமான வரித் துறை ஏற்க மறுத்துவிட்டது. அவர் கூடுதலாக ரூ.3.52 கோடி வருமானத்தை ஈட்டியதாக வருமானவரித்துறை ஆய்வில் தெரியவந்தது. தவறான கணக்கு காண்பித்து ஏமாற்றியதாக திரிஷாவுக்கு ரூ.1.16 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை உத்தர விட்டது.

    இதனை எதிர்த்து நடிகை திரிஷா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

    இந்த விசாரணையில் திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.



    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. திரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை முழுமையாக ரத்து செய்யப்பட்டு தீர்ப்பாயம் கொடுத்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. திரிஷா 3.52 கோடி ரூபாய் வருமானத்துக்கு கணக்கு காட்டி இருப்பதாகவும் உத்தரவில் குறிப்பிடத்தக்கது.
    காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்தில் நடிக்க முன்னணி நடிகைகள் போட்டி போட்டு வருகிறார்கள். #Rajini
    ‘காலா’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக ரஜினியின் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் அனிருத். படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதி ஆகி இருக்கிறது. மேலும் சிலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. 

    ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் நடிக்கின்றனர். இதில் சனந்த் ரெட்டியின் ஜோடியாக ‘எனை நோக்கி பாயும்’ தோட்டாவில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள மேகா ஆகாஷ் நடிக்கிறார். ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். 

    ரஜினியின் ‘காலா’வை தொடர்ந்து புதிய படப்பிடிப்பு கடந்த 7-ந் தேதி தான் தொடங்கியது. டேராடூன் மற்றும் டார்ஜிலிங் என இரண்டு இடங்களிலும் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. இடைவெளி இல்லாமல் தொடர்ந்து 40 நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. அடுத்த கட்டமாக மதுரையில் சில காட்சிகளை படம் பிடிக்க உள்ளனர். 



    படத்தில் ரஜினி, விஜய்சேதுபதி இருவருக்கும் ஜோடி கிடையாது என்றும் பிளாஷ்பேக் காட்சிகளில் நடிக்க சிம்ரன், திரிஷா, அஞ்சலி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வந்துள்ளது.
    சி.பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகும் 96 படத்தில் விஜய் சேதுபதி - திரிஷா இணைந்து நடித்திருக்கும் நிலையில், த்ரிஷாவின் வெற்றியின் ரகசியம் குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ளார். #96TheMovie #VijaySethupathi
    மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் ‘96’.

    `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி - த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

    காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், விஜய் சேதுபதி 16, 36, 96 வயதுள்ள 3 கெட்-அப்களில் நடிக்கிறார். கோவிந்த் மேனன் இசையமைக்கும் இந்த படத்திற்கு சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். 



    இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், திரிஷாவுடன் பணிபுரிந்தது பற்றி விஜய் சேதுபதி கூறும்போது, 

    ‘திரிஷா நடிப்பை மிகவும் நேசிக்கிறார். எந்த காட்சியாக இருந்தாலும் அதை உணர்ந்து நடிப்பவர். அவரிடம் இருந்து நிறைய வி‌ஷயங்களை கற்றுக்கொண்டேன். ஒருநாள் கூட படப்பிடிப்புக்கு தாமதமாக வந்தது இல்லை. முதல் ஆளாக ஒப்பனையுடன் கேமரா முன்பு நிற்பார். இந்த தொழில் பக்தி தான் அவரை 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வைத்து இருக்கிறது’ என்று பாராட்டி உள்ளார். #96TheMovie #VijaySethupathi #Trisha

    தமிழில் முன்னணி நடிகைகளாக வரும் திரிஷா மற்றும் நயன்தாரா இருவரும் கீர்த்தி சுரேஷை வருத்தமடைய வைத்திருக்கிறார்கள். #KeerthySuresh #Trisha #Nayanthara
    அறிமுகமான சில ஆண்டுகளிலேயே மிக வேகமாக வளர்ந்து முன்னணி நடிகையானவர் கீர்த்தி சுரேஷ். விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என்று முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியானார். யாருமே எதிர்பார்க்காத வாறு சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரியாக நடிக்க ஒப்பந்தமானார்.

    இதை கேள்விப்பட்டவர்கள் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேசா என்று கிண்டல் அடித்தார்கள். ஆனால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மிக சிறப்பாக நடித்து அசத்தினார். தென் இந்திய சினிமா மட்டும் அல்லாமல் நாடு முழுவதிலும் இருந்து கீர்த்தியின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்து வருகிறது.

    ஆனால் தென் இந்தியாவின் முக்கிய நடிகைகளான நயன்தாராவும் திரிஷாவும் ஒரு வார்த்தை கூட கீர்த்தி நடிப்பு பற்றி பேசவில்லை. பகிரவும் இல்லை. நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தபோது கீர்த்தி மீது நயன்தாரா அதிருப்தியில் இருப்பதாக செய்தி வந்தது.



    அதேபோல் சாமி 2 படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டதால் தான் திரிஷா நடிக்காமல் பின்வாங்கினார் என்றும் செய்திகள் வந்தன. இந்த 2 செய்திகளும் உண்மை என எண்ணும்படி அமைந்துள்ளது திரிஷா, நயன்தாராவின் அலட்சியம்.
    ×