search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரிஷா"

    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் நேற்று வெளியாகிய நிலையில், அந்த புகைப்படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. #Petta #Rajinikanth
    ‘காலா’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ‘பேட்ட’.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், திரிஷா நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் ரஜினியுடன் நடிக்கும் முதல் படம் இது. இவர்களுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

    நடிகர் சசிகுமார் இந்தப் படத்தில் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தமாகி படப்பிடிப்பில் பங்கேற்றார். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சிகளில் சசிகுமார் பங்களிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ‘பேட்ட’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், செகண்ட் லுக் போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் முறுக்கு மீசையுடன் ரஜினி, வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக கிராமத்து தோற்றத்தில் இருக்கிறார்.

    ரஜினியின் பிளாஷ்பேக் பகுதிகள் மதுரையில் நடப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த தோற்றம் தான் இது என்கிறார்கள். இந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ரஜினி சமீபகாலமாக இளமையாக நடிப்பதை தவிர்த்து தனது வயதுக்கேற்ற தோற்றங்களில் நடித்து வந்தார். 2014-ம் ஆண்டு வெளியான லிங்கா படத்தில் இளமையான தோற்றத்தில் நடித்தார். அந்த படம் சரியாக போகவில்லை. அதன் பின்னர் நடித்த கபாலி, காலா படங்களில் வயதான தோற்றத்தில் நடித்தார்.
    ‘பேட்ட’ படத்தின் இந்த போஸ்டரில் இளமையாகவும், ஸ்டைலிஷாகவும் காணப்படுகிறார். ரஜினியின் 1980-90 காலகட்ட தோற்றத்தை இது நினைவுபடுத்துவதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

    ரஜினியின் இந்த தோற்றம் ஒரு பக்கம் வரவேற்பை பெற்றாலும், இன்னொரு பக்கம் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. வேட்டி சட்டை தோற்றம் தேவர் மகன், வீரம் உள்ளிட்ட சில படங்களை நினைவுபடுத்துவதாகவும், மீசை சிங்கம் படத்தில் வரும் சூர்யாவை நினைவுபடுத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    ரஜினியின் பின்புறம் சூரியன் இருப்பது போல் அமைந்துள்ளதால் அரசியல் ரீதியாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. #Petta #Rajinikanth

    சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `96' படத்தின் விமர்சனம். #96TheMovieReview #VijaySethupathi #Trisha
    எத்தனை முறை சொன்னாலும் திகட்டாதது காதல். அந்த காதலை ஒரு முழு படமாக எடுத்து நம்மை பரவசப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார். இயக்குனராக முதல் படம் போல தெரியவில்லை.

    விஜய் சேதுபதி (ராம்) ஒரு டிராவல் போட்டோகிராபர். அழகாக செல்லும் அவர் வாழ்க்கையில், ஒருநாள் எதிர்பாராதவிதமாக தான் 10-ஆம் வகுப்பு வரை படித்த பள்ளிக்கு செல்கிறார். பள்ளிகால நண்பர்களுடன் பேசுகிறார். மீண்டும் சந்திக்க திட்டம் போடுகின்றனர். 96 ரீயூனியன் இணைகிறது. அங்கே விஜய் சேதுபதி பள்ளிகாலத்தில் காதலித்து சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்த திரிஷாவும் (ஜானு) வருகிறார்.



    அந்த ஒரு நாள் இரவு விஜய் சேதுபதி - திரிஷா வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றம் என்ன? இருவரும் தங்களது காதலை எவ்வாறு நினைவுகூர்ந்தார்கள்? என ஒட்டுமொத்த படமும் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம் என்ன? என்பது தான் படத்தின் கதை.

    விஜய் சேதுபதி ஒரு இடத்தில் கூட விஜய்சேதுபதியாக தெரியவில்லை. கூச்சம், வெட்கம், நளினம் ஆங்காங்கே தனது பாணி நக்கல் வசனங்கள் என்று படத்தை சுவாரசியமாக நகர்த்துகிறார். போலீசாகவும், தாதாவாகவும் பார்த்த விஜய்சேதுபதியா இது? என தோன்ற வைக்கிறது.



    திரிஷா அறிமுகமான முதல் படத்தில் பார்த்தது போலவே இருக்கிறார். தன்னை பார்க்க வந்த ராமை தவறவிட்டதை நினைத்து, அவர் அழும் அந்த ஒரு காட்சி போதும். தமிழ் சினிமாவில் காதலிக்கவும், காதலிக்க வைக்கவும் திரிஷாவுக்கு நிகர் அவரே.

    தற்போதைய ராம், ஜானுவுக்கு போட்டியாக நடித்திருக்கிறார்கள், ஆதித்யா பாஸ்கரும், கவுரி கி‌ஷனும். சிறுவயது தேவதர்ஷினியாக நடித்திருப்பவரும் சரியான தேர்வு தான். 

    நாத்தனாரே என்று திரிஷாவை கிண்டலடிக்கும் போதும், விஜய் சேதுபதியும், திரிஷாவும் எல்லை மீறிவிடுவார்களோ என்று பயப்படும்போதும் தேவதர்ஷினி பின்னி எடுக்கிறார். பகவதி பெருமாள், ஜனகராஜ், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் ரசிக்க வைக்கிறார்கள்.



    விஜய்சேதுபதி போட்டோ எடுக்கும் அழகான காட்சியமைப்புடன் படம் தொடங்குகிறது. அவர் பள்ளிக்குள் நுழைந்து பள்ளிகால வாழ்க்கைக்குள் நுழையும்போது நாமும் நமது பள்ளிகால வாழ்க்கைக்குள் நுழைகிறோம். நீண்டகாலம் கழித்து கை பிடித்து இளவயது நினைவுகளுக்கு கூட்டி சென்றிருக்கும் பிரேமுக்கு நன்றிகள்.

    ஒரு சின்ன தவறுதலில் காதல் மீண்டும் கைகூடாமல் போவதும், தன்னை வெறுத்த காதலியின் பின்னாலேயே அவருக்கு தெரியாமல் ஒளிந்துகொண்டு தொடர்வதும் எல்லோருடைய வாழ்க்கையிலும் நடந்திருக்க கூடிய தருணங்கள். படத்தின் ஒவ்வொரு காட்சியும் நமது வாழ்க்கையுடன் இணைக்கிறது. அதுதான் படத்தின் வெற்றி.



    படம் முடியும்போது அனைவரும் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள். அந்த கைதட்டலில் ஒவ்வொருவரின் கைகூடாத பள்ளிப்பருவ காதல் ஒளிந்திருக்கிறது.

    படத்தில் காதலை கூட்டுவது மகேந்திரன், சண்முகசுந்தரம் இருவரின் ஒளிப்பதிவுதான். ஒலிப்பதிவும் அதற்கு துணை நிற்கிறது. கோவிந்தின் இசை காதலை இசையால் சொல்கிறது. இசையால் காதலை கண்முன் நிறுத்தியிருக்கிறார். கோவிந்தராஜின் படத்தொகுப்பு கச்சிதம்.

    மொத்தத்தில் `96' காவியம். #96TheMovieReview #VijaySethupathi #Trisha

    ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தில் நடிகர் சசிகுமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். #Petta #Rajinikanth
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. டார்ஜிலிங், டேராடூன், சென்னை, லக்னோவுக்கு பிறகு வாரணாசியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    ரஜினி, விஜய்சேதுபதி இணைந்து மிரட்டும் சண்டைக்காட்சிகள் லக்னோவில் படமாக்கப்பட்டன. அடுத்து இருவருக்கும் சில காட்சிகள் வாரணாசியில் படமாக்கப்பட்டு முடிந்துவிட்டது.

    இப்போது ரஜினி, திரிஷா நடிக்கும் சுவாரசியமான காதல் காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சிகளைப் படமாக்குவதை ரகசியமாக வைத்துள்ளார்கள்.



    ரஜினியோடு ஒரு ஹீரோ பாபிசிம்ஹா, இன்னொரு ஹீரோ விஜய்சேதுபதி நடிப்பது அனைவருக்கும் தெரிந்த வி‌ஷயம். இதில், தற்போது இன்னொரு ஹீரோவும் நடிக்கிறார்.

    இதைப் படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. நடிகர் சசிகுமார் தான் தற்போது ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சியில் அவருக்கு நண்பராகவும், திரிஷாவுக்கு அண்ணனாகவும் சசிகுமார் நடிக்கிறார். இந்த தகவலை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. #Petta #Rajinikanth #Sasikumar

    சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `96' படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகவிருக்கும் நிலையில், படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. #96TheMovie #VijaySethupathi #Trisha
    மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `96'. விஜய் சேதுபதி - திரிஷா காதலர்களாக நடித்திருக்கும் இந்த படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகிறது. 

    பொதுவாகவே முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். அந்த வகையில் 96 படத்திற்கும் அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் படத்தின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. காலை காட்சிகள் ரத்தானதால் திரையரங்கில் கூடிய ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அடுத்தடுத்த காட்சிகள் தடைபடாதவாறு தயாரிப்பாளர் தரப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 



    சி.பிரேம்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஜனகராஜ், வர்ஷா பொலம்மா, தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், கவிதாலயா கிருஷ்ணன், பகவதி பெருமாள், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    கோவிந்த் மேனன் இசையில் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #96TheMovie #VijaySethupathi #Trisha

    சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `96' படத்தின் முன்னோட்டம். #96TheMovie #VijaySethupathi #Trisha
    மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `96'. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். ஜனகராஜ், வர்ஷா பொலம்மா, தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், கவிதாலயா கிருஷ்ணன், பகவதி பெருமாள், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - மகேந்திரன் ஜெயராஜூ, சண்முகசுந்தரம், இசை - கோவிந்த் மேனன், படத்தொகுப்பு - ஆர்.கோவிந்தராஜ், கலை - வினோத் ராஜ்குமார், பாடல்கள் - கார்த்திக் நேதா, உமாதேவி, கார்த்திக் நேத்தா. தயாரிப்பு - எஸ்.நந்தகோபால், எழுத்து, இயக்கம் - சி.பிரேம்குமார்.

    இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படம் பற்றி பிரேம்குமார் கூறும் போது, 



    படத்தின் அனைத்துகட்ட பணிகளும் முடிந்துவிட்டது. விஜய்சேதுபதி இந்த படத்தில் புகைப்பட கலைஞராக நடித்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட ஒரு காதல் கதையாக உருவாக்கி இருக்கிறோம். விஜய்சேதுபதி இதுவரை நடித்த படங்களை விட இந்த படம் அவரது ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு அனுபவத்தை தரும். படத்தின் பாடல்களும், டிரைலரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, எங்களுக்கு கிடைத்த வெற்றிதான். படமும் நிச்சயம் வெற்றி அடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றார். 

    7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித்குமார் உலகம் முழுவதும் இந்த படத்தை வெளியிடுகிறார். படம் வருகிற அக்டோபர் 4-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #96TheMovie #VijaySethupathi #Trisha

    விஜய் சேதுபதி ஜோடியாக திரிஷா நடித்துள்ள 96 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், பேசிய திரிஷா, பேட்ட படத்தில் ரஜினிக்கு போட்டியாக தனது தோற்றத்தை இளமையாக்கி கொண்டதாக திரிஷா கூறினார். #Trisha #96TheMovie
    திரிஷாவும், விஜய் சேதுபதியும் முதல் முறையாக, ‘96’ என்ற படத்தில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை பிரேம்குமார் இயக்கி இருக்கிறார். நந்தகோபால் தயாரித்துள்ளார். படக்குழுவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, நடந்தது.

    அதில் விஜய் சேதுபதி, திரிஷா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு திரிஷா அளித்த பதில் வருமாறு:-

    கேள்வி:- விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்து இருக்கிறீர்கள். அவருடைய படங்களை பார்த்து இருக்கிறீர்களா?

    பதில்:- ‘விக்ரம் வேதா’ படத்தை இரண்டு முறை பார்த்து இருக்கிறேன்.

    கேள்வி:- சொந்த வாழ்க்கையில் காதல் அனுபவம் இருக்கிறதா?

    பதில்:- இதுவரை எனக்கு காதல் அனுபவம் ஏற்படவில்லை. என்றாலும், எனக்கு காதல் படங்கள் ரொம்ப பிடிக்கும்.

    கேள்வி:- ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

    பதில்:- சந்தோஷமாக இருந்தது. அவர் படத்துக்கு படம் இளைஞர் ஆகிக்கொண்டே போகிறார். அவருக்கு போட்டியாக நானும் என் தோற்றத்தை இளமையாக்கி கொண்டேன். முன்பை விட, என் உடல் எடையை குறைத்து இருக்கிறேன்.

    கேள்வி:- அவருடன் நடித்தபோது உங்களுக்கு ‘ஜூனியர்-சீனியர்’ என்ற வித்தியாசம் தெரியவில்லையா?

    பதில்:- எனக்கும் சரி, அவருக்கும் சரி, ஜூனியர்-சீனியர் என்ற வித்தியாசம் தெரியவில்லை. இருவரும் கதாபாத்திரங்களாக இருந்தோம். நடிப்பில், அவருடன் போட்டி போட முடியாது. ஒரே டேக்கில் நடித்து விட்டு போய் விடுகிறார். அவருக்கு சமமாக நடிப்பது, சிரமமாக இருந்தது.



    கேள்வி:- ரஜினிகாந்துடன் நடிப்பதை ஒரு லட்சியமாக வைத்து இருந்தீர்கள். அந்த ஆசையும் நிறைவேறி விட்டது. அடுத்து...?

    பதில்:- இன்னொரு ரவுண்டு போகலாம் என்று நினைக்கிறேன்.

    கேள்வி:- சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?

    பதில்:- நல்ல தீர்ப்பு. பெண்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை. சந்தோஷமாக இருக்கிறது.

    கேள்வி:- அரசியலுக்கு வரும் ஆசை இருக்கிறதா?

    பதில்:- அரசியலில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

    கேள்வி:- யாருடைய வேடத்தில் நடிக்க ஆசை?

    பதில்:- ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஆசை. ஆனால், அவருடைய வேடத்தில் வேறு யாரோ நடிக்கப்போவதாக கேள்விப்பட்டேன்.”

    இவ்வாறு திரிஷா பதில் அளித்தார். #Trisha #96TheMovie

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு நடிகர் விஜய் சேதுபதி ஆதரவு கொடுத்துள்ளார். #VijaySethupathi
    சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ளன.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நடிகை திரிஷா, நடிகர் விஜய் சேதுபதி வரவேற்றுள்ளனர். இருவரும் நடித்துள்ள ‘96’ படத்தின் நிகழ்ச்சியில் திரிஷா கூறும்போது,

    ‘‘சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நல்ல தீர்ப்பு. பெண்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை. இவ்விவகாரத்தில் ஆழ்ந்த கருத்தை கூற இன்னும் அது பற்றி முழுமையாக அறிய வில்லை. ஆனாலும் யாரையும் தடுக்க கூடாது’’ என்றார்.



    விஜய்சேதுபதி கூறும் போது, ‘‘ சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறேன். பெண்கள் புனிதமானவர்கள். என் வாழ்க்கையில் அம்மா, மனைவி, மகள், தங்கை என பாசமுள்ள பெண்கள் இருக்கிறார்கள்’’ என்றார்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த், மிசா கைதியாக நடிப்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Petta #Rajinikanth
    நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். ரஜினியுடன் விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார்.

    ரஜினிகாந்த் தாதா வேடத்தில் நடிக்கிறார் என்றும் அவருக்கு அதிரடியான சண்டைக் காட்சிகள் உள்ளதாகவும் செய்திகள் உலா வருகின்றன. படப்பிடிப்பு டார்ஜிலிங் பகுதிகளில் தொடங்கியபோது ரஜினியின் சில படங்கள் வெளியாகின.

    அந்த படங்களில் ரஜினியின் கையில் ஒரு செம்பு காப்பு இருந்தது. கையில் ஏதோ எழுத்துகள் பச்சை குத்தப்பட்டு இருந்தன. இன்று காலை வெளியாகி இருக்கும் படங்களில் அந்த பச்சையில் மிசா 109 என்று எழுதப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    ஜிகர்தண்டா, அறம் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்த ராமச்சந்திரன் துரை ராஜ் ‘பேட்ட’ படத்தில் ஒரு வேடத்தில் நடிக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட படம் தான் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.



    ரஜினி கையில் மிசா 109 என்று எழுதி இருப்பதால் மிசா கைதியாக நடிக்கலாம் என பேசப்படுகிறது.

    1975-ம் ஆண்டு இந்திராகாந்தி ஆட்சியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது கொண்டு வந்த மிசா சட்டத்தின் கீழ் அரசியல் கட்சியினர் முதல் ரவுடிகள் வரை பலர் கைது செய்யப்பட்டனர்.

    1975 காலகட்டத்தில் ரஜினியும் அப்படி கைதானவராக காட்டப்படுகிறாரா? என்ற யூகங்கள் பரவுகின்றன. இது போட்டோ ஷாப்பாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். #Petta #Rajinikanth #Misa109

    ஜோடி படத்திற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து திரிஷாவும் ஒரே படத்தில் நடிப்பது குறித்து சிம்ரன் பேட்டிளித்துள்ளார். #Trisha #Simran #Petta
    சிம்ரன் கதாநாயகியாக நடித்த ‘ஜோடி’ படத்தில் சிறு வேடத்தில் நடித்தவர் திரிஷா. அதன்பின் ‘மௌனம் பேசியதே’ படத்தில் திரிஷா கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பல வருடங்கள் கழித்து, சிம்ரனும் திரிஷாவும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘பேட்ட’ படத்தில் ஒன்றாக நடித்து வருகிறார்கள்.

    திரிஷா கூட ஜோடி படத்துல சேர்ந்து நடிச்ச நாள்களெல்லாம் ஞாபகம் இருக்கா, இப்போ அவங்க எப்படி நடிக்கிறாங்க என்ற கேள்விக்கு சிம்ரன் பதிலளிக்கும்போது, ‘திரிஷாவை முதல் முறை பார்த்த மொமெண்ட் இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. அவங்க சினிமாவுல தன்னை ஒரு நல்ல நடிகையா முன்னிலைப்படுத்திக்கிட்ட விதம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ‘ஜோடி’ படத்துல பார்த்தப்போவே இந்தப் பொண்ணு பெரிய ஆளா வரும்னு எனக்குத் தோணுச்சு. 



    டயலாக் இல்லாத சீன்கள்ல நடிக்கிறதுதான் இருக்கிறதுலேயே ரொம்பக் கஷ்டம். அதுல திரிஷா கில்லாடி. நானும் விஜய் சேதுபதியோட சேர்ந்து நடிக்கிறேன். திரிஷாவும் சேர்ந்து நடிக்கிறாங்க. அவங்க இந்த அளவுக்கு உயர்ந்து நிற்கிறது எனக்குப் பெருமையா இருக்கு. சினிமாவுல என்னை மாதிரி டான்ஸ் ஆடுற இன்னொரு நடிகைனு அவங்களைச் சொல்வேன். இத்தனை வருடம் ஒரு நடிகை நிலைத்திருக்கிறது, பெரிய விஷயம். ஹாட்ஸ் ஆஃப் திரிஷா! என்று கூறியிருக்கிறார். 
    திருஞானம் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகி வரும் பரமபதம் விளையாட்டு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெறுங்கியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Trisha #ParamapadhamVilaiyattu
    த்ரிஷாவின் பரமபதம் விளையாட்டு திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. படத்தின் முதல் பார்வை போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது.

    திருஞானம் இயக்கும் இந்த படத்தில் த்ரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏற்காட்டில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை 24 Hrs நிறுவனம் தயாரித்துள்ளது. 



    படத்தை பற்றி இயக்குனர் திருஞானம் கூறும்போது, த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படங்களில் இது புதுமையான, முக்கியமான படமாக இருக்கும். த்ரிஷா இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்தை மிகவும் விரும்பினார். படப்பிடிப்பில் கடினமான காட்சியில் கூட ஒரே டேக்கில் நடித்து முடித்தார்.

    இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் பார்வை இம்மாதத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #Trisha #ParamapadhamVilaiyattu

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘பேட்ட’ படத்தில் பிரபல மலையாள நடிகர் நடித்து வருகிறார். #Rajini #Petta #KarthikSubbaraj
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘பேட்ட’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், குரு சோமசுந்தரம், திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் என பெரிய நட்சத்திர பட்டாளத்தையே களம் இறக்கியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

    மேலும் மலையாளத்தில் இருந்து மணிகண்ட ஆச்சாரி என்பவரை இந்தப்படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க அழைத்து வந்துள்ளார் இயக்குநர். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் 2016-ம் ஆண்டு வித்தியாசமான கதையம்சத்துடன் வெளியாகிப் பாராட்டு பெற்ற படம் கம்மட்டிப்பாடம்.



    இந்த படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் இந்த மணிகண்ட ஆச்சாரி. ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி இயக்கத்தில் உருவான இப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது.
    பேட்ட படத்திற்காக திரிஷா ‘ஹேர்ஸ்டைலை’ மாற்றியதாக ஒரு தரப்பினரும், திருமணத்துக்காக மாற்றியதாக வேறொரு தரப்பினரும் வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்த நிலையில் திரிஷாவின் தாயார் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். #Trisha
    நடிகை திரிஷா 12 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கதா நாயகியாக நடித்து வருகிறார்.

    அவருக்கும், தொழிலதிபரும் தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் 2014-ம் ஆண்டு திருமணம் நடப்பதாக இருந்து ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து சினிமாவில் நடித்துவரும் திரிஷா சமீபத்தில் ரஜினியின் பேட்ட படத்திலும் ஒப்பந்தமானார்.

    அவர் சமீபத்தில் தன்னுடைய ஹேர்ஸ்டைலை மாற்றிக்கொண்டார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்த அவர் ஒரு பெண் தன்னுடைய முடியை கத்தரித்துக்கொள்கிறாள் என்றால் அவள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள போகிறாள் என்று அர்த்தம்’ என கூறி இருந்தார்.

    இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் வாழ்க்கையில் மாற்றம் என்றால் திருமணத்துக்கு தயாராகி விட்டீரா? என்று கேட்டார்கள். திரிஷாவுக்கு திருமணம் என்ற ரீதியில் செய்தி பரவியது. ரஜினியுடன் நடிப்பதற்காக காத்திருந்த திரிஷா அது நிறைவேறியதால் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்று சமூகவலைதளங்களில் பரவியது.


    இந்த வதந்திக்கு திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் விளக்கம் தந்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார். “இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். வெறும் பே‌ஷனுக்காகவே செய்துகொண்டார். என் மகளுக்கு முடிதான் அழகு.

    பொதுவாக ஹேர்கட் செய்து கொள்வதால் நம்முடைய தோற்றத்தில் சில மாறுதல்களைக் காண்பிக்க முடியும். திரிஷா சினிமாவுக்கு வந்த புதிதில் நீளமான முடி இருந்தது.

    சில படங்களிலே அதை குட்டையான முடியாக மாற்றிக்கொண்டார். பிறகு வேவி ஹேர், ஸ்ட்ரைட் ஹேர் என டிரெண்டுக்கேற்ப மாற்றிக்கொண்டார். அப்படித்தான் இந்த ‘பிளன்ட் கட்’ ஸ்டைலும். மற்றபடி, எந்தச் சிறப்பும் இல்லை. அப்படி ஏதாவது விசே‌ஷம் என்றால், ரசிகர்களுக்குத்தான் முதலில் சொல்வார்’’ என்று கூறி இருக்கிறார். #Trisha

    ×