search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நன்கொடை"

    பங்குச் சந்தை கணிப்பில் ஜாம்பவானும் பிரபல தொழிலதிபருமான வாரன் பஃபெட் 13-ம் ஆண்டு நன்கொடையாக 340 கோடி டாலர்களை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார்.
    நியூயார்க்:

    அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் எட்வர்ட் பஃபெட் பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளரும், தொழிலதிபரும், பொதுக் கொடையாளரும் ஆவார்.

    உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான இவர் "பெர்கஷயர் ஹாதவே" என்ற நிறுவனத்தில் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ளதோடு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். இவர் 2008 ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் மிகப் பெரிய பணக்காரராய் இடம்பெற்றார். இவருடைய சொத்துகளின் மொத்த மதிப்பு $62 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

    பிரசித்திபெற்ற கொடையாளரான பஃபெட் தனது சொத்தில் 99 சதவீதத்தை நன்கொடையாக அளிப்பதற்கு உறுதி வழங்கியுள்ளார். அதன்படி, கடந்த 12 ஆண்டுகளாக பல்லாயிரம் கோடி டாலர்களை பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு வாரன் பஃபெட் நன்கொடையாக அளித்துள்ளார்.

    இந்நிலையில், தொடர்ந்து 13-வது ஆண்டாக சுமார் 340 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள "பெர்கஷயர் ஹாதவே" நிறுவனத்தில் தனக்குள்ள 17.7 மில்லியன் பங்குகளை அவர் தற்போது நன்கொடையாக அளித்துள்ளார்.

    நேற்றைய நிலவரப்படி, இந்த பங்குகள் ஒவ்வொன்றின் முகமதிப்பு சுமார் 192 டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நன்கொடையின் பெரும்பகுதி பில்கேட்ஸ் நடத்திவரும் பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் தனது குடும்பத்தினர் நடத்திவரும் தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. #WarrenBuffett #WarrenBuffettdonates$3.4bln
    இலங்கை பாராளுமன்றத்துக்கு 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சீன நிறுவனத்திடம் நன்கொடை பெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு ராஜபக்சே விளக்கம் அளித்துள்ளார். #Rajapaksa #ChinesefundinginSLpolls
    கொழும்பு:

    இலங்கை பாராளுமன்றத்துக்கு 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது சீனாவில் உள்ள பிரபல நிறுவனத்திடம் இருந்து முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே 76 லட்சம் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக பெற்றதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் சமீபத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

    இதுதொடர்பாக, பதில் அளிக்காமல் மவுனம் காத்துவந்த ராஜபக்சே, தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

    அந்த கட்டுரையில் காணப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை, ஆதாரமற்றவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    சீனாவிடம் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே காட்டிவந்த நெருக்கம் தொடர்பாக இந்தியா முன்னர் கவலை கொண்டிருந்ததாகவும், இலங்கையின் ஹம்பன்டோட்டா துறைமுகத்தை சீனா ராணுவ தேவைகளுக்காக பயன்படுத்தி கொள்ளக்கூடும் என அச்சம் தெரிவித்திருந்ததாகவும் அந்த கட்டுரையாளர் சுட்டிக்காட்டியுள்ளதையும் ராஜபக்சே மறுத்துள்ளார்.

    சீனாவுடனான இலங்கையின் நெருக்கம் தொடர்பாக இந்தியாவை ஆட்சி செய்த முன்னாள் காங்கிரஸ் அரசுக்கு அளித்திருந்த வாக்குறுதிகளை நான் எப்போதுமே மீறியதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், அமெரிக்க நாளிதழ் வெளியிட்டுள்ள இந்த பரபரப்பு குற்றச்சாட்டு தொடர்பாக இலங்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விரைவில் விசாரணைக்கு தயாராகி வருவதாக தெரிகிறது. #Rajapaksa #ChinesefundinginSLpolls
    கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து பா.ஜ.க. 15 கோடி ரூபாய் நன்கொடை பெற்றிருக்கிறது என்று திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார். #Thirumavalavan #SterliteProtest
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், செயலற்ற எடப்பாடி அரசு பதவி விலகக்கோரியும் திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் விடுத்திருந்த முழு அடைப்புப் போராட்டம் வெற்றிப்பெற்றுள்ளது.

    ஒத்துழைப்பு அளித்த பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரையில் இந்தப் போராட்டம் தொடரும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

    தமிழ்நாட்டை ஆளும் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசு செயலிழந்துபோய் கிடக்கிறது. அதை பொம்மையாக வைத்துக்கொண்டு மோடி அரசுதான் உண்மையான ஆட்சியை நடத்துகிறது. ஸ்டெர்லைட்டை நடத்தி வரும் ‘வேதாந்தா குழுமம்’ பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் மிக நெருக்கமான கார்ப்பரேட் நிறுவனமாகும்.



    கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது ஸ்டெர்லைட் நிறுவனத்திடமிருந்து பா.ஜ.க. 15 கோடி ரூபாய் நன்கொடை பெற்றிருக்கிறது. அதன் தாய் நிறுவனமான வேதாந்தா குழுமம் 22.5 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் பிரதமர் மோடி லண்டனுக்கு போன போது அவரை வரவேற்று மிகப்பெரிய அளவில் விளம்பரங்களைச் செய்தது வேதாந்தா குழுமம் ஆகும்.

    தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கும் அதைத் தொடர்ந்து 3 மாவட்டங்களில் இணைய சேவைகள் முடக்கப்பட்டதற்கும் பின்னால், மோடி அரசு தான் இருக்கிறது என்ற ஐயம் நமக்கு எழுகிறது.

    துப்பாக்கிச்சூட்டை கண்டிக்காதது மட்டுமின்றி அதில் படுகொலை செய்யப்பட்ட 13 பேரின் குடும்பத்திற்கு ஆறுதல்கூட சொல்லாத பிரதமர் மோடியின் மவுனம் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

    ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு தற்காலிகமாக உயர்நீதிமன்றம் தடைவிதித்திருக்கிறது. எடப்பாடி அரசும் மின்சாரத்தை நிறுத்தியுள்ளது. ஆனால் இத்தகைய கண் துடைப்பு நடவடிக்கைகள் போதாது.

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுகிறோம் என தமிழக அரசும், மத்திய அரசும் அறிவிக்கவேண்டும். அப்பாவி மக்களை படுகொலைச்செய்த போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Thirumavalavan #SterliteProtest

    ×