search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலசாபிஷேகம்"

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 1,008 கலசங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டு, கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் அருணாசலேஸ்வரருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
    திருவண்ணாமலையில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அக்னி நட்சத்திரம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

    இதனை முன்னிட்டு கடந்த 27-ந் தேதி முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 1,008 கலசாபிஷேகம் நடைபெற்றது. அக்னி நட்சத்திரம் நிறைவு நாளான நேற்று காலை 4-ம் கால யாக பூஜைகள் அம்மன் சன்னதி கொடி மரம் முன்பு நடந்தது.

    இதையடுத்து 1,008 கலசங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டு, கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் அருணாசலேஸ்வரருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இரவு ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது.
    ×