search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரலட்சுமி"

    விஜய்யின் சர்கார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், தீபாவளிக்கு பட்டாச ரெடி பண்ணுங்க என்று டுவிட் போட்டிருக்கிறார். #Sarkar #Varalaxmi
    விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் படம் ‘சர்கார்’. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர். அரசியல் கதையாக உருவாகும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. 

    விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்ட நிலையில், தற்போது பேட்ச் ஒர்க்கான படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இன்று முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக நடிகை வரலட்சுமி அறிவித்திருக்கிறார். மேலும், ‘இப்படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குனர் முருகதாஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. விஜய்யுடன் நடிக்க இருந்த என் கனவு நினைவாகி இருக்கிறது. தீபாவளிக்கு பட்டாச ரெடி பண்ணுங்க’ என்று கூறியிருகிறார்.



    சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், அக்டோபர் 2-ம் தேதி ஆடியோ வெளியிடப்பட உள்ளதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர். #Sarkar
    ஏ.ஆர்.முருதகாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘சர்கார்’ படத்தின் சிங்கிள் டிராக் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. #Sarkar #Vijay
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.

    மேலும் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒவ்வொரு நாளாக வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில், இப்படத்தின் சிங்கிள் டிராக் பாடலை செப்டம்பர் மாதம் 19ம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் பல படத்தில் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 



    இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். #Sarkar #Vijay #ThalapathyVijay
    விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகிய நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு சிறப்பு விருந்து அளிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Sarkar #Vijay #SarkarWorkingStills
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்தது.

    இந்த நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு விஜய் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நாளை முதல் அடுத்த 5 நாளைக்கு ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என்று படத் தயாரிப்பு நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் பல படத்தில் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 



    இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். #Sarkar #Vijay #SarkarWorkingStills

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Sarkar #Vijay
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், முற்றிலும் வேறுபட்டதாக படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் பல படத்தில் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். #Sarkar #Vijay #SarkarAudioFromOct2nd
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. #Sarkar #Vijay
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    சமீபத்தில் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய நிலையில், படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் பல படத்தில் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

    இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். #Sarkar #Vijay #KeerthySuresh

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #Sarkar #Vijay #KeerthySuresh
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் பல படத்தில் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் சர்கார் படத்தின் கதை பற்றி புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. வெளிநாட்டில் பிரபல தொழிலதிபராக இருக்கும் விஜய் தனது ஓட்டுரிமையை செலுத்துவதற்காக சொந்த ஊருக்கு வருகிறார். அவர் வரும் விமானம் தாமதமாவதால், அவரது ஓட்டை திருட்டுத்தனமாக ஒரு அரசியல் கட்சி ஆட்கள் போட்டு விடுகிறார்கள்.

    அந்த கள்ள ஓட்டு சம்பவத்தால் அரசியலில் குதிக்கிறார் விஜய். அரசியலில் புரட்சி செய்கிறார் என்பதே படத்தின் கதை என்கிறார்கள். இந்த கதை கேட்பதற்கே சுவாரசியமாக இருக்கிறது. தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு பெரிய டிரீட் காத்திருக்கிறது எனலாம். 



    சர்கார் படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். #Sarkar #Vijay

    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வந்த ‘மாரி 2’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. #Dhaush #Maari2
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `வடசென்னை' படம் வருகிற அக்டோபரில் ரிலீசாக இருக்கும் நிலையில், பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த ‘மாரி 2’ படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக பிரபுதேவா நடனம் அமைத்த பாடல் காட்சி ஒன்றை படக்குழு படமாக்கியது. அதனைத் தொடர்ந்து சில முக்கிய காட்சிகளுடன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதுகுறித்து தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

    மாரி 2 படப்பிடிப்பு முடிந்தது... மீண்டும் மாரியாக நடித்ததில் மகிழ்ச்சி. நான் ஜாலியாக, விரும்பி நடிக்கும் கதாபாத்திரம் இது. என்று கூறியுள்ளார். 

    இயக்குநர் பாலாஜி மோகன் கூறியிருப்பதாவது, 

    மாரி-2 படப்பிடிப்பு நிறைவுபெற்றது. சேட்டை நிறைந்த மாரி கதாபாத்திரத்தை தனுஷை வைத்து மீண்டும் திரைக்கு கொண்டு வருவதே சிறப்பானது தான். என்று குறிப்பட்டுள்ளார். 

    இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவியும் முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் நடித்துள்ளனர்.  வில்லனாக டோவினோ தாமஸ் நடித்திருக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். #Maari2 #Dhanush

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், பாடல் காட்சிக்காக படக்குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர். #Vijay #Sarkar
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்த நிலையில், படக்குழு தற்போது அமெரிக்கா விரைந்துள்ளது.

    அங்கு படத்தின் அறிமுக பாடல் மற்றும் சில முக்கிய காட்சிகளை படமாக்குகின்றனர். இந்த பாடல் காட்சியை நடன இயக்குநர் ஷோபி வடிவமைக்கிறார். முன்னதாக கத்தி படத்தில் `பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா' என்ற பாடலுக்கு ஷோபி நடனம் வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    இந்த பாடலில் வரலட்சுமியும் இடம்பெறுவதாக கூறப்படும் நிலையில், `சர்கார்' படப்பிடிப்புக்காக வேகாஸ் வந்துள்ளதாக நடிகை வரலட்சுமி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். 

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார். 

    தமிழ் மற்றும் தெலுங்கில் வருகிற தீபாவளிக்குப் ரிலீஸாகும், இந்த படத்தின் பின்னணி இசைக்கான பணிகளை ஏ.ஆர்.ரஹ்மான் செப்டம்பரில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. #Vijay #Sarkar

    மா மற்றும் லட்சுமி குறும்படங்களை இயக்கி பிரபலமான சர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Echarikkai
    தப்பு தண்டா படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் வி.சத்யமூர்த்தி. அதற்கு பிறகு சுசீந்திரன் இயக்கிய 'நெஞ்சில் துணிவிருந்தால்' விஜய்சேதுபதி நடித்த 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லேன்', 'கோலிசோடா 2' போன்ற படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட்ட சத்யமூர்த்தி தற்போது 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து பாராட்டிததுடன் மொத்தமாக வாங்கி வெளியிடுகிறார்.

    டைம்லைன் சினிமாஸ் மற்றும் சுந்தரம் அண்ணாமலை புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். யூடியூப்பில் பிரபலமான மா, லஷ்மி ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

    இவர் மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர். இந்தப் படத்தின் சிறப்பையும் மா, லஷ்மி படங்களின் நேர்த்தியையும் கேள்விப்பட்ட அறம் குலேபகாவலி படங்களின் தயாரிப்பாளர் ராஜேஷ், நயன்தாரா இருவரும் அவர் சொன்ன வித்தியாசமான கதையை கேட்டு உடனடியாக அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.



    எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் பற்றி இவர் கூறும்போது, ‘இது கிரைம் திரில்லர் படம். எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்கிற டைட்டிலிலேயே இது திரில்லர் படம் என்று சொல்லி இருக்கிறோம். சத்யராஜ் சார் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக தூள் கிளப்பி இருக்கிறார். கிட்நாப் பற்றி இதில் சொல்லி இருக்கிறோம். பாண்டிச்சேரி, சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

    படத்தை பார்த்த கிளாப் போர்டு சத்யமூர்த்தி பாராட்டியதோடு மொத்தமாக வாங்கி ரிலீஸ் செய்கிறார். இப்படம் ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாக இருக்கிறது’ என்றார்.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்' படத்தின் மூலம் மெர்சல் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. #Vijay #Sarkar
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் `சர்கார்'. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி, பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். 

    மெர்சல் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மெர்சல் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியவர் பாடலாசிரியர் விவேக். சர்கார் படத்திலும் ஏ.ஆர்.ரஹ்மான் - விவேக் கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்திலும் தான் அனைத்து பாடல்களையும் எழுதுவதாக விவேக் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 



    இதுகுறித்து விவேக் கூறியிருப்பதாவது,

    சர்கார் படத்தில் அனைத்து பாடல்களையும் நான் தான் எழுதுகிறேன். ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு பாடல் வரிகள் எழுதுவதும், அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதும் எனக்கு கிடைத்த வரம். எங்களுக்கு உறுதுணையாக, தூணாக இருக்கும் விஜய் சாருக்கு நன்றி. ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் அவரது அழுத்தமான கதைக்கு பாடல் எழுதுவது சிறப்பு. இவ்வாறு கூறியிருக்கிறார்.

    படம் தீபாவளிக்குப் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கான வேலைகளை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை அருகே கிழக்கு கடற்கைரை சாலையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    விரைவில் படக்குழு லாஸ் வேகாஸ் செல்கிறது. அங்கு பாடல் காட்சிகளைப் படமாக்க இருக்கின்றனர். ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்கள் வரை அங்கு படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் சமீபத்தில் டப்பிங் பணிகளை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. #Vijay #Sarkar

    பல படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி, படப்பிடிப்பின் போது, 7 கிலோமீட்டர் நடந்து செல்லும் பள்ளி சிறுமிகளுக்கு உதவியிருக்கிறார். #Varalaxmi
    ‘போடா போடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரைதப்பட்டை’ படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தந்தது. 

    தற்போது வரலட்சுமி சரத்குமார், ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘ சண்டக்கோழி-2’ விஜய்யின் ‘சர்கார்’, ‘வெல்வெட் நகரம்’ உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.



    இந்நிலையில், இவர் படப்பிடிப்பு தளத்தில் தினமும் 7 கிலோமீட்டர் நடந்து செல்லும் பள்ளி சிறுமிகளை சந்தித்திருக்கிறார் வரலட்சுமி. உடனே அவர்களை தன்னுடைய காரில் ஏற்றிக் சென்று இறக்கி விட்டிருக்கிறார். மேலும் இந்த சிறுமிகளை நினைத்து பெருமைப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விஜய் தனது போர்ஷனுக்கான டப்பிங் பணிகளை இன்று துவங்கவிருப்பதாக கூறப்படுகிறது. #Vijay #Sarkar
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் `சர்கார்'. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி, பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். 

    படம் தீபாவளிக்குப் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கான வேலைகளை விறுவிறுப்பாக செய்து வருகிறது படக்குழு. சென்னை அருகே கிழக்கு கடற்கைரை சாலையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. 

    அங்கு முக்கிய காட்சிகளை முடித்த பிறகு, இந்த மாத இறுதியில் படக்குழு லாஸ் வேகாஸ் செல்கிறது. அங்கு பாடல் காட்சிகளைப் படமாக்க இருக்கின்றனர். ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்கள் வரை அங்கு படப்பிடிப்பு நடைபெறுகிறது. 



    இந்த நிலையில், நடிகர் விஜய் தன்னுடைய டப்பிங் பணிகளை இன்று தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லாஸ் வேகாஸ் கிளம்புவதற்குள் தன்னுடைய போர்‌ஷனுக்கு டப்பிங் பேசி முடித்துவிடத் விஜய் திட்டமிட்டுள்ளாராம். முழு படப்பிடிப்பும் முடிந்த பிறகு விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. #Vijay #Sarkar

    ×