search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெக்சிகோ"

    மெக்சிகோ நாட்டில் டிராக்டர் டிரெய்லருடன் பஸ் மோதிய விபத்தில் அதில் பயணித்த 21 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் மெக்சிகோ சிட்டி நகரில் இருந்து டுஸ்லா குடரஸ் பகுதி நோக்கி பயணிகள் பஸ் சென்று கொண்டிருந்தது.

    வெராகுருஸ் பகுதி அருகே சென்றபோது பஸ் திடீரென முன்னால் சென்ற டிராக்டர் டிரெய்லர் மீது வேகமாக மோதியதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 17 பேர் பலியாகினர் என்றும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 பேர் இறந்தனர் என்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    பயணிகள் பஸ் டிராக்டர் டிரெய்லருடன் மோதிய விபத்தில் 21 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
    மெக்சிகோவில் ஆக்ஸாகா நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியானார்கள்.
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோவில் ஆக்ஸாகா நகரில் ஒரே நேரத்தில் 4 பெண்களும், 2 ஆண்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். சாலையோரத்தில் அவர்களது உடல்கள் வீசப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது அந்த நகரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று, சுட்டுக்கொல்லப்பட்ட 6 பேரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    இதேபோன்று டாமாவ்லிபாஸ் நகரில் 2 குழுக்கள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் உள்ளூர் தாதா கும்பலை சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
    பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வரும் நிதியுதவியில் இருந்து 1.5 பில்லியன் டாலர் தொகை மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்துக்கு ஒதுக்க இருப்பதாக ராணுவ மந்திரி தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    மெக்சிகோ எல்லை வழியாக அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்ப வேண்டும் என்பது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கனவு திட்டமாகும்.

    இதற்காக நிதி ஒதுக்கும்படி நாடாளுமன்றத்தில் டிரம்ப் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிப்பட்டதை தொடர்ந்து, அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதன் மூலம் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப தேவையான தொகையை ராணுவ நிதியில் இருந்து பெறமுடியும்.



    இந்த நிலையில் பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வரும் நிதியுதவியில் இருந்து 1.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,500 கோடி) தொகை மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்துக்கு ஒதுக்க இருப்பதாக ராணுவ மந்திரி பேட்ரிக் சனாஹன் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், “பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை எவ்வித பாதிப்பும் இல்லாமல் மாற்றியமைத்து, அதில் இருந்து 1.5 பில்லியன் டாலரை மெக்சிகோ எல்லையில் 120 மைல் தூரத்துக்கு சுவர் எழுப்புவதற்காக ஒதுக்கியுள்ளோம்” என தெரிவித்தார்.

    மேலும், இந்த நிதியானது, முந்தைய ஆண்டில் பாகிஸ்தானுக்கு வழங்காமல் நிறுத்திவைத்த நிதியுதவி, நிறைவேற்றப்படாத திட்டங்களின் நிதி உள்பட பல்வேறு ஆதாரங்களில் இருந்து திரட்டப்பட்டிருப்பதாக அவர் கூறினார். 
    மெக்சிகோ நாட்டின் வேராகர்ஸ் மாநிலத்தில் நடைபெற்ற குடும்ப விழாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் குழந்தை, பெண்கள் உள்பட 13 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. #MexicoShooting
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் வேராகர்ஸ் மாகாணம் அமைந்துள்ளது. வேராகர்ஸ் மாநிலத்தில் உள்ள மினாடிட்லன் நகரில் குடும்ப விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஒரூ மர்ம நபர் திடீரென அங்கு புகுந்தார். அவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுடத்தொடங்கினார்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை, 5 பெண்கள், 7 ஆண்கள் என மொத்தம் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #MexicoShooting
    கவுதமாலாவில் இருந்து திரண்டு வந்த அகதிகளில், சுமார் 350 பேர் வன்முறையில் ஈடுபட்டு எல்லைக் கதவை உடைத்துக்கொண்டு மெக்சிகோவிற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #Mexico #CentralAmericanMigrants
    மெக்சிகன் சிட்டி:

    மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் அகதிகளாக ஊடுருவி வருகின்றனர். மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டுராஸ், கவுதமாலா மற்றும் எல் சால்வடோர் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழைகின்றனர்.

    இதை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக உள்ளார். அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் ஊடுருவதை மெக்சிகோ தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மெக்சிகோ எல்லை முழுவதையும் மூடி விடுவோம் என்று எச்சரித்தார்.

    மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டவும் ஏற்பாடு நடைபெறுகிறது. எல்லையில் 5,800 ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு நாட்டு எல்லையில் காத்திருக்கும் அகதிகள் தங்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க வலியுறுத்தி வன்முறையில் ஈடுகின்றனர்.



    இந்நிலையில், கவுதமாலா நாட்டில் இருந்து சுமார் 2500 அகதிகள் நேற்று அதிகாலை மெக்சிகோவிற்கு வந்தனர். அவர்களை நாட்டிற்கு விடாமல் மெக்சிகோ எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். எல்லைக் கதவு மூடப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சிலர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.

    மெக்சிகோவிற்குள் நுழைந்த சுமார் 350 பேரையும் போலீசார் தடுத்ததால் கடும் வன்முறையில் ஈடுபட்டனர். தெற்கு நகரமான மெடாபா டி டாமிங்கஸ் நகரில் உள்ள ஒரு காவல் நிலையத்தை தாக்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எல்லையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு அகதிகள் கட்டுப்படுத்தப்பட்டனர். #Mexico #CentralAmericanMigrants 
    சட்ட விரோதமாக குடியேற வருகிற அனைவரையும் மெக்சிகோ உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அடுத்த வாரம் எல்லையை மூடி விடுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். #DonaldTrump #MexicoBorder
    வாஷிங்டன்:

    அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் ஏராளமானோர் புகுந்து விடுகின்றனர். இதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் மிகப்பெரிய எல்லைச்சுவர் கட்டுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

    ஆனாலும் மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் மக்கள் நுழைவது தொடர்கிறது. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி கடந்த 28-ந் தேதி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர், “நமது நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைகிறவர்களை தடுத்து நிறுத்துவதற்கு மெக்சிகோ எதையும் செய்வதில்லை. அவர்கள் பேசத்தான் செய்கிறார்களே தவிர செயலில் காட்டுவதில்லை. ஹோண்டுராஸ், கவுதமாலா, எல் சல்வேடார் நாடுகளைச் சேர்ந்தவர்கள் நமது பணத்தை பல்லாண்டு காலமாக எடுத்துச்செல்கின்றனர். தெற்கு எல்லையை மூடி விட எண்ணுகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

    டிரம்ப் டுவிட்டரில் நேற்று முன்தினம் மேலும் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், “சட்ட விரோதமாக குடியேற வருகிற அனைவரையும் மெக்சிகோ உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அடுத்த வாரம் எல்லையை மூடி விடுவேன் அல்லது எல்லையின் பெரும்பகுதியை மூடி விடுவேன்” என கூறி உள்ளார். #DonaldTrump #MexicoBorder
    மெக்சிகோ இரவு விடுதியில் மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 பேர் பலியாகினர்.

    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோவில் எண்ணெய் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. பெட்ரோல் குழாய்களை உடைத்து கும்பல்கள் எண்ணெய் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக சாலமங்கா நகரில் உள்ள ஒரு பெட்ரோலிய நிறுவனத்துக்கு சொந்தமான குழாய்களை உடைத்து கொள்ளை நடைபெறுகிறது. எனவே அக்கும்பல் அங்குள்ள ஒரு இரவு விடுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனே அந்த இரவு விடுதியை சுற்றி வளைத்த போலீசார் நேற்று அதிகாலையில் உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினார்கள். பதிலுக்கு அவர்களும் சுட்டனர்.

    இத்தாக்குதலில் 15 பேர் குண்டு பாய்ந்து அதே இடத்தில் பலியாகினர். அவர்கள் விவரம் வெளியிடப்படவில்லை. மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 3 பேர் ஆண்கள், ஒருவர் பெண் ஆவார், இவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மெக்சிகோவில் மதுபான விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். #MexicoCity
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோவின் குவிண்டானா ரூ மாகாணத்தில் கரீபியன் கடலையொட்டி உள்ள கான்கன் நகர் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு சமீபகாலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள மதுபான விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் இரவு ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அவர்கள் மது, ஆடல், பாடல் என மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் திடீரென அங்கிருந்த அனைவரையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

    இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது. மக்கள் அனைவரும் அலறிஅடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த கோர சம்பவத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து போலீசார் வருவதற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்கள் காரில் ஏறி தப்பிச் சென்றனர்.
    அரசுத்துறைகள் முடக்கம் நிகழாமல் தடுக்க எல்லை பாதுகாப்பு பிரச்சினை குறித்து குடியரசு கட்சியினர் மற்றும் ஜனநாயக கட்சியினர் இடையே புதிய உடன்பாடு ஏற்பட்டது. #USMexico #BorderWall
    வாஷிங்டன்:

    மெக்சிகோ எல்லையில் சுவர்கட்டும் ஜனாதிபதி டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க ஜனநாயக கட்சியினர் மறுத்ததால், பல்வேறு அரசுத்துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் அரசுத்துறைகள் முடங்கின. அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக 35 நாட்களுக்கு மேல் அரசுத்துறைகள் முடக்கம் நீடித்தது.

    பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு சமீபத்தில் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பான மத்திய நிதி ஆதரவு ஒப்பந்தம் வருகிற 15-ந் தேதி காலாவதியாகிறது. இந்த நிலையில் மீண்டும் அரசுத்துறைகள் முடக்கம் நிகழாமல் தடுக்க எல்லை பாதுகாப்பு பிரச்சினை குறித்து குடியரசு கட்சியினர் மற்றும் ஜனநாயக கட்சியினர் இடையே நேற்று நீண்டதொரு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இரு தரப்பினரிடையே முக்கிய உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால் இந்த உடன்பாட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறித்த விரிவான தகவல்கள் இல்லை.

    அதே சமயம் இந்த உடன்படிக்கையை டிரம்ப் ஏற்றுக்கொள்வாரா என்பது தெரியவில்லை.
    மெக்சிகோவில் கடத்தி செல்லப்பட்ட 5 போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. #Mexico #PoliceMurder
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள மிச்சோகன் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடும் ஆதிக்கம் செலுத்தி   வருகிறார்கள். இவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்படுவதும், இதில் பலர் கொல்லப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

    இந்த நிலையில், மிச்சோகன் மாகாணத்தின் துசான்ட்லா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் 5 பேரை அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த 4-ந் தேதி கடத்தி சென்றனர். இதையடுத்து சக போலீசார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் கதி என்ன என்பது தெரியாமலேயே இருந்தது. இந்த நிலையில் சிடாகவ்ரோ நகரில் கேட்பாரற்று நின்றுகொண்டிருந்த ஒரு காருக்குள் 5 பேர் பிணமாக கிடந்தனர். அவர்கள் கடத்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் என்பதும், துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.  #Mexico #PoliceMurder

    மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலத்த காயமடைந்த மேலும் சிலர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது. #MexicoFire
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோவின் ஹிடால்கோ மாநிலத்தில் சட்டவிரோதமாக பெட்ரோல் கொண்டு செல்லப்பட்ட குழாயில் கடந்த வெள்ளிக்கிழமை கசிவு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய பெட்ரோலை பொதுமக்கள் கேன்கள், வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்தது. அதில் சிக்கி ஏராளமானோர் கருகினர்.

    இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். இதனால் உயிரிழப்பு அதிகரித்தது.

    இந்நிலையில், காயமடைந்தவர்களில் மேலும் சிலர் நேற்று உயிரிழந்தனர். இதனையடுத்து பைப்லைன் தீ விபத்தில் உயிரிழப்பு 91 ஆக உயர்ந்துள்ளது. 52 பேர் பலத்த தீக்காயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மெக்சிகோவில் கடந்த ஆண்டு மட்டும் 14,894 இடங்களில் சட்டவிரோத பெட்ரோல் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #MexicoFire
    மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. #MexicoFire
    மெக்சிகோ:

    மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ஹிடால்கோ மாநிலத்தில் குழாயில் கசிந்து வெளியேறிய பெட்ரோலை பொதுமக்கள் கேன்கள், வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்தனர்.
     
    அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்தது. அதில் சிக்கி ஏராளமானோர் கருகினர். அவர்களில் 20 பேர் உயிரிழந்தனர். 54 பேர் காயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 76 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என ஹிடால்கோ மாநில கவர்னர் ஓமர் பயாத் தெரிவித்தார்.

    மெக்சிகோவில் மெக்சிகோ சிட்டி உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு மக்கள் நீண்ட நேரம் ‘கியூ’ வரிசையில் நின்று வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பெட்ரோல் திருட்டு இங்கு அதிக அளவில் நடைபெறுகிறது. #MexicoFire
    ×